arun karthik
12-05-2013, 05:50 PM
தேடியும் தென்படாத பாதைகளில் நுழைந்து,
நானறியாமல் என் இதயத்தை கிழித்து,
எண்ணத் தீயில் எனை வாட்டித் தீய்த்து,
உள்ளத்தில் அரை உயிரோடு புதைத்து,
அந்த சாவிலும் இன்பம் அளித்து,
இறந்த ஜீவனை கண்களில் செலுத்தி
வந்த கண்ணீரையும் சுவைக்க வைக்கின்றது
நாம் கூடி வாழ்ந்த பருவங்கள்....
சுற்றி சுற்றம் நூறு கண்ட போதும்,
நட்பு தோள்கள் கன்னம் கேட்ட போதும்,
கைகள் ரெண்டும் கீறல் கண்ட போதும்,
உணர்ச்சி கொப்புளங்கள் சீழ் வடித்த போதும்,
ஓலம் வெடித்து தொண்டை சிதறிய போதும்,
ஒய்யார வாழ்வை உலகம் தந்த போதும்,
நினைவினின்று அகல மறுக்கின்றன
நீ இல்லாத தருணங்கள்....
நானறியாமல் என் இதயத்தை கிழித்து,
எண்ணத் தீயில் எனை வாட்டித் தீய்த்து,
உள்ளத்தில் அரை உயிரோடு புதைத்து,
அந்த சாவிலும் இன்பம் அளித்து,
இறந்த ஜீவனை கண்களில் செலுத்தி
வந்த கண்ணீரையும் சுவைக்க வைக்கின்றது
நாம் கூடி வாழ்ந்த பருவங்கள்....
சுற்றி சுற்றம் நூறு கண்ட போதும்,
நட்பு தோள்கள் கன்னம் கேட்ட போதும்,
கைகள் ரெண்டும் கீறல் கண்ட போதும்,
உணர்ச்சி கொப்புளங்கள் சீழ் வடித்த போதும்,
ஓலம் வெடித்து தொண்டை சிதறிய போதும்,
ஒய்யார வாழ்வை உலகம் தந்த போதும்,
நினைவினின்று அகல மறுக்கின்றன
நீ இல்லாத தருணங்கள்....