கார்த்திக்
19-04-2013, 03:57 AM
அன்னை இந்திரா மெட்ரிக் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் தான் சிவா. கவிஞர் கண்ணதாசன் எழுதிய “இயேசு காவியம்” தான் பாடத் தலைப்பு.ஆசிரியர் குறிப்பில் கவிஞர் கண்ணதாசனின் படைப்புகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார் தமிழ் ஆசிரியை வசந்தி. குறிப்பாக அவரது கவிதைகளின் சிறப்பை தெளிவாக விவரித்தார்.
வகுப்பின் முடிவில் மாணவர்களின் கவிதை ஆர்வத்தை வளர்க்க அனைவரையும் சொந்தமாக கவிதை எழுதிவருமாறு கூறினார்.
சிவாவின் முழுப்பெயர் சிவசங்கர் பாரதி.அவன் தந்தை தனியார் பள்ளி ஒன்றில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து கொண்டிருப்பவர்.சிவாவின் தாத்தா அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராய் பணிபுரிந்து கடந்த ஆண்டு ஓய்வு பெற்றவர்.தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதையும் பெற்றவர்.
சிவாவின் தாத்தா திரு.முத்துகிருஷ்ணன்,கவிதை மற்றும் சிறு கதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.அவரது படைப்புகள் பல வார இதழ்களில் வெளிவந்துள்ளன.அவ்வப்போது ரூ50,ரூ100 என்று பரிசுகளையும் பெற்றுத்தந்தது அவரது கவிதைகள்.
அதனால் கவிதை எழுதி வரவேண்டும் என்று தமிழ் ஆசிரியை கூறியவுடன் சட்டென்று அவனுக்கு நினைவு வந்தது அவனுடைய தாத்தா தான்.
அன்று மாலை வீடு திரும்பியதும்,அவன் பள்ளி சீறுடையை கூட கலையாமல் தாத்தாவிடம் சென்றான்.வீட்டின் முகப்பில் “கவிதாலயம்” எனப் பெரிய எழுத்துக்ளால் எழுதியிருந்தது.
தாத்தாவிடம் பள்ளியில் நடந்ததை விவரித்து, தனக்கு கவிதை எழுத உதவுமாறு வேண்டினான்.
“கவிதை எழுதப்போகிறாயா? மிகவும் சந்தோஷம்,முதலில் நீயாகவே முயற்சி செய்து உனக்கு தெரிந்ததை வைத்து எழுதி கொண்டுவா, பிறகு நான் அதை திருத்திக் கொடுக்கிறேன்” என்றார் தாத்தா.
அவனுக்கு சிவசங்கர் பாரதி எனப் பெயர் வைத்ததே அவன் தாத்தா தான்.அவர் சொன்னால் சரியாகத் தான் இருக்கும் என்று எண்ணினான்.
மாலை ஐந்தரை மணி ஆனவுடன் டியூசனுக்கு கிளம்பி விட்டான். அங்கே சென்று அவன் பாடபுத்தகத்தை திறந்து வைத்திருந்தானே தவிர அவனது சிந்தனை முழுவதும் கவிதை எழுதுவது பற்றியே இருந்தது.
சிவா,அவனது தாத்தாவின் கவிதைகளை அவ்வப்போது படித்திருக்கிறன்.தாத்தாவின் கவிதைகள் இதழ்களில் வெளியாகி பரிசு மணியார்டரில் வரும்போது அவனுக்கு ரூ10,ரூ20 என்று கொடுப்பது வழக்கம்.
சிவாவிற்கு கவிதை எழுத முடியும் என்று நம்பிக்கை இருந்தது.பல நேரம் யோசித்து அவனது ரஃப் நோட்டில் கிறுக்கத் தொடங்கினான். டியூசன் முடியும் வேளையில் அவன் ஒரு கவிதையை எழுதியிருந்தான்.
