நாஞ்சில் த.க.ஜெய்
22-04-2013, 02:49 PM
கூட்டம் நிறைந்த சென்னை கமலா தியேட்ட்ரில் இருந்து வெளியே வந்தேன் வாழ்வில் ஓர் நல்ல படம் பார்த்த நிறைவு வண்டியை பார்க் செய்திருந்த இடம் நோக்கி சென்றேன். வெளியில் ஒரு கடை தெருவில் திருப்பத்தில் வண்டியினை நிறுத்தி வீட்டிற்கு தேவையான மளிகை சாமான்களை வாங்கினேன் .மீண்டும் வண்டி இருக்கும் இடம் வந்தேன் ஒரே நெரிசலாக இருந்தது ..அப்போது
கொஞ்சம் வழி விடுங்க ! வண்டி எடுக்க வேண்டும் ! என்ற குரல் கேட்டு திரும்பினேன்.
என் அருகில் அவன். பார்த்தவுடன் நினைவில் நின்றான் கணேக்ஷ்அய்யர் என் கல்லூரி தோழன் திருமணமானவன்..
கல்லூரி முடிந்து சரியாக மூன்று வருடங்களுக்கு பிறகு தொடர்பில் "கணேக்ஷா எப்படி இருக்கே?" திரும்பி என்னை பார்த்து புன்னகைத்தான்..
"டேய் ! நீயா நான் உன்னை இங்கே எதிபார்க்கவில்லை..நான் நல்லா இருக்கேன் ..நீ எப்படி இருக்கே?"..பட படவென்று பேசிகொண்டே அவள் அருகில் வண்டியினை கொண்டு வந்தான் ..
வழக்கமான கூச்ச சுபாவம் என்னில் உதிக்க என் அவளை கண்டதும் தயங்கினேன்.அவள் கையில் குழந்தை..
என்னை பற்றி அவளிடம் கூறினான்.
"இவன் என் நண்பன் ஜெய்சிவா உனக்கு தெரியுமே இவன் நம் பிரிவில் என்னருகில் இருப்பானே அவன் தான்" ..
அவள் "ஹலோ" என்றாள்.
நானும் புன்னகைத்தேன்..எங்கள் பேச்சு கல்லூரி வாழ்வினை அலசியது அவள் அமைதியாக கேட்டு கொண்டிருந்தாள்.
இறுதியில் அவனிடம் "இது உன் குழந்தையா?"
ஆமாம்..
சாரிடா என்னால உன் கல்யாணத்துக்கு வரமுடியல..
பரவாயில்லடா..
குழந்தை அழகாய் இருக்குது ..பேர் என்ன?
அஸ்வந்தினி..
நல்ல பேர் சரிடா நான் கிளம்புறேன்..
உன் நம்பர கொடு நைட் கால் பண்ணுறேன்..
சரி குறிச்சிக்க.
நம்பரை கொடுத்தான்..
சரி வற்றேண்டா..
"வற்றேம்மா" என்று அவளிடம் சொல்லிவிட்டு கிளம்பினேன்..
மனது கனத்திருந்தது. மாலை 6 மணி பணி நிமித்தம் ஒருவரை காண பெரம்ப்பூர் செல்ல வேண்டியிருந்தது, செல்லும் வழியில் அழைப்பு வந்தது.
அவன் தான் அழைத்திருந்தான்..பிறகு அழைக்கலாம் என மனம் நினைத்தது...
அவரை பார்த்துவிட்டு என் பணி நிமித்தம் செய்ய வேண்டிய வேலைகளை கூறி விட்டு வீடு வந்து சேர்ந்தேன்.
பிறகு டி வி யில் பிடித்தமான மெலடி பாட்டொன்று பாடியது .அதை கேட்டு கொண்டே இரவு சாப்பாட்டினை முடித்தேன் ..
தூங்க நினைக்கையில் மறுபடியும் அழைப்பு வந்தது .. என்னை பற்றி விசாரித்தான்.
நீ என்ன பண்ணுற? கல்யாணம் ஆயிட்டுச்சா ?
உனக்கு தான் தெரியுமே என் அப்பா பனங்காட்டில் பயனி இறக்குவாருங்கிறது. இப்ப இருக்கிற நிலையில வேறு என்ன பண்ணுறது வேறு வழியில்ல அதான் இருந்த சொத்த வித்து சொந்தமாக ரியல் எஸ்ஸேட் தொழில் பண்ணுறேன்..அவள் நினைவு மறக்கல கொஞ்சம் நாள் போகட்டும் என்றேன் ..
அப்போது "அண்ணா சாப்பிட வா !" என்ற குரல் கேட்ட்து "கொஞ்ச நேரத்தில் வருகிறேன்" என்றான்..
அவனிடம் கேட்டேன் "உனக்கு ஏதுடா தங்கச்சி?"
