Log in

View Full Version : சித்திரம் எழுப்பிய கவிதை



ரமணி
01-03-2013, 03:40 AM
இந்த இழையில் காணும் சித்திரங்கள் பற்றிய தங்கள் எண்ணங்களை மற்ற உறுப்பினர்களும் கவிதையில் வரையலாம்.

http://mff.mangoco.netdna-cdn.com/wp-content/uploads/2011/02/Vibram-FiveFingers-for-Kids.jpg

(கலி விருத்தம்)
அன்று இதுபோல ஆடி மகிழ்ந்தவர்கள்
இன்றிருக்கும் நிலையென்ன என்றே காணில்
நன்றாய் விளங்கும் காலத்தின் கோலத்தில்
கன்றுகள் வளர்ந்ததா வீழ்ந்ததா என்று!

--ரமணி, 01/03/2013

*****

ரமணி
01-03-2013, 03:43 AM
http://cdn5.wn.com/ph/img/f9/fa/708331df31872f15c7702014bf63-grande.jpg

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
மண்ணின் வெடிப்புகள் மனதின் வெடிப்புகள் என்றவள் அறிவாளா?
கண்ணில் வரும்நீர் மண்ணில் விழுந்து பயிர்கள் செழிக்குமோ?
இயற்கையை வேண்டுதல் போல மனிதனை வேண்டுதல் எளிதோ?
இயற்கையை அழித்திடும் மனிதன் கடவுளா அன்றி அரக்கனா?

--ரமணி, 01/03/2013

*****

prakash01
01-03-2013, 05:24 PM
புதுமையான முயற்சி நன்றாகயிருக்கிறது வாழ்த்துக்கள் .தொடருங்கள் ரமணி ஐயா...

ரமணி
02-03-2013, 03:04 AM
http://www.penmai.com/forums/attachments/poems/93126d1362196257t-quot%3B-2986%3B-2975%3B-2990%3B-3021%3B-2986%3B-3006%3B-2992%3B-3021%3B-2980%3B-3021%3B-2980%3B-3009%3B-2965%3B-2997%3B-3007%3B-2970%3B-3018%3B-2994%3B-3021%3B-quot%3B-athta-thathta-400x187.png

(கலிவிருத்தம்)

ஆத்தாளின் பாம்படமோ அடகு வங்கியிலே
தாத்தாவும் பையனும் மதுபானக் கடையிலே
நேத்திருந்த நிலைமாறி நெறிமுறைகள் தடம்புரண்டு
சோத்துக்கே வழியின்றிச் சீரழியும் தினவாழ்வு.

--ரமணி, 02/03/2013

*****

ரமணி
02-03-2013, 08:09 AM
http://2.bp.blogspot.com/-lGMjW-ubNLI/Tp2hf1v-5gI/AAAAAAAABIY/802cYo7gdZo/s1600/girlpray.jpg

(கலிவிருத்தம்)
சின்னக் கரம்கூப்பிக் கண்ணை இமைக்காமல்
தன்னந் தனியாகத் தருவடியில் அமர்ந்தருளும்
விக்ன ராஜாவிடம் விடைவேண்டும் சின்னரோஜா
பக்தியுடன் கேட்பதுதான் பண்டிதர்க்கும் புரியுமோ?

--ரமணி, 02/03/2013

சுகந்தப்ரீதன்
03-03-2013, 04:25 PM
சித்திரம் எழுப்பிய கவிதைகள் அனைத்தும் சிந்தனையை எழுப்பும் வகையில் அமைந்திருப்பது ரசிக்கவைத்து வியக்கவைக்கிறது..!!

வாழ்த்துக்கள் ரமணி ஐயா... தொடருங்கள்..!!

ரமணி
04-03-2013, 02:38 AM
http://images.sodahead.com/polls/002077539/Human-Tail-53275931928_xlarge.jpeg

05. வால்நரன்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கருவளவில் ஆறில் ஒருபங்கு வாலுடன்
உருவாகும் மனிதரில் ஒருசிலர் குழந்தையாய்ப்
பிறக்கும் போதும் வாலுடன் பிறப்பதுண்டு
ஒருகோடி மனிதர் உலகில் இன்று
சிறுவாலுடன் திரிவதாகக் கணக்கொன்று கூறுமே.

வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்
வாலுள்ள பிள்ளை என்னென்ன பிழைக்குமோ?
வால்நரர்கள் கூட்டம் உலகளவில் பெருகுவது
வாலறிவன் விளையாட்டோ விதியோ வீணோ?

*****

ரமணி
07-03-2013, 12:30 PM
06. வெண்மையில் பெண்மயில்

http://www.penmai.com/forums/attachments/poems/94168d1362662780t-quot%3B-2986%3B-2975%3B-2990%3B-3021%3B-2986%3B-3006%3B-2992%3B-3021%3B-2980%3B-3021%3B-2980%3B-3009%3B-2965%3B-2997%3B-3007%3B-2970%3B-3018%3B-2994%3B-3021%3B-quot%3B-img-white-peacock-bnatyam.png

(ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)
வெண்மயில் தோகை விரித்துரைக்கும் உண்மையென்ன?
வெண்மையின் வீச்சில் விளைந்திடும் வண்ணங்கள்
வெண்மையில் வீழ்ந்து உறைந்து மறைவதுபோல்
எண்ணத்தின் வீச்சே உலகு.

பெண்மயில் ஆட்டம் புகன்றிடும் உண்மையென்ன?
பெண்மையின் வீச்சில் பெருகும் மனிதகுலம்
பெண்மையைப் பாதுகாத்துப் போற்றவேண்டும் ஏனெனில்
பெண்மையே பூமியின் அச்சு.

*****

ரமணி
10-03-2013, 05:02 AM
http://www.tamilbrahmins.com/attachments/literature/2604d1362890554t-2970-3007-2980-3021-2980-3007-2992-2990-3021-2958-2996-3009-2986-3021-2986-3007-2991-2965-2997-3007-2980-3016-img-ganapati-child-500x341.jpg

07. ஆனைப் பாப்பா!

image link:
http://1.bp.blogspot.com/-Lwu1-btG108/UKJui6-1tCI/AAAAAAAAIVU/idrBrZZhgzs/s1600/deepavali-littleindia+(15).JPG

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஆனைப் பாப்பா அழகுடன் தலைசாய்த்து
மோனத் தவமின்றி மலர்விழி விரித்து
மின்னும் நகையணிந்து அன்னையின் காலடியில்
கன்னக் கதுப்பவிழக் காணுவ தென்னவோ?

--ரமணி, 10/03/2013

*****

ரமணி
19-03-2013, 02:54 PM
http://www.tamilbrahmins.com/attachments/literature/2614d1363704424t-2970-3007-2980-3021-2980-3007-2992-2990-3021-2958-2996-3009-2986-3021-2986-3007-2991-2965-2997-3007-2980-3016-img-boyandcow-400x263.png

08. பசுவும் கன்றும்!

image link:
MediaFire - Space for your documents, photos, video, and music. (http://www.mediafire.com/view/?ost09oasvsnyit9)

(ஒருவிகற்ப நேரிசை வெண்பா)
கன்றுக்குக் காலிரண்டும் கையான தெப்படி
யென்றே பசுவதுவே பார்க்கிறதோ? - அன்றிந்தக்
கன்றான பையன் குறும்பில் அகம்நெகிழ்ந்து
அன்புடன் நோக்குமே மாடு!

--ரமணி, 19/03/2013

*****

ஜான்
20-03-2013, 02:07 AM
06. வெண்மையில் பெண்மயில்

http://www.penmai.com/forums/attachments/poems/94168d1362662780t-quot%3B-2986%3B-2975%3B-2990%3B-3021%3B-2986%3B-3006%3B-2992%3B-3021%3B-2980%3B-3021%3B-2980%3B-3009%3B-2965%3B-2997%3B-3007%3B-2970%3B-3018%3B-2994%3B-3021%3B-quot%3B-img-white-peacock-bnatyam.png

(ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)
வெண்மயில் தோகை விரித்துரைக்கும் உண்மையென்ன?
வெண்மையின் வீச்சில் விளைந்திடும் வண்ணங்கள்
வெண்மையில் வீழ்ந்து உறைந்து மறைவதுபோல்
எண்ணத்தின் வீச்சே உலகு.

