arun karthik
06-04-2013, 04:19 PM
அடி பவள முகக்காரி... என்னை பாரு சிங்காரி...
என் ஊர்வலத்தின் தேரு , என்றும் அழகிய மேரு...
சிவப்பு சொக்கா போட்டு வாரேன் நிக்க மாட்டியா? - நானும்
பட்டு சொக்கா தெச்சு தாரேன் பாக்க மாட்டியா?
என் கண்ணுக்குள்ள உன் கண்ணா கோர்க்க மாட்டியா ?
உன் சிரிப்புல தான் என்ன கொஞ்சம் ஈர்க்க மாட்டியா ?
என் அத்த மக அருக்காணி அருகில் வா நீ - உன்
ஆச அய்த்தான் நான் தானே அழைக்கிறேன் தேனீ....
பள்ளிக்கூடம் நடந்து போகும் பஞ்சு மிட்டாயே...
பாதையில், நெருஞ்சி முள்ளு வெளஞ்சிருக்கும் நஞ்சு பட்டாலே..
மாமன் கை மேல நடக்க தயங்குகிறாயே - என்
கடிதம் சொன்ன காதலுல மயங்குகிறாயே ..
என் அத்த மக அருக்காணி அருகில் வா நீ - உன்
ஆசஅய்த்தான் நான் தானே அழைக்கிறேன் தேனீ....
திருவிழா கூட்டத்துல தேவதை பார்த்தேன் -என்
அய்த்த கூட பயந்து நடந்த கோலத்தில் பார்த்தேன் - நானும்
கம்பு சுத்த களமிறங்கும் காளையே - ஆனா
உன்ன சுத்தி தலம் களிக்க வந்தேனே!
என் அத்த மக அருக்காணி அருகில் வா நீ - உன்
ஆச அய்த்தான் நான் தானே அழைக்கிறேன் தேனீ....
போன வாரம் சந்தையில காதல சொன்னேன் - நீயும்
கொல்லுன்னு சிரிச்சு என்ன அழகுல கொன்னே!
கல் நெறஞ்ச காட்டில் நானும் நடந்து பாக்கறேன் - நீ
கூட வந்ததால காட்ட கடந்து பாக்கறேன்....
என் அத்த மக அருக்காணி அருகில் வா நீ - உன்
ஆச அய்த்தான் நான் தானே அழைக்கிறேன் தேனீ....
என் ஊர்வலத்தின் தேரு , என்றும் அழகிய மேரு...
சிவப்பு சொக்கா போட்டு வாரேன் நிக்க மாட்டியா? - நானும்
பட்டு சொக்கா தெச்சு தாரேன் பாக்க மாட்டியா?
என் கண்ணுக்குள்ள உன் கண்ணா கோர்க்க மாட்டியா ?
உன் சிரிப்புல தான் என்ன கொஞ்சம் ஈர்க்க மாட்டியா ?
என் அத்த மக அருக்காணி அருகில் வா நீ - உன்
ஆச அய்த்தான் நான் தானே அழைக்கிறேன் தேனீ....
பள்ளிக்கூடம் நடந்து போகும் பஞ்சு மிட்டாயே...
பாதையில், நெருஞ்சி முள்ளு வெளஞ்சிருக்கும் நஞ்சு பட்டாலே..
மாமன் கை மேல நடக்க தயங்குகிறாயே - என்
கடிதம் சொன்ன காதலுல மயங்குகிறாயே ..
என் அத்த மக அருக்காணி அருகில் வா நீ - உன்
ஆசஅய்த்தான் நான் தானே அழைக்கிறேன் தேனீ....
திருவிழா கூட்டத்துல தேவதை பார்த்தேன் -என்
அய்த்த கூட பயந்து நடந்த கோலத்தில் பார்த்தேன் - நானும்
கம்பு சுத்த களமிறங்கும் காளையே - ஆனா
உன்ன சுத்தி தலம் களிக்க வந்தேனே!
என் அத்த மக அருக்காணி அருகில் வா நீ - உன்
ஆச அய்த்தான் நான் தானே அழைக்கிறேன் தேனீ....
போன வாரம் சந்தையில காதல சொன்னேன் - நீயும்
கொல்லுன்னு சிரிச்சு என்ன அழகுல கொன்னே!
கல் நெறஞ்ச காட்டில் நானும் நடந்து பாக்கறேன் - நீ
கூட வந்ததால காட்ட கடந்து பாக்கறேன்....
என் அத்த மக அருக்காணி அருகில் வா நீ - உன்
ஆச அய்த்தான் நான் தானே அழைக்கிறேன் தேனீ....