Vinoth Kumar
17-04-2013, 06:33 AM
என் சில சிறு கதைகளை இங்கே தருகிறேன் .கற்பனையில் இனி தவழுங்கள்
முக்கால்
அன்று அமைதியை அடக்கி கொண்டிருந்தது அந்நகரத்திற்கும் இக்கிராமத்திற்கும் இடைப்பட்ட ஓர் ஊர்.ஒலி பெருக்கியில் கம்மிய குரலில் "இதற்கு முடிவு தெரியும் வரை ,யாரும் இங்கிருந்து ......-இல்லை வெளியிலிருந்து ...-"ம்உம்ம்ம்,,,ம்உம்ம்ம் ....இருமல் அவர் பேச்சை நிறுத்தியது.சப்தம் காற்றினில் கறைந்தவுடன் தத்தம் வீடுகளில் நிறுத்தி வைக்கபட்டிறிந்த தொலைக்காட்சி ஒலி பெருகியது.கால பைரவர் விளையாட்டு போலும்,முதியவர்கள் புராணங்களை தேட , கிரகஸ்தர்கள் சமையல் அறையில் முடங்கி கிடக்க,குழந்தைகள் இம்மாதிரியான் கல்வியை கொண்ட நாட்களுக்கு விடுமுறை கிடைத்த ஆனந்தத்தில் திளைத்திருந்தனர்.
யாவரும் மகிழ்ச்சியின் உச்சத்தில் மூழ்கியிருக்க ,இவை எல்லாவற்றிக்கும் காரணமான அந்த மூன்று பேருக்கு மட்டும் ஏனோ அது கிட்டவில்லை.
பல தொழில் புரியும் பைல்வான் ,கலியுக 64 கலைகளிலும் ஓரளவுக்கு கைதேர்ந்தவர்.கேட்பார்யற்று இருந்த நிலத்தை அரசியல் கேடியான நோஞ்சானுக்கு அளந்துவிட்டது முதல் விதி நெருப்பில் இருந்து கிளம்பிய புகை போல் வளர்ந்து கொண்டே போனது.இம்மூவர்க்கும் விதியின் விளையாட்டு ஆரம்பமானது ஓர் வீட்டு விலங்கு மூலம்.நோஞ்சானின் செல்ல பிராணிக்கு சற்றே நோய்கள் மீது அதித பற்று.அதனால் வந்தது சரீர முழுக்க தோல் தொற்று.காண்பவரை தலை குனியவைத்து கதற ஓட விடும் தன்மை அதற்கு,காக்கைக்கும் தன குஞ்சு பொன் குஞ்சு அன்றோ.
எத்தனை ஆண்டுகள் தவமிருத்தாலும் அது போன்ற ஒரு வெள்ளிகிழமை கிடைக்க பெறாது.அந்த பொன்னான காலையிலே அந்த செல்ல பிராணி பைல்வானின் இரண்டு சக்கர வண்டியின் மீது தன் நான்கு கால்களில் மூன்று கால்களை மண்ணில் பதித்து ஒரு கால் தூக்கி ஒரு வேலையை செய்வதற்கு முயற்சி செய்தபொழுது அதற்கு தடைசெய்வது போல் தன் மகனின் பள்ளிபையை தூக்கி அதன் மீது எறிந்தான்.பையின் பளு தாள முடியாமல் அதன் அடியில் சிக்கிய அந்த ஒரு கால் ஒடிந்தது.
மேற் சொன்ன நெருப்பின் புகை மேகத்தில் கலந்து மற்ற மேகங்களை எல்லாம் ஒன்று திரட்டி அங்கே மழையாக பொழிந்தது.உன் குடிம்பி என் கையில ,என் குடும்பி உங்க கையில --என்றதோர் குஸ்தி பழமொழிக்கு அன்றைக்கு தான் அந்த ஊர் மக்கள் இவ்விருவர் மூலம் அறிந்து கொண்டனர்.அடுத்த கட்டமாக இவர் மீது அவர் காவல் நிலையத்திலும் ,பிராணிகள் காக்கும் படைகளிடமும் புகார்களை முன்னிலைபடுத்தினார்,இவர் கற்ற அரசியல் பாடங்களில் இதுவும் ஒன்று.
புகழ்பெற்ற மகான் ஒருவர் சொன்னது போல் ''பக்கத்துக்கு வீட்டு ஆட்களும் ,எதிர் வீட்டு மனிதர்களும் ,நமக்கு விரோதிகளாக இருந்தால் ,அவர்கள் தான் நமக்கு ஜென்ம சனி."அவர் தொடுத்த புகாரில் சாட்சி கையெப்பமிட்டது எதிர்வீட்டு கெட்டிமேளம்.கல்யாணத்தில் மணமகள் கழுத்தில் தாலி ஏறும் பொழுதுதானே மங்கள இசை வாசிக்க படும்,அது போல தான் இதுவும்.