என் கூட பிறந்த தங்கச்சி இல்லடா ! என் சித்தி மக இன்னைக்கு காலையில கூட பார்த்தியே அவதான் ..
மனதில் காணாத வாணவேடிக்கை கண்ட குழந்தையாக குதியாட்டம் போட்ட்து..அதை அடக்கி வைத்தேன் ..
பின் அவனிடம் "வகுப்பில் ஒரு முறை கூட சினேகமாய் பார்த்த்தும் பேசியதும் கூட கிடையாதே"..
நான் பிறப்பதற்கு முன்பே என் சித்தி சாதி விட்டு சாதி மாறி திருமணம் செய்ததால் என் வீட்டுக்கும் அவங்க வீட்டுக்கும் தொடர்பில்லாமல் இருந்த்து. இப்போ என் கல்யாணத்தோட தான் இந்த பிரச்சனையும் தீர்ந்தது அதோடுதான் இப்படி ஒரு தங்கை இருப்பதேதெரியும் இத்தனை நாள் நம்முடன் படித்திருந்தும் எனக்கு தெரியவில்லை..
அப்படியா?
அது எதுக்கு மக்கா ..விடு ..அப்புறம் காலேஜ் முடிஞ்ச பிறகு அவளை பார்த்தியா? அப்படி பார்த்தா சொல்லு நானும் உனக்காக பேசுறேன் இன்னிக்கு வரை அவ யாருன்னும் எங்கிட்ட சொல்லல..
சொல்லவா வேண்டாமா என்று ஒரு சிந்தனை..
இறுதியில் அவள் வேறு யாருமில்லை உன் தங்கைதான் என்றேன் ..அவ உன் தங்கச்சின்னு தெரியாமலே இத்தனை நாள் என் கூச்ச சுபாவத்தினால் அவளிடம் கூறாமல் அவளை ஒரு தலையாய் விரும்பினேன்..நீ தாண்டா எனக்கு உதவி செய்யனும்..
பதிலின்றி மௌனமாகி அணைந்தது அலைபேசி ...
சிறிது நேரம் கழித்து எஸ் எம் எஸ் வந்தது..பார்த்தேன் அவன் அனுப்பி இருந்தான்..சத்தமில்லாத வெற்றிட மனநிலையில் உணர்வுகளின் பதைப்பில் அவசரமாக படித்தேன்..
சாரிடா...
எதார்த்த உண்மை முகத்தில் அறைய கலங்கிய கண்களுடன் வானை நோக்க வெளிச்சத்தில் நட்சத்திரங்கள் கண்சிமிட்டின..
நமது மன்ற கதைபோட்டியில் கலந்து கொண்ட எனது முதல் சிறுகதை தாமதம் என்றாலும் உறவுகளின் மேலான விமர்சனத்திற்காக ..
கொஞ்சம் வழி விடுங்க ! வண்டி எடுக்க வேண்டும் ! என்ற குரல் கேட்டு திரும்பினேன்.
என் அருகில் அவன். பார்த்தவுடன் நினைவில் நின்றான் கணேக்ஷ்அய்யர் என் கல்லூரி தோழன் திருமணமானவன்..
கல்லூரி முடிந்து சரியாக மூன்று வருடங்களுக்கு பிறகு தொடர்பில் "கணேக்ஷா எப்படி இருக்கே?" திரும்பி என்னை பார்த்து புன்னகைத்தான்..
"டேய் ! நீயா நான் உன்னை இங்கே எதிபார்க்கவில்லை..நான் நல்லா இருக்கேன் ..நீ எப்படி இருக்கே?"..பட படவென்று பேசிகொண்டே அவள் அருகில் வண்டியினை கொண்டு வந்தான் ..
வழக்கமான கூச்ச சுபாவம் என்னில் உதிக்க என் அவளை கண்டதும் தயங்கினேன்.அவள் கையில் குழந்தை..
என்னை பற்றி அவளிடம் கூறினான்.
"இவன் என் நண்பன் ஜெய்சிவா உனக்கு தெரியுமே இவன் நம் பிரிவில் என்னருகில் இருப்பானே அவன் தான்" ..
அவள் "ஹலோ" என்றாள்.
நானும் புன்னகைத்தேன்..எங்கள் பேச்சு கல்லூரி வாழ்வினை அலசியது அவள் அமைதியாக கேட்டு கொண்டிருந்தாள்.
இறுதியில் அவனிடம் "இது உன் குழந்தையா?"
ஆமாம்..
சாரிடா என்னால உன் கல்யாணத்துக்கு வரமுடியல..
பரவாயில்லடா..
குழந்தை அழகாய் இருக்குது ..பேர் என்ன?
அஸ்வந்தினி..
நல்ல பேர் சரிடா நான் கிளம்புறேன்..
உன் நம்பர கொடு நைட் கால் பண்ணுறேன்..
