PDA

View Full Version : கீர்த்தனா-என் தோழி, என் காதலி, என் மனைவி (1)



rishvan
27-12-2012, 03:30 AM
********************************
தினமும் பார்க்கும்
பூக்கள் தான் என்றாலும்
நீ
சூடிய பிறகு தான்
பூக்களும்
பூப்பெய்துகின்றனவோ...!
- ரிஷ்வன்
***********************************
ரம்யாவுடன் பார்த்திருக்கவேண்டிய தசாவதாரம் படத்தை இதோ படம் வெளிவந்து 57 நாட்கள் கழித்து இன்று, என் கைவிரல்களை கீர்த்தனாவின் கைவிரல்களோடு கோர்த்துக்கொண்டு, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத விசயங்கள் எப்படி ஓரிழையில் இணைக்கப்படுகின்றது என கியாஸ் தியரி சொல்லி கமலஹாசன் கதையை ஆரம்பிக்க, கோவிந்தராஜப்பெருமாளை குலோத்துங்கச்சோழன் கடலில் வீசுவதை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

இப்படி கீர்த்தனாவுடன் நெருக்கமாக அமர்ந்து இந்தப்படத்தைப் பார்க்கவேண்டும் என்பதற்காகத்தான் ரம்யா சென்னை வரும்பொழுது தன்னைச் சந்திக்கக்கூடாது என எனக்கு உத்தரவிட்டாளோ என்னவோ.. வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்திற்கும் கண்ணுக்குப்புலப்படாத தொடர்பு இருக்குமோ? தொடர்பு இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.

இப்போது கியாஸ் தியரி, பட்டர்பிளை எபெக்ட் என யோசிக்காமல் கீர்த்தனாவின் மென்மையான தொடுதலையே மனம் விரும்பியது. கீர்த்தனா என் கையில் இருந்த காயத்தழும்பைத்தடவிக்கொடுக்கையில் அந்த ஸ்பரிசத்தில் காமம் இல்லை எனப் புரிந்தது. கீர்த்தனாவிற்கு இடதுபுறம் எனது அலுவலகத் தோழிகள் வேறுசிலரும் வந்திருந்ததாலும், நாங்கள் அமர்ந்திருந்தது "B" வரிசையாகப் போனதாலும் கீர்த்தனாவை சமயம் வாய்க்கும்பொழுது முத்தமிடலாம் என்ற எண்ணத்தை செயல் படுத்தவேண்டாம் என முடிவு செய்தேன். அவளுக்கான முதல் முத்தத்தை பின்னால் இருந்து யாரேனும் கவனித்து விட்டால் அது அவளை சங்கடப்படுத்திவிடக்கூடும் என்பதால் அப்படி ஒரு அவசர முத்தத்தைக் கொடுக்க எனக்கு விருப்பமில்லை. தாமதமானாலும் பரவாயில்லை, அவளுக்கான முத்தம் கண்ணியமானதாகவும் நீண்ட,ஆழந்த அன்புடனும் தயக்கமில்லாத ஒன்றாகவும் இருக்கவேண்டும்.
திரைப்படத்தில் அசின் பெருமாளே பெருமாளே எனக்கத்தும் பொழுதெல்லாம், கீர்த்தனாவின் காதில் "Je t'aime" சொல்லியபோது என் கைகளை மேலும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள். நான் ஏற்கனவே படத்தைப்பார்த்து இருந்ததால் இடைவேளை வர சில நிமிடங்களுக்கு முன்னர், என் கைகளை விலக்கிக்கொண்டேன். எல்லா விளக்குகளும் எரிய ஆரம்பிக்க, கீர்த்தனாவின் கண்களில் சிலநீர்த்திவலைகள் பனித்திருந்தன.
"உங்களுக்குப் பிடிச்சிருந்ததா, கீர்த்தனா"
"ம்ம்ம் ரொம்ப பிடிச்சிருக்கு கார்த்தி, தாங்க் யூ"
கீர்த்தனாவை எனது அலுவலக நண்பர்கள்,தோழிகள் மத்தியில் நான் மரியாதையாக அழைப்பதுதான் வழக்கம். எங்களுக்குள் குறைந்தபட்ச நட்புக்கூட இல்லை என அவர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். கீர்த்தனாவின் விருப்பமும் அவ்வாறே. எனக்கும் அது சரியாகவேப்பட்டது. எனது முதல் காதல் பற்றி ஊருக்கெல்லாம் தம்பட்டம் அடித்துக்கொண்டதில், அதிக எதிர்பார்ப்புடன் வெளிவந்த படம் ஊத்திக்கொள்வதைப்போல தோல்வி அடைந்தது. ரம்யாவுடன் ஆன இரண்டாவது காதல் ஏதோ பரவாயில்லை முதலுக்கு மோசமில்லாமல் நட்பை மட்டும் தக்கவைத்துக்கொண்டு காதலை விலக்கியாகிவிட்டது. ரம்யாவுக்கும் அதுவே விருப்பம். அவள் என்னை ஆரம்பத்தில் இருந்தே நண்பனாக மட்டுமே பார்த்து வருகிறாள்.

என்னுடைய இந்த மூன்றாவது காதலுக்கு என்னுடைய முதல் இரண்டு காதல்கள்தான் காரணம் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? அட உண்மைதாங்க ..எப்படின்னு கேட்கறீங்களா? எனக்கு கீர்த்தனாவைப்பிடிக்கக் காரணம் என்னோட முதல் காதலி ஜெனி. கீர்த்தனாவிற்கு என்னைப் பிடிக்க காரணம் என்னோட இரண்டாவது காதலி ரம்யா. இத்தனைக்கும் இவங்க மூன்று பேரும் சந்தித்துக்கொண்டதே இல்லை.
கீர்த்தனாவை என் கண்களுக்கு கடைசி ஒரு வருஷமாத் தெரியும். என் மனதிற்கு கடைசி மூன்று மாதங்களாகத் தெரியும். போனவருடம் பிற்பகுதியில் எங்கள் அலுவலக வளாகத்தில் முதன் முதலில் கீர்த்தனாவைப் பார்த்தேன். அசப்பில் ஜெனியைப்போலவே இருந்ததால் ஏதோ ஒரு ஈர்ப்பு அவள் மேல ஆரம்பமானது. ஜெனி சம்பந்தப்பட்ட எந்த ஒரு நினைவும் கசப்பான அதிர்வுகளையே மனதில் ஏற்படுத்திவிடும். ஆனால் கீர்த்தனா ஜெனியைப்போல இருந்தாலும் ஜெனிக்கான "நெகட்டிவ் வேவ்லெங்த்" ஏதும் இல்லாததனால் கீர்த்தனாவை என் கண்கள் தேட ஆரம்பித்தது.. இருந்தபோதிலும் அந்த சமயங்களில் ரம்யாவுடனான என் காதலை நான் வெற்றி பெற வைக்க , விக்கிரமாதித்தன் போல மனம் தளாராமல் விடாமல் என் காதல் விருப்பத்தை ரம்யாவிடம் சொல்லிக்கொண்டிருந்ததாலும் வேலைப்பளுக்காரணமாக அடிக்கடி அலுவலக வளாகத்தில் சுற்ற முடியாததாலும் கீர்த்தனாவைப் பற்றி அதிக யோசனை இல்லை. எத்தனை தடவை வேண்டுமானாலும் காதலிக்கலாம். ஆனால் ஒரு சமயத்தில் ஒருவரை மட்டுமே காதலிக்கவேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடுடன் இருந்ததும் ஒரு காரணமாக இருக்கும்.
"நான் எங்கேங்க இல்லைன்னு சொன்னேன், இருந்திருந்தா நல்லா இருக்கும்னு தானே சொன்னேன்" என கமல்ஹாசன் பக்தியைப் பகுத்தறிவுடன் கலந்தடித்து காதல் வசனம் பேசிக்கொண்டிருக்க, படம் முடியப்போகிறது என உணர்வு வந்து நிகழ்காலத்திற்கு வந்தேன்.
படம் முடிந்து வெளியே வந்து, உடன் வந்திருந்த அலுவலக நண்பர்களை வழியனுப்பிவிட்டு கீர்த்தனாவிடம் "நீ கண்டிப்பா ஊருக்குப்போகனுமா, "

"ஆமாண்டா, அப்பா கண்டிப்பா இன்னக்கே வரச்சொல்லி இருக்காரு" அவளுக்கு ஊருக்குப்போக விருப்பமில்லை என்பதை கண்களிலும் ஊருக்குப் போகவேண்டியக் கட்டாயத்தை வார்த்தைகளிலும் சொன்னாள்.

அசோக்பில்லரில் புதுச்சேரி பேருந்துவர அவளை பேருந்தில் ஏற்றிவிட்டு பேருந்து வளையும் வரை அவள் முகத்தைப்பார்த்துவிட்டு அவளின் கைபேசிக்கு அழைத்தேன். அவளின் முதல் வாக்கியம் "மீ டு, தாங்க் யூ" குரலில் வழக்கத்தை விட மென்மையாக இருந்தது. மற்றும் ஒரு மாலைப்பொழுது கீர்த்தனாவுடன் இனிமையாக தொலைபேசி உரையாடலில் கரைந்தது. நேரக் கரைதலில் காதல் வளர்ந்திருந்தது.

சில மாதங்களுக்கு முன் "ஒரு அடி Gap கொடுத்திங்கன்னா, அந்தப்பக்கம் போயிடுவேன்னு" நான் சொன்னபொழுது "ஒரு அடி வேண்டுமா?, ஒரு அடி வேண்டுமா " என ஸ்கேலை வைத்துக்கொண்டு கீர்த்தனா என்னிடம் முதன்முதலாக நான் ரசிக்கும்படியாக பேசியபொழுது மனதின் ஓரத்தில் கீர்த்தனாவிற்கு ஒரு இடம் தயாராகப்போகிறது என்ற ஆழமனம் சொன்னபொழுது மனம் கீர்த்தனாவைப்பற்றி தெரிந்துக்கொள்ள ஆர்வப்பட்டது.

"சுமதி, யாரு அந்த பொண்ணு, டிரெயினிங் ஏதும் வந்து இருக்காங்களா?"

"யாரும் புதுசா ஆபிஸுக்கு வந்திரக்கூடாதே, உடனே உன் என்கொயரி ஸ்டார்ட் ஆயிடுமே? டிரெயினி எல்லாம் இல்லை நம்ம எம்ப்ளாயிதான்? பேரு கீர்த்தனா"


"பார்க்க கியுட்டா இருந்தாங்க அதான் கேட்டேன், நத்திங் சீரியஸ், டெவலப்மெண்டா? அட்மினிஷ்ட்ரேசனா?"
"ம்ம்ம் மேனேஜ்மெண்ட், நம்ம கம்பெனிக்கு புதுசா வந்திருக்கிற கம்பெனி செக்ரட்டரி"

"ம்ம்ம் "

"புரொஜெக்ட் டிரெயினிங் வரப் பொண்ணுங்க கிட்ட கடலைப்போடுற மாதிரி ஏதும் பேசிக்கிட்டு இருக்காதே?"
"சரி சரி.. "
அடுத்து வந்த நாட்களில் கீர்த்தனாவின் ஊர் பாண்டிச்சேரி என்பதும் அவளது அப்பா புதுச்சேரி அரசு துறை ஒன்றில் பெரிய பதவியில் இருப்பதும் கீர்த்தனாவுடன் பேசும் எனது அலுவலகத்தோழிகள் வாயிலாக தெரிந்து கொண்டேன். கம்பெனி செக்ரட்டரி பதவி என்பது சார்ட்டர்ட் அக்கவுண்டட்க்கு சமமானது என்பதையும் கூகுளில் பார்த்துக் கண்டுபிடித்தேன். நான் ஏழுவருஷமா குப்பைக்கொட்டி வாங்கும் சம்பளத்தில் கீர்த்தனா தனது இரண்டுவருட அனுபவத்துடன் இங்கு வந்து சேர்ந்து இருக்கிறாள் என்பதும் தெரிந்தது.

கீர்த்தனாவை நேரில் பார்க்கும்பொழுதெல்லாம் கண்ணோடு கண்ணாகப் பார்க்க ஆரம்பித்தேன். "நான் உன்னை ரசிக்க ஆரம்பித்துவிட்டேன்" என நான் என் கண்களால் சொல்லுவதாக என் மனதில் நினைத்துக்கொண்டேன். சில சமயங்களில் நான் பார்க்கிறேன் எனத்தெரிந்து அவளும் பார்ப்பாள், அந்தப்பார்வை "இவன் ஏண்டா நம்மை இப்படி பார்க்கிறான்" என்பதாக இருக்கும்.

சுமதியிடம் பேசும்பொழுதெல்லாம் கீர்த்தனாப் பற்றிய பேச்சை வீம்பாக ஆரம்பிப்பேன். நான் வேண்டுமென்றேக் கேட்பதைத் தெரிந்து "என்ன ரூட் விடுறியா? ஏற்கனவே பெங்களூர்ல ரம்யா, இப்போ பாண்டிச்சேரியா?"

"சே சே, அப்படி எல்லாம் இல்லை. லவ்வுக்கும் எத்திக்ஸ் உண்டு, ஒரு சமயத்தில ஒரு டிராக் தான், ஆனால் நிறைய சைட் அடிக்கலாம்..கீர்த்தனா ரிசம்பல்ஸ் ஜெனி"

சுமதி ஜெனியை நேரில் பார்த்து இருக்கிறாள்.
"ம்ம்ம் .. அதுக்காக ?"
"ஜெனி மாதிரி இருக்கிறதுனாலே கொஞ்சம் எக்ஸ்ட்ரா அட்டென்சன் அவ்வளவுதான்,"

"சரி சரி ..ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட் யுவர் பீலிங்ஸ், உனக்கு கீர்த்தனா பத்தி ஒன்னு சொல்றேன்"
"சொல்லு சொல்லு"
"கீர்த்தனாவுக்கு எப்.எம்ல நைட் பேசுற ஆர்.ஜே கவுதமைப்பிடிக்கும்"
ஏனோதெரியவில்லை எனக்கு காதில் புகைவந்தது போல இருந்தது. பொதுவாக நான் பண்பலையில் ரகசிய சினேகிதிதான் கேட்பதால் கவுதமை தவிர்த்துவிடுவேன். கீர்த்தனாவிற்காக அன்றில் இருந்து சிலதினங்களுக்கு கவுதமின் பண்பலை நிகழ்ச்சியைக் கேட்க ஆரம்பித்தேன்.

அடுத்த சில வாரங்களில் நாங்கள் வானொலி பண்பலை நிறுத்தப்பட்டு, மனதின் பண்பலைவரிசைகள் பாடத்தொடங்கின. காதல் உறுதியாகும் சூழலில், மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்லும் முடிவை நான் எடுத்தேன்.

கீர்த்தனா, ஜன்னலின் ஓரம் உள்ள இருக்கையில் அமர்ந்து வெளியில் வேடிக்கை பார்த்த வண்ணம் அமர்ந்திருக்க, சிறிது நேரத்திலே அவளுக்கு அதுவும் போர் அடிக்க ஆரம்பித்துவிட்டது,
அந்த சீட்டின் புஷ்பேக் பட்டனை அழுத்தி, நன்றாக சாய்த்து படுத்துக்கொண்டே ,தன் கைப்பையில் இருந்து ஒரு ஜெம்ஸ் ஹட்லி சேஸ் நாவலை பிரித்து படிக்க ஆரம்பித்தாள். ஒரு சில பக்கங்களை புரட்டியவளுக்கு அதற்கு மேலும் எதோ மனம் ஈடுபாடுகொள்ளவில்லை,
மனம் என்னவோ கார்த்தியை சுற்றியே வட்டமிட்டது, அதுவும் சற்று முன் பார்த்த படத்தில் வரும் கியாஸ் தியரி, தன்னுடைய வாழ்க்கையிலும் நடைபெறுகிறதோ என்று அவளுக்கு தோன்றியது. புதுச்சேரியில் பிறந்த எனக்கும், கார்த்திக்கும் எப்படி ஒரு நட்பு தொன்றியது, அது நட்பு தானா இல்லை காதலா, எப்படி எனக்கு அவன் மேல் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது...


பஸ்ஸின் ஹாரன் சத்தம் பலமாக கேட்க.... என்வென்று தலையை ஜன்னலின் வழியே எட்டி பார்க்க... பஸ்ஸோ தாம்பரத்தைத் தாண்டிக் கொண்டு இருந்தது ..

கார்த்திக்கை பிரிந்து ஒரு மணி நேரம் கூட ஆகவில்லை, ஏனோ நீண்ட நாள் பிரிந்தது போல அவளுக்கு தோன்றவே...
செல்பேசியை எடுத்தவள், அவனுக்கு போன் செய்ய வேண்டும் போல தோன்றியது... பட்டன் அழுத்த நினைத்தவள், மறுகணம் செல்போன் அலறவே.. அவன் தான்... இப்பொழுதானே நினைத்தேன்... அவனுக்கு என் நினைப்புதானா.. என்ன ஒரு ஒற்றுமை... இரண்டு பேருக்கும் மன அலைவரிசை ஒரே மாதிரி இருப்பதை நினைத்து வியந்தவளாய்...

'என்னடா... கார்த்தி...'
'சும்மாதான்... தூங்கிட்டியா ... இல்ல.. முழிச்சிட்டு இருக்கியான்னு செக் பண்ண போன் பண்ணேன்.. '
'நா என்ன சின்ன பொண்ணா.. ஹாய்.. அதுக்கா... போன் பண்ண....உண்மையைச் சொல்லு...'

'கீர்த்தனா.. உன்ன அனுபிச்சேனே தவிர... எனக்கு அடுத்த பஸ் பிடிச்சி.. புதுச்சேரி வரலாம்னு தோணுது...'
'ஏன்டா.. அப்படி எல்லாம் வந்திடப்போரே..'
'என்னமோ தெரியல...உன்ன பிரிஞ்சு இருக்கவே மனசு கஷ்டமா இருக்கு'
'ரெண்டு நாள் தானேடா.... அப்புறம் தான் மீட் பண்ண போறோமே..'
அவள் அப்படி சொல்லிவிட்டாலும், தனக்கும் அவனை பிரிந்து இருப்பதை நினைக்கவே மனம் விரும்பவில்லை...
'ஐ லவ் யு ... கீர்த்தனா...'
'மீ டூடா..'
போனை கட் செய்தாள்... பஸ் வேகமாக சென்று கொண்டிருக்க.... புதுச்சேரியில் தனக்காக ஒரு அதிர்ச்சியான செய்தி காத்திருக்கும் என்பதை அறியாமலே....


'உங்கள் கருத்துரைகளை மறக்காமல் அளிக்கவும்...அன்பன்...ரிஷ்வன் 9884756780..mailto:sureshteen@gmail.com )

rishvan
28-12-2012, 03:10 AM
கீர்த்தனா-என் தோழி, என் காதலி, என் மனைவி(2)
************************************************
நினையாத தருணத்தில்
என் நினைவாக
உன் கைபேசி
அழைப்பில் தெரிந்தது...
நனையாத உன்நெஞ்சில்
காதல் மழை
தூறல் விட்டதை...!
- ரிஷ்வன்
******************************************************
கீர்த்தனா ஜன்னலின் கண்ணாடியை தனக்கு தேவையான அளவு காற்று வருமாறு விலக்கி, வெளியில் மரங்களும், மனிதர்களும் அத்தனை ஜீவராசிகளும் வேகமாக பின்னோக்கி செல்வதை ரசித்து, காற்றை முகத்தில் வாங்கியபடி லேசாக கண்ணை மூட... அவளை அறியாமலே தூக்கம் அவள் கண்களில் ஒட்டிக்கொண்டது..

அதே சமயம்...

கார்த்திக் .. கீர்த்தனாவைப் பஸ்ஸில் ஏற்றிவிட்டு, தன் வீட்டை நோக்கிச் சென்றான்.. எதோ ஒன்றை தொலைத்து விட்டதைப் போலவும், ஜெனி தன்னை ஏமாற்றியதைப் போல இவளும் செய்து விடுவாளோ... இன்னும் சிறிது நேரம் அவள் கூட இருந்திக்கலாமோ...அல்லது ரம்யா சொன்னது போல....

'இது... ஜஸ்ட் டைம் பாஸ் கார்த்திக்.. இத போய் ..காதல் கத்தரிக்காயின்னு போட்டு கொழப்பிக்காத... நம்ம பிரண்ட்ஸாவே இருப்போமே..' என்று சொன்னது போல கீர்த்தனாவும் கடைசில் சொல்லிவிடுவாளோ...

மனம் ஒரு குரங்கு தான்.. அதிலும் பெண்களின் மனமோ... பொல்லாத கருங்குரங்கு... எந்த நேரத்தில் தாவுமோ.. என்பதை அவளைப் படைத்த ஆண்டவனாலும் அறிய முடியாது என்பதை உலகமே அறியும்.. தன் மனம் பலவாறு சிந்திக்க.. பைக் அவன் வீட்டின் காம்பௌண்டை அடைந்தது ..

வீட்டின் கார் பார்க்கிங்கில்... அப்பாவின் கார் நின்றிருந்தது... அப்பா வீட்டுக்கு வந்து விட்டதை அது அவனுக்கு உணர்த்தியது. அப்பாவின் மேல் அவனுக்கு மரியாதை கலந்த ஒரு பயம் இருந்து வந்தது.

