PDA

View Full Version : சோக சிரிப்பு..



kulirthazhal
08-03-2013, 03:17 PM
அவனுக்கு
ஏனோ
சோகம்
நெஞ்சை நெரித்தது...

விழியையும்
மனதையும்
கட்ட இயலாமல்
செவியோடு சேர்ந்து
சிரித்துக்கொண்டிருந்தான்
நட்புக்கிடையில்....

நட்பில்
எல்லா ஜீவன்களும்
அவனின் மகிழ்ச்சிக்காய்
குதூகளித்து நடித்தது...

அவனுக்கு
தெரியும்,
அவனின்
அதீத மகிழ்ச்சிக்கும
கண்ணீரையே தரும்
அண்ணை....

இங்கேயே
கொஞ்சம் நேரம்
இருந்துவிடலாம்,
துக்கம் தீரும்வரை.....

-குளிர்தழல்...

சுகந்தப்ரீதன்
09-03-2013, 04:53 PM
அகத்தே நெஞ்சை நெரிக்கும் சோகம்..
புறத்தே நெஞ்சை நனைக்கும் நேசம்...
இருந்துவிடுங்கள் குளிர்தழலாய் நெஞ்சகம் குளிரும்வரை...!!:icon_b:

Sasi Dharan
11-03-2013, 12:19 PM
விழியையும்
மனதையும்
கட்ட இயலாமல்
செவியோடு சேர்ந்து
சிரித்துக்கொண்டிருந்தான்
நட்புக்கிடையில்....


அற்புத வரிகள்...
நண்பர் குளிர்தழலின் கவிதையை மீண்டும்
மன்றத்தில் கண்டதில் மகிழ்ச்சி!!!
தொடர்ந்து எழுதுங்கள்...