பெண்மயில் ஆட்டம் புகன்றிடும் உண்மையென்ன?
பெண்மையின் வீச்சில் பெருகும் மனிதகுலம்
பெண்மையைப் பாதுகாத்துப் போற்றவேண்டும் ஏனெனில்
பெண்மையே பூமியின் அச்சு.

*****

எண்ணத்தின் வீச்சே உலகு என்கிற ஈற்றடி பல எண்ணங்களை ,சிந்தனைச் செறிவை உள்ளடக்கியது!

ஐயா நன்று

ரமணி
05-04-2013, 03:58 AM
http://www.tamilbrahmins.com/attachments/literature/2624d1365134217t-2970-3007-2980-3021-2980-3007-2992-2990-3021-2958-2996-3009-2986-3021-2986-3007-2991-2965-2997-3007-2980-3016-00hindu-baby-01.jpg

09. காலத்தில் ஜனித்த விதை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

வாழப் பிறந்தாயோ வாழ்விக்கப் பிறந்தாயோ
ஆழியின் சுழற்சியில் மாறும் கோலத்தில்
வாழையாய்த் தாழையாய்த் தழைத்து வளர்வாயோ
கூழையாய்க் கூனிக் குறுகி இளைப்பாயோ
ஊழ்வினை உன்னது என்னவோ யாரறிவார்?

--ரமணி, 05/04/2013

*****

கும்பகோணத்துப்பிள்ளை
07-04-2013, 03:28 PM
http://cdn5.wn.com/ph/img/f9/fa/708331df31872f15c7702014bf63-grande.jpg

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
மண்ணின் வெடிப்புகள் மனதின் வெடிப்புகள் என்றவள் அறிவாளா?
கண்ணில் வரும்நீர் மண்ணில் விழுந்து பயிர்கள் செழிக்குமோ?
இயற்கையை வேண்டுதல் போல மனிதனை வேண்டுதல் எளிதோ?
இயற்கையை அழித்திடும் மனிதன் கடவுளா அன்றி அரக்கனா?

--ரமணி, 01/03/2013

*****

உழுது பயிரிட்ட நிலத்தை நீயும் மறுவக்க உழுவதென்ன சூரியரே!
பொழுதும் சாஞ்சபின்னும் நெஞ்சு பூத்த வேர்வை காயவில்லே!
தொழுதே கேட்டுகிறேன் நட்ட பயிரெல்லா சுட்டெறிக்க வேணாஞ்சாமி!
பழுதே இல்லாத பச்சையெல்லாம் பாழாக்கவேணாஞ்சாமி!
பொங்ஙியே ஆத்துல தண்ணிவருமின்னு நாளெல்லாங் காத்திருந்தோம்
திங்கிற சோத்திலேயே கைய வச்சுபுட்டான் தடித்தாண்டவ’ராயனுமே’
ஏங்கியே அழுது விட்ட கண்ணிரும் அடையவில்லை வயலிலே!
தங்கியே மழையாச்சும் சொட்டவிடு! அந்த மேகத்தை மட்டும் கிட்டவிடு!
சூரியரரே! சந்திரரே! நீங்க உள்ளமட்டும் ஏஞ்சனத்த வாழவிடு!

M.Jagadeesan
08-04-2013, 07:06 AM
http://2.bp.blogspot.com/-lGMjW-ubNLI/Tp2hf1v-5gI/AAAAAAAABIY/802cYo7gdZo/s1600/girlpray.jpg


ஆற்றங் கரையினிலே அரச மரத்தடியில்
காற்று வெளியினிலே கைகள் ஐந்துடனே
வீற்று இருக்கின்ற விநாயகப் பெருமானே!
நூற்றுக் கணக்கினிலே தேங்காயை உடைப்போர்கள்
ஆற்றிய பாவங்கள் ஆற்றோடு போய்விடுமோ ?