வாழ்க்கையில் தனி ஒருவனாக போராடி, சாதாரண நிலையில் இருந்து, கடுமையாக உழைத்து, இன்று ஒரு கம்பெனியை திறம் பட நடத்தி வருகிறார் என்றால், அதுவே அவரின் கடும் உழைப்புக்கு சாட்சி.

தான் ஆசைப்பட்டத்தை எல்லாம் நிறைவேற்றி தருவதில் அவருக்கு நிகர் அவரே.. விருப்பபட்ட படிப்பு, பைக், தனி அறையில் தனக்கென்று எல்இடி டிவி., உயர்ரக லேப்டாப்.. லேட்டஸ்ட் மொபைல் போன்... இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

வேலைக்கு போகும் வரையில், அப்பாவின் அருமை எல்லாம் அவ்வளவாக தெரியவில்லை, விளையாட்டுத் தனமாகவே சென்றுவிட்டது.

அப்பாவுக்கு சிறு வயதில் ஒரு ஆசை உண்டு, ஏனோ அப்போதைய பொருளாதார நிலையில் அவரால், அதை நிறைவேற்ற இயலவில்லை. அது வேறோன்றும் இல்லை, வெளிநாட்டிற்குச் சென்று எம்பிஏ படிக்கவேண்டும், அதுவும் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் யுனிவெர்சிட்டியில் தான் படிக்க வேண்டும் என்ற ஆசை கடைசி வரையில் நிறைவேறவே இல்லை, அந்த குறை அவருக்கு எப்பொழுதும் உண்டு, அதை தன்னிடம் அடிக்கடி கூறி,

'கார்த்தி... நீயாவது என் ஆசையை நிறைவேற்றுவாயா .. '

என்பதன் விளைவே தன் மேல்படிப்பு பயணம், அதுவும் பல வருட போராட்டத்திற்குப் பின் டோபெல் மற்றும் கேட் தேர்வை எல்லாம் எழுதி தேர்ச்சி பெற்று, அதன் மூலம்...அப்பாவின் ஆசைப்படியே கடும் முயற்ச்சிகுப் பின் ஹார்வர்ட் யுனிவெர்சிட்டியில் எம்பிஏ சீட் இந்த வருடம் தான் கிடைத்ததாக ... அவனுக்கு இமெயிலில் கடிதம் வந்தது. அதுவும் ஒரு வாரத்திற்கு முன்பு தான்.. இன்னும் இதைப் பற்றி தன் நண்பர்கள் யாருக்கும் அவன் மூச்சு விடவில்லை... '

அப்பாவின் ஆசையை அவன் முதலில் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை, ஜெனியின் காதல் தோல்விக்கு பின்தான் வெளிநாட்டுப் படிப்புக்கு மிகவும் முக்கியத்துவம் தந்தான்...
கல்லூரியில் அவளுடன் ஒன்றாகவே படித்ததால், ஜெனியின் மேல் தன்னுடைய காதாலை மிகச் சுலபமாக கூறிவிட்டான். கல்லூரியின் மூன்றாம் வருடம் இறுதியில், ஜெனி, காம்பஸ் இண்டர்வியு மூலமாக வேலையை பெற்று விட.. தன்னால் வேலை வாங்க முடியாததை அடிக்கடி கூறி வெறுப்பேற்றுவாள்.. அவனுக்கு கொஞ்சம் அவள் மேல் வெறுப்பு ஏற்பட்டாலும்... காதல் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது...

கல்லூரி முடிந்தவுடன்... ஜெனி வேலைக்குச் சென்று விட, கார்த்தி வேலை கிடைக்காமல், கடும் போரட்டிற்க்குப் பிறகு, ஒரு சிறிய கம்பெனியில் வேலை கிடைக்க..

ஒரு நாள் ஜெனியை சந்தித்தான்.. தன் காதலை தொடர விரும்ப...
'இதோ பார் ... கார்த்தி... நான் இந்த கம்பெனியல இப்ப.. ப்ராஜெக்ட் லீடரா இருக்கேன்...நீயோ இன்னும் ப்ரோக்ராமராதான் இருக்க... ஒரு வருஷம் போனா. நான் மேனேஜர் ஆகிவிடுவேன்... நீ அப்பவும் இப்படியே இருப்பே...அதனாலா தான் சொல்றேன்.. உனக்கு எனக்கும் சரிப்பட்டு வராது... என்ன மறந்திடு...'

'என்ன ஜென்னி.. இப்படி சொல்ற.. கேவலம் பணமும், பதவியும், அந்தஸ்த்தும் பார்த்தா நாம காதலிச்சோம்... '

'அப்ப . ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்துல.. அனுபவமில்லாம எடுத்த தவறான முடிவு அதுன்னு எனக்கு தோணுது.. யோசிச்சு பார்த்த... இப்ப இது தான் எனக்கு முக்கியமா தெரியுது... '

'கடைசியா.. என்னதான் சொல்ல வர..'

'கார்த்தி... ப்ளீஸ் திருப்பி திருப்பி என்னால சொல்ல முடியாது.. என்ன மறந்திடு.... குட் பை...'

அப்பொழுதே அவனுக்கு பெண்களின் ஒரு வித வெறுப்பு ஏற்பட்டது உண்மை தான்.. 'ச்சே.. கேவலம்..பணமும்.. பதவியும் கூட காதலில் தோல்விக்கு காரணமாக இருக்கிறதே..மனம் வெறுத்து போய் .. அடுத்து இரண்டு நாட்களுக்கு ஆபீஸ் லீவ் போட்டு விட்டு... பைத்தியம் பிடித்தவன் போல... நண்பர்களுடன் நேரத்தை செலவிட..அப்பொழுதான் முடிவு செய்தான்... தான் மேலும் படித்து ஜெனியை விட பெரிய அளவுக்கு வளரவேண்டும் என்பதே...

பைக்கை காரின் ஓரத்தில் நிறுத்திவிட்டு.. காலிங் பெல்லை அடிக்க... அம்மாதான் கதவைத் திறந்தார்..

'ஏண்டா.. இவ்வளவு நேரம்.. அப்பா வேற சீக்கிரம் வந்திட்டார்.. உனக்காக சாப்டாம்மா வெயிட் பண்ணிட்டு இருக்கார்..'

'ஆபீஸ் கொஞ்சம் வேலம்மா...முடிச்சி கொடுத்திட்டு வந்தேன்... அதான் லேட்டு..' அது என்னமோ தெரியவில்லை.. காதலில் விழுந்தாலே கள்ளத் தனமும் தன்னால் வந்து விடுகிறது.. நேராக தன் அறைக்குச் சென்றவனை... அப்பாவின் அழைப்பு நிறுத்தியது..

'கார்த்தி... எத்தன வாட்டி சொல்றது... பைக் ஓட்டும் போது...செல்போன் பேசதேன்னு...'

'இல்லப்பா.. நான் எப்பவும் ஓரமா நிறுத்திட்டு தான் பேசுவேன்..'

'பொய் சொல்லாதடா... நான் காரில் இருந்து பார்த்தேனே...'

சரியாக மாட்டிக்கொண்டதை அப்பொழுதான் உணர்ந்தான்.. இனிமேல் பொய் சொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை...

'சாரிப்பா... '

'என்னங்க... பையன் கிட்ட...கோர்ட்ல கேள்வி கேக்கறமாதி கேக்கறிங்க...'

அம்மா... எனக்கு ஆதரவாகப் பேச..

'நானே நேர்ல பார்த்தேன்... அதனாலதானே கேக்கறேன்..'

'ஏம்ப்பா.. அப்பா சொல்றது உண்மையா.. . எங்களுக்கு நீயோ.. கரிவேப்பில கொத்து மாதிரி... ஒண்ணே ஒண்ணு ... கண்ணே.. கண்ணுன்னு இருக்க... பைக்கில ஓட்டும் பொது அப்படியெல்லாம் பேசாதப்ப.. '

அம்மா அக்கறையோடு சொல்ல... 'இனிமே போன் வந்தா.. ஒண்ணு அப்புறம் பேசு.. இல்லன்ன.. வண்டியை ஓரமா நிறுத்தி பேசிட்டு.. அப்புறமா ஒட்டு...நான் சொல்றது உனக்கு கஷ்டமா தான் இருக்கும்.. உன் நல்லதுக்கு தான் சொல்றேன்...அப்புறம் யுஸ் காலேஜ் அட்மிஷன் என்னாச்சி..'

'யுஸ் விசா வாங்க அப்பாயின்மென்ட் வாங்கிட்டேன்ப்பா ... அடுத்த மாசம் அஞ்சாம் தேதி கிடைச்சிருக்கு...'

'அப்படியா.. சரி.. இப்பவே அங்க இருக்கிற விஷயத்தை எல்லாம் தெரிஞ்சிக்கோ... என்ன..'

'ஏன் தான்.. பையன கடல் கடந்து போய் படிக்கச் சொல்றீங்களோ.. எனக்கு புரியல.. சின்ன வயசிலிருந்தே... ஹாஸ்டல் இருந்து படிச்சிருக்கான்...
இப்பத்தான்.. கொஞ்ச நாளா தான் நம்ம கூட இருந்து வேலைக்கு போயிட்டு இருக்கான்.. அவன அனுப்பறதிலே குறியா இருக்கீங்களே.. '

'எனக்கு மட்டும் அவன் நம்ம கூட இருக்கனும்னு ஆசை தான்.. இந்த டிகிரி மட்டும் படிச்சிட்டானா ...அப்புறம் ... என்னோட கம்பெனிய அவன் கிட்ட ஒப்படைச்சிட்டு.. நான்.. நிம்மதியா ரெஸ்ட் எடுக்கலாம்னு தான்.. அப்புறம்.. காலம் பூர நம்ம கூடத்தானே இருக்கப்போறான்..'

'என்னமோ போங்க... இபப படிச்சதே.. போதாதா...உங்க கம்பெனிய கவனிக்கறதுக்கு... நீங்க எல்லாம் அங்க போய் படிச்சிட்டு தான்... கம்பெனிய நடத்துறீங்களா..'

'தனம்.... என் காலம் வேற.... இவன் காலம் வேற... நான் ரொம்ப கஷ்டப்பட்டு... கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி.. இந்த நிலைக்கு வந்தேன்.. இது போட்டி உலகம்... அவன் பல விஷயம் தெரிஞ்சா தான் கம்பெனிய நடத்த முடியும்... அதுவும் இல்லாமா இது என் தனிப்பட்ட ஆசை...நமக்கும் பெருமை தானே...'

'சரி.. சரி... எனக்கு எதுவும் புரியல... கார்த்தி... நீ போய் டிரஸ் மாத்திட்டு வாப்பா.. சாப்பிடலாம்..'

ஜன்னலின் காற்று, லேசாக குளிர.. கீர்த்தனா கண் திறந்து வெளியே பார்க்க.. பூமியை இருட்டு மொத்தமாய் குத்தகை எடுத்து முழுவதும் வியாபித்து இருந்தது...மரங்களின் குளிருக்கு.. நிலவு ஒளியை போர்வையாய் மூடுவதாக நினைத்து கொண்டு... கிளைகளிலும், இலைகளிலும் மறைந்து மறைந்து கண்ணா மூச்சிக் காட்டிக் கொண்டிருக்க...கைக்கடிகாரத்தில் மணியைப் பார்த்தாள் .. ஒன்பது ஆகிருந்தது... சாலை ஓரத்தில் இருந்த பதாகையில்.. திண்டிவனம்... பத்து கிலோமீட்டர் என்று இருக்க..இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் வீட்டிற்குள் இருக்கலாம்..மனம் சந்தோசத்தில் குதியாட்டம் போட...

அவளுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது...சினிமா தியேட்டரில் பாப்கார்ன் சாப்பிட்டதோடு சரி.. தன் கைப்பையில் எப்பொழுதும் சாக்லட் வைத்திருப்பவள்.. அதையும் சாப்பிட்டு விட்டோமோ.. எதாவது இருக்கிறதா என்று பையின் எல்லா ஜிப்புகளிலும் பார்க்க... ஒரே ஒரு பைவ்ஸ்டார் சாக்லட் இருந்ததது...

நல்ல வேலை... புதுச்சேரி வரைக்கும் இது தாங்கும்...என்றவள் அதனை பிரித்து... வாயில் கொண்டு செல்லும் பொது...கார்த்தியின் முதல் சந்திப்பு ஒரு சாக்லட்டால் தானே வந்தது என்பதை நினைவு கூர்ந்து... தனக்குள் சிரித்து கொண்டாள்.

மூன்று மாதத்திற்கு முன், கீர்த்தனா தன்னுடைய பிறந்த நாளின் போது..

ஒரு சாக்லட் பாக்ஸ்சை எடுத்துக்கொண்டு எல்லோருக்கும் கொடுத்து கொண்டிருக்க...பதிலுக்கு அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல ..
கார்த்தியின் முறை வர.. அவளை ஏற இறங்க பார்த்தான், ஒரு தேவதை போல இருந்தாள், கோயில் தேர் ஆடி ஆடி அசைந்து எதிரில் வருவது போல அவன் எதிரில் அவள் வர.. அவளை கண்ட பொழுதில் தன்னை மறந்து.. வாழ்த்து அட்டையில் பின்வருமாறு எழுதிக் கொடுத்தான்...

'மூர்த்தி குறைந்தாலும்
கீர்த்தி பெற்று - வாழ்வில்
பூர்த்தி அடைந்து
பூர்ண ஆரோக்கியத்துடன் வாழ
கீர்த்தனாவுக்கு என்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...'

''அட பார்டா... என்ன ரைமிங்கா எழுதி இருக்கீங்க. ரொம்ப தேங்க்ஸ்... நீங்க கவிதை எல்லாம் சொல்விங்களா...'

'இது கவிதை இல்ல கீர்த்தனா.. ஒரு பழமொழி.. அத கொஞ்சம் மாத்தி உனக்காகச் சொன்னேன்.'

'அது என்ன ..மூர்த்தி..கீர்த்தி....புரியலையே..'

'அது தெரியாதா.. தெரியாத வரைக்கும் சந்தோசம்...'

'சொன்னாதானே... என்னால ரசிக்க முடியும்....'

'கீர்த்தின்ன புகழ்..'

'ஒ... அப்புறம்.. மூர்த்தினா..'

'அது எதுக்கு ... விடுங்க...'

'சும்மா சொல்லுங்க... தெரிஞ்சிக்கலாம்...;

'சொன்னதக்கு அப்புறம்...கோவப்படக் கூடாது... .'

'பரவாயில்ல... என்ன பத்தி சொல்லிட்டு... அத தெரிஞ்சிக்காம போகமாட்டேன்...'

'மூர்த்தினா.. உருவம்..உயரம் அப்படின்னு...'

'ஒ... சந்ததி சாக்குல .. நான் குள்ளமா இருக்கிறேன்னு சொல்லீட்டிங்களா.. .. பரவாயில்ல... உங்க கவிதைக்கும் வாழ்த்துக்கும் என்னோட நன்றி கவிஞரே'

அவளும் தன் பங்கிற்கு அவனை கிண்டல் செய்தாள்
'யு ஆர் வெல்கம்...'

'எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா..'

'என்ன சொல்லுங்க.. செய்யறேன்...

'என்ன பத்தி...ஒரு நாலு வரி கவிதை எழதி சொல்லுங்களேன்..'

'ஐயோ.. எனக்கு கவிதை எல்லாம் வராதுங்க..'

'எனக்கு கவிதையின்னா ரொம்ப பிடிக்கும்... உங்களுக்கு என்ன தோணுதோ.. என்னபத்தி...அதச்சொல்லுங்களேன்... ரொம்ப அவசரமில்ல.. நின்னு நிதானமா சொன்னா போதும்'

'ட்ரை பண்றேன்...'

சொல்லிவிட்டனே ஒழிய... இதற்கு முன் கவிதை எல்லாம் எழுதிய முன் அனுபவம் எதுவும் அவனுக்கு இல்லை..

அன்று வீடு திரும்பும் பொது... மறக்காமல்.. திநகர் சென்று ... பல புத்தக கடையெல்லாம் ஏறி இறங்கி... வைரமுத்து...நா.முத்துக்குமார்.. பா.விஜய். கவிதை தொகுப்புகளை வாங்கி வீட்டிற்க்குச் சென்றான்..

கீர்த்தனா . ஆசையாய் கேட்டாளா.. சும்மா என்னை வெறுப்பேற்ற கேட்டாளா.. . உண்மையில் என் மீது ஏற்பட்ட நல்ல அபிமானத்தால் கேட்டாளா.. ..அவள் அதை ரசித்து இருந்தால் தான்...அப்படி கேட்டிருக்க முடியும்...எதோ ஒன்று அவள் மனதில் தோன்றத்தான்... அப்படி கேட்டிருக்கவேண்டும் என்று அவன் உள்மனது கூறியது.. எப்படியாவது.. அவளை இம்ப்ரெஸ் செய்ய வேண்டும்...இது எனக்கு கிடைத்த ஒரு

நல்ல சந்தர்ப்பம் .. இதனை நழுவ விடக் கூடாது.. ரம்யாவுடன் பறி கொடுத்த காதலை... இவளிடமாவது மீட்டு விடவேண்டும்...பல யோசனைக்குப் பிறகு..

அன்றைய இரவு... அவனுக்கு தூக்கம் போய் விட்டது.. வாங்கி வந்து புத்தகங்களை எல்லாம் ஒன்று விடாமல் படித்தான்... எல்லாம நன்றாக இருந்தது... எல்லாவற்றையும் அவர்களே எழுதி விட்டார்களோ என்று என்னும் படியாக ... அனைத்து விஷயங்களையும் அழகாக எழுதி இருந்தார்கள்..

தனக்கு என்று புதிதாக ஒன்றுமே தோன்றவில்லை... கவிதை எழுதுவதென்பது .. கடையில் சென்று கத்தரிக்காய் வாங்கி வருகிற காரியமா என்ன .. .விலை கொடுத்து வாங்க....அது ஒரு கலை.. அது அனைவருக்கும் வாய்க்குமா ...

அவ்வளவு சீக்கிரம் அவனுக்கு கை கொடுக்கவில்லை... பேப்பர் எழுதி எழுதி பார்த்தான் . எதுவும் பிடிபடவில்லை... பேசாமல்.. அவர்கள் எழுதிய கவிதை ஒன்றை கொடுத்து தனது கவிதை என்று கூறிவிடலாமா என்று யோசித்தான்...

அதெப்படி முடியும்... அவள் தன்னைப்பற்றி தானே எழுத கேட்டாள்... அவள் அழகை நான் தானே நேரில் பார்த்து இருக்கிறேன். ..

எப்படி எழுதுவது... மனமும்... கண்ணும் தூங்க மறுத்தது...கையும் பேணவும் எழுத மறுத்தது.. அவளைப் பற்றி என்ன கூறுவது... என்ன எழுதுவது..

இது எனக்கு கிடைத்த ஒரு நல்ல சந்தர்ப்பம்...இந்த கவிதையின் மூலம்.. அவளைப் பற்றியும்...தான் அவள் மேல் பிரியப் படுவதையும் மறைமுகமாக வெளிப்படுத்த வேண்டும்...

முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை... இரண்டு நாள் கடும் முயற்சிக்கு பின்... எதோ தனக்கு தோன்றியதை கிறுக்கினான்....


அந்த கவிதையை . ..எப்படி அவளிடம் காண்பிப்பது.. நானே பொய் சொன்னால்.. என்னைப் பற்றி என்ன நினைப்பாள்..

' ரொம்பாத்தான்.. அலையாறான்...' அப்படி நினைத்து கொண்டாள் என்ன செய்வது...

அடுத்து இரண்டு நாட்கள் . ஆபீஸ்ஸில் அவளை பார்க்கும் சந்தர்ப்பமும் குறைவு.. மேலும்.. கீர்த்தனா அவனைக் கண்டு கொண்டதாகவும் தோன்றவில்லை...

இரண்டு நாள் கழித்து காண்டீனில்.. 'சாரி.. கார்த்திக்... ரெண்டு நாளா ஆடிட்டிங் வொர்க் இருந்துச்சி..வீட்ல இருந்து கெளம்பும்போது... உன்கிட்ட கேட்ட கவிதையை கேக்கணும் நினைப்பேன்... ஆன பாரு... ஆபீஸ் வந்தப்புறம்.. இருக்கிற வேலையில... எல்லாத்தையும் மறந்திடுவேன்..'

'அதுக்கென்ன... கீர்த்தனா... இப்பவாவது கேட்டிங்களே.. '

'என்னப்பா.. ரொம்ப பீல் பண்றயா.. ..'

'அதெல்லாம் ஒன்னுமில்ல ...பாவம்... உங்களுக்கு .. வேல டென்ஷன் மறந்திருப்பீங்க.. '.

'சரி.. சரி.. எங்க அந்த கவிதையை சொல்லுங்க பார்ப்போம். '

'உடனே எல்லாம் சொல்லமுடியாது.... அப்புறம் படிச்சிட்டு என்ன கேலி பண்ண ஆரம்பிச்சுடுவிங்க..'

'அதெல்லாம் பண்ண மாட்டேன்... சும்மா சொல்லுங்க '

'வேனும்மின்ன... ஒண்ணு செய்யறேன்... உங்களோட மெயில் ஐடிக்கு அந்த கவிதையை அனுப்பறேன்.. படிச்சிட்டு.. அப்புறம் உங்களோட பதிலா சொன்னாப் போதும்.. ''

'டன்..' என்றாள்...

