arun karthik
21-04-2013, 03:02 PM
இது ஒரு வாழைத் தோட்டம்...
முழுக்க முழுக்க வாழைகளை இழந்த கன்றுகள்;
நிச்சயம் கனி தரும்...
இது ஒரு கண்ணீர் குளம்...
காண்போர் கண்களில் கண்ணீர் தேங்கும்;
செல்வந்தர்களை தேடி வரும் மரியாதை போல...
இது ஒரு லட்சிய இல்லம்...
இனி வரவிருக்கும் உயர் பதவியினர்,
வசித்திடும் இல்லம் ...
இது ஒரு சரணாலயம்...
மூத்தோரால் தவிக்கவிடப்பட்ட பறவைகள்,
பறக்க பயிற்றுவிக்கப்படும் இடம்...
இது ஒரு காவல் நிலையம்...
பெற்றோரைத் தவற விட்டவர்கள்,
தவறாகி விடாமல் காக்கும் பகுதி...
இது ஒரு தேன் கூடு...
அன்புத் தேனை மழலை தேனீக்கள்,
மொய்க்கின்ற கூடு....
முழுக்க முழுக்க வாழைகளை இழந்த கன்றுகள்;
நிச்சயம் கனி தரும்...
இது ஒரு கண்ணீர் குளம்...
காண்போர் கண்களில் கண்ணீர் தேங்கும்;
செல்வந்தர்களை தேடி வரும் மரியாதை போல...
இது ஒரு லட்சிய இல்லம்...
இனி வரவிருக்கும் உயர் பதவியினர்,
வசித்திடும் இல்லம் ...
இது ஒரு சரணாலயம்...
மூத்தோரால் தவிக்கவிடப்பட்ட பறவைகள்,
பறக்க பயிற்றுவிக்கப்படும் இடம்...
இது ஒரு காவல் நிலையம்...
பெற்றோரைத் தவற விட்டவர்கள்,
தவறாகி விடாமல் காக்கும் பகுதி...
இது ஒரு தேன் கூடு...
அன்புத் தேனை மழலை தேனீக்கள்,
மொய்க்கின்ற கூடு....