PDA

View Full Version : நான் ??????????????????



nandagopal.d
04-04-2013, 06:34 AM
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQpyJquuTR_GzCDnOk5gFP3kQEaaAwsyzwImD_iDTACiqM1z49KvA

என்னை சுற்றிலும் உள்ளவர்கள்,
ஐ பூதங்கள்தான் கடவுள் என்றார்கள்.
வணங்கிவிட்டு பார்கையில்,

மனிதர்களுக்குள்தான்,
அன்பு எனும் கடவுள் இருக்கு என்றார்கள்.
அதையும்,
பிரார்த்தனை செய்து விட்ட,
பின்,
தூணிலும் இருப்பான்.
தூரும்பிலும் இருப்பான்என்றார்கள்.
இப்படி,
பலவாறு,
சொல்லி கொண்டே இருக்க,
நான்,
ஓன்று ஒன்றாய்,
வணங்க ஆரம்பித்தேன்.
கடைசியில்,
எனக்கு,
பெயர் வைத்தார்கள்.
பைத்தியம் என்று........

சுகந்தப்ரீதன்
04-04-2013, 05:15 PM
எல்லாகூற்றையும் நம்பிய நீங்கள் இக்கூற்றையும் அப்படியே நம்புங்கள்... வீணாக எதற்கு இத்தனை கேள்விக்குறி இப்போது..?!:confused:

கும்பகோணத்துப்பிள்ளை
04-04-2013, 05:48 PM
அவர் சொன்னார் அதையென்றும்
இவர் சொன்னார் இதையென்றும்
எவர் சொன்னார் எதையென்றம்
தேடித்தெளிவில்லாமல் போகமல்
'மலம்' விலக்கி
மனம் தேடுங்கள் உங்களுக்குள்ளே உங்களை!