lavanya
14-01-2004, 10:26 PM
மின் வணிகம் - ஒரு நடுநிலைப் பார்வை
நிறைகள்.
1. முற்றிலும் கணிப்பொறி மூலமாகவே தகவல் பரிமாற்றம் நடைபெறுவதால் காலவிரயம்
தவிர்க்கப்படுகிறது.
2. அனைத்து தகவல்களையும் கணிப்பொறிகளே கையாள்வதால் தகவல்கள் மிக துல்லியமாக
உள்ளன. உடனடி சந்தேககங்கள் - தகவல் பரிமாற்றங்கள் சாத்தியமாகின்றன.
3. மீண்டும் மீண்டும் கையாள வேண்டிய தகவல்களை (பொருள்களின் எண்ணிக்கை,விலை)
இவற்றை ஒரே ஒரு முறை உள்ளீடு செய்தால் போதும்.திரும்ப திரும்ப தட்டச்சு
செய்வதால் ஏற்படும் பிழைகள் தவிர்க்கப்படுகின்றன.
4. தாள்களில் ஆவணங்களை கையாள்வதற்கும் பரிமாறுவதற்கும்,பராமரிப்பதற்கும் ஆகும்
செலவுகள் அதிகம்.அதிக எண்ணிக்கையிலான பணியாள்களை நியமிக்க வேண்டும்.இது
கணிப்பொறிகளில் கையாள்வதால் செலவு மிக குறைவு.
5. பிழையற்ற விரைவான தகவல் பரிமாற்றத்தின் காரணமாக வணிக உறவுகள் சுமூகமாக
இருக்கின்றன.
6. கையாளும் செலவுகள் குறைவதால் பொருள்களின் அடக்கவிலை மறைமுகமாக
குறைகிறது.
7. கொள்முதல்/விற்பனை போன்ற தகவல்கள் வணிக நிறுவனங்களுக்கு கால தாமதமின்றி
கிடைத்து விடுவதால் வருங்கால வணிக திட்டங்களையும் யுக்திகளையும் விற்பனை முன்
கணிப்புகளையும் சரியான நேரத்தில் துல்லியமாக செய்ய முடிகிறது.
குறைகள்
1. நேரடியாக பொருளை பார்த்து வாங்குவதில் ஏற்படும் திருப்தி வாடிக்கையாளர்களுக்கு
மின் வணிகத்தில் கிடைப்பதில்லை. (இந்த சேலை சாயம் போவும் போலே இருக்கே)
2. பேரம் பேசி பொருளை வாங்க வாய்ப்பில்லை. (ஒரு ரெண்டு ரூவா கொறைச்சுக்கேயேன்
என்றெல்லாம் பேசவே முடியாது)
3. தகவல் பரிமாற்றத்தில் கையொப்பம் இட வழியில்லை ( துடிம கையொப்பங்கள் சற்று
சிக்கலாகவே இருக்கின்றன...)
4. தகவல் அனுப்பியவர் தாம் அனுப்பவில்லையென்றோ பெறுபவர் தகவல் கிடைக்கவில்லை
என்றோ மறுதலிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன.
5. தாள்களில் தகவல்கள் திருத்தப்பட்டால் கண்டுபிடிக்க வாய்ப்புகள் உண்டு.கம்ப்யூட்டரில்
கையாளும் தகவல்களில் தடயமே இல்லாமல் திருத்தங்கள் செய்ய முடியும்.
6. இருவருக்கும் இடையே நடைபெறும் வணிகம் தொடர்பான தகவல் பரிமாற்றங்களை
மூன்றாவது நபர் தெளிவாக ஒட்டு கேட்க/பார்க்க நிறையவே வழி உள்ளது.
7. தீய எண்ணமுள்ள திறமைசாலிகள் (திறமைசாலிகளுக்குத்தான் கொஞ்ச தீய எண்ணமே
வரும்) பல நிறுவன பிணையங்களின் தீச்சுவரை தண்ணி ஊற்றாமலேயே உடைத்தெறிந்து
உள்ளே நுழைந்து உயிர்நாடியான தகவல்களை சட்டத்துக்கு புறம்பாக கவர்ந்து கொள்ள
முடியும்.எந்த நாட்டின் பீனல் கோடுகளும் இவர்களை ஒன்றும் செய்ய முடியாது.
8. கணிப்பொறிகளில் சேமித்து வைக்கப்பட்ட வணிகத்தகவல்கள் பரிமாற்றங்கள் பல்வேறு
காரணங்களினால் பாழ்பட்டு போக வாய்ப்பு உண்டு.
