PDA

View Full Version : பொங்கலை முன்னிட்டு சிறப்பு கவிதை நிகழ்ச்சி



ஆதி
08-01-2013, 05:13 AM
வணக்கம் உறவுகளே,

பொங்கலன்று நமது பண்பலையில் சிறப்பு கவிதை நிகழ்ச்சியொன்றை நடத்த திட்டமிட்டுள்ளோம், உறவுகள் பொங்கல் குறித்த கவிதைகளை வரும் 12/01/13 முன் இந்த திரியில் பதிவு செய்து நிகழ்ச்சிக்கு ஆதரளவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம், நிகழ்ச்சி ஒளிப்பரப்பு குறித்த தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்

அன்புடன்
தமிழ்மன்றப் பண்பலை குழு

மஞ்சுபாஷிணி
08-01-2013, 03:21 PM
எல்லோருக்கும் அன்பு பொங்கல் வாழ்த்துகள்பா....

govindh
10-01-2013, 09:13 PM
கவிப் பொங்கல்....!
================

அன்பு பொங்கட்டும்...
அறிவு தங்க*ட்டும்....

பண்பு பொங்கட்டும்....
பரிவு தங்கட்டும்....

பாசம் பொங்க*ட்டும்...
நேசம் தங்கட்டும்....

வீரம் பொங்கட்டும்...
விவேகம் தங்கட்டும்...

சக்தி பொங்கட்டும்...
பக்தி தங்கட்டும்....

உழைப்பு பொங்கட்டும்....
களைப்பு நீங்கட்டும்....

ஆன்மீகம் பொங்கட்டும்....
அமைதி தங்கட்டும்...

ஞானம் பொங்கட்டும்.....
ஞாலம் சிறக்கட்டும்....

நந்தன ஆண்டு.....
தையும் பிறக்கிறது....
நம் தமிழ் மன்றப் பண்பலையின்
பெருமையும் பெருகுகிறது....!

பொங்கல் பொங்கட்டும்....
மனங்கள் மகிழட்டும்....!

பொங்கல் வாழ்த்துக்கள்....!

சிறப்பான வாழ்த்துக்களுடன்,
சி. கோவிந்த்.

கும்பகோணத்துப்பிள்ளை
18-01-2013, 06:50 PM
பண்பலையில் வரும் நிகழ்ச்சிகளை பிற்பாடு தறவிறக்கம் செய்யக்கொடுத்தால் எங்களைப்போன்றவர்களுக்கு உதவியாகவிருக்கும்......(இரவு எண்ணையை எறிப்பவர்கள் சங்கம்)

ஜான்
29-01-2013, 01:42 AM
நிகழ்ச்சி நடந்ததா அறியத் தாருங்கள்