சரி குறிச்சிக்க.
நம்பரை கொடுத்தான்..
சரி வற்றேண்டா..
"வற்றேம்மா" என்று அவளிடம் சொல்லிவிட்டு கிளம்பினேன்..
மனது கனத்திருந்தது. மாலை 6 மணி பணி நிமித்தம் ஒருவரை காண பெரம்ப்பூர் செல்ல வேண்டியிருந்தது, செல்லும் வழியில் அழைப்பு வந்தது.
அவன் தான் அழைத்திருந்தான்..பிறகு அழைக்கலாம் என மனம் நினைத்தது...
அவரை பார்த்துவிட்டு என் பணி நிமித்தம் செய்ய வேண்டிய வேலைகளை கூறி விட்டு வீடு வந்து சேர்ந்தேன்.
பிறகு டி வி யில் பிடித்தமான மெலடி பாட்டொன்று பாடியது .அதை கேட்டு கொண்டே இரவு சாப்பாட்டினை முடித்தேன் ..
தூங்க நினைக்கையில் மறுபடியும் அழைப்பு வந்தது .. என்னை பற்றி விசாரித்தான்.
நீ என்ன பண்ணுற? கல்யாணம் ஆயிட்டுச்சா ?
உனக்கு தான் தெரியுமே என் அப்பா பனங்காட்டில் பயனி இறக்குவாருங்கிறது. இப்ப இருக்கிற நிலையில வேறு என்ன பண்ணுறது வேறு வழியில்ல அதான் இருந்த சொத்த வித்து சொந்தமாக ரியல் எஸ்ஸேட் தொழில் பண்ணுறேன்..அவள் நினைவு மறக்கல கொஞ்சம் நாள் போகட்டும் என்றேன் ..
அப்போது "அண்ணா சாப்பிட வா !" என்ற குரல் கேட்ட்து "கொஞ்ச நேரத்தில் வருகிறேன்" என்றான்..
அவனிடம் கேட்டேன் "உனக்கு ஏதுடா தங்கச்சி?"
என் கூட பிறந்த தங்கச்சி இல்லடா ! என் சித்தி மக இன்னைக்கு காலையில கூட பார்த்தியே அவதான் ..
மனதில் காணாத வாணவேடிக்கை கண்ட குழந்தையாக குதியாட்டம் போட்ட்து..அதை அடக்கி வைத்தேன் ..
பின் அவனிடம் "வகுப்பில் ஒரு முறை கூட சினேகமாய் பார்த்த்தும் பேசியதும் கூட கிடையாதே"..
நான் பிறப்பதற்கு முன்பே என் சித்தி சாதி விட்டு சாதி மாறி திருமணம் செய்ததால் என் வீட்டுக்கும் அவங்க வீட்டுக்கும் தொடர்பில்லாமல் இருந்த்து. இப்போ என் கல்யாணத்தோட தான் இந்த பிரச்சனையும் தீர்ந்தது அதோடுதான் இப்படி ஒரு தங்கை இருப்பதேதெரியும் இத்தனை நாள் நம்முடன் படித்திருந்தும் எனக்கு தெரியவில்லை..
அப்படியா?
அது எதுக்கு மக்கா ..விடு ..அப்புறம் காலேஜ் முடிஞ்ச பிறகு அவளை பார்த்தியா? அப்படி பார்த்தா சொல்லு நானும் உனக்காக பேசுறேன் இன்னிக்கு வரை அவ யாருன்னும் எங்கிட்ட சொல்லல..
சொல்லவா வேண்டாமா என்று ஒரு சிந்தனை..
இறுதியில் அவள் வேறு யாருமில்லை உன் தங்கைதான் என்றேன் ..அவ உன் தங்கச்சின்னு தெரியாமலே இத்தனை நாள் என் கூச்ச சுபாவத்தினால் அவளிடம் கூறாமல் அவளை ஒரு தலையாய் விரும்பினேன்..நீ தாண்டா எனக்கு உதவி செய்யனும்..
பதிலின்றி மௌனமாகி அணைந்தது அலைபேசி ...
சிறிது நேரம் கழித்து எஸ் எம் எஸ் வந்தது..பார்த்தேன் அவன் அனுப்பி இருந்தான்..சத்தமில்லாத வெற்றிட மனநிலையில் உணர்வுகளின் பதைப்பில் அவசரமாக படித்தேன்..
சாரிடா...
எதார்த்த உண்மை முகத்தில் அறைய கலங்கிய கண்களுடன் வானை நோக்க வெளிச்சத்தில் நட்சத்திரங்கள் கண்சிமிட்டின..
நமது மன்ற கதைபோட்டியில் கலந்து கொண்ட எனது முதல் சிறுகதை தாமதம் என்றாலும் உறவுகளின் மேலான விமர்சனத்திற்காக ..