PDA

View Full Version : இந்திய எல்லைக்குள் சோதனைச் சாவடி அமைத்த சீன ராணுவம்!



ஆதி
22-04-2013, 05:35 AM
இந்திய எல்லைக்குள் 10 கி.மீ ஊடுருவி சோதனைச் சாவடி அமைத்த சீன ராணுவம்!


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் 10 கிலோ மீட்டர் தூரம் ஊடுருவிய சீன ராணுவம் இந்தியப் பகுதியில் சோதனைச் சாவடியையும் அமைத்திருப்பதால் எல்லையில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இமயமலைப் பகுதியில் இந்திய - சீன எல்லையில் லடாக்கை ஒட்டியுள்ள தவுலத் பெக் ஒல்டி என்ற இடத்துக்குள் சீன ராணுவத்தை சேர்ந்த 50 வீரர்கள் ஊடுருவி ஒரு சோதனைச் சாவடியையும் அமைத்திருக்கின்றனர். சீனாவின் இந்த அத்துமீறல் தொடர்பாக அந்நாட்டு ராணுவத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று இந்திய ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சீனாவின் ஊடுருவல் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாநில அரசும் ஒரு விரிவான அறிக்கையை உள்துறை அமைச்சகத்துக்கு நேற்று முன் தினம் அனுப்பி வைத்திருக்கிறது.

சீனாவின் இந்த ஊடுருவலால் எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

ஆதி
22-04-2013, 05:35 AM
கார்கில் போருக்கு முன், எலிகாஃப்டர் மூலம் இந்திய எல்லை பகுதிக்குள் 11 கி.மி நுழைந்து முஷ்ரப் ஒரு இரவு முழுக்க அங்கேயே முகாமிட்டிருந்தார் என்று சமீபத்தில் தகவல்கள் வெளியாகின

இப்போது தவுலத் பெக் ஒல்டிக்குள் 10 கி.மி சீன ராணுவம் நுழைந்திருக்கிறது !!!

உண்மையில் இந்திய எல்லை பாதுகாப்பான*தாக* தான் இருக்கிறதா ?

இப்படி அடிக்கடி நிகழ்ந்து கொண்டே இருக்கிறது, ஆனால் நாம் பேச்சு வார்த்தை நடத்துவதாக கூறிக் கொண்டே இருக்கிறோம், அவ்வளவு பலவீனமானவர்களாகவா நம்மை பிற நாடுகள் கருதுகின்றன ?

எலிகாஃப்டரில் நுழைந்ததை கூட அறியாமல் இருந்திருக்கிறோம் என்றால் ? இந்தியா பேசும் வீர வசனமெல்லாம் வெறும் வெற்று வேட்டுக்கள் தான் போலுமென எண்ண தோன்றுகிறது..

பாக் ஆக்கிரமிப்பு கேஷ்மீரை மீட்க திராணியற்றமைக்கு காரணங்கள் மெல்ல புரிய ஆரம்பிப்பது போல ஒரு உணர்வு ஏற்படுகிறது

நாஞ்சில் த.க.ஜெய்
22-04-2013, 11:04 AM
பாகிஸ்தானின் உலங்கூர்தி பயணம் சீனாவின் ஊடுருவல் இரண்டும் இந்தியா வினை ஆளும் அரசியலின் தகுதியினை தெளிவுற காட்டுகிறது இது போன்று ஒன்றுக்கும் உபயோகம் இல்லாத நிகழ்வுகளை விட்டுவிட்டு நடிகையின் கதை மட்டைபந்து விளையாட்டு நிகழ்வுகளை பதிவிடுங்கள் ஆதி .போரடிக்கிறது ..

கும்பகோணத்துப்பிள்ளை
22-04-2013, 01:55 PM
சீனாவின் ஆப்பரேசன் கார்லேண்ட் - இதுவும் ஒன்றா?!:smilie_abcfra:

செல்வா
23-04-2013, 01:29 PM
ரகசியக் காப்புச் சட்டத்தின் கீழ் மறைக்கப்படவில்லை என்றால்
இந்தியாவிலேயே அதிகப்படியான ஊழல் மிகுந்த துறை என்பது ராணுவமாகத்தான் இருக்கும்.