சொன்னமாதிரியே.. அந்த கவிதையை... அவளுக்கு அனுப்பிவிட்டு...அவள் பதிலுக்காக காத்திருந்தான்... ஒரு நாள் சென்றது... இரண்டு நாள் சென்றது.. பதிலே இல்லை.... ஒரு வேலை தப்பாக எழுவிட்டோமோ...இல்லை... அதில் என்னுடைய விருப்பத்தையும் நாசுக்காகச் சொன்னதை.. தப்பாக எடுத்க்கொண்டாலோ... அவ்வளவு தான்... தன்னுடைய இந்த முயற்ச்சியும் தோல்வி அடைந்ததை எண்ணி தன்னையே நொந்து கொண்டான்..

இப்படி நினத்துக் கொண்டிருந்த சமயம்.. கீர்த்தனாவிடமிருந்து ஒரு மெயில் வந்தது.. ..அந்த மெயிலில்...

---- Continue

ஜான்
28-12-2012, 01:45 PM
இரண்டு அத்தியாயங்களிலும் விரவிச் செல்லும் கவிதைகள் அருமை

கதை தொடரட்டும்

rishvan
31-12-2012, 07:32 AM
கீர்த்தனா-என் தோழி, என் காதலி, என் மனைவி - பாகம் - 3
*************************
அன்று...........
ஆதாம்
ஏவாள்
ஆப்பிள்
இன்று..........
அவன்
அவள்
அல்வா
- ரிஷ்வன்
**************************
கார்த்தி அனுப்பிய மெயிலில் இருந்த அந்த கவிதையினை பலமுறைப் படித்தாள் கீர்த்தனா.. அந்த கவிதை..

கண்கள் இரண்டும் கருவண்டு - உன்
கன்னம் இரண்டும் மதுக் கிண்ணம்
வண்ணம் சிறிதே குறைந்தாலும் - உன்
வனப்பு காண்போர் மதி இழுக்கும்
எண்ணம் ஏற்றம் கொண்டவள் நீ
எல்லோர் மனதிலும் நின்றவள் நீ
உண்மை சொல்லும் எனக்கும் - உன்
உளத்தில் கொஞ்சம் இடம் வேண்டும்.

மீண்டும் மீண்டும் படிக்க... அந்த கவிதையின் ஒவ்வொரு வரியிலும் கார்த்தி தன்னைப் பற்றி மிக அழகாகவே வர்ணித்து இருந்ததை ரசித்தவள.. உடனே அவனுடன் பேச மனம் ஒப்பினாலும்.. அந்த கடைசி இரண்டு வரிகள்..அவளை அவனிடன் பேச தயக்கம் காட்டியது.
'உண்மை சொல்லும் எனக்கும்...உன் உளத்தில் கொஞ்சம் இடம் வேண்டும்.' இதனை எந்த அர்த்தத்தில் அவன் சொல்லி இருக்கிறான்.. வெறும் நட்பாக எடுத்துக் கொள்ளலாமா . இல்லை... அவன் தன்னை விரும்புகிறான் என்று வைத்து கொள்ளலாமா எப்படி தெரிந்து கொள்வது ... மிகவும் குழம்பித்தான் போனாள்.
தான் அறிந்த வகையில்... கார்த்திக் ஒரு நல்ல பையன் என்றே பலரும் அவளிடம் கூறியுள்ளனர்.. ஏற்கனவே.. ஒரு பெண்ணிடம் காதல் தோல்வி ஏற்ப்பட்டதைத் தவிர.. மற்றபடி அவன் கெட்டவனும் இல்லை. எந்த கெட்ட பழக்கமும் கொண்டவும் இல்லை.. நல்ல கலகலப்பாக பேசக் கூடியவன் தான்.. அதைத்தவிர.. தவறு எதுவும் செய்ததாக யாரும் அவளிடம் கூறியதில்லை.

மேலும்.. ஒரு முறை அவன் அவளுக்கு உதவி உள்ளான்..அது நடந்தது... . கார்த்தியுடன் அதிகம் அறிமுகம் இல்லாத சமயத்தில்..

ஒரு நாள் அவளுடைய ஸ்கூட்டி வழியில் நிற்க... சிறிது தூரம் நடந்தே தள்ளிக் கொண்டு வந்த சமயம்... கார்த்தி அந்த வழியே பைக்கில் சென்றவன்..

'ஹலோ... நீங்க கீர்த்தனா தானே...'

'எஸ்...'

'நான் கார்த்தி... நீங்க வொர்க் பண்ற கம்பெனியில தான் வொர்க் பண்றேன்..'

'ஒ.. அப்படியா..

'என்ன ப்ராப்ளெம் வண்டியில..'

'என்ன மெக்கானிக்கல் ப்ராப்ளன்னு தெரியல ...'

பைக்கை விட்டு இறங்கியவன், தனக்கு தெரிந்த அளவுக்கு என்ன என்று பார்க்க பெட்ரோல் இல்லாமல் இருந்தது...

'வண்டியில பெட்ரோல் இல்லீங்க..'

'வரும் பொது பெட்ரோல் போடனும்னு நெனெச்சேன்.. மறந்திட்டேன்... அடுத்த பெட்ரோல் பங்க் எவ்வளவு தூரம் இருக்கு...'

'அவ்வளவு தூரம் தள்ளிட்டா வரப்போறிங்க..'

உடனே... தன்னுடன் கொண்டு வந்த வாட்டர் பாட்டில் உள்ள தண்ணீரை முழுவதும் கீழே கொட்டி.. பைக்கை துடைக்கும் துணியால் சுத்தம் செய்து..
தன்னுடைய பைக்கில் இருந்து பெட்ரோல் எடுத்து.. அவளுடைய வண்டியில் ஊற்றி .. வண்டியை ஸ்டார்ட் செய்து கொடுத்ததை அவள் இன்றும் மறக்கவில்லை..


அப்பொழுதிலிருந்தே அவனைப் பற்றி.. மற்றவர்களிடமிருந்து தகவல்களை சேகரிக்க ஆரம்பித்தாள்..

உடனே பதில் அளிக்கலாமா.. ஓரிரு நாள் மறைமுகமாக கவனித்து... கொஞ்சம் பொறுத்து.. அவன் என் பதிலை எதிர்பாற்கிறானா என்பதனை அறிந்து பதில் சொல்லலாம் என்று நினைத்து தான்.. உடனே பதில் அளிக்கவில்லை..

அதுவும் கடந்த இரண்டு நாட்களாக.. அவன் தன்னுடைய இருப்பிடத்திற்கு பல முறை வருவதும்.. போவதும்.. அவள் கவனத்தை ஈர்ப்பதற்கு பல முறை முயற்சித்ததையும் .. அவள் கவனித்துக் கொண்டு.. தன் வேலையில் மும்முரமாய் இருப்பதாய் தன்னை காட்டிக் கொண்டாள். சில சமயம் கார்த்தியை பார்ப்பதற்கு பாவமாய் தான் இருந்தது.. இதற்கு மேல் அவனை வெறுப்பேற்றுவது நல்லது அல்ல என்று தான்.. இன்று பதில் மெயில் அனுப்பி வைத்தாள்.

அந்த மெயிலில்..

'கார்த்தி... கவிதை நல்லா இருக்கு... ரொம்ப அழகாகவே என்ன வர்ணிச்சி இருக்கீங்க.. நான் கேட்டதற்காக எழுதி அனுப்பியதற்கு நன்றி...முடிந்தால் மாலை ஐந்து மணிக்கு காண்டீனில் சந்திக்கலாம்.. நட்புடன்... கீர்த்தனா '

மெயில் படித்ததிலிருந்து கார்த்திக்கு தலை கால் புரியவில்லை.. அவன் மனம் வானத்திற்கும் பூமிக்குமாக துள்ளி குதித்தது..கீர்த்தனாவிற்காக காத்திருப்பதை விடுத்து...ஐந்து மணிக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.
ஒவொரு நிமிடமும் ஒரு யுகமாக அவனுக்கு கழிய, அந்த ஐந்து மணியும் ஆடி அசைந்து வந்தது.

காண்டீனில் அவள் வருகைக்காக கார்த்தி காத்திருக்க...மனம் அவளையே நினைக்க, பார்வை மட்டும் அவள் வருகையை எதிர்ப்பார்த்து இருக்க.. விண்ணிலிருந்து தோன்றும் முழு நிலவாய்.. அவன் கண்ணெதிரில் அவள் மின்னலென தோன்றினாள்..

'ஹாய்... கார்த்தி...ரொம்ப நேரம் வெயிட் பண்றீங்களா.. '



ஒரு வினாடி அவள் அழகில் தன்னை மறந்து, தன்னிலை இழந்து...

'ஆங்...என்ன சொன்னீங்க...'

'கார்த்தி... இந்த லோகத்திலே இல்லாம.. எங்க இருக்கீங்க.... ரொம்ப நேரம் வெயிட் பண்றீங்களான்னு கேட்டேன்...'

'இப்..இப்ப.. இப்ப தான் வந்தேன்... நீங்க எப்ப வந்தீங்க...'

பத்து நிமிடம் முன்னாடியே சீட்டை விட்டு கிளம்பியவன்.. எவ்வளவு அழகாகப் பொய் சொல்கிறான்.. அவனுடைய கண்களின் மெய்யையும் வார்த்தைகளில் பொய்யையையும் ரசித்தவளாய்..

'அப்புறம்... எப்படி இருக்கீங்க..'

'நல்லா இருக்கேன்.. என் கவிதை நல்லா இருந்ததுன்னு சொன்னதுக்கு நன்றி.. '

'என்ன பத்தி நல்லாவே சொல்லி இருக்கீங்க... அப்புறம்... சும்மா தானே எழுதினீங்க... இதுல உள்ளர்த்தம் எதுவும் இல்லையே..'

அவள் அந்த கடைசி இரண்டு வரியைத் தான் சொல்கிறாள் என்பதனை உணர்ந்தவன்..

'நீங்க கேட்டிங்க.. எழுதி கொடுத்தேன். .இதுல எந்த உள்ளர்த்தமும் இறக்கிறதா எனக்கு தெரியல.. '

'சும்மா மழுப்பாதிங்க கார்த்தி... தூங்கரவன கூட எழுப்பிடலாம்.. ஆனா... தூங்கற மாதிரி நடிக்கிறவன எழுப்ப முடியாது...'

'என்னன்னமோ பேசறிங்க..'

'நேரிடையாவே கேக்கறேன்.. உங்களுக்கு என்ன பிடிச்சிருக்கா..'

ஒரு கணம் ஆடிப் போய்விட்டான்... என்ன பதில் சொல்வது என்றே அவனுக்கு தெரியவில்லை. இப்படி திடுப் திடுப்பென்று கேட்பாள் என்று அவன் நினைத்து கூட பார்க்கவில்லை. பிடிச்சிருக்கு என்றால், எதாவது தப்பாக நினைத்து விடுவாளோ.. என்ன பதில் சொல்வது.. ஒரு நிமிடம் யோசனைக்குப் பிறகு..

'பிடிக்காம... பேசிட்டு இருப்பேனா.. இல்ல.. இங்கதான் வந்திருப்பேனா... எஸ்.. எனக்கு பிடிச்சிருக்கு...'

அவன் அப்படி பளிச் என்று கூறியது கீர்த்தானாவுக்குப் பிடித்திருந்தது.

சம்பிராதயமாக இருவரின் குடும்பம் பற்றி பேச.. கீர்த்தனாவுக்கு ஒரு அக்கா இருப்பதாகவும்... அவளுக்கு திருமணமாகி அமெரிக்காவிலே செட்டில் ஆகிவிட்டகவும்.. தான் மட்டும் அப்பா அம்மாவுக்கு செல்லப் பெண் என்றும்.. தான் ஆசைப்பட்டதை அப்பா எப்பொழுதும் தட்டியதில்லை என்றும் ... இப்படி பேச்சு சென்று கொண்டிருக்க..

கார்த்தியும் தன பங்கிற்க்கு தன் குடும்பத்தைப் பற்றி கூற... அப்படியே.. இருவருக்கும் பிடித்த படங்கள்.. உணவு .. இசை... விளையாட்டு... நடனம்.. புத்தகங்கள்... பிடித்த இடங்கள்.. என்று பலவாறு சுழன்று கொண்டே இருக்க..

'ஆமா.. நீங்க நல்ல ஜோக் சொல்வீங்கன்னு கேள்விபட்டேன்... சொல்லுங்களேன்..'

'இப்ப தானே பேச ஆரம்பிச்சி இருக்கோம்.. அடுத்த முறை சொல்றேனே..'

கீர்த்தனாவோ விடாப்டியாக அடம் பிடிக்க...

'சரி.. சரி... சொல்றேன்... எலியை புலி கூண்டில அடைக்கலாம்... புலிய எலி கூண்டுல அடைக்க முடியுமான்னு ஒருத்தன் இன்னோருத்தன கிட்ட கேட்டான்... அவனோ முடியாதுன்னு சொல்ல.. அவன் முடியும்னு சொல்லி அத நிரூபிச்சான்.. அதெப்படி.. '

'அதெப்படி முடியும்....'

'முடியும்...'

'அதெல்லாம் முடியாது.. எப்படின்னு சொல்லுங்களேன்..'

'தெரியுமா.. தெரியாதா...'

'தெரியாது...'

'ஏன்னா.. அவன் சொன்னதே.. குழம்பு வைக்கிற புளியத்தானே..'

'அப்பப்பா.. கடி தாங்கமுடியல...' என்றவள் வாய் விட்டு சிரித்தாள்..

அந்த முதல் சந்திப்பிலே.. அவர்கள் இருவரும் மிகவும் நெருங்கிய
நண்பர்களாகிவிட்டனர்.

பின்னர், படிப்படியாக அந்த, பார்க், பீச், சினிமா தியேட்டர், ஷாப்பிங்மால் என்று சுற்ற ஆரம்பிக்க...

அன்று விதைத்த அந்த நட்பு என்ற விதை . சிறிது சிறிதாக வேர் விட்டு...சில மாதங்களிலே காதல் என்ற மரமாக வளர்ந்து அவர்கள் இருவரின் மனதிலும் ஆணிவேராக வியாபித்து இருந்தது.

போங்க.. வாங்க என்று பன்மையில் ஆரம்பித்த நட்பு.. படிப்படியாக... போ...வா என்று ஒருமையாக மாறி. இறுதியில் போடா... வாட.. என்றளவுக்கு நட்பு தன் மரியாதையை இழந்து.. காதலுக்கு வழிவிட்டு.. காதலுக்கு மரியாதை செய்தது.
.
இரவு சாப்பாட்டை முடித்து.. தன் அறைக்குச் சென்ற கார்த்தி... கீர்த்தனா நினைவு தோன்ற.. அவளுக்கு போன் செய்யலாமா... வேண்டாமா என்று நினைத்தான். ஒரு வேலை வீட்டிற்க்குச் சென்றிருந்தால்... எதுக்கு இந்த விஷப்பரிட்சை என்று அப்போதைக்கு கைவிட்டான்.. ..

பின்னர் டிவி யை ஆன் செய்தான்..

ஒரு கோட் சூட், தங்க பிரேம் கண்ணாடி அணிந்த மனிதர், விலை வாசி உயர்வையையும், வறுமையையும் தனக்கு சம்பந்தம் இல்லாத மாதிரி பேசிக்கொண்டே இருந்தார்....

சானலை மாற்ற..

மற்றொரு சானலிலிலோ ஒரு ஐந்து வயது சிறுமி... தன் வயதுக்கும் அறிவுக்கும் சற்றும் பொருந்தாத.. 'கண்ணா தொறக்கணும் சாமி... கையை புடிக்கணும் சாமி... ' முக்கி முனகி பாட ... அதையும் சில பேர் ரசித்து கொண்டு இருந்தார்கள்....

'ச்சே... என்ன ஒரு முரண்பாடு.. ' சலித்துக் கொண்டே..

ஒவ்வொரு சானலையையும் மாற்றிக்கொண்டே இருக்க...ஏனோ தெரியவில்லை .. மனம் எதிலும் ஓட்ட மறுத்தது....அப்படியே படுத்தவன்....அயர்ந்து தூங்கிவிட்டான்.
புதுச்சேரி நெருங்க இன்னும் சில நிமிட நேரம் இருக்க...

கார்த்திக்கு போன் செய்யலாமா என்று கீர்த்தனாவுக்கு தோன்ற.. அவன் வீட்டில் வேறு யாரவது எடுத்து விட்டால்..

இரண்டு வாரங்களுக்கு முன்னால் ... அவள் போன் செய்ய..

எடுத்ததோ... கார்த்தியின் அம்மா..அது கார்த்திக் என்று நினைத்து..

'ஏண்டா.. அறிவு கெட்டவனே... உனக்காக எவ்வளவு நேரம் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.. வெயிட் பண்றேன்னு சொன்னத மறந்திட்டு போயிட்டியா...இப்ப எங்க இருக்கேன்னு சொல்லு.. வந்து பாக்கறேன்...'

நான் பாட்டுக்கு பேச... மறுமுனையில்..

'யாரும்மா... நானே.. என் பையனை அவன் இவன்னு சொல்றது கிடையாது... நீ பாட்டுக்கு பேசறியே..'

'ஒ... சாரி...ராங் நம்பர்... ''

'யாரு கிட்ட பேசரோம்ன்னு தெரியாம.. எடுத்த எடுப்பிலே இப்படியா பேசறது...நல்ல பொண்ணும்மா நீ..'

பட் என்று போனை வைத்து விட்டாள் . நல்ல காலம்.. நான் கார்த்தி பெயரையே சொல்லவில்லை..

பின்னர் நடந்ததை கார்த்தியிடம் கூற..அன்று முழுவதும் அதைச் சொல்லிச் சொல்லி சிரித்து.. அவளுக்கு வயிரு புண்ணாகிவிட்டது.

பஸ் நிலையம் நெருங்க.. பஸ்ஸை விட்டு கீழே இறங்கியவள்.. எப்பொழுதும் தன்னை அழைத்து போக அப்பா வருவார் என்று எதிர்ப்பார்க்க ...ஆனால் இன்றோ.. அம்மாவைப் பார்த்தும் அவள் மனதில் என்னென்னமோ தோன்றியது.. அதுவும் அம்மாவின் கலை இழந்த தோற்றமும்... அழுது வீங்கிய முகமும்.. அவளுக்கு கலக்கத்தை உண்டு பண்ணி... எதோ விபரீதம் நடந்திருப்பதை அவளுக்கு உணர்த்தியது..

***** continue...

rishvan
02-01-2013, 04:07 AM
கீர்த்தனா-என் தோழி, என் காதலி, என் மனைவி(4)

***********************************************
கோவில்
தேர்வலம் வீதிவர
ஊர்கூடி இழுக்கிறது
நீ
வீதி வந்து
ஊர் மக்களை
தேர்வடமாய் இழுக்கிறாய்...!
-ரிஷ்வன்
********************************************
அம்மாவைப் பார்த்ததுமே கீர்த்தனாவுக்கு ஒன்றும் புரியவில்லை, அதுவும் அந்த இரவில் அம்மா, அப்பா இல்லாமல் தனியாக வந்திருக்கிறார் என்றால் எதோ மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கவேண்டும்.

'என்னம்மா.. ஆச்சரியமா இருக்கு.. நீங்க போய் இந்த நேரத்தில பஸ் ஸ்டாண்ட் வந்திருக்கீங்க... அப்பா எங்கே.. முகம் எல்லாம் அழுத வீங்கின மாதிரி இருக்கு.. அப்பாவுக்கு என்னாச்சு சொல்லும்மா...'

'ஒரு அர்ஜென்ட் வேலை... டெல்லியில் இருந்து விஐபி வந்திருக்காங்களாம்.. அதனால வீட்டுக்கு வர லேட் ஆகும்னு . என்ன அனுப்பி வச்சார்... '

'இல்லம்மா என் கிட்ட நீங்க என்னமோ மறைக்கறீங்க ... என்னன்னு சொல்லும்மா..'

'ஏம்மா.. நான் சொன்னா நம்பமாட்டியா.. வேணுமின்னா... நம்ம கார் டிரைவர் வேலுவ கேட்டுக்கோ..'

'வேலு.. நீ சொல்லு... அப்பா எங்க..'

'ஐய்யா... இன்னும் ஆபீசில் இருந்து வரலம்மா...எங்கிட்ட... காரை எடுத்து வீட்டுக்கு போய் ...அம்மாவை அழைச்சிட்டு.. உங்கள பிக் அப் பண்ண சொன்னார்...'

'அம்மா... ஏற்கனவே சொல்லி வச்சதா.. அப்படியா ஒப்பிக்கிரியா...'

'இல்லம்மா.. சத்தியமா இதெல்லாம் உண்மை தான்... '

'கீர்த்தனா.. எதுக்கு... வேலுவ போய் கோவப்படர... வா வீட்டுக்கு போவலாம்.'

'அப்பாவுக்கு எதுவும் உடம்பு சரியில்லையா...'

'அதெல்லாம் ஒண்ணும் இல்லம்மா..'

'பின்ன என்ன ரெண்டு பேருக்கும் சண்டையா...'

'வீட்டுக்கு போனப்பறம்... விவரமா சொல்றேன்... கொஞ்சம் பொறுமையா இரும்மா..' காதோரம் கிசு கிசுத்தாள் அம்மா..

காரில் வீட்டுக்கு போகும் வரையில்... இருவரும் ஒன்றும் பேசவே இல்லை.. அவளுக்கு ஒரே கவலையாக இருந்தது...

கார் வீட்டை நெருங்க... வீட்டில் உள்ளே டிவி சத்தம் கேட்க... அப்பா வீட்டுக்கு வந்து விட்டதாகத் தான் நினைத்தாள்..

