PDA

View Full Version : உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு



nandagopal.d
09-06-2013, 04:43 AM
http://1.bp.blogspot.com/-0BkY4IW6oQ8/UbQGWYPIycI/AAAAAAAAAKE/IGMITSmascY/s1600/download+(5).jpg

இரு விழி கனிகள் வீரிய நாதத்துடன் எழும், விடியலில்
நெற்றி பொட்டில் நிலத்தின் சுருக்கங்கள்
பூமியெங்கும் புழுதிகள்
வறண்ட பூமியின் ஓரத்தில் பாறை மண் மூடி கிடக்க
நடுவே நீளும் ஒரு வழி பாதையில் ஈந்து போன கோமணத்தில்
பாதி கால் ஊன்றி பயிர் இட்டு, உழவென்னும்
பெயர் சொல்லி இரத்தம் பிழியும் இரசவாத்தில்,
தகிக்கும் வெயிலில் திகைக்கும் வியர்வை துளிகள்
அதன் மேல் கருகி போன பயிர்கள்
வந்தாலும் வருவேன் என்றொரு உறுதிபடா
உறுதி மொழியுடன் உலகில் பிரவெசிக்க் தயங்கும் மழை துளிகள்
காய தொடங்கிய காலம் முதல் காய்ந்து போன
வயிற்றுடன், விட்டத்தை பார்த்த பருக்கைகள்
எப்படி வேண்டுமானாலும் தொடங்கலாம் நாளைய வரலாறு
பட்டினி சாவுடன்??????