M.Jagadeesan
08-04-2013, 09:58 AM
http://cdn5.wn.com/ph/img/f9/fa/708331df31872f15c7702014bf63-grande.jpg


மாரித் தாயே ! மனமிரங்கி வருவாயே !
எரிகுளங்கள் யாவும் வறண்ட தம்மா !
வாரிக் கொடுக்கின்ற வள்ளலாய் இருந்த நீ
மாறிப் போனதன் மர்மத்தைக் கூறிடுவாய்!
ஊரிலே நல்லவர் ஒருவர் இருந்திட்டால்
மாரி பொய்யாது பெய்யும் என்றாரே !
நல்லவர் எல்லோரும் மாண்டு போயினரோ?
பொல்லா மானிடரின் எண்ணிக்கை பெருகிற்றோ ?
அல்லா இயேசுமுதல் அவனியில் இருக்கின்ற
எல்லா தெய்வமும் கைவிட்டுப் போயினரோ ?
கணவனை மட்டும் தொழுது எழுகின்ற
கற்புடைப் பெண்யான் கட்டளை இடுகின்றேன்
" பெய் !" எனச்சொன்னால் பெய்வாய் மழையே!
பொய்யில் புலவன் பொருளுரை காப்பாய் !

ரமணி
08-04-2013, 12:47 PM
சித்திரங்கள் கவிதை எழுப்புவது குறித்து மகிழ்ச்சி. கவிதைகள் மரபில் அமைவது இன்னொரு மகிழ்ச்சி.

M.Jagadeesan
09-04-2013, 04:43 AM
http://images.sodahead.com/polls/002077539/Human-Tail-53275931928_xlarge.jpeg


வாளெடுத்துப் போர்செய்து வாகைகள் பலசூடி
தோள்கொடுத்துக் காத்திடுவாய் என்றெண்ணும் வேளையிலே
வாலோடு பிறந்தாயே ! வானரத்தின் திருவுருவாய் !
நூலோர்கள் வகுத்துரைத்த நீதிகள் மறந்தேனோ?
மேலோர்கள் பிழைத்தேனோ ? செய்தவக் குறைதானோ ?
வேலோடு பிறந்திருந்தால் திருமுருகன் என்றெண்ணி
பாலோடு பன்னீர்க் காவடிகள் தான்சுமந்து
பழனியின் ஆண்டவனை சேவித்து மகிழ்ந்திருப்பேன்.
ஆனால்
வாலோடு இவ்வுலகில் வந்துதித்த என்மகனே!
இனிநான் என்செய்வேன்?ஆண்டவன் விட்டவழி !

ரமணி
09-04-2013, 07:00 AM
திருவாளர்கள் கும்பகோணத்த்துப் பிள்ளை, ஜகதீசன் இவர்களின் கவிதைகள் அனைத்தும் கவிதை மிக அருமை! அவர்களிடம் இருந்து மேலும் பல மரபுக் கவிதைகள் எதிர் பார்க்கிறேன்.

அன்புடன்,
ரமணி

கும்பகோணத்துப்பிள்ளை
09-04-2013, 06:39 PM
திருவாளர்கள் கும்பகோணத்த்துப் பிள்ளை, ஜகதீசன் இவர்களின் கவிதைகள் அனைத்தும் கவிதை மிக அருமை! அவர்களிடம் இருந்து மேலும் பல மரபுக் கவிதைகள் எதிர் பார்க்கிறேன்.

அன்புடன்,
ரமணி

ஜகதீசன் ஜயாவிடமிருந்து மரபுக்கவிதைகளை நாம் எதிர்பார்க்கலாம்

புகைப்படம் தந்த உணர்ச்சிவேகத்தில் எழுதியதை பாராட்டியது ஊக்கமளிக்கிறது.
தமிழ்மன்றத்தில் இணைந்த பிறகு தமிழ் தட்டச்சு செய்ய கற்றுக்கொண்டேன்.
இனி மரபுக்கவிதை எழுத கற்றுக்கொள்வேன். என்ன!? கொஞ்சம் நாள் பிடிக்கும்!

