PDA

View Full Version : பரதேசி



lenram80
17-03-2013, 07:28 PM
"செந்நீர் தானா?" என்ற பரதேசி படத்தின் பாடலுக்கு நான் கொடுத்த வடிவம் இது. எண்ணற்ற வெளிநாட்டு வாழ் தமிழ் நண்பர்களுக்கும், அவர்களை பிரிந்து வாடும் உறவினர்களுக்கும் இப்பாடலை சமர்ப்பிக்கிறேன்.

பரதேசி
=====

ஊர விட்டு உறவ விட்டு
ஓடி விளையாண்ட தோப்பை விட்டு

கூர வீட்டு ஒழுகும் மழைய விட்டு
புது ஊரு வந்தோம் மனச கூறு போட்டு!

பெத்த அம்மாவும் அப்பாவும் ஊரில் தேய
நாலு காசுக்கு நாயாக நானும் காய

வெளிநாட்டு வாழ்க்க(கை) பலியாட்டு வாழ்க்க!
அது கட்டட காட்டுல களவு வாழ்க்க!



காசு கீசு சேக்க வந்தா
கவலயும் கண்ணீரும் சேருதடா!

சேத்து வச்ச கண்ணீரால
உப்புச் செலவு மட்டும் இங்கே இல்லையடா!

உழவுக்கும் ஊரில் எழவுக்கும்
குளம் காய்ஞ்சுப் பல வருசமாச்சே!

நெல் நஞ்சையும் நல் புஞ்சையும்
அடுக்கு மாடியா மாறுற விந்தை ஆச்சே!

வரப்பெல்லாம் இன்னைக்கு போக்குவரத்தாப் போச்சே!



தங்கச்சி கழுத்தில் தாலி ஏற
இங்க அண்ணங்க படும்பாட்ட என்ன சொல்ல?

பிள்ள கைபிடிச்சு நட பழக்க
அப்பன்காரன் எனக்கு யோகமில்ல!

பூகம்பம் எங்க ஊரிலே
பிள்ளைகள் வயித்த போட்டாட்டுதே!

வறு'மை' என்கிற கொடுமய
அழிக்கும் ரப்பருண்டா இந்த நாட்டிலே?

என் கத கேட்ட சாமியும் விஷம் தின்னதே!


குரல் வடிவில் :-
http://youtu.be/O9V-APaL194

dellas
18-03-2013, 07:38 AM
வைர வரிகள் ..மனதில் அழியாக் கோலங்களாய்..

அருமை..வாழ்த்துக்கள் .

ராஜா
20-03-2013, 08:49 AM
நல்ல முயற்சி..

பாராட்டுகள்..!

lenram80
20-03-2013, 03:02 PM
நன்றி ராஜா மற்றும் டெல்லஸ்.

prakash01
20-03-2013, 06:17 PM
நன்று

கும்பகோணத்துப்பிள்ளை
21-03-2013, 03:09 AM
பாராட்டுகள்

lenram80
21-03-2013, 01:26 PM
நன்றி பிரகாஷ் , கும்பகோணத்துப்பிள்ளை
மற்றும் படித்த
சுகந்தப்ரீதன், மஞ்சுபாஷிணி, ஸ்ரீதர், ஜான், இராஜிசங்கர், இராஜேஸ்வரன், கோபாலன், கீதம், BaluMahendran, kulirthazhal, M.Jagadeesan, Mano.G., prakash01, sarcharan, Sasi Dharan, veruppuvijay.