crvenkatesh
14-03-2013, 02:44 AM
உலகினில் நீ எதை மறந்தாலுமே
உனைப் பெற்றவளை மறவாதிரு (2)
அளவிடமுடியாதது அவள் கடனே
அந்தக் கடனை நீ மறவாதிரு
(உலகினில் நீ எதை மறந்தாலுமே)
கருவினிலே நம்மை சுமந்தாளே
கண்ணுறக்கம் அவள் மறந்தாளே
அந்த தெய்வத்தின் த்யாகத்தை நினையாத
இந்தப் பிறவி எடுத்தது வீணாகும்(2)
(உலகினில் நீ எதை மறந்தாலுமே)
எல்லையிலாத அன்பு தந்தாள்
நல்லது தீயதின் அறிவு தந்தாள்
கல்லையும் கனியாக்கும் அவள் கருணை
சொல்லில் வடித்திட முடியாதது(2)
(உலகினில் நீ எதை மறந்தாலுமே)
தன்னை வருத்தி நமைக் காத்தாள்
நம்முகம் பார்த்து நகைப் பூத்தாள்
அன்னையின் அன்பில் திளைத்திடத்தானே
ஆயர்பாடியிலே அவனும் வந்தான்(2)
உலகினில்நீ எதை மறந்தாலுமே
உனைப் பெற்றவளை மறவாதிரு
அளவிடமுடியாதது அவள் கடனே
அந்தக் கடனை நீ மறவாதிரு
உனைப் பெற்றவளை மறவாதிரு (2)
அளவிடமுடியாதது அவள் கடனே
அந்தக் கடனை நீ மறவாதிரு
(உலகினில் நீ எதை மறந்தாலுமே)
கருவினிலே நம்மை சுமந்தாளே
கண்ணுறக்கம் அவள் மறந்தாளே
அந்த தெய்வத்தின் த்யாகத்தை நினையாத
இந்தப் பிறவி எடுத்தது வீணாகும்(2)
(உலகினில் நீ எதை மறந்தாலுமே)
எல்லையிலாத அன்பு தந்தாள்
நல்லது தீயதின் அறிவு தந்தாள்
கல்லையும் கனியாக்கும் அவள் கருணை
சொல்லில் வடித்திட முடியாதது(2)
(உலகினில் நீ எதை மறந்தாலுமே)
தன்னை வருத்தி நமைக் காத்தாள்
நம்முகம் பார்த்து நகைப் பூத்தாள்
அன்னையின் அன்பில் திளைத்திடத்தானே
ஆயர்பாடியிலே அவனும் வந்தான்(2)
உலகினில்நீ எதை மறந்தாலுமே
உனைப் பெற்றவளை மறவாதிரு
அளவிடமுடியாதது அவள் கடனே
அந்தக் கடனை நீ மறவாதிரு