சனிகிழமை காலை என்னை குளியலிலே இவ்விருவரும் ஒரு வித சந்தோஷ உணர்ச்சியில் ஆடிகொண்டிருக்க ,பைல்வானுக்கு அடி வயிறு கலங்கி கொண்டிருந்தது .அதனால் தான் என்னமோ ஒரே அறைக்கு மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருந்தான்.இருண்ட இரவு மண்ணை தொட்ட பொழுது 'நிலத்தில் உள்ள நெற்கதிர் பிறர் வாழ்வதிர்க்காக அறுபடுவது போல தன் முடிவை யாரும் அசைத்து பார்க்க முடியாத அளவுக்கு மாற்றிகொண்டான்.
மாயை போன்ற இருட்டையும் , பனிகளையும் கலைத்து அருள் தரும் ஞாயிறு பிரகாசத்துடன் பிறந்தது.பைல்வான் நோஞ்சானை தன் வீட்டிற்க்கு அழைத்து வர தன் மகன் சந்திரனை தூது அனுப்பினான்.குழல் இனிது யாழ் இனிது ,கள்ளமில்லா குழந்தைகள் யாது பேசினாலும் அழகே.மனமிறங்கிபக்கத்துவீட்டு படியேறினான்.யாருக்கும் தலை வணங்கி பழக்கபடாத அரசியல் வாதி அன்றோ இவன்.அளவில் சிறியதன வாசற்படியில் தன் வழுக்கை தலையையும் ,,,கழுவிய தரை ஈரம் விட்டு போகாத நிலையில் அதன் மீது காலை அழுத்தி வைத்தனாலும் உடல் பாகங்கள் எங்கெங்கெல்லாம் அடிபட்டு எப்படி தொட்டுகொண்டான் தெரியுமா ....டட்ட்த்ப் .....ட்ம்ட்ம் ... ட்ர்ம்...ஒரு வினாடி உலகம் அவனை விட்டு எங்கோ போனது.யார்யாரோ அக்கணத்திலேயே அவனுக்கு காட்சி தந்தார்கள்.
பதறிய பைல்வான் மெல்ல நடந்து வந்து ,நோஞ்சானை அப்படியே அங்கேயே படுக்க வைத்து தன் திறமைகளில் ஒன்றான கலையை பயன்படுத்தி அனைத்து பிரச்சினைகளுக்கும் முடிவை மருந்தாக அளித்தான்.
மார்கழி முடிந்து தை திங்கள் இனிதே தொடங்கியது, பார்யெங்கும் கெட்டி மேளத்தின் ஒளியும் அதிகமானது.
ஒலி பெருக்கி ஒலித்தது ,சற்றே சப்தத்துடன்....
‘’’முற்றும்...’’’
தொண்டை வேல் முருகன்
இவன்
தொண்டை வேல் முருகன்
முக்கால்
அன்று அமைதியை அடக்கி கொண்டிருந்தது அந்நகரத்திற்கும் இக்கிராமத்திற்கும் இடைப்பட்ட ஓர் ஊர்.ஒலி பெருக்கியில் கம்மிய குரலில் "இதற்கு முடிவு தெரியும் வரை ,யாரும் இங்கிருந்து ......-இல்லை வெளியிலிருந்து ...-"ம்உம்ம்ம்,,,ம்உம்ம்ம் ....இருமல் அவர் பேச்சை நிறுத்தியது.சப்தம் காற்றினில் கறைந்தவுடன் தத்தம் வீடுகளில் நிறுத்தி வைக்கபட்டிறிந்த தொலைக்காட்சி ஒலி பெருகியது.கால பைரவர் விளையாட்டு போலும்,முதியவர்கள் புராணங்களை தேட , கிரகஸ்தர்கள் சமையல் அறையில் முடங்கி கிடக்க,குழந்தைகள் இம்மாதிரியான் கல்வியை கொண்ட நாட்களுக்கு விடுமுறை கிடைத்த ஆனந்தத்தில் திளைத்திருந்தனர்.
யாவரும் மகிழ்ச்சியின் உச்சத்தில் மூழ்கியிருக்க ,இவை எல்லாவற்றிக்கும் காரணமான அந்த மூன்று பேருக்கு மட்டும் ஏனோ அது கிட்டவில்லை.
பல தொழில் புரியும் பைல்வான் ,கலியுக 64 கலைகளிலும் ஓரளவுக்கு கைதேர்ந்தவர்.கேட்பார்யற்று இருந்த நிலத்தை அரசியல் கேடியான நோஞ்சானுக்கு அளந்துவிட்டது முதல் விதி நெருப்பில் இருந்து கிளம்பிய புகை போல் வளர்ந்து கொண்டே போனது.இம்மூவர்க்கும் விதியின் விளையாட்டு ஆரம்பமானது ஓர் வீட்டு விலங்கு மூலம்.நோஞ்சானின் செல்ல பிராணிக்கு சற்றே நோய்கள் மீது அதித பற்று.அதனால் வந்தது சரீர முழுக்க தோல் தொற்று.காண்பவரை தலை குனியவைத்து கதற ஓட விடும் தன்மை அதற்கு,காக்கைக்கும் தன குஞ்சு பொன் குஞ்சு அன்றோ.