அம்மா... காலின் பெல்லை அடிக்க...

'அப்பா... வீட்ல தானே இருக்கார் ... ஏம்மா..பொய் சொன்ன...'
கதவு திறந்ததும்.....

கீர்த்தனாவுக்கு தன கண்களையே நம்பமுடியவில்லை...
'ஹாய் அக்கா.. எப்பக்கா வந்தே.... என்கிட்டே சொல்லவே இல்ல... போன வாரம் என்கிட்டே போன்ல பேசனப்ப கூட நீ வரேன்னு சொல்லவே இல்ல...ஹை ஜாலி....அக்கா வந்திருக்கான்னு என்கிட்டே அப்பாவும் அம்மாவும் சொல்லிருந்தா இன்னும் ரெண்டு நாளு அதிகமா லீவ் போட்டு வந்திருப்பேனே....'

'சரி.. சரி.. உள்ள போய் பேசலாம்..'
அம்மா அவசரமாய் உள்ளே கீர்த்தனாவை அழைத்துச் சென்றாள்.

'ஹாய்.... கிருத்திகா. .. ஹொவ் ஆர் யு....'
தன் அக்காவின் மூன்று வயது மகளை... அப்படியே தூக்கி மடியில் வைத்து கொஞ்ச ஆரம்பித்தாள் கீர்த்தனா
'பைன்...ஹொவ் டூ யு..' பதிலுக்கு கிருத்திகா கேட்க...
'பைன் டா செல்லம் ...நீ வந்திருக்கேன்னு எனக்கு தெரியாதுடா... இல்லன்னா.. சாக்லேட் வாங்கிட்டு வந்திருப்பேன்.. நாளைக்கு கடைக்கு கூட்டிட்டு போய் உனக்கு எல்லாம் வாங்கித் தரேன்.. . ''

'அக்கா... எப்டிக்கா.. இருக்க...'

'ம்ம்ம் ..' என்றாள் கீர்த்தானவின் அக்கா உஷா...

'அக்கா.. மாமா எங்கே.. உள்ள இருக்காரா.. '

ஒவ்வொரு அறையாக கண்களாலே நோட்டம் விட...

'உஷா.. தனியாதான் வந்திருக்கா.. ' அம்மா பதில் சொல்ல..

'ஏங்க்கா மாமா வரலையா...'

'வரல்ல.. '

'ஏன். வரல ' பதில் சொல்லாமல் கிருதிக்காவை அழைத்துக் கொண்டு மாடியில் உள்ள தன் அறைக்குச் சென்று விட்டாள் உஷா ..

கீர்த்தனாவுக்கு எதோ தப்பு நடந்திருப்பதாக மனதில் தோன்றியது. அக்கா செல்வதையே பார்த்து கொண்டு இருக்க..
'போய் டிரஸ் சேஞ்சு பண்ணிட்டு வா கீர்த்தனா.. பசியா இருப்ப .. சாப்பிட்டு அப்புறமா பேசலாம்..'

கீர்த்தனாவுக்கு... அங்கு நடப்பது எல்லாம் புரியாத புதிராகவே இருக்க... தன் அறைக்குச் சென்றவள்.. உடைகளை மாற்றி.. நைட் டிரஸ்சுக்கு மாறி டைனிங் ஹால் சென்று..
அம்மா சுடச் சுட செய்த இட்லியை பசி தீரச் சாப்பிட்டாள்

கீர்த்தனா.. சாப்பிட்டு முடித்து கை கழுவவும்... அப்பா வீட்டுக்கு வரவும் சரியாக இருந்தது...

'டாடி... ' என்று ஓடிச் சென்று வரவேற்க..

'சாரி கீர்த்தி... இன்னிக்கின்னு பார்த்து.. ஆபீஸ்ல வேல.. அதான் பஸ் ஸ்டாண்ட் வர முடியாமப் போச்சு.. .'

'பரவா இல்லப்ப... நீங்க வரேலேன்னு கூட எனக்கு கோபம் இல்ல ...ஆனா .. அக்கா வந்திருக்கான்னு யாருமே சொல்லாம மறைச்சிட்டிங்களே..
அத நெனெச்சா தான் ரொம்பா கோவம் கோவமா வருது...'

'அது என்னென்னா.... கீர்த்தனா...'

'என்னங்க .... வாங்க... வந்து சாப்பிடுங்க... அப்புறமா பேசலாம்...'

அம்மா. தன் கண்களாலே...எதோ.. சைகை செய்ய...

'சரி.. வாம்மா... சாப்டுட்டே பேசலாம்..'

'இப்பதான் .. நான் சாப்பிட்டு முடிச்சேன் .. எனக்கு பயங்கர பசி.. .. சரி.. அக்கா கிட்ட பேசிட்டு இருக்கேன்.. '

கீர்த்தனாவுக்கு... எல்லோரும் எதையோ மறைக்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது... அது என்ன என்று யாரும் சொல்ல மறுக்கிறார்கள்.. . மாடியில் தன் அக்காவின் அறைக்குச் சென்றாள்...

அக்கா... கிருத்திக்காவை ... தூங்க வைத்துக் கொண்டு இருந்தாள்

'அக்கா... எதாவது ப்ராப்ளமா..'

'அம்மா எதாவது சொன்னாங்களா..'

'எதுவும் சொல்லல..'


'மாமா ஏன் வரல...'


'இனிமே அவர் வரவே மாட்டார்..'

'எதுனா . சண்டையா...உங்க ரெண்டு பேருக்கும்...மாமா ரொம்ப நல்லவராச்சே .'

'எல்லாம் நடிப்புடி.. நீயாவது.. ஜாதகம், அந்தஸ்து, பணம், குலம், கோத்திரம், அழகு எதுவும் பார்க்கம... உன்ன விரும்பர பையனா பாத்து கல்யாண பண்ணிக்கோ... என்ன...'

எதற்கு இதை இப்பொழுது சொல்கிறாள் என்று அவளுக்கு விளங்கவே இல்லை..கூறிவிட்டு. அழ ஆரம்பித்தவள்... அழுகையை நிறுத்தவேயில்லை.. கீர்த்தனா எவ்வளவோ கூறியும் சமாதானப்படுத்தியும் .. அழுகையை நிறுத்தாமல் இருக்க..

அழுதால் பாரம் குறையட்டும் .. காலையில் எழுந்து கேட்கலாம் என்றவள்... கிழே இறங்கிக்கொண்டே.. ...

'என்னம்மா... அக்கா வந்ததுக்கா.. என்ன உடனே வரச் சொன்னீங்க..'

'உன்ன வரச் சொன்னதே.. வேற ஒரு காரணத்திற்கு..ஆனா உஷா இந்த நேரத்தில வருவான்னு எங்களுக்கே தெரியாதே..'

'அம்மா.. அக்கா அங்க அழுதிட்டு இருக்கா...'

'என்னென்னு கேட்டா. சொல்ல மாட்டேங்கிரா..நீதான் சொல்லேம்மா.. '

'மாப்பிள்ளைக்கு... ஐம்பது லட்சம் அவசரமா வேணுமா.. '

'எதுக்குமா... '

'கலிபோர்னியாவுல.. வீடு வாங்கப் போறாராம்..'

'எதுக்கு அங்க வாங்கப் போறாராம்..'

'அவரு பிரண்டு எல்லாம் வீடு வாங்கிட்டாங்களாம்.. அவருக்கு அவமானமா இருக்காம்.. தனக்கு ஒரு வீடு இல்லாம இருக்கிறது.. அதனாலா அக்காவை அனுப்பி வாங்கிட்டு வரச் சொல்லிருக்கார்..'
'ஏம்மா .. அப்பா இருக்கிற பொஸிஷனுக்கும் .. அவருக்கு இருக்கிற அதிகாரத்துக்கும்.. அவர போலிஸ்ல வரதட்சனை கொடுமைன்னு கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் இல்ல...'

'அப்படி எல்லாம் கொடுத்தா.. நம்ம வீட்டு மானம் தான் போகும்.... அப்பாவே ரொம்ப இடிஞ்சி போய் இருக்கார்.. முள்ள முள்ளால எடுக்கிற மாதிரி மெதுவா தான் இத சாலவ் பண்ணனும்...அப்பாவுக்கு பணம் ஒரு பிரச்சனை இல்ல.. நேரிடைய கேட்டு இருந்தா கொடுத்து இருப்பார்.. இப்படி பொண்ண வீட்டு அனுப்பி கேக்கறது நெனச்சி தான் ரொம்ப வருத்தப்படறார். '

'சரிம்மா... அக்காவப் போய் சமாதானப்படுத்து.. காலையில பேசலாம்.. எனக்கு தூக்கம் தூக்கமா வருது...'

அப்பா.. ஹாலில் அமர்ந்து.. யாருடனோ போனில் பேசிக்கொண்டு இருக்க..

'டாடி... குட் நைட்... காலையில பேசலாம்.'

'குட் நைட்.. கீர்த்தி...'

மறுநாள் அதிகாலை.. சூரியன் மெல்ல கண்ணை கசக்கிக்கொண்டு தன் ஒளி இமைகளை மெதுவாக சோம்பலுடன் திறக்க.. நகரமே பரபரப்புடன் காணப்பட.. கீர்த்தனாவின் வீடு மட்டும்.. ஏதோ இழவு விழுந்த வீடாக.. ஒரே மயான அமைதியாய்..

தூக்கம் களைந்து.கண் விழித்த கீர்த்தனா.. ஹாலில் அன்றைய தினசரியை நோட்டம் விட்டபடி இருந்த அப்பாவிடம் சென்று...

'அப்பா.... இவ்வளவு நடந்திருக்கு.. என்கிட்டே ஏம்ப்பா இதச் சொல்லவே இல்ல..'

'நீ சின்ன பொண்ணுடா செல்லம்... உனக்கு எதுக்கு இதெல்லாம்.... சொன்னா ரொம்ப வருத்தப்படுவேன்னு தான் சொல்லல.. எல்லாம் சரியாப் போய்டும்.. அக்கா எழுந்திட்டு இருப்பா.. போய் அவ கூட பேசிட்டு இரு...'

'சரிப்பா.. அக்காவை பழையபடி மாமா கூட சேர்த்திடுங்கப்பா.. பாவம் நேத்து நைட் அக்கா அழுதிட்டே இருந்தத பாக்க கஷ்டமா இருந்துச்சி..'

'எனக்கு மட்டும் தெரியாம இல்லம்மா .. அத பத்தி தான் யோசனை பண்ணிட்டு இருக்கேன்.. நான் பாத்துக்கறேன்... '
'சரிப்பா..' என்றவள்.. சமையல் அறையில் இருந்த அம்மாவிடம் சென்று.. அங்கிருந்த சமையல் மேடையில் ஏறி அமர்ந்து கொண்டு..

'அம்மா.. எனக்கு சுடச் சுட காபி வேணும்..' அதிகார தோரணையில் கேட்க..

'ஆமாண்டி... என்ன தான் அதிகாரம் பண்ண முடியும்... போற எடத்துல.. இப்படி எல்லாம் பண்ண முடியாது..'

'எனக்கு வர்ரவனே.. காபி போட்டு தருவானே...'

'தருவாண்டி... இப்படித்தான்.. ஒருநாளு நானும் சொல்லிட்டு திரிஞ்சேன்... இப்ப பாத்தியா இந்த நாலு சுவத்க்குள்ள அடப்பட்டுக்கு இருக்கேன்..'

'அது அந்தக் காலாம்... நாங்க எல்லாம். ...வேலைக்கு போறோம் இல்ல...'

'வேலைக்கு போனா.. கொம்பா மொளச்சி இருக்கு...'இருந்தாலும்... உனக்கு வாய் கொஞ்சம் நீளம் தான்'

என்றவள் காப்பியை அவளிடம் நீட்டினால்.. வாங்கி குடித்துக்கொண்டே.. மெதுவாக..

'அம்மா.. நேத்து நைட் ஒரு விஷயம் சொன்னே.. என்ன வேற ஒரு காரணத்துக்காக வரச் சொன்னோம்னு... அது எதுக்கும்மா...'

'அது வந்து.. உன் கல்யாண விஷயமா தான்.. '

'எனக்கு எதுக்குமா..இப்ப கல்யாணம்.. இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்..'

'ஏண்டி .. எதுக்கு ரெண்டு வருஷம்..'

'ரெண்டு வருஷம் ஜாலியா இருப்பேன்.. ப்ரீயா இருப்பேன்...'

'இரேன்.. யார் வானான்னு சொன்னது... கல்யாணம் பணிக்கிட்டு... உன் புருஷன் கூட ஜாலியா இரு.. நான் வேணான்ன சொல்லப் போறேன்..'

'கல்யாணம் பண்ணிக்கிட்டா.. அது ஒரு இம்சை '


'ஆமாண்டி.. நீ சென்னையில ஒவ்வொரு நாளும் ஆபீஸ் போயிட்டு வர்றது.. எங்களுக்கு வயித்தில நெருப்ப கட்டிக்கு இருக்கிற மாதிரி இருக்கு...'

'என்னம்மா... இந்த காலத்தில போயி..'

'எல்லா காலத்திலேயும் இப்படித்தான்... பையனா இருந்தா கவலை இல்ல.. போண்ணுன்னா நாம தான் ஜாக்கிரதையா இருக்கணும்...'

'போதும்... உன்னோட கதா காலட்சேபம்.. விசயத்த சொல்லு... எதுக்கு இப்ப கல்யாணம்.. .''

'அதுக்கில்ல.. ஒரு நல்ல வரன் வந்தது... பையன் அமெரிக்காவில வேலை செய்யறான்னு சொன்னாங்க.. ஆனா இப்ப நம்ம வீட்ல நடந்தத பார்த்துக்கு அப்புறம்... அமெரிக்க மாப்பிளையே வேணாம்னு தோணுது...'

'அமெரிக்க மாபிள்ளையே வேண்டாம்மா.. அதுமில்லாமா இப்ப கல்யாணமே வேண்டாம்மா..'

'ஏண்டி... யாரையோ லவ் பண்றீயா..'

'அது வந்து... இல்ல....அதெல்லாம் இல்லம்மா... நானே சொல்லாம்ம்னு நெனெச்சேன்... இப்ப வேண்டாம்னு தோணுது.. '

'சொல்லிடு கீர்த்தனா.. பையன் நல்லவனா இருந்தா.. நான் அப்பாகிட்டச் சொல்லி.. முடிச்சி வைக்கேறேன்.. அவசப்பட்டு.. தப்பு எதுவும் பண்ணிடாத...'

'உங்க பொண்ணும்மா நான்.. அதெல்லாம் எதுவும் தப்பு பண்ணமாட்டேன்..'

'அப்ப.. சொல்லு யாரு அந்த பையன்..'

'அது வந்து... என் கூட ஆபீஸ்ல வேல செய்றான்.. பேரு கார்த்தி..'

'பையன் நல்ல பையன் தானே.. இப்ப.. அப்பா கிட்ட.. எதுவும் சொல்லாத.. அக்கா பிரச்சனை முடியட்டும் நானே சமயம் பார்த்து சொல்றேன்.. என்ன...'

'தேங்க்ஸ்மா..அம்மான்னா அம்மா தான்'


அம்மாவை கட்டி பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டு மாடி ஏறிச்சென்றாள் தன அக்காவிடம் பொழுதைக் கழிக்க.. .

கார்த்திக்கு அன்றைய பொழுது நகரவே இல்லை.. ஆபீசியில் ஒவ்வொரு நொடியும் நொண்டிக் கொண்டே செல்ல.. கீறத்தான் இல்லாமல் வேலையே ஓடவில்லை.. அவள் முகத்தை பார்த்தாவாவது அல்லது பேசினாலும் பொழுது போவது தெரியாமல் இருக்கும்.. எனவே... ஆபீஸ் முடிந்ததும் சீக்கிரமாகவே வீடு திரும்பினான்..

'என்னடா.. கார்த்தி.. உடம்பு எதுவும் சரியில்லையா... சீக்கிரமா வந்திட்டே..'

'இன்னிக்கு... ஆபீஸ்ல அதிகமா வேல இல்லம்மா.. அதான் நேர வீட்டுக்கு வந்திட்டேன்..'

'சரிடா.. காபி வேணும்மா.. இப்பவே சாப்பாடு சாப்பிடரியா..அப்பா வந்தப்புரம் சாப்பிடரியா.. '

'அப்பா தான்.. லேட்டா வரேன்னு சொன்னாரே... '

'ஆமாமாம்.. மறந்திட்டேன்.. இப்பவெல்லாம் எல்லாம் மறந்து போகுது.. '

'சரி... ஒரு அஞ்சு நிமிஷம் இரேன்.. மிக்ஸில சட்னி போட்டுட்டு... தோசை ஊத்தறேன்'

'ஏம்மா .. இன்னும் நீயே சமையல் ரூமல் வெந்திட்டு இருக்க... ஒரு நல்ல வேலைக்காரியா பாத்து வச்சிக்க கூடாதா ..'

'அவங்க எல்லாம் .. சுத்தமா செய்யமாட்டாங்க.. அப்படியே செஞ்சாலும் அதில ஒரு கடமை தான் இருக்கும்...பாசம் இருக்காது.. '

'அப்படி எல்லாம் பார்த்த... யாரும் வேலைக்காரிய வச்சுக்க முடியாது...'நீ கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்துப்பேன்னு சொன்னா.... '

'அதுக்கு தான் .. நீ சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கோடா..மருமக வந்தா கூட மாட ஒத்தாசையா இருப்பாள்ல '

'அதுக்கெல்லாம் பொண்ணு ரெடி.. நீங்க ரெண்டு பெரும் ஓகே சொன்னா போதும் '

'அன்னிக்கு போன் பேசின பொண்ணா...'

'அம்மா... உனக்கு எப்படி..'

'எனக்கு தெரியும்டா.. ஒரு நாள் நீ குளிக்கும் பொது... அந்த பொண்ணு தான் பேசிச்சு.. நான் போன எடுத்து பதில் பேசின உடனே... ராங் நம்பர்ன்னு சொல்லிடுச்சி..அவ.. தானே..நல்ல பொண்ணு தானே.. ஒரு நாள் வீட்டுக்கு கூட்டிட்டு வாயேன்... முடிச்சிடலாம்..'

'சரிம்மா...'

இரு வீட்டு பக்கமும் காதலுக்கு பச்சை கொடி அசைக்க, விதி எந்த பக்கம் எந்தக் கொடியை அசைக்கப் போகிறது என்று போகப் போகத் தான் தெரியும், பொறுத்திருந்து பார்ப்போம்..

--- to be continue...

rishvan
03-01-2013, 03:58 AM
கீர்த்தனா-என் தோழி, என் காதலி, என் மனைவி(5)
*********************************************
இனி...
பறக்கும் முத்தத்தை எல்லாம்
மறந்தும் தந்துவிடாதே
அது
காற்றிலே கலந்து
யார்யாரோ கொடுத்த முத்தத்தோடு
என்னைத் தீண்டிச் செல்கிறது
-ரிஷ்வன்
**********************************************
மறுநாள் பொழுதும் வெறுமையாய்க் கழிய, அன்றும் தனலில் இட்ட புழுவாய்த் தவித்தான் கார்த்தி, பிரிவு என்பதன் அர்த்தத்தை முழுமையாய் உணர்ந்தான். ஓரிரண்டு நாள் பிரிவையே தாங்க முடியாமல் தவிப்பவனால் எப்படி ஒன்றரை வருடம் கீர்த்தனாவைப் பிரிந்து இருக்க இயலும்.

நினைத்து பார்க்கவே அவனுக்கு தலையைச் சுற்றியது, ஒரு எஸ்ம்எஸ் அனுப்பி இருந்தாலாவது ஆறுதலாய் இருந்திருக்கும், எப்பொழுது திரும்புவாள்
என்பதை அறிந்தாலாவது மனது கொஞ்சம் ஆறுதல் அடையும்.

அன்றும் ஆபீசில் வேலை செய்யவே பிடிக்கவில்லை, தலை வேறு வலிக்க, கான்டீன் சென்று ஒரு காபி குடிக்கலாமென்று காபியை ஆர்டர் செய்து ஒரு டேபிளில் அமர்ந்து இருக்க..

'என்னடா...ரொம்ப டல்லா இருக்கே.. நேத்து அனுப்பன டெலிவரில எதோ மிஸ்டேக் பண்ணிட்டியாம்.. ஆன்சைட்டிலிருந்து மெயில் மேல மெயில் வந்திட்டிருக்கு...' அவனுடைய டீமில் இருக்கும் சுமதி கேட்க..
'ம்ம்ம்...'
'என்னடா.. ம்ம்ன்னு .. பதில் சொல்ற.. கீர்த்தனா வரலன்னு ரொம்ப பீல் பண்றியா..'

'ம்ம்ம்... எப்ப வரேன்னு ஒரு எஸ்ம்எஸ் அனுப்பி இருக்கலாம்.. '

'வராம எங்க போவ.. ஒரு நாள் தானே ஆச்சி.. கண்டிப்பா வருவா.. கவனத்த வேலையில காமி.. அவ வீட்ல இருந்து எஸ்ம்எஸ் கூட அனுப்ப முடியாம நிலமா கூட இருக்கலாம்.. வேற ஏதாவது பிரச்சினை இருக்கலாம்...பொண்ண இருந்தா தான் அதெல்லாம் உனக்கு தெரியும்.. நீ போன் பண்ணி ..இல்லானா எஸ்ம்எஸ் எதாவது அனுப்பி தொலச்சியா...'

