A Thainis
27-04-2013, 06:50 AM
நீல வானம் அதில் பூத்திடும்
பகல் இரவு விண்மலர்கள்
பசுமை போர்த்திய மலைகள்
சரிந்து விழுந்த பள்ளத்தாக்குகள்
சமவெளிகள் பாலைவன சோலைகள்
இங்கு பூத்து குலுங்கிடும் வயல்வெளிகள்
காய்த்திடும் மரங்கள் கனிந்திடும் பழவகைகள்
காற்றை மயக்கும் நறுமணங்கள்
உயர் வானில் உயர விரிந்திடும்
பறவைகள் ஓடிவிளையாடும் உயிரினங்கள்
கரைக்கான கடல் அதில் எழுந்திடும்
அலைகள் நீந்திடும் மீன்வகைகள்
விழுந்திடும் அருவி ஓடிடும் ஆறு
தாகம் தணித்திடும் நீர் நிலைகள்
சுடுகாற்று குளிர்தென்றல் சூறாவளி
அடைமழை சற்றென்று மாறிடும் வானிலை
இவை ஒவ்வொன்றின் ஒலியில்
மெல்லிய காற்றில் ஒலித்திடும் இன்னிசை
அனைத்தும் அற்புதம் அதில் அன்பு இதயம்
கொண்ட மனிதனின் படைப்பு ஒரு மகத்துவம்
இவ்வுலகம் இங்கு நாம் காணும்
ஒவ்வொன்றும் பிரமிப்பு - அவன்
ஈசன் தன் உயிர் மூச்சில் வரைந்து
வாழ்ந்திடும் உன்னத உயிரோவியம்
பகல் இரவு விண்மலர்கள்
பசுமை போர்த்திய மலைகள்
சரிந்து விழுந்த பள்ளத்தாக்குகள்
சமவெளிகள் பாலைவன சோலைகள்
இங்கு பூத்து குலுங்கிடும் வயல்வெளிகள்
காய்த்திடும் மரங்கள் கனிந்திடும் பழவகைகள்
காற்றை மயக்கும் நறுமணங்கள்
உயர் வானில் உயர விரிந்திடும்
பறவைகள் ஓடிவிளையாடும் உயிரினங்கள்
கரைக்கான கடல் அதில் எழுந்திடும்
அலைகள் நீந்திடும் மீன்வகைகள்
விழுந்திடும் அருவி ஓடிடும் ஆறு
தாகம் தணித்திடும் நீர் நிலைகள்
சுடுகாற்று குளிர்தென்றல் சூறாவளி
அடைமழை சற்றென்று மாறிடும் வானிலை
இவை ஒவ்வொன்றின் ஒலியில்
மெல்லிய காற்றில் ஒலித்திடும் இன்னிசை
அனைத்தும் அற்புதம் அதில் அன்பு இதயம்
கொண்ட மனிதனின் படைப்பு ஒரு மகத்துவம்
இவ்வுலகம் இங்கு நாம் காணும்
ஒவ்வொன்றும் பிரமிப்பு - அவன்
ஈசன் தன் உயிர் மூச்சில் வரைந்து
வாழ்ந்திடும் உன்னத உயிரோவியம்