View Full Version : கவனமாக தவிர்க்கிறேன்.....
மஞ்சுபாஷிணி
28-12-2012, 03:52 PM
http://img.india-forums.com/images/600x0/60126-heer-and-prem-looking-shocked-seeing-each-other.jpg
கவனமாக தவிர்க்கிறேன்
உன் பார்வையை....
எனக்குத்தெரியும்
உன்னைப்பார்த்துவிட்டால்
என் பார்வையை உன்னிலிருந்து
என்னால் மீட்கவே முடியாது....
உன் பார்வை என் மனதை
ஊடுருவி உள்சென்று
உன் அன்பு நிறைவதை
என்னால் தடுக்கவே முடியாது....
அதனால் தான்.....
கவனமாக தவிர்க்கிறேன்
உன் பார்வையை....
குணமதி
28-12-2012, 03:55 PM
நன்று!
ஏன் தவிர்க்க வேண்டும்?
அன்பு தவிர்க்கப்பட வேண்டியதா என்ன?
மஞ்சுபாஷிணி
28-12-2012, 04:13 PM
:) சும்மா எழுதினது ஐயா.... அன்பு நன்றிகள் கருத்துக்கு....
அன்பு தவிர்க்கப்படவேண்டியது அல்ல... அன்பு பகிரக்கூடியது......
கும்பகோணத்துப்பிள்ளை
29-12-2012, 12:41 AM
http://img.india-forums.com/images/600x0/60126-heer-and-prem-looking-shocked-seeing-each-other.jpg
கவனமாக தவிர்க்கிறேன்
உன் பார்வையை....
எனக்குத்தெரியும்
உன்னைப்பார்த்துவிட்டால்
என் பார்வையை உன்னிலிருந்து
என்னால் மீட்கவே முடியாது....
உன் பார்வை என் மனதை
ஊடுருவி உள்சென்று
உன் அன்பு நிறைவதை
என்னால் தடுக்கவே முடியாது....
அதனால் தான்.....
கவனமாக தவிர்க்கிறேன்
உன் பார்வையை....
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.
குறள் ஒப்பும்!
பாலகன்
29-12-2012, 08:01 AM
அக்கா உஷாரு..... அப்படியே மெயின்டெயின் பண்ணுங்கோ!
மஞ்சுபாஷிணி
29-12-2012, 08:25 AM
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.
குறள் ஒப்பும்!
அன்பு நன்றிகள் கும்பகோணத்துப்பிள்ளை...
மஞ்சுபாஷிணி
29-12-2012, 08:26 AM
அக்கா உஷாரு..... அப்படியே மெயின்டெயின் பண்ணுங்கோ!
அப்படியே தம்பி.....
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.
குறள் ஒப்பும்!
கவிதை வடித்தவருக்கும் குறள் மேற்கோளுக்கும் பாராட்டுகள் மஞ்சு ,பிள்ளைக்கு
M.Jagadeesan
31-12-2012, 02:44 PM
கண்கள்தான் காதலின் வாசல் என்பதை விளக்கும் கவிதை! பாராட்டுக்கள் சுபாஷிணி !