PDA

View Full Version : மனைவி என்கிற காதலிக்கு...



R.P.ANANDHAN
23-06-2013, 11:34 AM
உன்னோடு நான் வாழும்
ஒவ்வொரு நொடிப்பொழுதும்
ஒப்பிட்டு காண்பதற்கு
உவமையொன்றும் இல்லையடி இப்புவியிலே;

கோடியுகம் சுழன்ற பின்னும் என்றென்றும்
பிடித்தவண்ணம் சூரியதடம் மாறாமல் சுற்றி வரும்
புவியோடு சேர்ந்த எண் கோள்களுடன்;

உன் அச்சில் நானும்
என் அச்சில் நீயும்
என்றென்றும் மாறாவன்புடன் சுழன்று நிற்போம்.

இனி காலம் சொல்லட்டும்
உதாரணத் தம்பதிகளாய்;

உடலற்றுப் போன பின்னும்
உயிரோடு நாம் இருப்போம்;

புவி சுழலும் வரை, சூரியன் எரியும் வரை;
மற்றும் ஒரு விண் குடும்பம் காணும் வரை;

புவியியலும் புரிந்து கொள்ளும்
நாமும் ஒரு காதல் கோள் குடும்பம் என்று.
விண்ணில் சுழல்வதினால் வீழ்ச்சியென்றும் கிடையாது
சாமானியர்க்கும் எட்டிவிடும் நம் காதல் சாட்டிலைட் துணையோடு

வாழ்ந்துவரும் நம் காதல்
வளரட்டும் பொழுதெல்லாம்
ஈடில்லை இதைச் சொல்ல
வேறொன்றும் சொல்ல..... இல்லை.

வாழட்டும் நம் காதல்
வளரட்டும் பொழுதெல்லாம்

- கணவன் என்கிற காதலன்.

கீதம்
24-06-2013, 12:26 AM
வானகம் தாண்டி பிரபஞ்சத்தையும் எட்டிவிட்ட இனிய காதலுக்கு இன்வாழ்த்துக்கள்.

என்றென்றும் வளர்ந்து தழைக்கட்டும் வரம் பெற்று வந்த காதல்.

R.P.ANANDHAN
24-06-2013, 11:11 AM
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

அன்புடன்,
ரா.ப.ஆனந்தன்.

ampalam
24-06-2013, 06:21 PM
நல்ல கவிதை.. நன்றி

R.P.ANANDHAN
24-06-2013, 07:49 PM
நன்றி.

lenram80
01-10-2013, 08:05 PM
இன்னும் ஒரு வருடம் கழித்து என்ன ஆகுதுன்னு பார்க்கலாம்!

(ஆறு மாதம் முன்பு எழுதியது)
என்னை மயக்கும் மார்கழி பனியும் நீ!
என்னில் இனிக்கும் மாதுளங் கனியும் நீ!

(இன்று எழுதியது)
என்னை ஆட்டிப் படைக்கும்
ஏழரை சனியும் நீ!

மும்பை நாதன்
02-10-2013, 07:07 AM
இன்னும் ஒரு வருடம் கழித்து என்ன ஆகுதுன்னு பார்க்கலாம்!

(ஆறு மாதம் முன்பு எழுதியது)
என்னை மயக்கும் மார்கழி பனியும் நீ!
என்னில் இனிக்கும் மாதுளங் கனியும் நீ!

(இன்று எழுதியது)
என்னை ஆட்டிப் படைக்கும்
ஏழரை சனியும் நீ!

என்ன, சொந்த அனுபவமோ ?

மும்பை நாதன்
02-10-2013, 07:08 AM
ஆனந்தன், இதுதான் காலத்தை வென்ற காதல் என்பதோ ?

சிவா.ஜி
02-10-2013, 10:35 AM
காதலி மனைவியாவதிலும்....மனைவி காதலியாவதில்தான் வாழ்க்கையின் வெற்றி அடங்கியுள்ளது.

காதல் எனும் அச்சில் கணவனும் மனைவியும் கோள்களாய் சுற்றி வந்தால் இல்லற வெளி ஆனந்த வெளியாகும்.

வாழ்த்துக்கள் ஆனந்தன்.

மும்பை நாதன்
02-10-2013, 02:51 PM
காதலி மனைவியாவதிலும்....மனைவி காதலியாவதில்தான் வாழ்க்கையின் வெற்றி அடங்கியுள்ளது.

காதல் எனும் அச்சில் கணவனும் மனைவியும் கோள்களாய் சுற்றி வந்தால் இல்லற வெளி ஆனந்த வெளியாகும்.

வாழ்த்துக்கள் ஆனந்தன்.

உண்மை சிவா.ஜி. இதை அனைவரும் உணர்ந்து இருந்தால் வாழ்க்கை சுமுகமாக நகரும்.
ஆனாலும் காதலியே மனைவியாகி, மனைவியான பின்னும் காதல் தொடர்ந்து இருந்தால் அது உத்தமமான வாழ்வு என்று சொல்லலாம்.