இந்தியாவில் மின் வணிகம்
அரசுத்துறையில் VSNL,NIC ஆகியவை EDI NETWORk ஐ நிறுவி வணிக தகவல்
பரிமாற்றத்துக்கு தடம் அமைத்து கொடுத்தன.தனியார் துறைகளும் தமக்குள் மதிப்பேற்று
பிணையம் அமைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.Mahindra,InfoSys, Riliance groups
Network service,Sathyam Infoway,Global Telecom Servive பல தனியார் EDI சேவையாள
நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பாட தொடங்கின.
இந்தியாவில் மின் வணிகம் வளர்ச்சி என்பது மிக மெதுவாகவே நடைபெறுகிறது.இதற்கு
பல காரணங்கள் இருக்கின்றன.
1. இந்தியாவில் கம்ப்யூட்டர் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இன்னும் அதிகமாகவில்லை.
2. அப்படியே கணிப்பொறி வைத்திருந்தாலும் இணைய இணைப்பு பெற்றவர்கள் குறைவு.
3. இந்தியாவில் பண அட்டை என்பது மிக உயர்ந்த மனிதர்கள் மட்டுமே பயன்படுத்தும்
விஷயமாக இருக்கிறது..இது ஒரு மிகப்பெரிய தடையாக இருக்கிறது.
4. மின் வணிகத்தை ஒழுங்கு படுத்தும் சட்டங்கள் தேவை.இப்போதுதான் இந்தியாவில்
இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
5. இந்தியாவில் இன்னும் விற்பனை வரி,மாநில எல்லை வரிகள் முறைமைப்படுத்தப்பட
வில்லை.ஆனால் மின் வணிகம் என்பது எல்லை,தேசம் கடந்தது...
6. இணையம் வழியே மின் வணிகம் தொடங்க நிறுவனங்களுக்கு தொடக்க செலவு மிக
அதிகம்.அந்தளவு முதலீடு செய்து ரிஸ்க் எடுக்க வணிக நிறுவனங்கள் இப்போதைக்கு
தயாராக இல்லை.
7. இந்திய மக்கள் பேரம் பேசி வாங்கும் மனப்பான்மை உள்ளவர்கள்.இணையம் இதற்கு
முற்றிலும் மாறாக உள்ளது.எனினும் வருங்காலத்தில் தழைக்க வாய்ப்பிருக்கிறது.
நிறைகள்.
1. முற்றிலும் கணிப்பொறி மூலமாகவே தகவல் பரிமாற்றம் நடைபெறுவதால் காலவிரயம்
தவிர்க்கப்படுகிறது.
2. அனைத்து தகவல்களையும் கணிப்பொறிகளே கையாள்வதால் தகவல்கள் மிக துல்லியமாக
உள்ளன. உடனடி சந்தேககங்கள் - தகவல் பரிமாற்றங்கள் சாத்தியமாகின்றன.
3. மீண்டும் மீண்டும் கையாள வேண்டிய தகவல்களை (பொருள்களின் எண்ணிக்கை,விலை)
இவற்றை ஒரே ஒரு முறை உள்ளீடு செய்தால் போதும்.திரும்ப திரும்ப தட்டச்சு
செய்வதால் ஏற்படும் பிழைகள் தவிர்க்கப்படுகின்றன.
4. தாள்களில் ஆவணங்களை கையாள்வதற்கும் பரிமாறுவதற்கும்,பராமரிப்பதற்கும் ஆகும்
செலவுகள் அதிகம்.அதிக எண்ணிக்கையிலான பணியாள்களை நியமிக்க வேண்டும்.இது
கணிப்பொறிகளில் கையாள்வதால் செலவு மிக குறைவு.
5. பிழையற்ற விரைவான தகவல் பரிமாற்றத்தின் காரணமாக வணிக உறவுகள் சுமூகமாக
இருக்கின்றன.
6. கையாளும் செலவுகள் குறைவதால் பொருள்களின் அடக்கவிலை மறைமுகமாக
குறைகிறது.
7. கொள்முதல்/விற்பனை போன்ற தகவல்கள் வணிக நிறுவனங்களுக்கு கால தாமதமின்றி
கிடைத்து விடுவதால் வருங்கால வணிக திட்டங்களையும் யுக்திகளையும் விற்பனை முன்
கணிப்புகளையும் சரியான நேரத்தில் துல்லியமாக செய்ய முடிகிறது.
