PDA

View Full Version : வன்முறையாகின்ற வரம்



nandagopal.d
21-05-2013, 05:01 PM
http://3.bp.blogspot.com/-H-8vcC5W2vc/UYn1JuZzRpI/AAAAAAAAAJQ/z_TfaVLFt78/s1600/images+(91).jpg


பற்றியெரிந்தது தனிமையின் தவிப்பு
வெளிறிக் கிடக்கிறது வெள்ளை மனம்
கனத்த மௌனத்துடன்
நிலைநிறுத்திப் போகிற நினைவுகள்
பூர்த்திசெய்கிற புலம்பல்களும்
சுற்றத்தில் மனிதரும் இல்லை..
உறக்கம் தொலைத்த விழிகள்
வெகு தந்திரமாகத் திணிக்கிறது
எதையோ நினைத்து அதன் வலிகளில்
வாழ்வின் வழியை சுருக்கி
பிளவுபட்ட மர கீறலை போல் ஆனாலும் எங்கேனும் தோன்றலாம்
வன்முறையிலும் வெளிச்சமாகும் ஒரு இரவு

கும்பகோணத்துப்பிள்ளை
21-05-2013, 05:10 PM
சிறிய இடைவெளிக்குபிறகு ஒரு அழுத்தமான பதிவு வாழ்த்துக்கள் நந்தகோபால்

A Thainis
24-05-2013, 10:09 AM
அழகிய கவிதை ஆனால் வன்முறையாக இல்லாமல் மென்மையாக வரிகள், வாழ்த்துக்கள் நந்தகோபால்.