jaffy
14-01-2013, 11:50 AM
அவள் அறிந்திருக்கவில்லை
யாதொரு பெண்களிடத்தும்
கூறுவது போலத்தான்
அவன் தன்னையும் அழகியென்று
வர்ணித்தானென
அவள் அறிந்திருக்கவில்லை
பிறபெண்களிடத்தை போலவே
தன்னிடமும் மயக்க மொழி பேசினானெ
அவள் அறிந்திருக்கவில்லை
மற்றவர்களிடத்தை போலவே
தன்னிட்டமும் காதல் சொன்னானென
அவள் அறிந்திருக்கவில்லை
தன்னை போலவே
மற்றவர்களையும் மனையாளென
அழைத்தானென
அவள் அறிந்திருக்கவில்லை
இவ்வாறே பிறப்பெண்டீரிடமும்
சரசப்பேச்சுக்களை நிகழ்த்தினானென
அவள் அவனை நம்பினாள்
ஒரு மாசற்ற குழந்தையென
அவள் அவன் கைகளை பற்றிக் கொண்டாள்
அனாதரவான தருணத்தில் நீளும் கைகளென
அவள் ஒரு வளர்ப்பு பிராணியை போலவே
அவன் கட்டளைகளுக்கெல்லாம் இணங்கினாள்
இசைந்தாள், இயங்கினாள், குழைந்தாள், குலைந்தாள்
தன் இச்சையை மீதமின்றி
அவன் தீர்த்து கொண்டு
அவளை தவிர்க்க ஆரம்பித்த தருணத்தில்
உணர்ந்தாள் தான் ஏமாற்றப்பட்டதை
தான் வஞ்சிக்கப்பட்டை
தனுக்கு நிகழ்ந்த துரோகத்தை
நயவஞ்சகமாய் தான் வேட்டையாடப்பட்டதை
அவனின் வக்கிரத்தின் வடிகாளாய் தானாக்கப்பட்டதை
அவள் ஆற்றாமையில்
பொங்கினாள் வெடித்தாள் சினந்தாள்
தன் ஒட்டுமொத்த போர்குணத்தையும் திரட்டி
சமரிட்டாள்
சர்ச்சையை மேலழுப்பினாள்
நடுநிலை பொருந்திய பெருந்தன்மைமிக்க
அனைத்து கணவான்களும்
அவளின் காமத்தை குறித்து
விவாதித்துக் கொண்டிருந்தார்கள்
சகமனுசிக்கு நிகழ்ந்த துரோகத்தை மறந்து
அவள் பலவீனத்தை விமர்சித்தார்கள்
அவள் தூண்டபட்டதை புறக்கணித்து
அவளை வெட்கம்கெட்டவள் என்றார்கள்
அவள் வேட்டையாடப்பட்டதை மறைத்து
அவளை வஞ்சகி என்று தூற்றினார்கள்
அவள் வஞ்சிக்கப்படதை தூர்த்து
அவள் மிரட்டப்பட்டாள்
வெறுக்கப்பட்டாள், விமர்சிக்கபட்டாள்
விரட்டப்பட்டாள், அடக்கப்பட்டாள்
அவன் தன் துரோகங்கள் எல்லாம்
கண்டறியப்படவில்லை என்று நிம்மதி கொண்டான்
தன் வஞ்சகங்களெல்லாம் யாருமறியாமல்
மறைத்த சாதுர்யங்களையெண்ணி
பெருமிதம் கொண்டான்
அவன் தன் தூயப்பெயர் காப்பாற்றபட்டதை
நம்பிக் கொண்டான்
அவன் இன்னும் பல பெண்களை
தன் வக்கிரத்துக்கு பயன்படுத்த
வாய்ப்பிருப்பதை எண்ணி எக்களித்தான்
தன் களியாட்டங்கள் மேலும் தொடர
தன்னை நம்புவோரையெல்லாம் பயன்படுத்தி கொண்டான்
ஆனால்
அவன் அறிந்திருக்கவில்லை
அவன் தன் மனைவியால் வஞ்சிக்கப்பட்டதை
அவன் குழந்தைகள்
அவனுடையதில்லை என்பதை
அவன் தன் மனைவியை
நெருங்கும் சமயத்திலெல்லாம்
அவள் வேறொரு ஆடவனை நினைத்துக் கொள்வதை
அவன் அறிந்திருக்கவில்லை
துரோகங்கள் துரோகங்களால் தண்டிக்கப்படுவதை
வஞ்சனைகள் வஞ்சகங்களால் ஈடு செய்யப்படுவதை
