PDA

View Full Version : மௌனம்



nandagopal.d
26-01-2013, 05:57 PM
http://4.bp.blogspot.com/-ddFTMWbZY3M/UOfQIV2h3rI/AAAAAAAAAD0/UTwetPR_kns/s1600/images+(42).jpg

இருந்திருந்தால் என்ற வார்த்தையில்தானே
ஆதங்கத்தின் மௌனம்
வெப்பமான மூச்சுஆக
பயணிக்கிறது எப்பொழுதும்
வார்த்தை பரிமாற்றங்களிடையே வந்து போகும்
கலவரமே ,வாழ்வின் கருப்பு துளி
மொழிகளற்ற உலகை
நினைத்து பார்கிறேன்
இன்னும் அழகாக இருந்து இருக்கும்
மௌனம்

கீதம்
26-01-2013, 10:08 PM
மௌனம் இருந்திருக்க வேண்டிய நேரத்தில் இடம்பெறும் வார்த்தைகளும், வார்த்தைகள் இருந்திருக்க வேண்டிய இடத்தை நிரப்பிடும் மௌனமும் வாழ்க்கையை சிலசமயம் புரட்டித்தான் போட்டுவிடுகின்றன. ஆதங்கத்தின் அங்கலாய்ப்பாய் அமைந்த கவிதை என்றாலும் ரசிக்கவைக்கிறது. பாராட்டுகள்.

ஜானகி
27-01-2013, 01:17 AM
நிழலருமை வெய்யிலிலேதான்....மௌனத்தின் அழகும் வார்த்தைக் கலவரத்தின் இடையேதான் கூடும் !

Sasi Dharan
31-01-2013, 11:40 AM
மௌனம்... புன்னகை... இரண்டும் வாழ்கையின் அழகியல்