PDA

View Full Version : "தினமலர்' செய்தியால் மகன்களுடன் இணைந்த தாய்



அனுராகவன்
08-02-2013, 03:58 AM
"தினமலர்' செய்தியால் மகன்களுடன் இணைந்த தாய்

செங்குன்றம்: வழி தவறி பிரிந்து சென்ற தாயை, சென்னை முழுக்க
தேடிக்கொண்டிருந்த மகன்கள், "தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து,
புழல் பகுதிக்கு நேரில் வந்து, அவரை அழைத்து சென்றனர்.

சென்னை
கொரட்டூர் பாலாஜி நகர், சீனிவாசன் தெருவை சேர்ந்தவர்கள் ராஜன், ஜெய்சங்கர்.
இருவரும், சகோதரர்கள். இவர்களது தாய் முல்லையம்மாள், 60. இவர், கடந்த சில
மாதங்களுக்கு முன், புழல் கதிர்வேடு பேருந்து நிறுத்தம் அருகே, வந்து
சேர்ந்தார். அன்று முதல், அங்கு வருவோரிடம், "வெற்றிலை வாங்க கடைக்கு
வந்து, வழி தவறி இங்கு வந்து விட்டேன். என்னை, என் மகன்களிடம் சேர்த்து
வையுங்கள்' என, கேட்டு வந்தார்.

இவர் குறித்த செய்தி, "தினமலர்'
நாளிதழில், நேற்று முன்தினம், படத்துடன் வெளியானது. செய்தி மூலம், தாயின்
இருப்பிடத்தை அறிந்த மகன்கள், அன்றே, அவரை நேரில் வந்து அழைத்து சென்றனர்.
மகன்களுடன் இணைந்த அவரை, நேற்று சந்தித்த போது, மகிழ்ச்சியின் உச்சத்தில்
இருந்தார். தாயை பிரிந்தது குறித்து, ராஜன், ஜெய்சங்கர் கூறியதாவது:

. "தினமலர்' உதவியால் :
கடந்த,
ஆகஸ்ட், 16ம் தேதி பிற்பகலில், வெற்றிலை வாங்க சென்றவர், வீடு
திரும்பவில்லை. "பார்வை குறைவு' காரணமாக, புழல் கதிர்வேடு பகுதிக்கு போய்
சேர்ந்து இருக்கிறார். நாங்கள், கொரட்டூர் போலீசில் புகார் செய்தோம்.
அவர்கள், அவரது புகைப்படம் கொண்டு வாருங்கள், நீங்களும் தேடிப்பாருங்கள்
என்றனர். எங்களிடம் புகைப்படம் இல்லை. ஆனாலும், சென்னை முழுக்க தேடினோம்.
இந்நிலையில், "தினமலர்' நாளிதழில், எங்கள் தாயின் படத்துடன் வந்த செய்தியை,
சென்னை போரூரில் வசிக்கும் எங்கள் ஊர்க்காரர் பார்த்து, உறவினர்
ஒருவருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். அவர் மூலம், எங்கள் தாயை மீட்டோம்.
"தினமலர்' உதவியால், ஐந்து மாதங்களுக்கு முன் பிரிந்த எங்கள் உயிர்,
மீண்டும் கிடைத்துள்ளது என, கண்களில் நீர் பெருக்குடன், நன்றி
தெரிவித்தனர்.
-தினமலர்