PDA

View Full Version : பிரார்த்தனை



crvenkatesh
12-03-2013, 05:15 AM
இறைவனுக்கு மலர்தூவி இறைஞ்சலினும் நன்றாம்
நிறைத்தாலே வீட்டினையே நேசமணம் கொண்டு

விளக்கேற்றி ஆண்டவனை வணங்குவதின் நன்றாம்
உளம்நிறைத்த பாபமெனும் இருள்விலக்கி வாழ்ந்தால்

கடவுளின்முன் சிரம்தாழ்த்தி குழைவதினும் நன்றாம்
உடன்வாழும் உலகோடு உளமொத்து வாழ்ந்தால்

ஈசனின்முன் மண்டியிட்டு இறைஞ்சலினும் நன்றாம்
நேசமுடன் தாழ்ந்தவரை நாமுயர்த்தி விட்டால்

பாவங்களை மன்னிக்கும் பிரார்த்தனையை விடவே
நாம் எதிரிக ளிடம்காட்டும் நட்புமிக நன்றாம்

M.Jagadeesan
13-03-2013, 02:42 AM
நேசமனம் கொண்டு வீட்டினை நிறைத்தல், உள்ளத்தில் நிறைந்திருக்கும் பாவமென்னும் இருள்நீக்கி வாழ்தல், உலகோடு உளமொத்து வாழ்தல், தாழ்ந்தவரை உயர்த்திவிடல், எதிரிகளிடம் அன்பு காட்டல் ஆகியவை எல்லாம் உயர்ந்த பிரார்த்தனைகள். கவிதை மிகவும் நன்று. வாழ்த்துக்கள் !

ரமணி
13-03-2013, 03:19 AM
(நிலைமண்டில ஆசிரியப்பா)
நேசமனம் கொண்டு பாசம் வளர்த்தலும்
பாபமெனும் இருள்நீக்கி வாழ முடிவதும்
உடன்வாழும் உலகோடு உளமொத்து வாழ்தலும்
தாழ்ந்தவரை உயர்த்தலும் எதிர்களிடம் நட்பும்
ஆழ்ந்தே நோக்கும் போதவை யனைத்துமே
ஆண்டவன் கருணையென் றறிவது கடினமோ?

*****


இறைவனுக்கு மலர்தூவி இறைஞ்சலினும் நன்றாம்
நிறைத்தாலே வீட்டினையே நேசமணம் கொண்டு

விளக்கேற்றி ஆண்டவனை வணங்குவதின் நன்றாம்
உளம்நிறைத்த பாபமெனும் இருள்விலக்கி வாழ்ந்தால்

கடவுளின்முன் சிரம்தாழ்த்தி குழைவதினும் நன்றாம்
உடன்வாழும் உலகோடு உளமொத்து வாழ்ந்தால்

ஈசனின்முன் மண்டியிட்டு இறைஞ்சலினும் நன்றாம்
நேசமுடன் தாழ்ந்தவரை நாமுயர்த்தி விட்டால்

பாவங்களை மன்னிக்கும் பிரார்த்தனையை விடவே
நாம் எதிரிக ளிடம்காட்டும் நட்புமிக நன்றாம்

crvenkatesh
13-03-2013, 03:32 AM
நேசமனம் கொண்டு வீட்டினை நிறைத்தல், உள்ளத்தில் நிறைந்திருக்கும் பாவமென்னும் இருள்நீக்கி வாழ்தல், உலகோடு உளமொத்து வாழ்தல், தாழ்ந்தவரை உயர்த்திவிடல், எதிரிகளிடம் அன்பு காட்டல் ஆகியவை எல்லாம் உயர்ந்த பிரார்த்தனைகள். கவிதை மிகவும் நன்று. வாழ்த்துக்கள் !

mikka nandri sir

crvenkatesh
13-03-2013, 03:33 AM
(நிலைமண்டில ஆசிரியப்பா)
நேசமனம் கொண்டு பாசம் வளர்த்தலும்
பாபமெனும் இருள்நீக்கி வாழ முடிவதும்
உடன்வாழும் உலகோடு உளமொத்து வாழ்தலும்
தாழ்ந்தவரை உயர்த்தலும் எதிர்களிடம் நட்பும்
ஆழ்ந்தே நோக்கும் போதவை யனைத்துமே
ஆண்டவன் கருணையென் றறிவது கடினமோ?

*****

Thanks a lot ramani sir. Naan oru marabu kavignan allan. en kavidhaiyai marabu paduthiyamaiku mikka nandri.

ஜான்
13-03-2013, 06:05 AM
இறையுணர்வு கொண்டு வழிபடும் பூஜை சடங்குகள் இவற்றைக் காட்டிலும்,இறைமையின் பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்தலே சிறப்பு!!

உண்மை வெங்கடேஷ் !

crvenkatesh
13-03-2013, 12:19 PM
இறையுணர்வு கொண்டு வழிபடும் பூஜை சடங்குகள் இவற்றைக் காட்டிலும்,இறைமையின் பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்தலே சிறப்பு!!

உண்மை வெங்கடேஷ் ! nandri john. ungal vaarthaigal ennai urchaagappaduthugindrana