Sasi Dharan
31-12-2012, 11:14 AM
தூரத்தெரிந்த நினைவலைகள்
தளும்புகின்றன
கடந்துவிட்ட கணங்களின்
நிகழ்வுகளை மெல்ல மனதில்
மோதியபடி...
http://love.catchsmile.com/wp-content/uploads/2011/06/Alone-47.jpg
கடந்து செல்வதுதான்
வாழ்க்கையென்றால்
சில கனவுகள் வற்றாது
வாஞ்சையாய் வாயில் எட்டிநின்று
பார்ப்பதேனோ??
மறந்து போவதுதான்
மனிதம் என்றால்
மனதோடு மருகி நிற்கும்
மாலையில்
மீண்டும் மழையாகி
பொழிவது ஏனோ??
தளும்புகின்றன
கடந்துவிட்ட கணங்களின்
நிகழ்வுகளை மெல்ல மனதில்
மோதியபடி...
http://love.catchsmile.com/wp-content/uploads/2011/06/Alone-47.jpg
கடந்து செல்வதுதான்
வாழ்க்கையென்றால்
சில கனவுகள் வற்றாது
வாஞ்சையாய் வாயில் எட்டிநின்று
பார்ப்பதேனோ??
மறந்து போவதுதான்
மனிதம் என்றால்
மனதோடு மருகி நிற்கும்
மாலையில்
மீண்டும் மழையாகி
பொழிவது ஏனோ??