PDA

View Full Version : ஞானவயல்



rema
13-01-2013, 03:59 PM
ஞானவயல்

அசோக வனமதிலும்
சீதையின் மானம்
காத்ததொரு பிரம்ம சாபம் !
சோக வனமாய் மாறி வரும்
ஞானவயல் நாம தேசத்தில்
நித்தம் ஒரு சீதையின் அலறலும்
கொடூர மரணமும் !

கடும் சட்டங்களால்,
கலியுக ராவணன்களை
எப்போது சபிக்கும் இந்த அரசு
நவீன பிரம்மனாய் !

கும்பகோணத்துப்பிள்ளை
13-01-2013, 07:47 PM
பானம்விடும் ராமனின் மனைவியை கானம்தாண்டியே
வானம்வழியே கொண்டு வைத்தான் அசோகவனத்தில்
தானாகத் தொடவில்லை மாறட்டும் மனமென்றே!
ஆனால் இவர்கள்! கல்லாகிப்போன அகலிகைளையும்
பொல்லப்பொறுக்கிகள் விட்டாவைத்தார்கள்
கொட்டிக்கவிழத்தார்கள் கூட்டமாய் அந்தோ! - கடும்
சட்டங்கள் என்ன செய்யும் இந்த கயவாலிக்கூட்டங்களை
சட்டக்காவலர்களே கையில் விளக்கேந்தி நிற்கையிலே!

A Thainis
13-01-2013, 07:54 PM
அழகிய வரிகளில் கண்ணீர் வடித்த ஞான வயல் வாழ்த்துக்கள் ரேமா.

சகோதரங்கள் என்ற உறவு வைத்து காக்கப்பட வேண்டிய ஞான வயல் இன்று சட்டங்கள் வைத்துதான் ஞான வயல் காக்கப்பட வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகி இருப்பது வேதனை.

மஞ்சுபாஷிணி
15-01-2013, 08:12 AM
சாட்டையை சுழற்றி வீசிய அருமையான கவிதை வரிகள் ரேமா..