lenram80
08-01-2013, 11:13 PM
நீ இன்னொரு காந்தி!
=================
மலரினும் மெல்லிய மலர்விழியின் மேல்
மலர் வளையம் வைக்க வைத்த மகா பாவிகளே!
இரை தேடி வந்த கயல்விழியை
இறைவனடி சேர வைத்த கயவர்களே!
சித்திரவதை கூடாது என்று தான்
கசாப்பு கடைகளில் கூட
உயிர் போன பின்பு தான் உடல் உரிப்பார்கள்!
சித்திர தேவதையை
உயிருடன் வைத்தே சிறுகுடல் இழுத்ததை நினைத்தால்
கதறாத மனசு கூட பதறுதடா!
அவள் என்ன பாடு பட்டளோ?
நினைத்தாலே நெஞ்சமெல்லாம் உதறுதடா!
இருபத்து நான்கு மணியும் இயங்கும் இக்காலத்தில்
இரவில் நடமாட்டம் எதற்கு என்பதெல்லாம்
இயலாதவர்களின் பிரதி வாதம்!
இரவா? பகலா? என்பதில்லை இங்கே விவாதம்!
தானுண்டு என்றிருந்தவளை
களி கொண்டு பின் தான் உண்டு
பின் இரும்பு உளி கொண்டு பலி செய்ய காரணம் என்ன?
தனித் தலைத் பத்து கொண்டவன்
தனித்தவளை களவு கொண்டு
தனி வலையில் வைத்த போதும்
வன்புணர்வு கொண்டதாய்
இதிகாசம் கூட இயம்பவில்லை!
உரிமை உள்ளவனே
ஒப்புதலோடு உறவு கொள்ளும் இந்தக் காலத்தில்
எந்த உறவும் இல்லாத உனக்கு
எப்படி வந்தது உரிமை?
துணையுடன் வந்த ஒரு
இணையைக் கெடுத்த நீங்கள்
விந்துத் துளியில் பிறந்தவர்களா?
இல்லை
எவனாவது காரித்
துப்பிய சளியில் பிறந்தவர்களா?
பசி, துக்கம், கோபம் போல அதுவும் ஒரு உணர்வு!
அடக்கு என்று சொல்வது முட்டாள் தனம்!
அடக்கி ஆளக் கற்றுக் கொள்ளும் அறிவு மனம்!
தசைக்கேறிய ரத்தம் குறைக்க
தலைக்கேறிய பித்தம் கரைக்க
எத்தனையோ வழிகள் நித்தம் இருக்க
வள்ளியினத்தை வல்லினத்தோடு சிதைப்பது
பழ ரசம் இருக்க பாதரசம் குடிக்கச் சமம்!
மாங்கனி இருக்க மலம் அள்ளித் தின்கச் சமம்!
எலும்பே இல்லாமல் ஏன் சில பாகங்கள்?
என்றாவது யோசித்ததுண்டா?
பெண்மையின் மென்மையைத் தொட
இன்னொரு தசையின் விசையே மிக அதிகம்!
ஆனால் நீ,
கடப் பாரை வைத்து கடைந்து இருக்கிறாய்!
கோழி ஏறும் சேவல் பார்த்தே சிவந்த நான்
என் தோழியைத் தொட்ட செய்தியை கேட்டு
எப்படி பொறுப்பேன் என்று எதிர்ப்பார்த்தாய்?
தனி மனித ஒழுக்க வட்டமும்
எல்லை மீறாத மனக் கட்டமும்
செய்த தவறுக்கு சரியாக தண்டிக்கும் சட்டமும்
பெண்மை போற்றும் பாடத் திட்டமும்
இப்படி ஒன்றை இனியாவது தடுக்கட்டும்!
பன்னிகள் இந்த ஆறு பேரிடமும்
பன்னிரெண்டு சிறு நீரகங்கள்!
பண்ணி மாட்ட முடியாத
பன்னிரெண்டு செந்நீரகங்கள்! (இதயம்)
உள்ளுறுப்பு வேண்டுவோர்கள்
உருவி செல்ல வாருங்கள்!
தவறான இடத்தில் தவறான நேரத்தில்
சரியாக மாட்டிய எங்கள் சகோதரியே...
நீ சாகவில்லை!
திருப்பி அடிப்பவனை விட
வலி பொறுப்பவனின் மனவலிமை அதிகம் எனக் காட்டி
சுதந்திரத்திற்குப் பின்
வன்முறைக்கெதிராய் எங்களை
ஒன்றாய் வலம் வர வைத்த...
நீ இன்னொரு காந்தி!
உன் ஆத்மா அடையட்டும் சாந்தி!