ஏமாற்றுதல்கள் ஏமாற்றுதல்களால் சமனாவதை
யாதொரு பெண்களிடத்தும்
கூறுவது போலத்தான்
அவன் தன்னையும் அழகியென்று
வர்ணித்தானென
அவள் அறிந்திருக்கவில்லை
பிறபெண்களிடத்தை போலவே
தன்னிடமும் மயக்க மொழி பேசினானெ
அவள் அறிந்திருக்கவில்லை
மற்றவர்களிடத்தை போலவே
தன்னிட்டமும் காதல் சொன்னானென
அவள் அறிந்திருக்கவில்லை
தன்னை போலவே
மற்றவர்களையும் மனையாளென
அழைத்தானென
அவள் அறிந்திருக்கவில்லை
இவ்வாறே பிறப்பெண்டீரிடமும்
சரசப்பேச்சுக்களை நிகழ்த்தினானென
அவள் அவனை நம்பினாள்
ஒரு மாசற்ற குழந்தையென
அவள் அவன் கைகளை பற்றிக் கொண்டாள்
அனாதரவான தருணத்தில் நீளும் கைகளென
அவள் ஒரு வளர்ப்பு பிராணியை போலவே
அவன் கட்டளைகளுக்கெல்லாம் இணங்கினாள்
இசைந்தாள், இயங்கினாள், குழைந்தாள், குலைந்தாள்
தன் இச்சையை மீதமின்றி
அவன் தீர்த்து கொண்டு
அவளை தவிர்க்க ஆரம்பித்த தருணத்தில்
உணர்ந்தாள் தான் ஏமாற்றப்பட்டதை
தான் வஞ்சிக்கப்பட்டை
தனுக்கு நிகழ்ந்த துரோகத்தை
நயவஞ்சகமாய் தான் வேட்டையாடப்பட்டதை
அவனின் வக்கிரத்தின் வடிகாளாய் தானாக்கப்பட்டதை
அவள் ஆற்றாமையில்
பொங்கினாள் வெடித்தாள் சினந்தாள்
தன் ஒட்டுமொத்த போர்குணத்தையும் திரட்டி
சமரிட்டாள்
சர்ச்சையை மேலழுப்பினாள்
நடுநிலை பொருந்திய பெருந்தன்மைமிக்க
அனைத்து கணவான்களும்
அவளின் காமத்தை குறித்து
விவாதித்துக் கொண்டிருந்தார்கள்
சகமனுசிக்கு நிகழ்ந்த துரோகத்தை மறந்து
அவள் பலவீனத்தை விமர்சித்தார்கள்
அவள் தூண்டபட்டதை புறக்கணித்து
அவளை வெட்கம்கெட்டவள் என்றார்கள்
அவள் வேட்டையாடப்பட்டதை மறைத்து
அவளை வஞ்சகி என்று தூற்றினார்கள்
அவள் வஞ்சிக்கப்படதை தூர்த்து
அவள் மிரட்டப்பட்டாள்
வெறுக்கப்பட்டாள், விமர்சிக்கபட்டாள்
விரட்டப்பட்டாள், அடக்கப்பட்டாள்
அவன் தன் துரோகங்கள் எல்லாம்
கண்டறியப்படவில்லை என்று நிம்மதி கொண்டான்
தன் வஞ்சகங்களெல்லாம் யாருமறியாமல்
மறைத்த சாதுர்யங்களையெண்ணி
பெருமிதம் கொண்டான்
அவன் தன் தூயப்பெயர் காப்பாற்றபட்டதை
நம்பிக் கொண்டான்
அவன் இன்னும் பல பெண்களை
தன் வக்கிரத்துக்கு பயன்படுத்த
வாய்ப்பிருப்பதை எண்ணி எக்களித்தான்
தன் களியாட்டங்கள் மேலும் தொடர
தன்னை நம்புவோரையெல்லாம் பயன்படுத்தி கொண்டான்
ஆனால்
அவன் அறிந்திருக்கவில்லை
அவன் தன் மனைவியால் வஞ்சிக்கப்பட்டதை
அவன் குழந்தைகள்
அவனுடையதில்லை என்பதை
அவன் தன் மனைவியை
நெருங்கும் சமயத்திலெல்லாம்
அவள் வேறொரு ஆடவனை நினைத்துக் கொள்வதை
அவன் அறிந்திருக்கவில்லை
துரோகங்கள் துரோகங்களால் தண்டிக்கப்படுவதை
வஞ்சனைகள் வஞ்சகங்களால் ஈடு செய்யப்படுவதை
ஏமாற்றுதல்கள் ஏமாற்றுதல்களால் சமனாவதை