எத்தனை ஆண்டுகள் தவமிருத்தாலும் அது போன்ற ஒரு வெள்ளிகிழமை கிடைக்க பெறாது.அந்த பொன்னான காலையிலே அந்த செல்ல பிராணி பைல்வானின் இரண்டு சக்கர வண்டியின் மீது தன் நான்கு கால்களில் மூன்று கால்களை மண்ணில் பதித்து ஒரு கால் தூக்கி ஒரு வேலையை செய்வதற்கு முயற்சி செய்தபொழுது அதற்கு தடைசெய்வது போல் தன் மகனின் பள்ளிபையை தூக்கி அதன் மீது எறிந்தான்.பையின் பளு தாள முடியாமல் அதன் அடியில் சிக்கிய அந்த ஒரு கால் ஒடிந்தது.
மேற் சொன்ன நெருப்பின் புகை மேகத்தில் கலந்து மற்ற மேகங்களை எல்லாம் ஒன்று திரட்டி அங்கே மழையாக பொழிந்தது.உன் குடிம்பி என் கையில ,என் குடும்பி உங்க கையில --என்றதோர் குஸ்தி பழமொழிக்கு அன்றைக்கு தான் அந்த ஊர் மக்கள் இவ்விருவர் மூலம் அறிந்து கொண்டனர்.அடுத்த கட்டமாக இவர் மீது அவர் காவல் நிலையத்திலும் ,பிராணிகள் காக்கும் படைகளிடமும் புகார்களை முன்னிலைபடுத்தினார்,இவர் கற்ற அரசியல் பாடங்களில் இதுவும் ஒன்று.
புகழ்பெற்ற மகான் ஒருவர் சொன்னது போல் ''பக்கத்துக்கு வீட்டு ஆட்களும் ,எதிர் வீட்டு மனிதர்களும் ,நமக்கு விரோதிகளாக இருந்தால் ,அவர்கள் தான் நமக்கு ஜென்ம சனி."அவர் தொடுத்த புகாரில் சாட்சி கையெப்பமிட்டது எதிர்வீட்டு கெட்டிமேளம்.கல்யாணத்தில் மணமகள் கழுத்தில் தாலி ஏறும் பொழுதுதானே மங்கள இசை வாசிக்க படும்,அது போல தான் இதுவும்.
சனிகிழமை காலை என்னை குளியலிலே இவ்விருவரும் ஒரு வித சந்தோஷ உணர்ச்சியில் ஆடிகொண்டிருக்க ,பைல்வானுக்கு அடி வயிறு கலங்கி கொண்டிருந்தது .அதனால் தான் என்னமோ ஒரே அறைக்கு மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருந்தான்.இருண்ட இரவு மண்ணை தொட்ட பொழுது 'நிலத்தில் உள்ள நெற்கதிர் பிறர் வாழ்வதிர்க்காக அறுபடுவது போல தன் முடிவை யாரும் அசைத்து பார்க்க முடியாத அளவுக்கு மாற்றிகொண்டான்.
மாயை போன்ற இருட்டையும் , பனிகளையும் கலைத்து அருள் தரும் ஞாயிறு பிரகாசத்துடன் பிறந்தது.பைல்வான் நோஞ்சானை தன் வீட்டிற்க்கு அழைத்து வர தன் மகன் சந்திரனை தூது அனுப்பினான்.குழல் இனிது யாழ் இனிது ,கள்ளமில்லா குழந்தைகள் யாது பேசினாலும் அழகே.மனமிறங்கிபக்கத்துவீட்டு படியேறினான்.யாருக்கும் தலை வணங்கி பழக்கபடாத அரசியல் வாதி அன்றோ இவன்.அளவில் சிறியதன வாசற்படியில் தன் வழுக்கை தலையையும் ,,,கழுவிய தரை ஈரம் விட்டு போகாத நிலையில் அதன் மீது காலை அழுத்தி வைத்தனாலும் உடல் பாகங்கள் எங்கெங்கெல்லாம் அடிபட்டு எப்படி தொட்டுகொண்டான் தெரியுமா ....டட்ட்த்ப் .....ட்ம்ட்ம் ... ட்ர்ம்...ஒரு வினாடி உலகம் அவனை விட்டு எங்கோ போனது.யார்யாரோ அக்கணத்திலேயே அவனுக்கு காட்சி தந்தார்கள்.
பதறிய பைல்வான் மெல்ல நடந்து வந்து ,நோஞ்சானை அப்படியே அங்கேயே படுக்க வைத்து தன் திறமைகளில் ஒன்றான கலையை பயன்படுத்தி அனைத்து பிரச்சினைகளுக்கும் முடிவை மருந்தாக அளித்தான்.
மார்கழி முடிந்து தை திங்கள் இனிதே தொடங்கியது, பார்யெங்கும் கெட்டி மேளத்தின் ஒளியும் அதிகமானது.
ஒலி பெருக்கி ஒலித்தது ,சற்றே சப்தத்துடன்....
‘’’முற்றும்...’’’
தொண்டை வேல் முருகன்
இவன்
தொண்டை வேல் முருகன்