PDA

View Full Version : இயற்கையும் கொஞ்சம் வாழட்டுமே



arun karthik
26-01-2013, 08:45 AM
மண்ணை திருடாதே – உன்
பேரனும் அள்ளி திண்ணட்டுமே!

மண் நீரை உரிஞ்சாதே – நிலத்துக்கும்
சற்று தாகம் தீரட்டுமே!

மரத்தை சாய்க்காதே – உன்
சுவாசம் கொஞ்சம் தூய்மை ஆகட்டுமே!

மலையை குடையாதே – கம்பீரத்திற்கு
ஒரு உதாரணமாகவாவது இருக்கட்டுமே!

நிலத்தை மாசூட்டாதே – உன்
உணவும் உயிரும் சுவைக்கட்டுமே!

இயற்கையை அழிக்காதே – உன்
தலைமுறையின் வாழ்வும் இனிக்கட்டுமே!

M.Jagadeesan
26-01-2013, 09:09 AM
இயற்கை வாழ்ந்தால்தான், மனிதன் வாழமுடியும் என்ற கருத்தை சில வரிகளில் அருமையாகச் சொன்ன அருண் கார்த்திக் அவர்களுக்குப் பாராட்டுக்கள்.