'அதெல்லாம் ஒன்னும் இல்ல..'
'போண்ணுன்னாவே எல்லா வீட்டிலேயும் ஏதோவொரு கட்டுப்பாடு இருக்கும்.. எதோ... ஆபீஸ் இருக்கிற வரைக்கும் தான் எங்களால ப்ரீயா பேசமுடியும்.. நீங்களெல்லாம் நெனச்சா, மனசு சரியில்லன்னு தோனுச்சினா.. வெளியே போய் ஒரு தம் அடீக்கிரீங்க.. இல்லன்ன பிரெண்ட்ஸ் கூட பார் போய்டறீங்க.. நாங்கெல்லாம் வீட்டுக்கு போய்ட்டா.. அவ்வளவுதான் எல்லாத்தையும் மனசுல பூட்டி வச்சிக்கிட்டு இருக்க முடியுமே தவிர.. எங்களால வேற ஒண்ணும் பண்ணமுடியாது..'
சுமதி சொல்வதிலும் உண்மை இருந்தது.. சுமதி என்ன தான் ஆறுதல் படுத்தினாலும்... எதோ அவள் வீட்டில் விபரீதம் நடந்திருப்பதை அவன் உள்ளுணர்வு உணர்த்தியது.
வேலை முடிந்து வீடு திரும்பியவுடன்..

'அம்மா.. அப்பா என்ன சொன்னார்.. '
'என்ன சொல்வார்.. ஒரே தாம் தூம்னு குதிச்சார்.... முடியாதுன்னு சொன்னார்... படிக்கப் போறானே.. அதுவரைக்கும் அந்த பொண்ணு வீட்ல சும்மா இருப்பாங்களா... பொண்ணும மறக்காம இருக்குமா.. இப்படி கேள்வி மேல கேள்வி கேட்டார்...'
'அப்பா... முடியாதுன்னு சொல்லிட்டாரா..' வருத்தமாய் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டான் ..
'அதெப்படி சொல்வார்... கடைசியில எப்பவும் போல.. சரின்னு சொல்லிட்டார்..'

கார்த்திக்கு அப்பொழுதான் முகம் மலர்ச்சி அடைந்தது.

அது போகட்டும்.. அதப்பத்தி கவலைப் படாதே.. பொண்ணு பேரு என்னாடா.. எப்படிடா இருப்பா .. '

'பேரு கீர்த்தானா ... நல்ல பொண்ணும்மா... அழாகா இருப்பா. நல்ல குடும்பம்...'

'வீடு சென்னையிலா...'

'இல்லம்மா.... சொந்த ஊரு புதுச்சேரி... இவ மட்டும் ஒரு லேடீஸ்
ஹொஸ்டலிருந்து ஆபீஸ் வந்திட்டு போறா.. ஒரு அக்கா இருக்காம்.. அமெரிக்காவில் இருக்கிறதா சொன்னா..'

'சரிடா.. ஒரு நாளைக்கு .. வடபழனி கோயிலுக்கு வரச்சொல்லு... நானும் கோவிலுக்கு வரேன்.. அப்ப பாத்துக்கறேன்.. அந்த பொண்ணு கிட்ட கேட்டு சொல்லு.. .உனக்கு சந்தோசம் தானே...'

'மொதல்ல.. வீட்டுக்கு கூப்பிட்டு வரச் சொன்ன.. இப்ப கோவிலுக்குன்னு சொல்ற..'

'அப்படித் தான் சொன்னேன்.. திடீர்னு... அந்த பொண்ணு வீட்டுக்கு வந்தா.. அக்கம் பக்கம் இருக்கிறவங்க.. என்ன ஏதுன்னு கேப்பாங்க.. அதுவும் இல்லாம... அப்படி எல்லாம் வரக் கூடாதுடா.. அது மரபும் இல்ல.. கோவில்ல பார்த்தா யாருக்கும் தெரியாது.. மங்களகரமா இருக்கும்..'

தன்னுடைய ஆசை நிறைவேற்றப்படும் என்பது அவனுக்குத் தெரியும் ஆனால் அது இவ்வளவு சீக்கிரம் தனக்கு சாதகமாய் நடைபெறுவது அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியத் தந்தது.

'தேங்க்ஸ்ம்மா... நான் விசா இண்டர்வியு போறதுக்கு வேண்டியா டாகுமென்ட்ஸ் எல்லாம் ரெடி பண்ணனும்.. அப்பா வந்தப்புறம் சாப்பிட கூப்பிடும்மா ..'

தன் அறைக்குச் சென்றவன் தன் லேப்டாப்பில் வேண்டிய தகவல்களை சேகரித்தான் ..

சிறிது நேரத்திற்கு பிறகு...அவனுடைய மொபைல் போனில் இருந்து அலாரம் சத்தம் கேட்கவே... என்வென்று பார்க்க...

மறுநாள் ரம்யாவுக்கு பிறந்த நாள் என்பதை நினைவூட்டவே அந்த அலாரம் அடித்ததை, மொபைல் பார்த்து தெரிந்து கொண்டான்.



சென்ற ஆண்டு ரம்யாவின் பிறந்த நாளில் அவளுடன் இருந்ததை நினைத்துப் பார்த்தான்.. அவனுடைய நினைவுகள் பின்னோக்கிச் சென்றது.

பெங்களூரில் அவளுடன் பழகிய சமயம், அவள் பிறந்த நாளுக்கு ஒரு சர்பிரைஸ் கொடுக்க வேண்டும் என்பதற்காக ..

அவளின் பிறந்த நாளுக்கு சில தினங்களுக்கு முன் ஒரு மாலைப்பொழுதில்,
'ரம்யா.. ஷாப்பிங் போறேன்.. கொஞ்சம் என் கூட வர்யா.."

'விசேஷமா ஏதாவது வாங்கப்போறீய..'

'ஆமாம்... ஒரு சாரி எடுக்கணும்... எனக்கு எப்படி எடுக்கறதுன்னு தெரியாது... நீ வந்தையினா செலக்ட் பண்ண வசதியா இருக்கும். .'

'என்னபபா.. சாரி எல்லாம் எடுக்க போறே... யாருக்கு.. சாரி..'

'அது வந்து....அம்மா எடுத்திட்டு வரச் சொன்னாங்கா... பெங்களூர்ல காட்டன் சாரி நல்லா இருக்கும்ன்னு... எதுக்குன்னு சொல்லல.. யாருக்குன்னு சொல்லல ..'

இருவரும் சேர்ந்து.. பெங்களூரில் எம் ஜி ரோடில் உள்ள ஒரு பிரபலமானா துணிக்கடைக்குச் சென்று... சேலைகளை பார்த்துக் கொண்டு இருக்க..

'ரம்யா.. உனக்கு பிடிச்ச மாதிரி. நல்ல சாரியா எடு.. பணத்த பத்தி கவலைப்படாதா... '

'பொண்ணு எப்டி இருப்பான்னு தெரிஞ்சா தானே... மாட்சிங்கா செலக்ட் பண்ண முடியும்..'

'ஏறக்குறையா.. உன்ன மாதிரின்னு நேனேச்சிக்கோ...'

அவள் இரண்டு காட்டன் சேலைகளை செலக்ட் செய்தாள் , ஒன்று வெள்ளை நிறத்தில் அழகாக கை வேலைபாடுகளுடன் இருக்க... மற்றொன்று.. அதே வேலைபாடுகளுடன் பச்சை நிறத்தில் இருக்க..

'இந்த ரெண்டும் எனக்கு பிடிச்சிருக்கு..'


'வெள்ளை வேண்டாம் ரம்யா.. செண்டிமெண்டா முதல் முதலா எடுக்கறேன்...'

'நீ கூட செண்டிமெண்ட் எல்லாம் பாக்க ஆரம்பிச்சிட்டியா.. சரி உன் இஷ்டம்..'

பச்சை சேலையை எடுத்துக் கொண்டு... பணத்தை கொடுத்து விட்டு.. அவளுக்கு பிடித்த.. அவளுக்குத் தர வேண்டிய சாரியை.. அவளை வைத்தே எடுத்த தன் சாமர்த்தியை எண்ணி வியந்தவனாய்.. கடையை விட்டு இறங்கினான்.

'தேங்க்ஸ் ரம்யா.. சாரிய செலக்ட் பண்ணதுக்கு..'

'தட்ஸ் ஓகே.. கார்த்தி .. '

ரம்யாவின் பிறந்த நாள் அன்றைக்கு... அவளுக்கு விஷ் செய்ய.. அவள் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.. மாலை முழுவதும் முயற்சி செய்து பலனளிக்காமல் போகவே.. . அவள் தங்கி இருக்கும் வீட் டிற்குச் சென்று பார்க்க. ரம்யா இருந்தாள்..

'ஹாப்பி பர்த்டே ரம்யா.. '

'தேங்க்ஸ் கார்த்தி..'

'காலையிலிருந்து உன் மொபைல் போனுக்கு ட்ரை பண்றேன்.. எங்க போயிட்டே... '

'அதுவா.. நான் எப்பொழுதும் பர்த்டே அன்னிக்கு.. ஏதாவது அநாதை ஆசிரமம் போயிட்டு .. அங்கேயே தங்கி... அவங்களுக்கு தேவையான உதவி பண்ணிட்டு.. ஒரு நாள் முழுதும் அவங்க கூட இருந்திட்டு வருவேன்...'

'ஒ... கேக்கவே ரொம்ப சந்சோஷமா இருக்கு .. நல்ல பழக்கம்..'

பின்னர், தனது பிறந்த நாள் பரிசைத் தந்தான்.. பிரித்து பார்த்தவள்.. ஆச்சரியத்தில் அசந்து விட்டாள்..

'வாவ்.. தேங்க்ஸ் கார்த்தி.. எனக்கு பிடிச்ச சாரியை.. எனக்குன்னு சொல்லாம என்னையே எடுக்க வச்சி... எனக்கே ப்ரெசென்ட் பண்ணி . கார்த்தி.. ரியலி யு ஆர் கிரேட்'


'அய்யாவோட ஐடியா எப்படி.. எனக்கு.. வெறும் தேங்க்ஸ் மட்டுமா..'

'வேற என்ன வேணும்... தரேன்...'

'இந்த சாரியா ... இப்பவே இங்கேயா நீ கட்டி.. அத நான் பார்க்கணும்....'

'சீ.. போ.. கார்த்தி ... உன் எதிர்ல எப்படி நான் கட்ட முடியும்...'

அதிசியமாய் ரம்யா வெட்கப்பட்டாள்..

'அந்த அர்த்ததுல சொல்லல.. உள்ள போய் கட்டிட்டு வா.. நான் பார்க்கணும்..'

உள்ளே சென்றவள்.. அந்த சாரியை கட்டிக்கொண்டு வர.. அவன் அசந்து போனான்..

'புடைவையால நீ அழகா... இல்ல.. நீ கட்டினதால புடைவை அழாகான்னு எனக்குத் தெரியல.. என்ன ஒரு அழகு.. நீயே அழகு.. அதுவும் இந்த சாரீயில... நீ அழகு தேவதையாய் இருக்கே .. என் கண்ணே பட்டுடும் போல இருக்கு.. '

'போதும்... போதும்.. கார்த்தி.. என்ன நீ ஓவரா புகழரா.. ரொம்ப கண் வச்சிடப் போற .. நான் இந்த மாதிரி சேலைய கட்டினதே இல்ல..அதுவும்.. நான் செலக்ட் பண்ணி.. அத நீ எனக்கு கொடுப்பேன்னு... நான் நினைக்கவே இல்ல.' என்றவள்.. அவனே எதிபாரத ஷணத்தில் அவன் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்து..

'தேங்க்ஸ்.. கார்த்தி' என்றாள்..

அவனுக்கு நாடி நரம்புகள் எல்லாம் ஒரு கணம் மரத்து போனது.. .உடம்பில் உள்ள ரத்தம் எல்லாம் உறைந்து போனது மாதிரி ஒரு உணர்வு ஏற்பட்டது.. உடம்பு லேசாகி.. சிறகில்லாமல் பறக்கத் தொடங்கினான்..

தன்னை நேசிப்பதாக அவன் நினைத்து இருக்க.. இறுதியில் தன காதலை வெளிப்படுத்திய பொழுது .. அவள் அப்படி சொன்னது.. இப்பொழுதும் அவன் மனதில் பசு மரத்து ஆணி போல அப்படியே நினைவில் இருக்கிறது..


'கார்த்தி.. நான் உன் கூட பிரெண்ட் மாதிரி தான் பழகினேன்.. எனக்கு லவ் பண்ற எண்ணமெல்லாம் உன் கிட்ட வரல ..'

'அப்ப.. அந்த சாரி கட்டி எனக்கு காமிச்சது.. எனக்கு கிஸ் கொடுத்தது...'

'நீ ஆசையாய் வாங்கி கொடுத்த. அதனாலா உனக்கு கட்டி காமிச்சேன்...
பிரெண்ட்ஸ்ககுள்ள . கிஸ் கொடுக்கறது எனக்கு தப்பா தோனல.. அப்புறம்.. நான் தீபக்கத்தான் கல்யாணமே செஞ்சுக்க முடிவு பண்ணிருக்கேன் ... அவனைத் தவிர என்னால உன்ன நெனெச்சி பாக்க முடியல .. கார்த்தி .. '

ரம்யா சொன்னது அவளுக்கு சரியாய் பட்டதோ என்னவோ.. அவனுக்கு ஏற்பட்ட மன வலி இன்னும் ஆறவே இல்லை.. இருந்தாலும் இன்னமும் தன்னுடன் தொடர்பில் இருப்பது மட்டும் அந்த மன வலிக்கு சற்று ஆறுதலாய்... ஒத்தடம் கொடுத்தபடி தொடர்கிறது..

கடந்த காலத்தை நினைத்தபடி... அவளுக்கு பிறந்த நாள் வாழ்த்து ஒன்றை அனுப்பி வைத்தான்..

மறுநாள்..

வழகத்திற்கு மாறாய் உற்சாகத்துடன் ஆபீஸ் கிளம்பினான் கார்த்தி.. அதிகாலையிலே கீர்த்தனா அவனுக்கு ஒரு எஸ்ம்எஸ் அனுப்பி இருந்தாள் .. தான் அதிகாலை பஸ்சில் புதுச்சேரிலிருந்து கிளம்பி விட்டதாகவும்.. இன்று ஆபீஸ் சந்திக்கலாமென்று ..

ஆபீஸ் நுழைந்தவுடன், கீர்த்தனா அமரும் சீட்டில் அவள் இருக்கிறாளா என்று நோட்டம் விட்டபடியே சென்றான்.. அங்கு அவள் காணாததைக் கண்டு.. அவளுக்கு போன் செய்ய.. ஆபீஸ் வந்து கொண்டிருப்பதாகவும்.. பதினோரு மணிக்கு சந்திக்கலாம் என்று கூறவே.. உற்ச்சாகமாய் வேலை செய்ய ஆரம்பித்தான்...

சரியாக பதினோரு மணிக்கு.. கான்டீன் சென்றவன்.. அதற்கு முன்பே கீர்த்தனா அமர்ந்திருப்பதைக் கண்டவுடன்.. அவனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை..
'ஹை கீர்த்தி... ரெண்டு நாளா உன்ன பாக்காம ரொம்ப தவிச்சி போயிட்டேன் தெரியுமா..'


'தெரியும்... என்ன பண்றது.. வீட்ல ஒரு ப்ராப்ளம் .. என்னால போன் பண்ணி சொல்ல முடியல..'
அங்கு நடந்ததை ஒரு வரி விடாமல் சொல்லி முடிக்க.. கார்த்தி மிகவும் வருத்தப்பட்டான்..

'சாரி.. கீர்த்தனா... '
'பரவா இல்லடா.. அதெல்லாம் எங்கப்பா பாத்துக்குவாரு. கொஞ்ச நாள்ல சரியாகிடும்.. இவ்வளவு கெட்ட விஷயத்திலும் ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கு தெரியுமா'
'என்ன..'

'நம்மளோட லவ் பத்தி.. எங்கம்மா கிட்ட சொல்லிட்டேன்... அவங்களும் ஓகேன்னு சொல்லிட்டாங்க...'
'நானே சொல்லன்னும்னு நெனெச்சேன்.. எங்க வீட்லேயும் சம்மதிசித்தாங்க.. அதுவும் இல்லாம.. எங்கம்மா ஒரு படி மேலே போய் .. உன்ன நேர்ல பாக்கணும் வேற சொன்னங்க..'
'அப்படியா..'

'ஒரு லீவ் அன்னிக்கு.. நீ வடபழனி முருகன் கோயிலுக்கு வந்தியன. நானே எங்கம்மா உனக்கு அறிமுகம் பண்ணி வைக்கிறேன்'
'ஆனா... வரும் போது.. சல்வார் போட்டு வராதே.. ஒரு சாரி கட்டிக்கிட்டு வந்த நல்லா இருக்கும்..'

'எனக்கு சாரி .. நல்லா கட்ட வராது.... எனக்கு சல்வார் தான் வசதியா இருக்கும்..'

'எனக்காக .. கட்டிக்கிட்டி வாயேன்..'
'என்னடா... இன்னும் கல்யாணமே ஆகல.. அதுக்குள்ளே.. என்ன... ரொம்பத்தான் கண்ட்ரோல் பண்ற..'

'இது கண்ட்ரோல் இல்ல.. ஒரு விண்ணப்பம் தான்..'
'அதெல்லாம் முடியாது.. நான்... எப்படி வர முடியுமோ அப்படித் தான் வருவேன்..'

அதற்கு மேல அவனால் ஒன்றும சொல்ல முடியவில்லை .. எப்படியோ அவள் வந்தால் போதும் .என்று விட்டுவிட்டான்..
'சரி.. உன் இஷ்டம்.. எப்படியோ வா..'
அவன் முகம் ஒரு மாதிரி போனதை ஓரக்கண்ணால் ரசித்தபடி..
'கண்டிப்பா வரேன்.. என்னிக்குன்னு சொல்லு.. '
வர சனிக்கிழமை.. சாயந்திரம் ஐந்து மணிக்கு வந்திடு.. '
'அப்புறம் ஒரு விஷயம்' என்றவன் தன் அப்பாவின் ஆசையையும், அமெரிக்கப் பயணத்தின் அவசியத்தையும் ஒன்று விடாமல் கூறி, கூடிய சீக்கிரம் அங்கு செல்ல இருப்பதாகவும், விசா கிடைத்து விட்டால், இன்னும் இரண்டு மாதத்திற்குள் செல்வதாகும் அவளிடம் தெரிவிக்க..
கீர்த்தான முதலில் தயங்கினாள், மனதிற்குள் முனகினாள், மிகவும் வருதப்பட்டாள், கண்களில் கண்ணீர் துளிர்க்க, அவனில் பிரிவை எண்ணி முதலில் மிகவம் கவலைபட்டாலும், எதிர் காலத்திற்கு நல்லது என்றெண்ணி தன்னைத் தானே ஆறுதல் படுத்திக் கொண்டாள், கார்த்தி செல்வதில் அவளுக்கு ஒன்று ஆட்சேபனை இல்லை தான் , ஆனால் அவனைப் பிரிந்து இருக்க வேண்டுமே என்ற கவலை அவள் மனதில் குடி கொண்டது..

அன்று முழுவதும்.. கடந்த இரண்டு நாட்களில் பேச முடியாத... நடந்த நிகச்சிகளை எல்லாம் பேசி முடித்து வழக்கம் போல பிரிந்தனர்.

அந்த சனிக்கிழமை.. தன் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத நிகழ்வு ஒன்று நடக்கப் போவதை அறியாதவளாய் கோவிலுக்கு வரச் சம்மதித்தாள்.


-- to be continue

முரளி
03-01-2013, 05:20 AM
கதையை அழகாக எடுத்து செல்கிறீர்கள். நல்ல இடத்தில் தொடரட்டும் போட்டுவிட்டீர்கள். காத்திருக்கிறேன்.

rishvan
07-01-2013, 04:48 AM
கீர்த்தனா-என் தோழி, என் காதலி, என் மனைவி(6)
************************************************************
உணர்வின் ஒத்திகை
உதடு ஒத்தடம்..
முன்னுரைப் பார்வைக்குப்பின்
முத்திரை ஒப்புதல்...
சங்கமத்துக்கு முன்
மங்கல இசை..
கூடிக் கலப்பதற்கு முன்
பத்திரப்பதிவு..
முத்தம்.
- ரிஷ்வன்
************************************************************
வாழ்க்கையில் தோல்வி அதிகரிக்க அதிகரிக்க... வெற்றியின் எல்லையை நெருங்குகிறோம் என்பது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.. ஒரு சிலர். தோல்வியைக் கண்டவுடன் சோர்ந்து விடுகின்றனர்.... ஒரு சிலரோ ஓரிரண்டு முறை முயற்சி செய்து... வெற்றி கிடைக்கவில்லை என்றால்.. அந்த முயற்சியை முழுவதும் மறந்து விடுகின்றனர்... மிகச் சிலரே.. வெற்றி கிடைக்கும் வரையில் முயற்சி செய்து... வெற்றியை அடைகின்றனர்.. அந்த வகையில் கார்த்திக் ஒரு அதிர்ஷ்டசாலி என்று தான் சொல்ல வேண்டும்...