ரமணி
11-04-2013, 02:35 AM
உடனடியாக யாப்பிலக்கணம் பற்றி அறிந்துகொள்ள இந்தப் புத்தகம் உதவலாம்:
யாப்பிலக்கணம்
முருகேசபிள்ளை
http://noolaham.net/project/50/4950/4950.pdf

இந்தப் புத்தகத்துடன் என் 'கவிதையில் யாப்பு' தொடர்க் குறிப்புகளையும் படித்தால் ஆர்வத்துடன் மரபில் கவிதை முனைய ஏதுவாக இருக்கும். ஆல் த பெஸ்ட்!

*****


ஜகதீசன் ஜயாவிடமிருந்து மரபுக்கவிதைகளை நாம் எதிர்பார்க்கலாம்

புகைப்படம் தந்த உணர்ச்சிவேகத்தில் எழுதியதை பாராட்டியது ஊக்கமளிக்கிறது.
தமிழ்மன்றத்தில் இணைந்த பிறகு தமிழ் தட்டச்சு செய்ய கற்றுக்கொண்டேன்.
இனி மரபுக்கவிதை எழுத கற்றுக்கொள்வேன். என்ன!? கொஞ்சம் நாள் பிடிக்கும்!

கும்பகோணத்துப்பிள்ளை
12-04-2013, 01:24 PM
உடனடியாக யாப்பிலக்கணம் பற்றி அறிந்துகொள்ள இந்தப் புத்தகம் உதவலாம்:
யாப்பிலக்கணம்
முருகேசபிள்ளை
http://noolaham.net/project/50/4950/4950.pdf

இந்தப் புத்தகத்துடன் என் 'கவிதையில் யாப்பு' தொடர்க் குறிப்புகளையும் படித்தால் ஆர்வத்துடன் மரபில் கவிதை முனைய ஏதுவாக இருக்கும். ஆல் த பெஸ்ட்!

*****

வாழத்துகளுக்கும் வழிகாட்டல்களுக்கும் நன்றி ரமணி அவர்களே!
சேமித்துக்கொண்டேன். கவிதையில் யாப்பையும் தொடர்ந்து வருகிறேன்.

ரமணி
25-04-2013, 03:08 AM
http://www.tamilbrahmins.com/attachments/literature/2673d1366859136-2970-3007-2980-3021-2980-3007-2992-2990-3021-2958-2996-3009-2986-3021-2986-3007-2991-2965-2997-3007-2980-3016-img-eduexp.jpg

10. அனுபவம் பேசுமோ ஏங்குமோ?

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஆங்கிலக் கல்வியும் அனுபவக் கல்வியும்
ஆங்கோர் சாலையில் எதிர்ப்படும் போது
ஏங்குவது எதுவென்(று) இப்படம் காட்டுமே
வாங்கிடும் கல்வியே ஆங்கிலக் கல்வியெனில்
தூங்கிடும் ஞானம் எழுப்புவ தனுபவம்
ஈங்கிதை யுணர்ந்தோர் வாழ்வில் நிம்மதி
ஓங்கி வளர்ந்தே உள்மனம் செழிக்குமே.

--ரமணி, 25/04/2013

*****

A Thainis
28-04-2013, 06:52 PM
சித்திரம் பாடும் கவிதைகள் சிறப்பு புது எண்ணத்தில் வண்ணங்கள் வாழ்த்துக்கள் ஜெகதீசன்.

ரமணி
07-06-2013, 12:33 PM
http://www.myindiapictures.com/pictures/up1/2013/05/no-hands-boy-utensils-wash-up-motivational-and-inspirational.jpg

11. இறைவன் இருப்பில் ஐயம்

(பலவிகற்ப பஃறொடை வெண்பா)
கரங்களே இல்லாது கால்கழுவும் ஏனங்கள்
கர்மவினை யானாலும் கால்கள் இயக்கில்
சிறுவனவன் செய்திடும் சாகசம் நெஞ்சைப்
பறித்திடும் காட்சியில் பற்றுமே ஐயம்
இறைவனும் உள்ளானோ இங்கு?

--ரமணி, 07/06/2013

*****

கீதம்
08-06-2013, 01:00 PM
கையறு நிலைதான்!
இல்லை இடக்கை வலக்கை!
கையறு நிலையல்ல....
இருக்கிறது வாழ்க்கை!