டியூசன் முடிந்ததும் நேராக வீட்டிற்கு சென்று தாதாவைத் தேடினான்ஆனால் தாத்தா வீட்டில் இல்லை,நண்பர் ஒருவருக்கு மாரடைப்பு வந்து மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக தகவல் கிடைத்தவுடன் அங்கே தாத்தா விரைந்து விட்டதாக பாட்டி தெரிவித்தாள். காலையில் தாத்தா வந்துவிடுவார் என சமாதானமானான்.
ஆனால் காலையிலும் தாத்தா வராததால் ஏமாற்றமடந்தான்,தமிழ் ஆசிரியையிடம் படித்துக் காட்டும் முன் தாத்தாவின் கருத்தைக் கேட்க வேண்டும் என்று விரும்பினான்.கருத்தை விட தனது முதல் கவிதையை தாத்தாவிடம் தான் தெரிவிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான்.
என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கினான் சிவா.கவிதை எழுதி வரவில்லை என தமிழ் ஆசிரியையிடம் கூறிவிடுவதென முடிவிற்கு வந்தான்.ஆனால் தன்னுடைய கவிதையை பல பேர் முன்னிலையில் படிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது.பள்ளி பேருந்து நிற்குமிடத்திற்கு வந்துவிட்டான், பேருந்து வருவதற்கு இன்னும் ஐந்து நிமிடங்களே இருந்தன.
திடீரென சிவாவின் முகம் பிரகாசமானது,சட்டென்று ஒரு யோசனை,அவன் வீட்டை நோக்கி ஓட ஆரம்பித்தான்.வீட்டை அடைந்ததும் புத்தகப்பையை கீழெ இறக்கி ரஃப் நோட்டில் இருந்த கவிதை பக்கத்தை கிளித்து தாத்தா மேஜையின் மேலிருந்த பேனா ஸ்டான்டின் கீழ் வைத்தான்.பிறகு புத்தகப்பையுடன் பேருந்து நிலையத்திற்கு ஓடினான்.அவன் அங்கு போய் சேருவதற்கும் பள்ளி பேருந்து வருவதற்கும் சரியாக இருந்தது.
அன்று தமிழ் வகுப்பு மதியம் மூன்று மணிக்கு தான்,எப்படியும் அதற்குள் தாத்தா வீட்டிற்கு வந்துவிடுவார்.கட்டாயம் அவனது கவிதையை படித்துவிடுவார்.எப்படியும் சிவாவின் தாத்தா தான் தனது முதல் கவிதையின் முதல் வாசகராயிருப்பார் என நம்பினான்.
மதியம் மூன்று மணிக்கு தமிழ் வகுப்பு துவங்கியது. மாணவர்களின் கவிதைகளை ஒவ்வொருவராக படித்துக்காட்ட சொன்னார் தமிழ் ஆசிரியை,எழுதி வந்தது மூன்றே பேர் தான்,அதில் சிவாவும் ஒருவன்.மற்ற இருவரின் கவிதைகள் சிவாவின் கவிதைகளை விட நன்றாக இருப்பினும் அவர்கள் அதை சுயமாக எழுதவில்லை என அனைவருக்கும் தெளிவாக தெரிந்தது.பிறகு மற்ற இருவரையும் சொந்தமாக முயற்சி செய்து கவிதை எழுத வேண்டும் என அறிவுரித்து,தாமாகவே கவிதை எழுதிய சிவாவை வெகுவாக பாராட்டினார் தமிழ் ஆசிரியை.
மாலை பள்ளி முடிந்ததும்,சிவா பள்ளி பேருந்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான்.ஆசிரியையிடம் பாராட்டுக்கள் கிடைத்தும்,அவனது சிந்தனையில் தாத்தா வந்திருப்பாரா? கவிதையை படித்திருப்பாரா? என்ன சொல்லப்போகிராரோ?என்றே ஓடிக்கொண்டிருந்தது.பேருந்தில் நின்றதும் தனது புத்தகப் பையுடன் கீழே இறங்கி வீட்டிற்கு ஓடினான் சிவா,அவனுக்கு அதிர்ச்சி காத்துகொண்டிருந்தது.
