arun karthik
25-05-2013, 12:37 PM
ஆறுகள் ஏரிகள் குளங்கள் அனைத்தும்
அழுதிடும் கண்ணீர் தனை - உயர்
மானுடன் என்னுமோர் மாள்பவனும் அள்ளி
பருகுவதும் நியாயமோ?
காடுகள் மரங்கள் கானகங்கள் தனை
வெட்டி சாலைகளை நெய்து - மரப்
பதாகை தனிலே மரம் வளர்ப்போம் என
புகட்டுவதும் நியாயமோ?
உயிரும் உடலும் உணவும் உதவிய
நிலங்கள் அத்தனையும் - பல
சதைகளாகிய விதைகளுக்காக
சிதைபடுதல் நியாயமோ?
மழை தனை அளித்து காற்றினை
திருப்பும் மலைகள் அத்தனையும் - மேல்
ஞானம் வேண்டும் என ஞானிகளுமே
துளைப்பதுவும் நியாயமோ?
அண்டத்தையும் படைத்தது பிண்டத்தையும்
படைத்த இயற்கை அரும் பொருளே - உன்னை
வாழ விடாமல் வாதிக்கும் மாக்களிடம் போர்
தொடுக்காவிடில் நியாயமோ?
அழுதிடும் கண்ணீர் தனை - உயர்
மானுடன் என்னுமோர் மாள்பவனும் அள்ளி
பருகுவதும் நியாயமோ?
காடுகள் மரங்கள் கானகங்கள் தனை
வெட்டி சாலைகளை நெய்து - மரப்
பதாகை தனிலே மரம் வளர்ப்போம் என
புகட்டுவதும் நியாயமோ?
உயிரும் உடலும் உணவும் உதவிய
நிலங்கள் அத்தனையும் - பல
சதைகளாகிய விதைகளுக்காக
சிதைபடுதல் நியாயமோ?
மழை தனை அளித்து காற்றினை
திருப்பும் மலைகள் அத்தனையும் - மேல்
ஞானம் வேண்டும் என ஞானிகளுமே
துளைப்பதுவும் நியாயமோ?
அண்டத்தையும் படைத்தது பிண்டத்தையும்
படைத்த இயற்கை அரும் பொருளே - உன்னை
வாழ விடாமல் வாதிக்கும் மாக்களிடம் போர்
தொடுக்காவிடில் நியாயமோ?