PDA

View Full Version : வழி வழியாய் வரும் கதைகள்...



HEMA BALAJI
31-12-2012, 03:59 PM
http://3.bp.blogspot.com/-5TZylE2N7Ak/UOHAaKtfLCI/AAAAAAAABBA/IqAeu5qlHZI/s400/Angel-Crying.jpg

என்ன இருக்கிறது படிக்கவும் பார்வையிடவும்
வெள்ளைத்தாள் முழுவதும்
சிவப்பை மட்டுமே சிந்திக் கொண்டிருக்கும்
கருப்பு எழுத்துக்கள்..

பாட்டி தன் தாயிடம் கதை கேட்டாள்
புராணங்களும் இதிகாசங்களும்

பாட்டியிடம் என் தாய் கதை கேட்டாள்
கம்பராமாயணமும் கட்டபொம்பனும்

என் தாயிடம் நான் கேட்டேன்
திருக்குறளும் திருவிளையாடலும்

என் மகள் என்னிடம் கேட்டாள்
சிங்க ராஜாவையும் சின்ட்ரெல்லாவையும்

தன் மகளுக்கு அவள் என்ன சொல்வாள்
வன்முறையையும் வன்புனர்வையுமா????..

shreemurali
02-01-2013, 12:38 AM
மிக நன்று ......... அடுத்த தலைமுறையினருக்கு பாட்டி சொன்னக் கதையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் அப்பொழுதுதான் வன்முறை முதலியவை குறையும்.

ஜானகி
02-01-2013, 12:46 AM
தாயானவள், இராமாயணத்தையும், குறளையும், புராணக்கதைகளையும் மறக்காமல் இருந்தால், மகளும் பிழைக்க வழியுண்டு !

குணமதி
02-01-2013, 01:36 AM
தன் மகளுக்கு
அவள் சொல்லவும் அவள் மகள் கேட்கவுமான நிலை அமைவதே அரிது.

கணிப்பொறி வழி, திருக்குறளையும் திருவிளையாடலையும், சிங்கக் கதையையும் சினடிரெல்லாவையும் இன்னும் பலவற்றையும் அவளே படிப்பாள்!
எதைத் தன் மகளுக்குச் சொல்லவேண்டும் என்று அவள்தான் தீர்மானிப்பாள்! அவள் மகள்... அவள் நிலையும் அதுவாகத்தான் இருக்கப்போகிறது!?

HEMA BALAJI
02-02-2013, 12:09 PM
பின்னூட்டிய நட்புகளுக்கு என் நன்றிகள்.