PDA

View Full Version : என்னருகே நீயிருந்தால்.....



arun karthik
04-07-2013, 05:07 PM
ஆன்மாவின் வன்மைங்களைத் தூண்டி,
உள்ளத்தில் ஆயிரம் வன்முறைகளை நிகழ்த்தி - பின்னர்
ஏதுமறியாதது போல் விரிந்து சுருங்கும் இதழ்கள்
முடிக்கின்றன உன் கொடிய புன்னகையை....
-------------------------------------------------------

நம்மிடையே இடைவெளி குறைகின்ற வேளையில்,
வேண்டுமென்றே நீ செய்யும் பாசாங்குகள் என்னை வதைக்க,
உன் கண்களை மட்டுமே ரசிப்பதாய் அல்லல் பட்டு நடிக்கும்,
என் கண்களை ரசிக்கிறாய் நீ...
-------------------------------------------------------


அடித்துப் பிடித்து, சற்று தாமதமாக வகுப்பறைக்குள்
நுழைந்ததும் எனக்குத் தோன்றுவது, அப்பாடா!
இன்று என் கடமை இனிதே தொடங்கிற்று; ஆசிரியை
திட்டும் போது உன் கவனத்தை என்னிடம் திருப்பியதில்;
இந்த அற்பனுக்கு எவ்வளவு திருப்தியதில்....
--------------------------------------------------------

அடடா! இதென்ன மே மாதத்தில் ஒரு வசந்த காலம்?
நான் சைப்ரசில் இருக்கிறேனா?இல்லை
நீ என்னருகில் இருக்கிறாயா?
--------------------------------------------------------

அடிப்பெண்ணே, நானும் உன் கையில் சிக்கிய
பாணி பூரி தான்; பார்த்தவுடன் சட்டென்று நொறுக்கி
பட்டென்று விழுங்கி விட்டாய்...
--------------------------------------------------------