இராஜிசங்கர்
04-07-2013, 01:17 PM
பேதங்கள் கடந்த
அன்பை உன்னால்
செலுத்த முடியுமானால்
இதோ இருக்கிறது
உனக்காக
என் இதயம்..
M.Jagadeesan
05-07-2013, 03:47 AM
பேதங்கள் கடந்த அன்பை செலுத்தியே
......பெண்ணாம் திவ்யாவை இளவரசன் உண்மையாய்க்
காதலித்த பின்னே கைப்பிடித்து மணம்செய்தான்
......கலப்புத் திருமணம் என்றதால் தந்தையும்
பேதலித்த மனதோடு தற்கொலை செய்துகொண்டார்
......பேதையவள் திவ்யாவும் காதலனைக் கைவிடவே
ஆதரவு ஏதுமின்றி அலைந்திட்ட இளவரசன்
......அடிபட்டு இரயிலிலே தன்னுயிரை மாய்த்திட்டான்.
குறிப்பு: இன்று பத்திரிகையில் வந்த செய்தி ஒன்றை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கவிதை.