கரமில்லாக் காயம்தான்,
உரமில்லா உள்ளமன்று!
அஞ்சிலே வளைந்துவிட்டன கால்கள்!
ஐம்பதானாலும் வளைத்துவிடுவான் வாழ்வை!

அச்சமோ, அனுதாபமோ தேவையில்லை யார்க்கும்.
முடியுமாயின் அப்பிஞ்சு அசந்துறங்கும்வேளை
அதன் உறக்கம் கலைக்காமல்
கொஞ்சம் வெந்நீர் ஒத்தடம்
கொடுத்திடுவோம் வாரீர்!

ரமணி
08-06-2013, 01:28 PM
http://www.myindiapictures.com/pictures/up1/2013/03/mother-in-exam-hall-with-baby-child-india-inspirational-motivational.jpg

12. சின்னக் குழந்தை சமர்த்து!

(ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)
அன்னையவள் தேர்வெழுத ஆர்வமுடன் நெஞ்சுறைந்து
கன்னற் கருவிழியால் கூர்ந்ததை நோக்கியே
மின்னற் கொடிபோலப் பொன்னின் நிறம்காட்டும்
சின்னக் குழந்தை சமர்த்து.

--ரமணி, 07/06/2013

*****

M.Jagadeesan
10-06-2013, 02:26 PM
மார்மீதும், தோள்மீதும் வைத்தென்னை உன்னைப்போல்
யாரென்னை நேசித்தார் அன்னையே !-தேர்வெழுதி
இம்மா நிலம்புகழ பட்டங்கள் பெற்றாலும்
"அம்மா " விருதே உயர்வு.

ரமணி
10-06-2013, 02:46 PM
என் கவிதையில் கவிஞன் சொல்வதைவிட, உங்கள் கவிதையில் குழந்தை சொல்வதில் கவிதைத்டுவம் அதிகம். Beautiful!


மார்மீதும், தோள்மீதும் வைத்தென்னை உன்னைப்போல்
யாரென்னை நேசித்தார் அன்னையே !-தேர்வெழுதி
இம்மா நிலம்புகழ பட்டங்கள் பெற்றாலும்
"அம்மா " விருதே உயர்வு.

ரமணி
12-06-2013, 03:25 AM
http://www.myindiapictures.com/pictures/up1/2011/07/Indian-Girls-in-Amazing-Yoga-Positions.jpg

13. யோகாசன யுவதியர்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஆகாவென் றெழுந்ததுபார் பாரத யுவதியர்
யோகாசனப் பயிற்சிகள் அற்புதமாய் இங்கே!
சக்ராசன யுவதியின் உந்திமேல் பத்மாசனம்
உக்கிரமாய்ச் செய்யும் உல்லாச யுவதி!

image:
http://www.myindiapictures.com/pictures/up1/2011/07/Indian-Girls-in-Amazing-Yoga-Positions.jpg

*****

ரமணி
14-06-2013, 11:30 AM
http://www.tamilbrahmins.com/attachments/literature/2782d1371209272-2970-3007-2980-3021-2980-3007-2992-2990-3021-2958-2996-3009-2986-3021-2986-3007-2991-2965-2997-3007-2980-3016-00ramani-chithtira-kavi-14.jpg

14. இலையோ செய்தி!?

(ஒருவிகற்ப பஃறொடை வெண்பா)
இலைகளா லான இனிய கணேசர்!
இலையினில் செய்தி இயற்கையைப் போற்று!
கலைவண்ணம் கல்லிலே காண்பது போல
இலைகளில் காண்ப(து) இனிதோ எளிதோ
அலையலை யான வியப்பு.

--ரமணி, 14/06/2013

image:
http://www.myindiapictures.com/pictures/up1/2012/10/ganesh-ji-made-by-leaf-of-tree-art.jpg
http://www.myindiapictures.com/pictures/up1/2012/04/leaf-art-amazing.jpg

*****

M.Jagadeesan
14-06-2013, 01:52 PM
ஆலின்இலைப் பாலகனாய் அன்றுலகம் உண்டவனும்
காலின்கீழ் முயலகனை இட்டுநடம் புரிபவனும்
வேலெடுத்து விளையாடி சூரனை வதைத்தவனும்
வாலெடுத்து எரியூட்டி இலங்கையை அழித்தவனும்
சிரசு நான்குடைய படைக்கும் தொழிலோனும்
அரசின்இலைக் கணபதிக்கு ஆவரோ இணை ?

