இராஜிசங்கர்
04-07-2013, 01:19 PM
உனக்கான என்
காத்திருப்புகள்
முடிவதேயில்லை -நீ
வரமாட்டாய்
என்பது நிச்சயம்
என்ற போதிலும்!
M.Jagadeesan
05-07-2013, 02:25 AM
வராத ஒருத்திக்காய் காத்திருந்து நேரத்தை
......வீணாய்க் கழிப்பது விவேகம் ஆகுமோ?
தராத காதலைக் கெஞ்சிப் பெறுவது
......தன்மானம் கொண்டார்க்கு இழுக்கென்று அறியீரோ?
குரோதம் இல்லாக் குலமகளைக் காதலித்து
......குவலயம் சிறக்கக் குலக்கொழுந்து தனைப்பெற்று
துரோகம் நீங்கிய தூய்மையாம் வாழ்வதனை
......துணிவுடன் பெறுவதே உண்மைக் காதலாம்.
காதல் கொண்டவனின் மனநிலையை உணர்த்திய இராஜிசங்கருக்குப் பாராட்டுக்கள்.