அதற்காக நிற்கிறோம் விளக்கேந்தி...!
=================
மலரினும் மெல்லிய மலர்விழியின் மேல்
மலர் வளையம் வைக்க வைத்த மகா பாவிகளே!
இரை தேடி வந்த கயல்விழியை
இறைவனடி சேர வைத்த கயவர்களே!
சித்திரவதை கூடாது என்று தான்
கசாப்பு கடைகளில் கூட
உயிர் போன பின்பு தான் உடல் உரிப்பார்கள்!
சித்திர தேவதையை
உயிருடன் வைத்தே சிறுகுடல் இழுத்ததை நினைத்தால்
கதறாத மனசு கூட பதறுதடா!
அவள் என்ன பாடு பட்டளோ?
நினைத்தாலே நெஞ்சமெல்லாம் உதறுதடா!
இருபத்து நான்கு மணியும் இயங்கும் இக்காலத்தில்
இரவில் நடமாட்டம் எதற்கு என்பதெல்லாம்
இயலாதவர்களின் பிரதி வாதம்!
இரவா? பகலா? என்பதில்லை இங்கே விவாதம்!
தானுண்டு என்றிருந்தவளை
களி கொண்டு பின் தான் உண்டு
பின் இரும்பு உளி கொண்டு பலி செய்ய காரணம் என்ன?
தனித் தலைத் பத்து கொண்டவன்
தனித்தவளை களவு கொண்டு
தனி வலையில் வைத்த போதும்
வன்புணர்வு கொண்டதாய்
இதிகாசம் கூட இயம்பவில்லை!
உரிமை உள்ளவனே
ஒப்புதலோடு உறவு கொள்ளும் இந்தக் காலத்தில்
எந்த உறவும் இல்லாத உனக்கு
எப்படி வந்தது உரிமை?
துணையுடன் வந்த ஒரு
இணையைக் கெடுத்த நீங்கள்
விந்துத் துளியில் பிறந்தவர்களா?
இல்லை
எவனாவது காரித்
துப்பிய சளியில் பிறந்தவர்களா?
பசி, துக்கம், கோபம் போல அதுவும் ஒரு உணர்வு!
அடக்கு என்று சொல்வது முட்டாள் தனம்!
அடக்கி ஆளக் கற்றுக் கொள்ளும் அறிவு மனம்!
தசைக்கேறிய ரத்தம் குறைக்க
தலைக்கேறிய பித்தம் கரைக்க
எத்தனையோ வழிகள் நித்தம் இருக்க
வள்ளியினத்தை வல்லினத்தோடு சிதைப்பது
பழ ரசம் இருக்க பாதரசம் குடிக்கச் சமம்!
மாங்கனி இருக்க மலம் அள்ளித் தின்கச் சமம்!
எலும்பே இல்லாமல் ஏன் சில பாகங்கள்?
என்றாவது யோசித்ததுண்டா?
பெண்மையின் மென்மையைத் தொட
இன்னொரு தசையின் விசையே மிக அதிகம்!
ஆனால் நீ,
கடப் பாரை வைத்து கடைந்து இருக்கிறாய்!
கோழி ஏறும் சேவல் பார்த்தே சிவந்த நான்
என் தோழியைத் தொட்ட செய்தியை கேட்டு
எப்படி பொறுப்பேன் என்று எதிர்ப்பார்த்தாய்?
தனி மனித ஒழுக்க வட்டமும்
எல்லை மீறாத மனக் கட்டமும்
செய்த தவறுக்கு சரியாக தண்டிக்கும் சட்டமும்
பெண்மை போற்றும் பாடத் திட்டமும்
இப்படி ஒன்றை இனியாவது தடுக்கட்டும்!
பன்னிகள் இந்த ஆறு பேரிடமும்
பன்னிரெண்டு சிறு நீரகங்கள்!
பண்ணி மாட்ட முடியாத
பன்னிரெண்டு செந்நீரகங்கள்! (இதயம்)
உள்ளுறுப்பு வேண்டுவோர்கள்
உருவி செல்ல வாருங்கள்!
தவறான இடத்தில் தவறான நேரத்தில்
சரியாக மாட்டிய எங்கள் சகோதரியே...
நீ சாகவில்லை!
திருப்பி அடிப்பவனை விட
வலி பொறுப்பவனின் மனவலிமை அதிகம் எனக் காட்டி
சுதந்திரத்திற்குப் பின்
வன்முறைக்கெதிராய் எங்களை
ஒன்றாய் வலம் வர வைத்த...
நீ இன்னொரு காந்தி!
உன் ஆத்மா அடையட்டும் சாந்தி!
அதற்காக நிற்கிறோம் விளக்கேந்தி...!