PDA

View Full Version : நிழல் கவிதைகள் - 4



செல்வா
21-06-2013, 03:18 AM
நீரும் மணலும் வற்றிச்

சிதிலமாகிக் கிடக்கும் ஆற்றின்

மத்தியில் காய்ந்து கொண்டிருக்கும்

சுள்ளியின் நிழலில் அமர்ந்தபடி

சலனமற்றிருக்கும் விசும்பை நோக்கி

கத்திக்கொண்டிருக்கிறது - தவளை :icon_ush:

கீதம்
23-06-2013, 02:26 AM
விசும்பை நோக்கிக் கத்தும் ஒற்றைத் தவளையாய் என்னை நானே எண்ணி மருகச்செய்யும் கவிதை.

மழைவெள்ளம் வரும்நாளை எதிர்பார்த்து, கத்தவும் திராணியற்றுக் காத்திருக்கின்றனவோ மற்றத் தவளைகள்!

நீளும் நிழல் கவிதைகளுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் செல்வா.

செல்வா
25-06-2013, 05:20 AM
பின்னூட்ட ஊக்கத்திற்கு நன்றி..!