அவனது தாத்தா வீட்டிற்கு முன்பாக சிவாவின் வரவிற்காக காத்திருந்தார்.வாசலின் முன் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தார்.
தாத்தாவின் நண்பர் மாரடைப்பின் பாதிப்பில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு வந்தவுடன் தான் தாத்தா வீடு திரும்பினார்.பின்னர் அவர் குளித்து வந்தவுடன் சிவா எழுதிய கவிதை அவர் மேஜையில் இருப்பதை கவனித்தார்.கவிதை சாதாரனமாக தான் அவருக்கு தோன்றியது.அதில் பிழைகளும் இருந்தது,இருப்பினும் தன் தாத்தா தான் அவனது கவிதையை முதலில் படிக்க வேண்டும் எனக் கருதி சிவா செய்த செயல் அவர் சற்றும் எதிர்பாராதது,அவரை ஆச்சர்யத்துடன் மனதையும் நெகிழ வைத்து விட்டது.
சிவா வந்தவுடன் அவனை கட்டி அனைத்து,உச்சி முகர்ந்தார் தாத்தா.
ஒன்றும் புரியாதவனாய் “எப்ப தாத்தா கவிதையை படிச்சீங்க?”என்றான் சிவா.
“சுமார் பனிரெண்டு இருக்கும்”என்றார்.
சிவா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.ஏனென்றால் அவன் விரும்பியது போலவே சிவாவின் முதல் வாசகர் அவன் தாத்தா தான்!
த.கார்த்திக் செல்வன்,
சேலம்.
குறிப்பு:
இது நான் எழுதிய முதல் சிறுகதை,எனக்குள் இருந்த கதை ஆர்வத்தை வளர்த்து சிறுகதை எழுத தூண்டியது நமது தமிழ் மன்றம் தான்.அதற்கு
எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.தங்களது கருத்துக்கள் எதுவேனும் தயவு செய்து பதியுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.தவறுகள் இருப்பின்
மன்னிக்கவும்.
வகுப்பின் முடிவில் மாணவர்களின் கவிதை ஆர்வத்தை வளர்க்க அனைவரையும் சொந்தமாக கவிதை எழுதிவருமாறு கூறினார்.
சிவாவின் முழுப்பெயர் சிவசங்கர் பாரதி.அவன் தந்தை தனியார் பள்ளி ஒன்றில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து கொண்டிருப்பவர்.சிவாவின் தாத்தா அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராய் பணிபுரிந்து கடந்த ஆண்டு ஓய்வு பெற்றவர்.தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதையும் பெற்றவர்.
சிவாவின் தாத்தா திரு.முத்துகிருஷ்ணன்,கவிதை மற்றும் சிறு கதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.அவரது படைப்புகள் பல வார இதழ்களில் வெளிவந்துள்ளன.அவ்வப்போது ரூ50,ரூ100 என்று பரிசுகளையும் பெற்றுத்தந்தது அவரது கவிதைகள்.
அதனால் கவிதை எழுதி வரவேண்டும் என்று தமிழ் ஆசிரியை கூறியவுடன் சட்டென்று அவனுக்கு நினைவு வந்தது அவனுடைய தாத்தா தான்.
அன்று மாலை வீடு திரும்பியதும்,அவன் பள்ளி சீறுடையை கூட கலையாமல் தாத்தாவிடம் சென்றான்.வீட்டின் முகப்பில் “கவிதாலயம்” எனப் பெரிய எழுத்துக்ளால் எழுதியிருந்தது.
தாத்தாவிடம் பள்ளியில் நடந்ததை விவரித்து, தனக்கு கவிதை எழுத உதவுமாறு வேண்டினான்.