ஒரு மாலைப்பொழுதில் வீட்டிற்கு வரும் வழியில், தன் ஆருயிர் நண்பன் குமாரைச் சந்தித்தான்.. கார்த்தி தன் அந்தரங்க விஷயங்களை எல்லாம் தன்னுடன் ஒன்றாய் படித்த குமாரிடம் மட்டும் எப்பொழுதும் பகிர்ந்து கொள்வான், குமாரிடம் ஏற்கனவே தான் அமெரிக்கா செல்லப் போவதை கூறி இருப்பதால்

'அமெரிக்க போகப் போரேன்னு சொன்னியே .. எப்ப போகப் போற.. கார்த்தி..'

'அதுக்கு தான் ரெடி பண்ணிட்டு இருக்கேன்.. நாளைக்கு விசா இன்டெர்வியு போகணும்.. விசா வாங்கிட்டேனா. அப்புறம்.. ரெண்டு மாசத்துக்குள்ள..
கிளம்பிடனும்...'

'அது சரி.. அப்புறம். கீர்த்தனா.. நீ வரவரைக்கும் வெயிட் பண்ணிட்டு இருக்கணுமே... அவ ஓகே சொல்லியாச்சா.. '

'சொல்லிட்டேன்.. முதல்ல வருத்தப்பட்டா... அப்புறம்.. சரின்னு சம்மதிச்சிட்டா..'

'நான் ஒண்ணு சொல்லவா. நீ கிளம்பறதுக்கு முன்னாடி.. . ரெண்டு குடும்பமும் முறைப்படி கல்யாணம் பேசி ஒரு முடிவு எடுத்திட்டிங்க வச்சுக்கோ.. அப்புறம்.. அவளுக்கும் உன் மேல நம்பிக்க வரும்.. அவளுக்கு மட்டும் இல்லா.. அவங்க வீட்ல இருக்கிற வங்களுக்கும்..

படிப்ப முடிச்ட்டு வந்தப்புறம் மேரேஜ் பண்ண வசதியாயிருக்கும்.. என்ன நான் சொல்றது கரெக்ட் தானே.'

இப்படி ஒரு யோசனை அவனுக்கு கூட வரவே இல்லை... இது கூட நல்ல யோசைனையாக அவனுக்குப்பட்டது.. கீர்த்தனாவுக்கும், அவள் குடும்பத்திற்கும் என் மேல் நல்ல அபிப்ராயமும், நல்ல நம்பிக்கையும் வரும்.

'குமார்.. நீ சொன்னது நல்ல யோசனையா இருக்கு.. எனக்கு கூட இந்த யோசனை வரல.. தேங்க்ஸ்டா குமார்..'

அமெரிக்கன் எம்பசி..சென்னை, மவுண்ட் ரோடு..
காலையிலே கூட்டம் அலைமோதியது..அவனுக்கு காலை 8.45 மணிக்கு விசா இன்டெர்வியு.. கையில் கொண்டு வந்த டாகுமென்ட்ஸ் எல்லாவற்றையும் மறுபடியும் ஒரு தடவை சரி இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டான்..

அமெரிக்காவில் வேலை செய்வதற்கு விசா வாங்க.. கண்களில் டாலர் கனவுகளுடனும்.. மனதில் எதிர்ப்பார்ப்புடனும்...கடவுளைப் பிறாத்தித்தப்படியும்.. ஆண்களும் பெண்களும் வரிசையில் நின்று கொண்டிருக்க.... மற்றொருபுறம் . விசாவை நீடிப்பதற்கு ஒரு கூட்டமும்.. .

திருமண ஆனா புது மணத்தம்பதிகள்.. புது மனைவியை அழைத்து கொண்டு.. மனைவியிடம் தன அமெரிக்கத்தனத்தைக் காட்டிக் கொண்டு... ஒருபுறமும்.. தன் மகனையோ .. மகளையோ.. பார்பதற்கான ஆர்வத்துடன் வயோதிக தம்பதிகளும் வரிசையில் நிற்க..

கவுன்டரில் அருகே செல்லச் செல்ல.. விசா கிடைக்க வேண்டும் என்று கார்த்தியும் ஆண்டவனை வேண்டிக் கொண்டிருக்க.. .

'ஏன்னா.. சிக்காகோ போனா . அங்க பெருமாள் கோவிலுக்கு கண்டிப்பா போகணும்..'

வயதான பாட்டி... தன கணவனிடம கிசுகிசுக்க..
'கணேஷ்... யூஸ் நாப்கின்ஸ்... டோன்ட் பீ டர்டி...' அமெரிக்க கலாச்சாரத்தை கற்பித்துக் கொண்டிருந்தாள் ஒருத்தி...
'அங்க பாருங்கோனா ... அவ கழுத்தில.. அந்த மூணு பட்டை செயின் நன்னா இருக்கோனா..'

அந்த டென்ஷன் நேரத்திலும்.. தன் கணவனுக்கு காண்பித்துக் கொண்டிருந்தாள் மற்றொருத்தி. ..

இவனுக்கு முன்புறம் சென்றவனை... விசா ஆபீசர் எதோ கேள்வி கேட்க . அவன் முழிக்க... பாஸ்போர்ட்டை அவனிடம் திருப்பி கொடுக்க..

கார்த்திக்கு புரிந்து விட்டது.. எப்பொழுது விசா ஆபீஸ் பாஸ்போர்ட்டை திருப்பி கொடுக்கிராரோ.. அப்பொழுதே.. எதோ வில்லங்கம் இருக்கிறது என்று.. தன் முறை வரும் வரையில்.. உலகத்தில் இருக்கும் கடவுள்களை எல்லாம் வேண்டியபடி இருந்தான்..

தன முறை வர.. விசா ஆபீசரிடம்... பாஸ்போர்ட்டையும் விண்ணப்படிவத்தையும் கொடுத்தான்..

'திஸ் இஸ் தி பர்ஸ்ட் டைம்.... ட்ராவெல் டு யுஸ்' .

பாதி புரியாத பாதி காதில் விழாதா.. ஆங்கிலத்தில் கேட்ட..
'எஸ்.. '

'வொய் ஆர் யு கோயிங் தேர் ' சொன்னான்..

'வெரி குட்..'

'ஆப்டர் காலேஜ்.. வாட் இஸ் யுவர் பிளான்..'

'ரீடர்ன் டு இந்தியா அண்ட் கனட்டினியு மை பிசினஸ்...'

அவர் கேள்வி மேல் கேள்வி கேட்ட.. அனைத்திற்கும் பொறுமையாய் பதிலளித்தான்.. இறுதியில் ...

'பெஸ்ட் ஆப் லக்... ஹவ் எ நைஸ் ஜெர்னி ' என்று அவன் பாஸ்போர்ட்டை எடுத்துக்கொண்டு விசா ஆபீஸ் சிரிக்க...

'தேங்க்ஸ்' என்றான்...

தனக்கு விசா கிடைத்து விட்டதை.. அப்பொழுதே தெரிந்து கொண்டான். வெளியில் வந்தவன்.. தன் அப்பாவுக்கும், நண்பர்களுக்கும், முக்கியமாக கீர்த்தனாவுக்கும் போனில் கூறி தன் மகிழ்ச்சியை தெரிவித்தான்..

'காங்க்ராடஸ் .. கார்த்தி.. '

'கார்த்தி... கண்டிப்பா போகத்தான் வேண்டுமா... '

'எனக்கும் தான்... உன்ன பாக்காத வரைக்கும்.. பழகாத வரைக்கும்... நானும் கவல இல்லாம தான் இருந்தேன்.. ஆனா .. இப்ப.. எனக்கும் கஷ்டமா இருக்கு.... கொஞ்ச நாள் தானே...அதுக்கப்புறம்.. எப்பவும் நான் உன் கூடவே இருப்பேன்..'

'சரிடா..'

வார்த்தை சரி என்றாலும்... குரலில் தெளிவற்ற .... அழும் தோரணை இருந்ததை கார்த்தி கவனிக்கத் தவறவில்லை ..

மாலை வரை அங்கேய இருந்து.. விசா ஸ்டாம்ப் ஆனா பாஸ்ப்போர்ட்டை கையேடு வாங்கிபடியே வீட்டடைந்தான்..

கார்த்தியின் அம்மாவின் முகத்தில் மகிழ்ச்சியும் தயக்கமும் ஒரே நேரத்தில் பரவ... தன் மருமகளைப் பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சி ஒருபுறமும்... தன் மகன் தேர்ந்தெடுத்த பெண் எப்படி இருக்கப் போகிறாளோ என்ற தயக்கம் ஒருபுறமும் தோன்ற..தன்னை ஒரு படி அதிகமாகவே அலங்கரித்துக் கொண்டாள்..

'அம்மா.. வாம்மா கிளம்பலாம்..' கார்த்தி தன்னை ரெடி செய்து கொண்டு மாடியிலிருந்து கிழே இறங்க...

'இருடா... ' என்றவள்.. கண்ணாடியில் தன் முகத்தை ஒரு தரம் பார்த்துக் கொண்டு வர..

இருவரும்.. கோவிலுக்குச் சென்றனர்.. அப்பொழுது மணியோ.. ஐந்தை நெருங்கிக் கொண்டு வந்தது, இருவரும் கோவிலில் உள்ள பிள்ளையாரை வழிபாட்டு.. பின்னர் அங்கிருந்த பிரகாரத்தில் நின்றவண்ணம் .. கீர்த்தனாவின் வருகைக்காக காத்திருந்தனர்..

'கார்த்தி.. கண்டிப்பா வருவாளாடா..'

'வருவாம்மா...' அம்மா கேட்டவுடன்... கார்த்திக்கும் சந்தேகம் வந்துவிட்டது.. தன்னிடம் கண்டிப்பாக வருவதை நேற்றே உறுதிப் படுத்திக் கொண்டு தான் இன்று அம்மாவைக் கோவிலுக்கு அழைத்துக் கொண்டு வந்தான்..

கோவிலின் அருகே ஒரு ஆட்டோ வர.. அதிலிருந்து கீர்த்தனா இறங்கி கோவிலினுள் உள்ளே வந்து... சுற்றும் முற்றும் பார்த்தாள்...

கார்த்தி நிற்பதைக் கண்டு.. அவன் அருகில் வர..

கார்த்தியின் கண்களாலே நம்பமுடியவில்லை.. நேற்று வரை... சுடிதார் அணிந்து வருவதாகச் சொன்னவள்..

இன்று.. சந்தனக் கலரில் சேலை உடுத்திக் கொண்டு.. அதற்கு மாட்சாக .. காதணியும்.. பொட்டும்.. தலைக்கு கிளிப்பும் அணிந்து கொண்டு.. ஜீரோ சைஸ் இடையுமாய்.. அப்பொழுதான் தலை குளித்து வந்தவளாய் இருக்க வேண்டும்.. தலையிலிருந்து லேசான ஷாம்பின் நறுமணமும்... அவள் மேனியில் போட்டிருந்த லாவெண்டர் வாசமும்..ஆட்டோவில் வந்த வியர்வை நாற்றமும் கலந்து ஒரு புதுவிதமான வாசத்தைத் தந்தது.. தலையை லேசாக விரித்து போட்டு.. தலையில் மூன்றடுக்கு மல்லிகைப் பூவைச சூடி.. கழுத்தில் ஒரு மெல்லிய செயினுமாய்.. அவளே சந்தன நிறத்தில் இருந்ததால்.. இடைப் பிரதேசம் எதுவென்று தெரியாதவாறு.. ஆடையும்.. உடலும்.. ஒரே நிறத்தில் இருக்க.. மேலாடை விலகாதவாறு இருக்க முன் எச்சரிக்கையாய்.. பல இடங்களில் பின் குத்தி இருந்ததை காண முடிந்தது..

ஆபீசில் பார்த்த கீர்த்தனாவா... கார்த்தியால் நம்பவே முடியவில்லை..

'அம்மா.. கீர்த்த்தனா.. '

'வாம்மா.. எப்படி இருக்கே..'

'நல்லா இருக்கேன்.. நீங்க ..' என்றவள் பதிலுக்கு காத்திராமல்.. அம்மாவின் காலில் விழுந்து ஆதிர்வாதம் வாங்க குனிய...

'இதெல்லாம் எதுக்கும்மா... எழுந்திரு... நல்ல இரு...' அவள் தலையில் கை வைத்து ஆசிர்வதித்து.. அவளை இரண்டு கைகளாலும் தூக்கி நிறுத்தினாள் அம்மா..

'கார்த்தி சொன்னான் . உன்ன பத்தி.. உனக்கு கார்த்தியைப் பிடிச்சிருக்கா..'

'ம்ம்ம்' என்றாள் ஒற்றைச் சொல்லாள்..

'அம்மா.. அப்பா.. எப்படி இருக்காங்க..'

'நல்ல இருக்காங்க ஆன்ட்டி... அங்கிள் எப்டி இருக்கார்.. .' தானும் கேட்கவேண்டும் என்று கேட்க ..

'நல்லா இருக்கார்ம்மா..'

வாங்க... முதல்ல சாமியப் பாத்திட்டு வந்திடலாம்.. அப்புறமா பேசலாம்.. ' சொல்லியபடி முன்னே செல்ல..

'என்ன கீர்த்தானா .. நீ சாரீல வருவேன்னு சொல்லவே இல்ல.. அதுவும் இல்லாமா..அம்மா காலில எல்லாம் விழுந்து.. ரொம்ப செண்டிமெண்டா டச் பண்ற..'

'உஷ்... ஆன்ட்டி...பாக்கறாங்கா.. ' சொல்லவே... கார்த்தி பயந்து போய் விலக ..

'களுக்.' என்று மனதிற்குள் சிரித்துக் கொண்டாள்
.
'அப்புறமா உன்ன கவனிச்சிக்கிறேன்....' கைவிரலை ஆட்டியபடி. கார்த்திக் அம்மாவைப் பின் தொடர்ந்தான்..

தீபாராதனை முடிந்த பின்னர்.. கோவில் பிரகாரத்தைச் சுற்றி விட்டு.... ஒரு ஓரத்தில் அமர்ந்து.. சிறிது நேரம் இரு குடும்பங்களையும் பற்றி பேசிவிட்டு.. ..

'கார்த்தி... நான் வேணா.. ஆடடோவில வீட்டுக்கு போய்டறேன்.. கீர்த்தனாவ.. பைக்கில கொண்டு போய் ஹாஸ்டல்ல விட்டுட்டு வந்திடு..'

'வேணாம் ஆன்ட்டி... நானே தனியா போய்டறேன்..'

'இல்லம்மா... நீ போறதுக்குள்ள இருட்டிடும்.. எனக்கு வீடு பக்கத்துல தான்.. நான் எப்பவும் கோவிலுக்கு தனியா தான் வருவேன்.. கார்த்தி கொண்டு போய் விட்டு உடனே வந்திடு ..'


இது தான் பழம் நழுவி பாலில் விழுந்து அது நழுவி தன வாயில் விழும் என்று சொல்வார்களோ . கார்த்தி தனக்குள் சிரித்துக் கொண்டான்..

கார்த்திக் தன் பைக்கை கோவில் வாசலில் கொண்டு வந்து நிறுத்த... கீர்த்தனா அவன் பின்னால் அமர்ந்து ...

'வரேன் ஆன்ட்டி...அங்கிள கேட்டதாச் சொல்லுங்க..'

கார்த்தி வண்டியை விரட்ட.. கோவில் மறையும் வரை பொறுமை காத்தவன்..

'கீர்த்தனா.. போற வழியில... எலியட்ஸ் பீச் போயிட்டு .. அப்புறம் ஹச்டேல் கொண்டு போய் விடரேனே..'

'சரி.. பீச்ல கொஞ்ச நேரம் தான் இருக்கணும்...'

'சரி..' என்றவன்..எலியட்ஸ் பீச் என்றழைக்கப்படும் தற்போதைய திருவான்மியூர் பீச்சை அடைந்தான். .

சனிக்கிழமை ஆனதால்.. ஒரே கூட்டம்.. பைக்கை ஓரிடத்தில் நிறுத்தி...அவளுடன் கை கோர்த்தபடி நடக்க.. கடல் காற்றும்... புடவை அணிந்து பழக்க மில்லாத காரணத்தினால்.. சேலையும் காலில் அடிக்கடி சிக்க.. நடக்க சிரமமாப்பட்டாள்.. அவளின் கால் செருப்பில் சிக்கிய மணல்... சேலையிலும்.. அவன் மேலும் விழ...

'அப்பா. எனக்கு அந்த பலூன் வேணும்..' குழந்தை ஒன்று தன் அப்பாவை நச்சரிக்க..

'உங்க அம்மா பண்றது கொஞ்சம் கூட நால்லாவே இல்ல.. எனக்கு தனிக் குடித்தனம் போயடலாம்ம்னு தோணுது..' மனைவி தன் கணவனிடம் வற்புறுத்த..

'கார்த்தி... உன்ன விட்டு பதினெட்டு மாசம் எப்படி இருக்கப் போறேனோ...'

'ஒன்னு.. ரெண்டு..மூணு..இப்படி எண்ணிட்டே இரு... பதினெட்டு மாசமும் தன்னால போய்டும்...'

'வீட்ல தான் பசங்க தொந்தரவுன்னா.. இங்க நீங்க வேறையா.. ' சுண்டல் காரனை ஒருவன் விரட்டிக் கொண்டிருந்தான்...
'விளையாடதடா... தினமும் உன்ன பார்த்த்து .. சண்டை போட்டு... பேசிட்டு.. பாக்காம இருக்கிறது... எவ்வளவு கஷ்டம் தெரியுமா..'

'இன்னிக்கு ஷேவ் பண்ணலையா.. குத்துது...' பக்கத்திலிருந்து ஒரு பெண் குரல்

'அமெரிக்காவில் இருந்து வந்ததும்.. ஏர்போர்ட்லே... உனக்கு தாலி கட்ட நான் ரெடி..... காதல்ன்னு ஒண்ணு இருந்தா பிரிவு இருக்கும்.. பிரிவு இருந்தா தான் பழசு எல்லாம் நினைவுக்கு வரும்.. அப்பத்தான்.. ஒருத்தர் இன்னொருத்தர் மேல வச்சிருக்கிற பாசம் உறுதிபடும்.. ...'

'அய்யா...சாமி.. போதும்..உங்க பிரசங்கம்... '

'கரை மேல் பிறக்க வைத்தாய்... எங்களை... கண்ணீரில் மிதக்க வைத்தாய்... .. கட்டிய மனைவி... தொட்டிலில் பிள்ளை.. உறவை கொடுத்தவன் எங்கோகோகோகோ ........ ' தூரத்தில் எங்கோ டிஎம்ஸ் பாடிக்கொண்டிருந்தார்..
. ..
'எப்ப... வேலைய ரெசின் பண்ணபோற..'

'இன்னிக்கு இது போதும்.... வீட்டுக்கு போகணும்...அவர் வீட்டுக்கு வந்திடப் போறாரு...' ஒரு குரல்..

'நாளைக்கே கொடுத்திடலாம்னு இருக்கேன்...'

'மாமி.. ரசம் வக்கரச்சே.. ரெண்டு சொட்டு... எலுமிச்சம் சாறு பிழிஞ்சி விட்டேள்ன்னு வச்சுக்கோங்க... ஊரே கமகமக்கும்..'

'உங்க அம்மா... நல்லா பேசினாங்க.. எனக்கு பிடிச்சிருக்கு..'

'ம்ம்ம்..'

'உனக்கு யாரைப் பிடிக்கும்... மம்மியையா... டாடியையா.. கையைக் காட்டு...'
ஒரு தம்பதியினர் குழந்தையை நச்சரிக்க .. குழந்தையோ .. ஐஸ் வண்டியை நோக்கி தன கையைக் காட்டியது...

'உங்க அப்பா.. எப்படி... '

'அப்பாவும் நல்லவரு தான்.. பாக்க முரட்டு தனமா தான் இருப்பாரு... ஆனா மனசு குழந்த மாதிரி..'
'சிக்னல் சரியா கேக்கல... இன்னும் ஒரு மணி நேரத்தில ஸ்பெஷல் கிளாஸ் முடிஞ்சிடும்... நேரா வீட்டுக்கு வரேன்..' தன் மடியில் சாய்ந்திருக்கும் வாலிபனின் கன்னத்தைத் தடவியபடி.. .துப்பட்டாவால் முகத்தை மூடிய இளம்பெண் யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள்.

பேசிக்கொண்டே . கடல் அலை வரை வந்து விட...
சிறிது நேரம் காலை நனைத்தவாறு.. இருவரும் ஓடிப் பிடித்து விளையாட..

'கீர்த்தனா.. இன்னிக்கு... பௌனர்ணமின்னு நெனக்கறேன்..'

'எப்படி சொல்ற...'

'அலை ரொம்ப மேலே எழும்பி வீசுதே..'

'பௌர்ணமின்னா அலை ரொம்ப வீசும்மா..'

'இது தெரியாதா.. பௌர்ணமி அன்னிக்கு நிலா.. பூமி கிட்ட வரதால... கிராவிடி அதிகமாகி... அது பூமியை இழுக்கும்.. அதனாலா. எப்பவும் வீசுற அலையை விட..பௌர்ணமி அன்னிக்கு அலை ரொம்ப மேல எழும்பும்...'

'ஒ.. அப்படியா... கொஞ்சம் தலை திருப்பி... இந்த பக்கம் பாரேன்..'

என்றவள்.. அவன் தலை திருப்பி வானத்தைக் காண்பிக்க.. மேல ஒரு அரை நிலா வானத்தில் ஜொலித்துக் கொண்டு இருந்தது...

