PDA

View Full Version : ஆன்மா சிலிர்க்கிறதடி...



மஞ்சுபாஷிணி
27-01-2013, 09:44 AM
http://sphotos-a.ak.fbcdn.net/hphotos-ak-ash3/c0.0.403.403/p403x403/529002_10151442093926742_2025770874_n.jpg

ஆன்மா சிலிர்க்கிறதடி
உன் உச்சரிப்பில்
என் பெயரை கேட்கும்போது....

கதகதப்பாய் இருக்குதடி
உன் மனச்சிறகில்
என்னைப்போர்த்திக்கொண்டபோது....

பரவசமாகிறேனடி
கன்னங்கள்
உன் முத்தங்களால்
நனைத்தபோது....

முழுமைப்பெற்றேனடி
நீயே என்
வாழ்க்கைத்துணையாகும்போது...

உயிர்த்தேனடி
உன் பிரதிபிம்பம்
என் கைகளில்
மழலையாய் தவழும்போது.....

இராஜேஸ்வரன்
29-01-2013, 03:59 AM
உயிர்த்தேனடி
உன் பிரதிபிம்பம்
என் கைகளில்
மழலையாய் தவழும்போது.....

கவிதையும் அதற்கேற்ற படமும் பிரமாதம். பாராட்டுக்கள்.

கீதம்
29-01-2013, 10:46 PM
ஒவ்வொரு வரியிலும் இழையோடுகிறது காதல் நயம். முதல் பத்தியில் மென்சிறகின் இதத்தோடு மனம் வருடத்துவங்கும் அன்பு இறுதிப்பத்தியில் இன்னும் ஆழமாய் தன்னை வெளிப்படுத்தி முழுமையாய் மனதை ஆக்ரமிக்கிறது. அழகிய கவிதை. பாராட்டுகள் மஞ்சுபாஷிணி.

M.Jagadeesan
30-01-2013, 01:16 AM
காதலியே வாழ்க்கைத் துணையானாள். காதலியே பிரதி பிம்பமாக குழந்தையானாள். ஆனாலும் காதலன் அவள்மீது கொண்ட அன்பு மட்டும் மாறவில்லை. அழகான சிந்தனையில் உதித்த அருமையான கவிதை தந்த சுபாஷிணி அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

மஞ்சுபாஷிணி
30-01-2013, 12:40 PM
உயிர்த்தேனடி
உன் பிரதிபிம்பம்
என் கைகளில்
மழலையாய் தவழும்போது.....

கவிதையும் அதற்கேற்ற படமும் பிரமாதம். பாராட்டுக்கள்.

அன்பு நன்றிகள் இராஜேஸ்வரன்....

மஞ்சுபாஷிணி
30-01-2013, 12:41 PM
ஒவ்வொரு வரியிலும் இழையோடுகிறது காதல் நயம். முதல் பத்தியில் மென்சிறகின் இதத்தோடு மனம் வருடத்துவங்கும் அன்பு இறுதிப்பத்தியில் இன்னும் ஆழமாய் தன்னை வெளிப்படுத்தி முழுமையாய் மனதை ஆக்ரமிக்கிறது. அழகிய கவிதை. பாராட்டுகள் மஞ்சுபாஷிணி.

அன்பு நன்றிகள் கீதம்..

மஞ்சுபாஷிணி
30-01-2013, 12:42 PM
காதலியே வாழ்க்கைத் துணையானாள். காதலியே பிரதி பிம்பமாக குழந்தையானாள். ஆனாலும் காதலன் அவள்மீது கொண்ட அன்பு மட்டும் மாறவில்லை. அழகான சிந்தனையில் உதித்த அருமையான கவிதை தந்த சுபாஷிணி அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

அன்பு நன்றிகள் ஜகதீசன் ஐயா...

Sasi Dharan
31-01-2013, 11:38 AM
அழகிய காதல் கவி...