“கவிதை எழுதப்போகிறாயா? மிகவும் சந்தோஷம்,முதலில் நீயாகவே முயற்சி செய்து உனக்கு தெரிந்ததை வைத்து எழுதி கொண்டுவா, பிறகு நான் அதை திருத்திக் கொடுக்கிறேன்” என்றார் தாத்தா.
அவனுக்கு சிவசங்கர் பாரதி எனப் பெயர் வைத்ததே அவன் தாத்தா தான்.அவர் சொன்னால் சரியாகத் தான் இருக்கும் என்று எண்ணினான்.
மாலை ஐந்தரை மணி ஆனவுடன் டியூசனுக்கு கிளம்பி விட்டான். அங்கே சென்று அவன் பாடபுத்தகத்தை திறந்து வைத்திருந்தானே தவிர அவனது சிந்தனை முழுவதும் கவிதை எழுதுவது பற்றியே இருந்தது.
சிவா,அவனது தாத்தாவின் கவிதைகளை அவ்வப்போது படித்திருக்கிறன்.தாத்தாவின் கவிதைகள் இதழ்களில் வெளியாகி பரிசு மணியார்டரில் வரும்போது அவனுக்கு ரூ10,ரூ20 என்று கொடுப்பது வழக்கம்.
சிவாவிற்கு கவிதை எழுத முடியும் என்று நம்பிக்கை இருந்தது.பல நேரம் யோசித்து அவனது ரஃப் நோட்டில் கிறுக்கத் தொடங்கினான். டியூசன் முடியும் வேளையில் அவன் ஒரு கவிதையை எழுதியிருந்தான்.
டியூசன் முடிந்ததும் நேராக வீட்டிற்கு சென்று தாதாவைத் தேடினான்ஆனால் தாத்தா வீட்டில் இல்லை,நண்பர் ஒருவருக்கு மாரடைப்பு வந்து மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக தகவல் கிடைத்தவுடன் அங்கே தாத்தா விரைந்து விட்டதாக பாட்டி தெரிவித்தாள். காலையில் தாத்தா வந்துவிடுவார் என சமாதானமானான்.
ஆனால் காலையிலும் தாத்தா வராததால் ஏமாற்றமடந்தான்,தமிழ் ஆசிரியையிடம் படித்துக் காட்டும் முன் தாத்தாவின் கருத்தைக் கேட்க வேண்டும் என்று விரும்பினான்.கருத்தை விட தனது முதல் கவிதையை தாத்தாவிடம் தான் தெரிவிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான்.
என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கினான் சிவா.கவிதை எழுதி வரவில்லை என தமிழ் ஆசிரியையிடம் கூறிவிடுவதென முடிவிற்கு வந்தான்.ஆனால் தன்னுடைய கவிதையை பல பேர் முன்னிலையில் படிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது.பள்ளி பேருந்து நிற்குமிடத்திற்கு வந்துவிட்டான், பேருந்து வருவதற்கு இன்னும் ஐந்து நிமிடங்களே இருந்தன.
திடீரென சிவாவின் முகம் பிரகாசமானது,சட்டென்று ஒரு யோசனை,அவன் வீட்டை நோக்கி ஓட ஆரம்பித்தான்.வீட்டை அடைந்ததும் புத்தகப்பையை கீழெ இறக்கி ரஃப் நோட்டில் இருந்த கவிதை பக்கத்தை கிளித்து தாத்தா மேஜையின் மேலிருந்த பேனா ஸ்டான்டின் கீழ் வைத்தான்.பிறகு புத்தகப்பையுடன் பேருந்து நிலையத்திற்கு ஓடினான்.அவன் அங்கு போய் சேருவதற்கும் பள்ளி பேருந்து வருவதற்கும் சரியாக இருந்தது.