'கீர்த்தனா. அது வந்து... நான் .. முழு நிலவுன்னு சொன்னது... உன்னதான்.. பௌர்ணமியா.. நீ இங்க இருக்கறச்சே..... அதான் உன்னோட கிராவிடியால.. அலை எல்லாம் மேலே எழறது..'

'ஹலோ.. போதும்...துடைச்சிக்குங்க.. ரொம்ப வழியது....'

ஒரு பெரிய அலை வர.. அவள் மார்பு வரை அலை எழும்பி.. ஆடை முழுவதையும் நனைத்துவிட்டது.. ..

'போதும்.. கார்த்தி.. டிரஸ் எல்லாம் நனஞ்சிப் போச்சு... கொஞ்ச நேரம் உக்காந்து பேசிட்டு போகலாம்... '

இருவரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டே.. ஒரு படகின் அருகில் சாய்ந்தவாறு மிக நெருக்கத்தில் அமர...
கடல் காற்று... நனைந்த துணிகளில் பட்டு.. உடம்பெங்கும் ஈரத்தையும் குளிச்சியையும் உண்டாக்க..

'கீர்த்தி.. இடுப்புக்கும் துடுப்புக்கும்... என்ன வித்தியாசம்..என்ன ஒத்துமை. இருக்கு' .

'ரெண்டுக்கும் என்னடா சம்பந்தம் இருக்கு.. வித்தியாசப் பட..'

'இருக்கு சொல்லேன்...'

சிறிது நேர யோசிப்புக்கு பின்
'எனக்கு ஒண்ணும் தெரியல.'

'சொல்லவா..'

'சொல்லேன்... மொக்கையா இருந்தது... அப்படியே.. உன்ன கடலல தூக்கி போட்டுடுவேன்..'

'அம்மா.. தாயே.. நீ போட்டாலும் போட்டுடுவே.. நான் சொல்லல.'

'அட. சரியான தொடை நடுங்கியா இருக்கே.. சும்மா சொல்லுடா..'

'துடுப்புக்கு.. மடிப்பு இருக்காது.. இடுப்புக்கு.. மடிப்பு இருக்கும்...'

'ரொம்பத்தான் மொக்க போற... அப்புறம்.. என்ன ஒத்தும இருக்கு..'

ஒத்துமையா.. என்றவன்...

'ஏய். கை ஏன் இடுப்புக்கிட்ட வருது..... ' இடுப்பிலிருந்த அவன் கையை விலக்க..

அதற்குள்... அவன் அவளின் இடுப்பைச் சுற்றி வளைத்து.. அவள் கன்னத்தில் அருகே... தன் கன்னத்தை உரசி.. அவனின் மூச்சு காற்று.. அவளின் மூச்சு காற்றுடன் கலந்து... அவளுக்கு கிறக்கத்தை உண்டாக்கி.. உடம்பு சூடாகி.. உணர்ச்சிகள் மேலோங்கி.. உணர்வின் ஆசியுடன். இதழும் இதழும் இணைந்து கவிதை எழுதத் துவங்க.. முத்தம் என்ற மௌனயுத்தம் சத்தமில்லாமல் அங்கு நிறைவேறியது.. கீர்த்தனாவுக்கு அந்த முதல் ஸ்பரிசம்.. ஒரு இனம் புரியாத இன்பத்தை தர.. அவளால் மறுக்கவோ.. தூர விலகவோ தோன்றாமல்..

அன்று தியேட்டரில் தவற விட்ட முத்தத்தை.. இன்று அவளின் சம்மதத்துடன்.. கடல் காற்றின் குளிருக்கு ஏற்ப வெப்ப ஒத்தடமாய்.. சங்கமத்திற்கு முன் . மங்கள இசையாய்.. ஒரு அழகிய காதல் விளையாட்டிற்கான ஒப்பந்தம்.. முத்த கையொப்பம்மிட்டு நிறைவேற்றப்படுகிறது..

உலகில்.. கூடல் இல்லாத காதல் இருக்கிறது... ஊடல் இல்லாத காதல் இருப்பதாய் சரித்திரம் இல்லை.. கார்த்தியும் .. கீர்த்தியும்... இந்த கூடலுக்கு பிறகு... ஊர் கண் பாட்டதோ.. யார் கண் பட்டதோ.. அடுத்த இரண்டு நாட்களில்... இருவரும் ஒரு உப்பு பெறாத விஷ்யத்திற்காக ஊடல் வந்தது என்றால் ஆச்சிரியமாய் இருக்கிறதல்லவா.. அது என்னவென்று பார்ப்போம்...


------- to be continue...

rishvan
08-01-2013, 04:53 AM
கீர்த்தனா-என் தோழி, என் காதலி, என் மனைவி(7)
*******************************************
உன் சமையலறைக்குள் நுழைந்து
இடுப்பை சுற்றி வளைத்து
முத்தமழை பொழியும்போது
சுற்றும் முற்றும் பார்த்தாயே ஒழிய
சத்தம் போடவில்லையே
உனக்கும் காதல் தீ
பற்றிக்கொண்டதோ!
- ரிஷ்வன்
***************************************
புதுச்சேரி... கீர்த்தனாவின் வீடு...
கீர்த்தனாவின் அப்பா... அம்மா..அக்கா உஷா.... ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு ஹாலில் அமர்ந்திருக்க... குழந்தை கிருத்திகா .. பார்பி பொம்மைக்கு தலை வாரி விட்டுக் கொண்டு ஒருபுறம் அமைதியாய் விளையாடிக் கொண்டிருந்தாள்..

'அது தான் சம்மந்தி வீட்டுல பேசி.. சமாதானம் ஆயிடுச்சே.. இன்னும் என்ன யோசனை உங்களுக்கு... மாப்பிள்ளை தான் பொண்ண அனுப்பச் சொல்லிட்டாரே.. சீக்கிரம் ஆகா வேண்டியத பாருங்க..'

அனைவரின் மௌனத்தையும் கலைத்தாள் கீர்த்தனாவின் அம்மா..
'அம்மா.. இனிமே நான் அவர் கூட போய் குடும்ப நடத்த முடியாதும்மா...அவர் நம்ம குடும்பத்த பத்தி என்னென்ன பேசினாருன்னு உனக்கு தெரியுமா.. எனக்கு சொல்லவே கூசுது...'

உஷா.. கோப கனலைக் கொட்ட..

'உஷா... கொஞ்சம் அமைதியா இரு... குடும்பமும் ஒண்ணு இருந்தா பிரச்சனை இருக்கத்தான் செய்யும்.. அதுக்காக... இப்படி.. ஒரு பொண்ணு பொறந்த வீட்டிலே நீ இருந்தா.. ஊர் உலகத்தில என்ன பேசுவாங்க.. '

'எவ்வளவு கேவலாமா நடந்துக்கிட்டாறு தெரியுமா.. '


'நாம பொண்ணு வீட்டுக்காரங்க... கொஞ்சம் அனுசரிச்சித் தான் போகணும்.. என்னங்க.. அவ பேசிட்டே போறா.. நீங்களாவது கொஞ்சம் எடுத்து சொல்லக்கூடாதா...'

'நான் என்ன சொல்றது பங்கஜம்.... எனக்கு கூட மாப்பிள்ளை மேல கோவம்தான்... இன்னிக்கு விரட்டி அனுப்பிச்சவரு.. நாளைக்கு வேறேதும் செய்ய மாட்டருன்னு என்ன நிச்சியம்.. அதான் கொஞ்சம் யோசிக்கிறேன்..'

'அதுக்காக.. இப்படியே... பொண்ண வீட்லே வச்சிட்டு இருப்பிங்களா.. அதான் அனுப்பி வையுங்கன்னு சொல்லிட்டாரே.. டிக்கெட் எடுத்து சீக்கிரம் அனுப்பி வைக்கிற வழியப் பாருங்க..'

'அம்மா.... நான் போக மாட்டேன்...'

'ஏண்டி.. போகமாட்ட.. நீ இதுக்கே இப்படி சொல்றியே... அந்த காலத்திலே... உங்கப்பா செய்யாததாயா.. மாப்பிள்ள செஞ்சிட்டாரு...'

'எதுக்கு இப்ப.. பழைய கதைய எல்லாம் நோண்டற.. ' அப்பா தன குட்டு வெளிப்பட்டு விடும் என்று பயந்து ..

'பழச சொன்னா உங்களுக்கு பொத்துக்கிட்டு வருதா.. என் தம்பி கல்யாண பத்திரிக்கையில .. இவரு பேரு போடும்போது... அவர் படிப்புல.. ஒரு டிகிரி மறந்திட்டாங்கன்னு... என்ன அப்பவே பொறந்த வீட்டுக்குப் போடின்னு அனுப்பினவராச்சே ..'

'அம்மா... இந்த கதையே கேட்டு கேட்டு எனக்கு காதே புளிச்சுப் போச்சு..'

'நான் சொல்றது கேளு உஷா.. உனக்கு அடுத்து கீர்த்தனா இருக்கா.. நீ இப்படியே அடம் பிடிச்சி இருந்தா.. அவள பொண்ணு பாக்க வரவங்க என்ன நினைப்பாங்க...'

'அம்மா.. ஊருக்கு போலாமா. . எனக்கு இங்க போர் அடிக்குது.. அப்பா எனக்கு பர்கர், ஹாட் டாக்.. அப்புறம் பார்பி டால்ஸ எல்லாம் வாங்கித் தருவரு..'

குழந்தை கிருத்திகா... அம்மாவிடம் சொல்ல..
'பாரு... கொழந்த கூட அப்பாவ பாக்கணும்ன்னு சொல்லுது... '



'சரி .. உன் இஷ்டப்படியே ஆகட்டும்.. டிராவல் ஏஜேன்ட் கிட்டச் சொல்லி டிக்கெட் புக் பண்ணச் சொல்றேன்...'

வேண்டா வெறுப்பாக சம்மதித்தாள் உஷா..

'அப்பா..எனக்கு ஒரு ஆசை... .'

'சொல்லும்மா..'

'கீர்த்தானவுக்காவது... அந்தஸ்து... பணம்.. வசதி பாக்காம... அவ விருப்பட்ட மாப்பிள்ளையா பாருப்பா..'

'அமாங்க... இவளுக்கு சொந்தத்தில கொடுத்தும்.. இப்படி ஆயிடுச்சே... '

'என்னது.. ஆள் ஆளுக்கு சொல்றத பார்த்த... அவ எவனையோ காதலிக்கிற மாதிரி தெரியுது...'

'அப்படி சொல்லலீங்க.. '

'பின்ன... அவளே எனக்கு இந்த பையன் தான் வேணும் சொல்லட்டும்.. அவன் ஒழுங்காணவனா இருந்தா போதும்.. முடிச்சிடலாம்..'

பங்கஜத்துக்கு... இப்பொழுதான் நிம்மதி வந்தது..எப்படியோ.. சொல்லவேண்டியதை சொல்லி.. அவரிடமே சம்மதம் வாங்கியாகிவிட்டது...

'அப்புறம் ஒரு விஷயம்..'

'என்ன சொல்லு...

'இவ அமெரிக்கா போறதுக்குள்ள ஒரு தடவ சென்னைக்கு போயி.. பேத்திக்கும் உஷாவுக்கும் நகையும்... துணிமணியும் எடுத்திட்டு வரலாமுங்க.. '

'இங்க இல்லாததா.... சென்னைக்கு ஏன் போகணும்...'

'சின்னவ... அங்க இருக்கா... அப்படியே.. அவள பார்த்த மாதிரியும் இருக்கும்.. அப்புறம் திநகர் போனா.. ஒரே எடத்துல எல்லாத்தையும் எடுத்திட்டு வந்திடலாம்..'

'சரி.. சரி... நீங்களே போயிட்டு வந்திடுங்க... '

'அப்பா நீங்க வரலையா..'

'நான் எதுக்கு... எனக்கு ஏகப்பட்ட வேல இருக்கு..'

பங்கஜம் எதிர்பார்த்த மாதிரியே.... அவரும் வரவில்லை... சென்னைக்கு சென்ற மாதிரியும் ஆச்சு... கார்த்தியைப் பார்த்த மாதிரியும் ஆச்சு.. அப்படியே உஷாவும் பார்த்து விட்டாள்.. அடுத்து இவரை எப்படியும் சமாளித்து விடலாம்.

கார்த்தியின் அம்மாவை தான் பார்த்ததை கீர்த்தனா ஏற்கனவே அம்மாவிடம் கூறியிருந்தாள்.

தாங்கள் போட்டத் திட்டம் வெற்றியடந்ததை நினைத்து பங்கஜமும் உஷாவும் தங்களுக்கு மகிழ்ந்தனர்.

அந்த கடற்கரை நிகழ்வுக்குப் பிறகு..அடுத்த இரண்டு தினங்கள் அவனிடம் பேசவே கூச்சப்பட்டாள் கீர்த்தனா.. கொஞ்சம் தலையை தாழ்த்தியும்... நேரில் பார்க்க அச்சப்பட்டும் இருக்க... இது தான் அச்சம், மடம், நாணம்.. பயிர்ப்பு என்ற குனாதிசியங்களோ.. என்று நினைத்துக் கொண்டு கார்த்தி இருக்க..

கீர்த்தனாவிடம் கூறியபடியே... மறுநாள் தன் ராஜினாமா கடிதத்தை ஆபீசில் கொடுத்துவிட்டான்...

'மாப்ள.. எப்படா . எங்களுக்கெல்லாம் ட்ரீட் வைக்கப்போறே..'

'வெறும் லஞ்ச்.. டின்னெர் மட்டும் பத்தாது... சரக்கும் வேணும்... '

'மச்சான்... என்னோட கார்ல... பாண்டிச்சேரி போயடுலாம...'

'பெரிய ட்ரீட்டா இருக்கணும்... கீர்த்தனாவே வேற கரெக்ட் பண்ணிருக்க...'

'இந்தியாவில கீர்த்தானா... அமெரிக்காவில கிறிஸ்டியானாவா.. . .உனக்கு உடம்பெல்லாம் மச்சம்ம்டா..'

நண்பர்களின் கேலியும், கிண்டலும், அன்புத்தொல்லைக்கும் ...


'கண்டிப்பா... தரேண்டா..'

நண்பர்களின் கலாட்டக்கள் ஒருபுறம் இருக்க..

மறுநாள்... அப்படி ஒரு ஆவேசம் கீர்த்தனாவிடம் வெளிப்படும் என்று அவன் கனவிலும் நினைத்து பார்க்கவில்லை..

'கார்த்தி.. யாரு அந்த ரம்யா..'

'ரம்யாவா.. அதுவா.. என்னோட...' வாய் திறப்பதற்கு முன் ...

'பேஸ்புக்ல ரம்யான்னு ஒரு பொண்ணு.. உன்னோட போட்டவ பாத்து அடிக்கடி கமெண்ட் பண்றா'

'அது வந்து.. பெங்களூர்ல ஒண்ணா வேலை செஞ்ச பொண்ணு'

'உன்னோட பழைய காதலியா..'

'அப்படி எல்லாம் இல்ல...'

'என்கிட்டேயே... பொய் வேற சொல்றியா.. ஏற்கனவே...ஜெனி.. இப்ப ரம்யாவா..'

'சொன்னாக கேளு... ஜஸ்ட் பிரெண்ட்ஷிப் தான்..'

'என்ன நம்பச் சொல்றியா.. உன்னபத்தி எனக்கு தெரியாது....நானும் கவனிச்ட்டு தான் வரேன்.. எத்தன தடவ உன்னோட போடடோவ பாத்து.. கமெண்ட் பண்ணி இருக்கா தெரியுமா ...'

'உன்னோட பேஸ்புக்ல மட்டும்... 45 பொண்ணுங்க... 22 பையனுக .. இதுவும் இல்லையின்னு சொல்லி .. என்ன நம்பச் சொல்றியா...'

'கீர்த்தி.. அதெல்லாம் முன்னாடி இருந்தே என்னோட பிரெண்ட்ஸ்ஸா இருக்காங்க..'

'போதும்.. உன்ன போய் நல்லவன்னு நெனெச்சேன் பாரு.. நீயும் மோசமானவன்னு தெரிஞ்சிபோச்சு... என கூட இனி பேசாத...'



'அதெல்லாம் ஒண்ணும் இல்ல கீர்த்தனா. என்ன நம்பு...'

அவன் பேசப் பேச... அவள் விடுவிடுவென்று.. சென்று விட்டாள்... அதற்குப் பிறகு.. அவன் பேச முயறசசித்தும் . அவள் பேசவே இல்லை...

இரண்டு நாள்.. மூன்று நாள்.. ஒரு வாரம்... அவள் ஆபீஸ் வருவதும்... கார்த்தி அவளிடம் போய் பேசுவதும் ... அவள் முகத்தை திருப்பி கொள்வதுமாய் சென்று கொண்டிருந்ததே தவிர... பேசுவதாய் தெரியவில்லை...

கார்த்தியும்... எவ்வளவோ சொல்லிப் பார்த்தும்.. அவள் கேட்பதாய் இல்லை...கடைசியில் அவளிடம் உண்மையைச் சொல்லிவிட வேண்டும் என்று முடிவுக்கு வந்தவன்

எதற்கும் இருக்கட்டும் என்றெண்ணி சுமதியிடம் பேசி.. இதை சொல்ல வைக்க வேண்டும் என்று தோன்ற.. அவளைத் தூது அனுப்ப நினைத்து ... சுமதியிடம் நடந்தவற்றைக் கூறி...

'சுமதி.. நீதான்.. கீர்த்தனாகிட்ட சொல்லிப் புரிய வைக்கணும்..'

'அதுக்கென்ன.. நானே சொல்றேன்... ஆனா நீ சொன்ன மாதிரி இல்லாம . கொஞ்சம் மாத்தி சொல்றேன்.. அப்பத்தான் அவ நம்புவா..'

'என்ன சொல்லப்போற..'

'கீர்த்தனா கிட்ட பேசிட்டு அப்புறம் சொல்றேன்.. அதுக்கு முன்னாடி அவசப்பட்டு அவகிட்ட ஏதும் சொல்லிவிடாதே...'

சுமதி என்ன மாய மந்திரம் செய்தாளோ தெரியவில்லை.. மறுநாள்...

'சாரி..கார்த்தி.. உன்ன பத்தி.. தப்பா புரிஞ்சிக்கிட்டேன்..'

'நான் தான் அப்பவே சொன்னேனே.. நீதான் நம்பள...'

'என்னமோ தெரியல.. நீ வேற அமெரிக்கா போகப் போற.. இதுக்கு முன்னாடி உனக்கு லவ் பெயில்.. எல்லாம் போட்டு கொழம்பிப் போய் தான்.. அப்படி பேசிட்டேன்..'



'ஒரு வாரமா எதிர் எதிர் பாத்துக்கிட்டும்... பேசமா இருந்தது ..அப்பப்பா. . எதிரிக்கும் இந்த சோதனை வரக்கூடாது '

'ஆமாம் கார்த்தி.. பாவம் ரம்யா.. அவ வேலைக்கு சேர்ந்ததுமே . அப்பாவும் அம்மாவும் ஆக்சிடென்ட் ஆகி இறந்ததும்... யாரும் அவளுக்கு உதவாம இருந்தப்ப.. நீதான் ஆறுதலா இருந்தாயாம்.. '

'பாவம்.. எப்படி துடிச்சி இருந்திருப்பா ..'

கார்த்தி மனதுக்குள் சிரித்துக் கொண்டான். கீர்த்தனா என்னிடம் பேசியதுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் பொய் சொல்லாம.. தேங்க்ஸ் சுமதி..

'ஆனாலும் ஒரு கண்டிஷன்..அப்பத்தான் உன்ன நம்புவேன்.'

'மறுபடியுமா .' அதிர்ந்தான்..

'நீ பேஸ்புக் அக்கௌன்ட் குலோஸ் பண்ணிடனும்...'

'நீ என்கிட்டே பேசினதே போதும்... பேஸ்புக் , ட்விட்டர், இன்னும் யாகூ, கூகுள் . எல்லா அககவுன்ட்டையும் குலோஸ் பண்ணிடறேன்.. .'

கீர்த்தனா சிரித்தே விட்டாள்...

'இந்த ஒரு வாரம் உன்கிட்ட.. பேசாம இருந்ததுல.. ஒரு விஷயத்தை சொல்ல மறந்திட்டேன்...'

'என்ன ..'

'மாமா கூட சமாதானம் ஆகி.. அக்கா.. கூடிய சீக்கிரம்.. அமெரிக்கா போகப் போறா..'

'நல்ல விஷயம் ... ரொம்ப சந்தோஷமா இருக்கு..'

'இன்னொரு விஷயம் .. அம்மாவும்.. அக்காவும்.. சென்னைக்கு வராங்க...'

'ஏன்...'


'ஷாப்பிங் பண்ண.. அப்ப.... அம்மாவையும்.. அக்காவையும் உனக்கு அறிமுகப் படுத்தப்போறேன்...'

'சரி கீர்த்தி.. உங்கப்பா வரலையா...அவருக்கு தெரியுமா...என்னப்பத்தி.. .'

'அவருக்கு தெரியாது.. ஆனா... என்னோட காதலுக்கு சம்மதம் சொல்லிட்டாருன்னு அம்மா சொன்னாங்க...'

அப்படியே அவளை தூக்கி தட்டாமாலை சுற்ற வேண்டும் என்று தோன்றியது... ஆபீஸ் என்பதால்... கையைக் கட்டிக் கொண்டான்..

சனிக்கிழமை... விடுமுறை...தூங்கிக்கொண்டு இருந்தான்... மொபைல் போன் சிணுங்க..

