PDA

View Full Version : ஹைக்கூ கவிதைகள் -01



ampalam
05-07-2013, 05:10 PM
மழை கொண்ட கண்ணீர்

சத்தம் கேட்டு ஓடிச்சென்று பார்த்தேன்
கதறிக்கொண்டிருந்தது மழைத்துளிகள்
நீ நனைகிறாய் என்று!!!

பொக்கிஷம்

கிடைத்தாய் நீ எனக்கு
தொலைத்தவன் கடவுள்

பிரிவு

உடல்களுக்கிடையே தொலைவை
அதிகரித்து
மனங்களை நெருக்கமாக்கும்
ஒரு பாலம்

நிம்மதி

விடிந்து விட்டது
இனி நிம்மதியாய்
உறங்கலாம்!
‘தெருவிளக்கு’

சொல்வதெல்லாம் உண்மை!

“பெட்ரோலைச் சேமிக்க சிறந்த வழி..
கேர்ள் ஃபிரெண்ட்
இல்லாமல் இருப்பது!”

—————————————————————————————————————————

இரவெல்லாம்
உன் நினைவுதான்
கொசுக்கள்

ஐயோ இருட்டிவிட்டதே
என் செம்மறி ஆட்டை பார்த்தீர்களா
விடிந்தால் தீபாவளி.

எனக்கொரு காதலனும் இல்லை
ஆனாலும் நான் மகிழ்ந்திருக்கிறேன்
ஆடைமாற்றம்

—-
http://www.ampalam.com/