ரமணி
19-06-2013, 02:57 AM
http://www.myindiapictures.com/pictures/up1/2012/07/tree-on-head-funny.jpg

15. மண்டையில் வளர்ந்த மரம்!

(இருவிகற்ப இன்னிசை வெண்பா)
மண்ணை யகழ்ந்தெடுத்த மாமரத் தெங்கினை
விண்ணை யகழ்ந்திடும் வண்ணம் உயர்த்தி
சிரசில் இருத்தியே செல்வது விந்தை!
மரமண்டை தானோ இது?

--ரமணி, 19/06/2013

image:
http://www.myindiapictures.com/pictures/up1/2012/07/tree-on-head-funny.jpg

*****

ரமணி
20-06-2013, 01:28 AM
http://www.myindiapictures.com/pictures/up1/2012/07/desi-model-and-funny-modeling-fashion-show-india.jpg

16. மேடையில் மீனவள் ஆடை

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
கொல்லனின் பட்டறையில் ஈக்கென்ன வேலையென
கல்லாத மீனவள்தான் காட்சிக்கு வந்தாள்?
நவீனம் தவழ்கின்ற நங்கை உடையில்
அவியலென இஃதோர் உடுப்பு?

--ரமணி, 20/06/2013

image:
http://www.myindiapictures.com/pictures/up1/2012/07/desi-model-and-funny-modeling-fashion-show-india.jpg

*****

M.Jagadeesan
21-06-2013, 03:18 AM
http://www.myindiapictures.com/pictures/up1/2012/07/tree-on-head-funny.jpg


பெண்ணை இடப்பாகம் வைத்த பெருமானும்
கண்ணைப் பெயர்த்து எடுத்தோனும்- மண்ணுலகைத்
தன்வாயில் காட்டிய மாலவனும் ஈடாமோ
தென்னை சுமக்கும் எனக்கு?

M.Jagadeesan
21-06-2013, 02:12 PM
http://www.myindiapictures.com/pictures/up1/2012/07/desi-model-and-funny-modeling-fashion-show-india.jpg


சதைகாட்டி பெண்கள் நடக்கின்றார் சீச்சீ
அதையும் சிலபேர் ரசிக்க- இதைவிட
பேன்மொய்க்கும் என்தலையில் எப்போதும் நாறுகின்ற
மீன்சுமந்து விற்றலே நன்று.

ரமணி
22-06-2013, 03:14 AM
http://www.myindiapictures.com/pictures/up1/2012/07/poor-and-rich-cartoon-jokes.jpg

17. உள்ளுவ தெல்லாம் சுயநலம்!

(ஒருவிகற்ப பஃறொடை வெண்பா)
உள்ளவர் இல்லவர் வாழ்வின் நிலையினை
உள்ளபடி காட்டும் உவமையின் சித்திரம்
உள்ளுவ தெல்லாம் சுயநல மென்றிருந்து
உள்ளவர் இல்லவர் வாழ்வைச் சுரண்டுவதால்
உள்ளவர் வாழ்வினில் இன்பமே எப்போதும்
உள்ளதோ இன்மைக்குத் தீர்வு?
--ரமணி, 22/06/2013

image:
http://www.myindiapictures.com/pictures/up1/2012/07/poor-and-rich-cartoon-jokes.jpg

*****

arun karthik
22-06-2013, 09:59 AM
(இருவிகற்ப இன்னிசை வெண்பா)
மண்ணை யகழ்ந்தெடுத்த மாமரத் தெங்கினை
விண்ணை யகழ்ந்திடும் வண்ணம் உயர்த்தி
சிரசில் இருத்தியே செல்வது விந்தை!
மரமண்டை தானோ இது?