அன்று தமிழ் வகுப்பு மதியம் மூன்று மணிக்கு தான்,எப்படியும் அதற்குள் தாத்தா வீட்டிற்கு வந்துவிடுவார்.கட்டாயம் அவனது கவிதையை படித்துவிடுவார்.எப்படியும் சிவாவின் தாத்தா தான் தனது முதல் கவிதையின் முதல் வாசகராயிருப்பார் என நம்பினான்.
மதியம் மூன்று மணிக்கு தமிழ் வகுப்பு துவங்கியது. மாணவர்களின் கவிதைகளை ஒவ்வொருவராக படித்துக்காட்ட சொன்னார் தமிழ் ஆசிரியை,எழுதி வந்தது மூன்றே பேர் தான்,அதில் சிவாவும் ஒருவன்.மற்ற இருவரின் கவிதைகள் சிவாவின் கவிதைகளை விட நன்றாக இருப்பினும் அவர்கள் அதை சுயமாக எழுதவில்லை என அனைவருக்கும் தெளிவாக தெரிந்தது.பிறகு மற்ற இருவரையும் சொந்தமாக முயற்சி செய்து கவிதை எழுத வேண்டும் என அறிவுரித்து,தாமாகவே கவிதை எழுதிய சிவாவை வெகுவாக பாராட்டினார் தமிழ் ஆசிரியை.
மாலை பள்ளி முடிந்ததும்,சிவா பள்ளி பேருந்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான்.ஆசிரியையிடம் பாராட்டுக்கள் கிடைத்தும்,அவனது சிந்தனையில் தாத்தா வந்திருப்பாரா? கவிதையை படித்திருப்பாரா? என்ன சொல்லப்போகிராரோ?என்றே ஓடிக்கொண்டிருந்தது.பேருந்தில் நின்றதும் தனது புத்தகப் பையுடன் கீழே இறங்கி வீட்டிற்கு ஓடினான் சிவா,அவனுக்கு அதிர்ச்சி காத்துகொண்டிருந்தது.
அவனது தாத்தா வீட்டிற்கு முன்பாக சிவாவின் வரவிற்காக காத்திருந்தார்.வாசலின் முன் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தார்.
தாத்தாவின் நண்பர் மாரடைப்பின் பாதிப்பில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு வந்தவுடன் தான் தாத்தா வீடு திரும்பினார்.பின்னர் அவர் குளித்து வந்தவுடன் சிவா எழுதிய கவிதை அவர் மேஜையில் இருப்பதை கவனித்தார்.கவிதை சாதாரனமாக தான் அவருக்கு தோன்றியது.அதில் பிழைகளும் இருந்தது,இருப்பினும் தன் தாத்தா தான் அவனது கவிதையை முதலில் படிக்க வேண்டும் எனக் கருதி சிவா செய்த செயல் அவர் சற்றும் எதிர்பாராதது,அவரை ஆச்சர்யத்துடன் மனதையும் நெகிழ வைத்து விட்டது.
சிவா வந்தவுடன் அவனை கட்டி அனைத்து,உச்சி முகர்ந்தார் தாத்தா.
ஒன்றும் புரியாதவனாய் “எப்ப தாத்தா கவிதையை படிச்சீங்க?”என்றான் சிவா.
“சுமார் பனிரெண்டு இருக்கும்”என்றார்.
சிவா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.ஏனென்றால் அவன் விரும்பியது போலவே சிவாவின் முதல் வாசகர் அவன் தாத்தா தான்!
த.கார்த்திக் செல்வன்,
சேலம்.
குறிப்பு:
இது நான் எழுதிய முதல் சிறுகதை,எனக்குள் இருந்த கதை ஆர்வத்தை வளர்த்து சிறுகதை எழுத தூண்டியது நமது தமிழ் மன்றம் தான்.அதற்கு
எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.தங்களது கருத்துக்கள் எதுவேனும் தயவு செய்து பதியுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.தவறுகள் இருப்பின்
மன்னிக்கவும்.