PDA

View Full Version : வெயில் கவிதை.



M.Jagadeesan
02-06-2013, 10:34 AM
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcRCLPyctemQ9ZQWKOirwFXJrrT6-IHhQGzVV1BpgIiphqTAgkwM


காதலி எனைத்தேடி வருகின்ற நேரத்தில்
......காய்கதிர்ச் செல்வனே! கனலை உமிழாதே !
பாதங்கள் வெந்து பாவையவள் துன்புறுவாள்
......பட்டுடல் மேனியிலே பாதகம் செய்யாதே !
கீதங்கள் பாடி கிளிமொழியாள் என்மார்பில்
......கிறுகிறுத்து மெல்ல தலைசாய்த்துப் படுத்திட்டால்
ஆதவனே! உன்னுடைய அக்கிரமம் என்னிடத்தில்
......அடியோடு செல்லாது நினைவிலே நிறுத்திக்கொள்!