குறைகள்
1. நேரடியாக பொருளை பார்த்து வாங்குவதில் ஏற்படும் திருப்தி வாடிக்கையாளர்களுக்கு
மின் வணிகத்தில் கிடைப்பதில்லை. (இந்த சேலை சாயம் போவும் போலே இருக்கே)
2. பேரம் பேசி பொருளை வாங்க வாய்ப்பில்லை. (ஒரு ரெண்டு ரூவா கொறைச்சுக்கேயேன்
என்றெல்லாம் பேசவே முடியாது)
3. தகவல் பரிமாற்றத்தில் கையொப்பம் இட வழியில்லை ( துடிம கையொப்பங்கள் சற்று
சிக்கலாகவே இருக்கின்றன...)
4. தகவல் அனுப்பியவர் தாம் அனுப்பவில்லையென்றோ பெறுபவர் தகவல் கிடைக்கவில்லை
என்றோ மறுதலிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன.
5. தாள்களில் தகவல்கள் திருத்தப்பட்டால் கண்டுபிடிக்க வாய்ப்புகள் உண்டு.கம்ப்யூட்டரில்
கையாளும் தகவல்களில் தடயமே இல்லாமல் திருத்தங்கள் செய்ய முடியும்.
6. இருவருக்கும் இடையே நடைபெறும் வணிகம் தொடர்பான தகவல் பரிமாற்றங்களை
மூன்றாவது நபர் தெளிவாக ஒட்டு கேட்க/பார்க்க நிறையவே வழி உள்ளது.
7. தீய எண்ணமுள்ள திறமைசாலிகள் (திறமைசாலிகளுக்குத்தான் கொஞ்ச தீய எண்ணமே
வரும்) பல நிறுவன பிணையங்களின் தீச்சுவரை தண்ணி ஊற்றாமலேயே உடைத்தெறிந்து
உள்ளே நுழைந்து உயிர்நாடியான தகவல்களை சட்டத்துக்கு புறம்பாக கவர்ந்து கொள்ள
முடியும்.எந்த நாட்டின் பீனல் கோடுகளும் இவர்களை ஒன்றும் செய்ய முடியாது.
8. கணிப்பொறிகளில் சேமித்து வைக்கப்பட்ட வணிகத்தகவல்கள் பரிமாற்றங்கள் பல்வேறு
காரணங்களினால் பாழ்பட்டு போக வாய்ப்பு உண்டு.
இந்தியாவில் மின் வணிகம்
அரசுத்துறையில் VSNL,NIC ஆகியவை EDI NETWORk ஐ நிறுவி வணிக தகவல்
பரிமாற்றத்துக்கு தடம் அமைத்து கொடுத்தன.தனியார் துறைகளும் தமக்குள் மதிப்பேற்று
பிணையம் அமைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.Mahindra,InfoSys, Riliance groups
Network service,Sathyam Infoway,Global Telecom Servive பல தனியார் EDI சேவையாள
நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பாட தொடங்கின.
இந்தியாவில் மின் வணிகம் வளர்ச்சி என்பது மிக மெதுவாகவே நடைபெறுகிறது.இதற்கு
பல காரணங்கள் இருக்கின்றன.
1. இந்தியாவில் கம்ப்யூட்டர் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இன்னும் அதிகமாகவில்லை.
2. அப்படியே கணிப்பொறி வைத்திருந்தாலும் இணைய இணைப்பு பெற்றவர்கள் குறைவு.
3. இந்தியாவில் பண அட்டை என்பது மிக உயர்ந்த மனிதர்கள் மட்டுமே பயன்படுத்தும்
விஷயமாக இருக்கிறது..இது ஒரு மிகப்பெரிய தடையாக இருக்கிறது.
4. மின் வணிகத்தை ஒழுங்கு படுத்தும் சட்டங்கள் தேவை.இப்போதுதான் இந்தியாவில்
இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
5. இந்தியாவில் இன்னும் விற்பனை வரி,மாநில எல்லை வரிகள் முறைமைப்படுத்தப்பட
வில்லை.ஆனால் மின் வணிகம் என்பது எல்லை,தேசம் கடந்தது...
6. இணையம் வழியே மின் வணிகம் தொடங்க நிறுவனங்களுக்கு தொடக்க செலவு மிக
அதிகம்.அந்தளவு முதலீடு செய்து ரிஸ்க் எடுக்க வணிக நிறுவனங்கள் இப்போதைக்கு
தயாராக இல்லை.
7. இந்திய மக்கள் பேரம் பேசி வாங்கும் மனப்பான்மை உள்ளவர்கள்.இணையம் இதற்கு
முற்றிலும் மாறாக உள்ளது.எனினும் வருங்காலத்தில் தழைக்க வாய்ப்பிருக்கிறது.