PDA

View Full Version : சிந்தையை பொசுக்கும் உன் நினைவுகள்...



arun karthik
12-05-2013, 05:50 PM
தேடியும் தென்படாத பாதைகளில் நுழைந்து,
நானறியாமல் என் இதயத்தை கிழித்து,
எண்ணத் தீயில் எனை வாட்டித் தீய்த்து,
உள்ளத்தில் அரை உயிரோடு புதைத்து,
அந்த சாவிலும் இன்பம் அளித்து,
இறந்த ஜீவனை கண்களில் செலுத்தி
வந்த கண்ணீரையும் சுவைக்க வைக்கின்றது
நாம் கூடி வாழ்ந்த பருவங்கள்....

சுற்றி சுற்றம் நூறு கண்ட போதும்,
நட்பு தோள்கள் கன்னம் கேட்ட போதும்,
கைகள் ரெண்டும் கீறல் கண்ட போதும்,
உணர்ச்சி கொப்புளங்கள் சீழ் வடித்த போதும்,
ஓலம் வெடித்து தொண்டை சிதறிய போதும்,
ஒய்யார வாழ்வை உலகம் தந்த போதும்,
நினைவினின்று அகல மறுக்கின்றன
நீ இல்லாத தருணங்கள்....

கீதம்
17-05-2013, 03:06 AM
கூடிவாழ்ந்த தருணங்கள் துன்பத்திலும் இன்பம் காட்ட, கூடி வாழாத தருணங்களோ இன்பத்திலும் துன்பம் காட்டி நிற்கின்றன.

பிரிவின் வேதனையை வெளிப்படுத்தும் வரிகளிலும் நிறைந்திருக்கிறது குரூரம்.

கவிதை மிக நன்று. தொடர்ந்து எழுதுங்கள் அருண் கார்த்திக்.

நாஞ்சில் த.க.ஜெய்
17-05-2013, 05:22 PM
என்றும் நினைவு பசுமையின் இனிய நினைவுகளை உள்ளடக்கிய கூடிவாழ்ந்த பருவங்கள் நினைவிலிருந்து எளிதில் அகலகூடியதா ?

arun karthik
25-05-2013, 12:38 PM
பாராட்டுகளுக்கு நன்றிகள்..