--ரமணி, 19/06/2013

image:
http://www.myindiapictures.com/pictures/up1/2012/07/tree-on-head-funny.jpg

*****

மிகவும் ரசித்தேன்...

arun karthik
22-06-2013, 10:41 AM
http://www.myindiapictures.com/pictures/up1/2012/07/tree-on-head-funny.jpg


காடெல்லாம் காணாமல் போனதடா - அந்தக்
கார்மேகம் அழவில்லை சிரிக்குதடா - மரத்தை
சிரத்தின் மேல் கொண்டாட மறந்தால், உதிரமும்
நீராகும் நிலமகளின் நாவில்...

ரமணி
23-06-2013, 02:12 AM
http://www.myindiapictures.com/pictures/up1/2012/07/dogs-and-foreigners-are-not-allowed-funny-india-hindi.jpg

18. வரலாறு வந்துசேர்ந்தால்...

(பலவிகற்பப் பஃறொடை வெண்பா)
இந்தியரும் நாய்களும் இங்குவரக் கூடாது
அன்றொருநாள் ஆங்கிலேயச் சங்கத்தில் கண்டசொற்கள்
இன்றவர்க்கே வந்துசேரும் இந்தியநாட் டுப்பற்றோ?
இந்நாளில் எல்லோரும் இங்ஙண் வரலாறு
நன்றுணர்ந்தால் ஏது நலிவு?

--ரமணி, 22/06/2013

image:
http://www.myindiapictures.com/pictures/up1/2012/07/dogs-and-foreigners-are-not-allowed-funny-india-hindi.jpg

*****

ரமணி
26-06-2013, 03:07 AM
http://www.myindiapictures.com/pictures/up1/2012/06/girls-weight-without-makeup-and-with-makeup-funny.jpg

19. ஒப்பனையே ஒப்புரவு ஆனதோ!?

(இருவிகற்ப இன்னிசை வெண்பா)
கண்ணுக்(கு) அணிகலன் கண்ணோட்டம் என்பதுபோல்
பெண்ணுக்(கு) அனிகலன் ஒப்பனைகள் என்றாலும்
ஒப்பனையின் ஒட்டுமொத்தம் இப்படி ஆவதே
ஒப்புர(வு) ஆனதோ இன்று?

[ஒப்புரவு=உலகப் பொதுவொழுக்கம்]

--ரமணி, 2/06/2013

image:
http://www.myindiapictures.com/pictures/up1/2012/06/girls-weight-without-makeup-and-with-makeup-funny.jpg
00ramaNi-chithtira kavi-18

*****

ரமணி
07-08-2013, 04:37 PM
http://www.tamilbrahmins.com/attachments/literature/2975d1375893620-2970-3007-2980-3021-2980-3007-2992-2990-3021-2958-2996-3009-2986-3021-2986-3007-2991-2965-2997-3007-2980-3016-00ramani-chithtira-kavi-20.jpg

20. விட்டலனுக்கு குடை பிடிக்கும் வாஞ்சை

(இருவிகற்ப நேரிசை வெண்பா)
விட்டலா வான்மழை விட்டிலையே! எத்தனை
கட்டம் கவலை வருத்தமும்! - வட்டக்
குடைகாட்டி விட்டலையே காக்கும் குழந்தை
உடையில் நவீன மரபு!

--ரமணி, 07/08/2013, கலி.17/09/5113

image:
https://santhavasantham.googlegroups.com/attach/f2c26ac01695152c/1150134_10200100041293317_1131177301_n.jpg?view=1&part=4

*****

ரமணி
18-09-2014, 04:05 AM
21. ஆலெனத் தழைத்த அருகடியில்
(இருவிகற்ப நேரிசை வெண்பா)

http://www.tamilbrahmins.com/attachments/literature/3762d1411012955-2958-2985-3021-2965-2997-3007-2980-3016-2990-3009-2991-2993-3021-2970-3007-2965-2995-3021-arugampillaiyar.jpg

ஆலமர் ஈசனின் அற்புத மைந்தனும்
ஆலென வோங்கும் அருகடியில் - ஞாலத்
திறையென் றமர்ந்த திருவெழில் தன்னில்
உறைமனம் காணுமே உய்வு.

--ரமணி, 18/09/2014

*****