'கார்த்தி..அம்மாவும்.. அக்காவும்.. சென்னைக்கு வந்திருக்காங்க... ஒரு பத்து மணிக்கு திநகர் வாயேன்...'

'சரி..வரேன்..'

அவசர அவசரமாய் குளித்து... கிளம்ப..

'இன்னிக்கு சனிக்கிழமை.... மறந்திட்டு ஆபீஸ் கிளம்பிட்டியா..'

'இல்லம்மா... ஆபீஸ்ல வேல இருக்கு.. புதுசா.. என்னோட இடத்துக்கு ஒருத்தர் வந்திருக்கார் .. அவர்கிட்ட என்னோட பொறுப்ப ஒப்படைக்கணும் இல்ல.. அதான்.. '

மறுபடியும் பொய்... காதல் வந்தால்.. பொய்யும் பெய்யனப் பெய்யும்... மழையாய் போல..

நல்லியில் இருப்பதாய் கீர்த்தனா சொல்ல.. நல்லியில்.. பட்டு புடைவைகளின் நடுவில்.. பட்டாம்பூச்சியாய் அவளைக் கண்டான்..

'அம்மா.. இவர்தான் கார்த்தி..'

'வணக்கம்..' கைகூப்பினான்... புடவை தலைப்பை சரிசெய்தாள் பங்கஜம்...



'எப்படி இருக்கீங்க..'

'நல்ல இருக்கேன்...'

'என்னோட அக்கா .. உஷா.. கிருத்திகா.. அக்கா பொண்ணு..'

மறுபடியம் வணக்கம்.. மறுபடியும் எப்படி இருக்கீங்க...மறுபடியும்.....

'கீர்த்தனா சொன்னா .. உங்கள பாத்ததுல ரொம்ப சந்தோஷம்..'

'எனக்கும் தான்... ' சொல்ல நினைத்து வெறும் ம்ம்ம மட்டும் சொன்னான்.

'எப்ப அமெரிக்கா கிளம்பப் போறீங்க..'

'டிக்கெட் கன்பார்ம் ஆனதும் கிளம்பிடனும்..'
.
அவர்கள் புடைவை செலக்ட் செய்ய.. கீர்த்தனாவும் கார்த்தியும் ஓரப் பார்வையிலும் சைகை மொழியிலும் கொஞ்சம் உரசலிலும் உரையாடிக் கொண்டிருந்தனர்..

நல்லி... போத்திஸ்.. குமரன்.. சென்னை சில்க்ஸ்.. ஒவ்வொரு கடையிலும் ஏறி இறங்க..

அடுத்து.. ஜி ஆர் டி தங்க மாளிகை..

'அம்மா.. இந்த நெக்லஸ் நல்ல இருக்கில்ல..'

'நல்லா இருந்தா எடுதுக்கோம்மா..'

'கிருத்திகாவுக்கு.. வெள்ளி கொலுசு..எடுத்துக்கோ..'

'எதுக்கும்மா அவளுக்கு.. அவ அங்க போனா போடவே மாட்ட...'

தேவையானதை எடுத்து முடிக்கும் தருவாயில்...

'மம்மி.. எனக்கு பாத்ரூம் வருது.. ' கிருத்திகா சொல்ல..



உஷா அவளை அழைத்து கொண்டு பின்னாடி போகா..

'உஷா.. நானும் வரேன்... தனியா போகாதே...' அம்மாவும் உடன் செல்ல..

'கீர்த்தனா.. உனக்கு ஏதாவது வேணுமா..வாங்கித்தரேன்..'

'எதுவும் வேண்டாம்...'

'அந்த ஹாடடின் போட்ட சின்ன செயின் எனக்கு பிடிச்சிருக்கு.. எடுத்துக்கோயேன்..'

'வேணாம்பா.. அம்மா பார்த்தா திட்டுவாங்க...'

'இப்ப போட்டுக வேண்டாம்..அப்புறமா போட்டுக்கோயேன்...'

சேல்ஸ்மேனிடம் .. செயினை எடுக்கச் சொல்லி...

'போட்டு பாரேன்.. எப்படி இருக்குதுன்னு..'

கீர்த்தனா அந்த சின்ன செயினின் கொக்கி போடா முடியாமல் தவிக்க..

'இரு.. நானே போட்டு உடறேன்..'

அவன் செயினின் கொக்கியை கீர்த்தனாவின் கழத்தில் பூட்ட...

தேவ லோகபுரியில்.. வானத்து தேவர்கள் எல்லோரும் பூமாலை தூவ... பரமசிவனும்.. பார்வதியும்... விஷ்ணுவும் லஷ்மியும்... பிரம்மாவும் சரஸ்வதியும் தம்பதிகள் சமேதரராய். சூழ்ந்து வாழ்த்த... நாரதர் மந்திரங்களை ஓத... துந்துபிகள் இசைக்கீதங்களை இசைக்க.. கார்த்தி.. கீர்த்தனாவின் கழுத்தில் தாலியைக் கட்டினான்..

கீர்த்தனாவின் மனம் ஒரு கணம் நினைத்து மகிழ்ந்தது....

ஒரு காந்தர்வ திருமணம் அமைதியாய் நடந்து முடிந்தது..


------- to be contiune

rishvan
09-01-2013, 04:36 AM
கீர்த்தனா-என் தோழி, என் காதலி, என் மனைவி(8)
****************************************************************
பிறந்தநாள் பரிசாக
பச்சை புடவையை
பரிசளித்தேன்
'அய்... எனக்கா இந்த புடவை'
ஆச்சரியத்துடன் வினவினாய்
'அய்... எனக்கே இந்த தேவதை'
அகங்காரத்துடன் சொன்னது புடவை.
- ரிஷ்வன்
********************************************************************
சென்னை பன்னாட்டு விமான நிலையம்...

கொண்டுவந்த லக்கேஜை எல்லாம் கிலியெரென்ஸ் செக் செய்து.. போர்டிங் பாஸ் வாங்கி... மறுபடியும் வரிசையில் நின்று... விசா கிலியெரென்ஸ் எல்லாம் முடித்து .. ஒரு வழியாய்.. போர்டிங் ரூமில் சென்று அமர்ந்து கொண்டான்..

கண்களில் புதிய தேசம் போகப்போகிறோம் என்ற எதிர்ப்பார்ப்பும்.. புது கலாச்சாரம்.. புதிய முகங்கள்... புதிய படிப்பு ...இப்படி எல்லாமே புதிது புதிதாக இருக்கப் போவதை எண்ணி ஒரு கணம் பயந்தான்.. திகைத்தான்.. மகிழ்ந்தான்..

போர்டிங் ரூமில் எல்லா வசதியும் இருந்தது.. காபி, டீ, கூல்ட்ரிங்க்ஸ், பீர் எல்லாமும் கிடைத்தது.. விலையும் அதிகமாய்...

மணித்துளிகள் கரையக் கரைய... கோட் சூட் அணிந்த, பட்டு சேலைப் பளபளக்க..ஜீன்ஸ் பண்ட அணிந்த.. நுனி நாக்கில் ஆங்கிலத்தில் பேசி.. தன் ஆங்கிலப் புலமையைக் காட்டிக் கொண்ட.. ஆண்களும் பெண்களும் ஒவ்வோராக வந்து கொண்டு இருந்தனர்..

சிகரட் பிடிப்பதற்கு என்று தனிக கண்ணாடி கூண்டு இருந்தது.. அதில் ஆண்களும்... ஒரு சில பெண்களும் புகையை ஊதியபடி .. கண்ணாடி கூண்டே புகை மண்டலமாய்...


அழகான ஆங்கிலத்தில் . ஒரு பெண் விமானத்திற்குள் ஏறுவதற்கு... எண் வரிசைப்படி அழைத்துக் கொண்டு இருக்க.. ஒவ்வொருவராக விமான காபின் வழியாக சென்று கொண்டிருந்தனர்...

கார்த்தியின் எண் அழைக்கப்பட... உள்ளே சென்றேன்.. மறுபடியும் செக்கிங்... உள்ளே... விமான ஒட்டியும்... ஏர்ஹோஸ்டஸ்.. வரிசையில் நின்று வரவேற்று... அவரவர் அமரும் இடங்களை காட்டிக் கொண்டிருக்க...

எனக்கு விண்டோ இருக்கை கிடைத்தது... கையில் கொண்டு சென்ற சின்ன பாக்கை. ஏர்ஹோஸ்டஸ்.. எடுத்து தலைக்கு மேலே இருந்த காபின் பெட்டியில் வைக்க...அமர்ந்தான்...

ஒவ்வொருவராய் அவரவர் சீட்டில் அமர்ந்து கொள்ள... விமானத்தில்.. காபின் கதவை மூடுவதும் திறப்பதுமாய் சத்தம் கேட்டு கொண்டிருந்தது.. தனக்கு முன் இருக்கையின் பின்புறத்தில் .. சில செய்தி தாள்கள் இருந்தது... ஏனோ மனம் அதில் நாட்டம் கொள்ளவில்லை..

ஒருவழியாக அனைவரும் அமர்ந்த பின்னர்...

அவசர கால நேரத்தில்.. எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை.. ஒலிபெருக்கியில் ஏற்க்னவே பதிவு செய்த பேச்சு ஒலிப்பரப்ப.. . ஒரு அழகான ஏர்ஹோஸ்டஸ் ... பேச்சுக்கு ஏற்ப பரத நாட்டிய முத்திரை பதித்தபடி ... நடித்துக் கொண்டு காட்டிக் கொண்டு இருந்தாள் ..

ஏதோ அழகிப் போட்டியில் கலந்து கொண்டு கேட் வாக் செல்லும் பெண்களைப் போல்.. ஏர்ஹோஸ்டஸ் இங்கும் அங்கும் நடந்த வண்ணம்.. அனைவரின் சீட் பெல்ட்டை சரி செய்து...பெட்டிகளை ஒழுங்காய் அடுக்க உதவியும்.. அடுக்கிக் கொண்டும் இருக்க.. அவர்கள் பேசிய ஆங்கிலத்தில் ஒரு செயற்க்கைத் தன்மையும்..கடைமையும் இருந்ததே தவிர.. முழு ஈடுபாடு இருந்ததாகாக தெரியவில்லை..

பைலட் அனைவரையும் வரவேற்று ... இன்னும் சில நொடிகளில்... விமானம் புறப்படப் போவதை அறிவித்ததுக்கு கொண்டிருக்க...

விமானம் கிளம்பியது... மிக மெதுவாக.. ஒரு நேர்கோட்டில் ஓடி... கொஞ்சம் வேகம் பிடித்தது.. இன்னும் கொஞ்சம் அதிகம் வேகம் பிடித்து... அதிக வேகம் பிடித்து... மெதுவாய் மேலே எழும்ப.. ஒரு பறக்கும் உணர்வு தோன்றியது...


அந்தரத்தில்... மேலே எழும்ப. . சென்னை விமான நிலையத்தின் விளக்குகள்... மேலே இருந்து நட்சத்திரங்களாய்த் தெரிய.. சென்னை சிறிதாகியது.. மேலே எழும்ப எழும்ப... அனைத்தும் மறைந்து... கிழே ஒன்றும் தெரியவில்லை...

'கார்த்தி... எல்லாம் சரியா பேக் பண்ணிட்டியா...பாஸ்போர்ட்.. அட்மிஷ்ன் லெட்டர், அட்ரஸ், ஈமெயில், போன் நம்பர்ஸ் எல்லாம் பத்திரமா..கையோடு வச்சிக்க...எதுக்கும் ரெண்டு மூணு காப்பி எடுத்து.. ஒவ்வொரு பையிலும் ஒரு காபி வச்சுக்க ''

'சரிப்பா...'

'அப்படியே எல்லாத்தையும் எனக்கு ஒரு ஜிராக்ஸ் காபி கொடுத்துடு..'

'சரிப்பா..'

'கார்த்தி.. பெட்டியில... பருப்பு பொடி.. நூடுலஸ்... வத்தகொழம்பு பொடி ... லெமன் ரைஸ் பொடி .. புளியோதரை பொடி .எல்லாம் பாக்கெட்ல வச்சியிருக்கேன்... ஒரு மாசத்துக்கு வரும்...'

'அம்மா.. இதெல்லாம் எதுக்கும்மா... அங்கே எல்லாமே கிடைக்கும்ன்னு .. சொல்றாங்க...'

'அங்க.. வெல அதிகமா இருக்கும்... நீ வேற எதுக்காவது அந்த பணத்த யூஸ் பண்ணிக்கலாமில்லா..'

கார்த்தியை விட.. பெற்றவர்களின் ஆர்வமும்.. அன்பும் .. ஆதரவும் அவனை திக்கு முக்காடச் செய்ய...

புறப்படுவதற்கு முன்.. கீர்த்தனாவை ஒரு முறை பார்த்து விட வேண்டும் .. யோசனை தோன்ற..

சட்டென்று.. பைக்கை எடுத்துக்கொண்டு .. அவளின் ஹாஸ்டலை நோக்கி விரைந்தான்..

ஹாஸ்டல் வார்டனிடன்...கீர்த்தனைப் பார்க்க அனுமதிப் பெற்று காத்திருக்க...



கீர்த்தானா நைட்டியில் இருந்தாள்... எதோ உற்சாகம் குன்றி.. வயிற்றில் கையை வைத்தபடி.. கடினப்பட்டு முகத்தை சிரிக்கச் செய்தாள்..

'கார்த்தி... என்ன இந்த நேரத்தில... இன்னும் பிளைட்க்கு நேரமாகல... சாயந்தரம் தான் பேசிட்டு வந்தோம் ..என்ன அதுக்குள்ள.. '

'பாக்கணும் போல இருந்தது...என்ன .. ஒரே டல்லா இருக்கே...'

'கொஞ்சம் வயித்து வலி.... ரெண்டு மணி நேரம் முன்னாடி பாத்துட்டு போன.. அதுக்குள்ளே வந்திட்ட... இப்படி இருந்தா.. எப்படி அங்க போய் இருப்ப...'

மூன்று விரலைக் காண்பித்து... 'அந்த நாள் வலியா'

'அதெல்லாம் இல்ல.. எப்பவாவுது வயித்த வலிக்கும்.. கொஞ்ச நேரத்தில சரியாகிடும்... இப்ப வலிக்கிறது....'

'என்ன கீர்த்தனா.. ஈசியா சொல்ற.. நீ துடிக்கறது பாத்தா எனக்கு கஷ்டமா இருக்கு.. பெரிய டாக்டர போய் பாக்கவேண்டியது தானே...'

'கொஞ்ச நேரம் தான் வலிக்கும் கார்த்தி... ஒரு மாத்திரை போட்டா சரியாகிடும்..'

'எதுக்கும் கொஞ்சம் உடம்ப பாத்துக்கோ... கீர்த்தி..அது என்னமோ தெரியல .. மனசு எல்லாம் இங்க தான் இருக்கு...'

'சரி...நல்ல படிச்சி..டிகிரியோடா வா.. காத்திருக்கேன்...' ..

'அதுவரைக்கும்....'

'என்ன வேண்டும்....கொஞ்சம் இரு...' செல்பேசி யில் எண்களை அழுத்தி...

'அம்மா பேசணுமா.. ம்ம்ம்... பேசு..'

'நல்லபடியா. பத்திரமா போயிட்டு வாங்க...'

நீங்களும் பத்திரமா கீர்த்தியைப் பார்த்துக்கோங்க என்று சொல்ல நினைத்து
'சரி.. ஆன்ட்டி' என்றான்


'ஆல் தி பெஸ்ட்.. ஹவே எ நைஸ் ஜர்னி' அக்கா உஷா சொல்ல

'தேங்க்ஸ்..'

செல்போனை கீர்த்தனாவிடம் கொடுத்தான்...

'சரிம்மா... நான் வச்சிடறேன்..'

செல்பேசியை அணைத்தாள்.. . அவனையும் ...

'எனக்கும் மனசு கஷ்டமா இருக்கு...கார்த்தி '

அந்த நெருக்கம்.. அவளின் இறுக்கம்... வேறு ஏதாவது நேரமாயிருந்தால்.. நடப்பது வேறொன்றாய் இருந்திருக்கும்.. ஆனால்... இப்பொழுது...

'கார்த்தி.. உனக்காக காத்திருக்கேன்... '

சட்டென்று அவனை மேலும் இறுக்கி...அவன் இரு கன்னத்திலும்... .மாறி மாறி.. மொத்தமாய் முத்த மழை பொழிய.. இறுதியில் அவன் உதட்டில் ...

அன்று அவன் கொடுத்த முத்தம் இனித்தது. .. இன்று அவள் கொடுத்த முத்தம் கரித்தது... அவளை மெதுவாய் விலக்கி முகத்தைப் பார்க்க.. அவள் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது... ...

'எக்ஸ்கியுஸ்மீ சார் . வெஜ் ஆர் நான் வெஜ் '.

ஏர்ஹோஸ்டஸ் அவனின் தோளைக் குலுக்கி கேட்க...

விழித்து பார்க்க.. விமானமோ... 32000 அடி மேலே பறந்து கொண்டிருந்தது..

'நான் வெஜ்.. '

ஒரு பிளேட்டில் எதையோ அவள் கொடுத்ததை வாங்கிக்கொண்டான்...

அமெரிக்கா.. ..போஸ்டன் நகரம்..



அலுமினியப் பறவை மெதுவாக... மிக மிக மெதுவாக... தன் இறக்கையை சுருக்கி...தரையை நோக்கி இறங்கிக் கொண்டிருந்தது..

இருபத்தைந்து மணி நேரப் பயணம்.. சரியான தூக்கமின்மை... சரியில்லாத சாப்பாடு. கொடுத்த இலை தழை உணவு.. வயிற்றை எதோ செய்தது..

விமானம் தரை இறங்கியது... மறுபடியும் குடியுரிமை செக்கிங்... கன்வேயர் பெல்ட்டில் வந்த தன் பெட்டிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு.. எர்ப்போர்ட்டை விட்டு வெளியே வந்தான்... சூரிய வெளிச்சம் சுளீர் என்று உடம்பில் பட்டது... மணி என்ன என்று பார்க்க... இரவு எட்டு மணி ஆகிவிட்டது.. இரவு எட்டு மணியே மாலை நான்கு மணி போல் பிரகாசித்தது.. அவனுக்கு விசித்திரமாய் இருந்தது..

அருகில் உள்ள டெலிபோன் பூத்தில்.. இந்தியாவுக்கு அழைத்து.. தன் பெற்றோருக்கும் கீர்த்தனாவுக்கும் தான் அமெரிக்கா வந்தடைந்ததை தெரிவித்தான்..

அடுத்து ஒரு மஞ்சள் நிற டாக்ஸியை அழைக்க... அதிலிருந்தது ஒரு இந்திய சர்தாரி.. இந்திய பஞ்சாபிகள் அமெரிக்காவில் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை முதலிலே அவன் அறிந்ததால்... அவனுக்கு அதிலொன்றும் ஆச்சிரியம் இல்லை..

'எங்கே சார் போகணும்... '

'ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் பக்கத்தில் ஏதாவது சிறிய தங்கும் ஹோட்டல் '

'ஒ.. நீங்கள் ஸ்டுடென்ட்டா...'

'ஆமாம்.. அது.. ஆல்லிச்டன் டவுனில் இருக்கிறது... சார்லஸ் ஆறுக்கு அருகமையில்... ...'

காரில் ஏறிக்கொண்டான்.. சர்தாரி அவன் உடமைகளை எடுத்து காரில் வைக்க உதவினார்..

'இது தான் முதல் முறை அமெரிக்க பயணமா'

'ஆமாம்'


'எத்தனை வருடப் படிப்பு ..'

'இரண்டு வருடங்களுக்கு குறைவு தான்'

'ஒ... படித்த முடித்த பின்பு... இங்கேயா தங்குவதாகா உத்தேசமா..'

இது அதிகபடியான அதேசமயம் அனாவசியமான் கேள்வியாக அவனுக்குத் தோன்றியது..

'இல்லை.. படிப்பு முடித்தவுடன் உடனே திரும்பிப் போகவேண்டும்...'

மடையனே... எனக்காக கீர்த்தனா என்ற தேவதை அங்கு காத்திருக்கிறாள்.. மனதிற்குள் சொல்லிக்கொண்டான்..

'இங்கு வந்தவர்கள்... 99 சதவிகிதம் திரும்பியதாகா எனக்கு நினைவில்லை...'
அனுபவத்திலும் அனுமானத்திலும் சர்தாரி சொல்ல..

'எனக்கு அங்கு பிசினஸ் உள்ளது..'

அதற்குள்.. ஒரு சிறிய ஹோட்டலின் வாசலில் காரை நிறுத்தினான்... இங்கிருந்து உங்கள் காலேஜ் நடக்கிற தூரத்தில் இருக்கிறது.. மேலும் இந்த ஹோட்டலில் வாடகையும் குறைவு தான்..'

அவரே அவனுக்கு அங்குள்ள ஹோட்டல் ரிசெப்னிஸ்டம் பேசி .. ஒரு ரூமை எடுத்து கொடுக்க.. நன்றி தெரிவித்துவிட்டு.. அவருக்கு வேண்டிய வாடகையையும் டிப்ஸ்சும் கொடுத்து அனுப்பினான்..

ஒரே ஒரு ரூம் நன்றாகவும் வசதியாகவும் இருந்தது.. டிவி , பிரிட்ஜ , குளியல் அறை, சமையல் செய்ய எலெக்ட்ரிக் அடுப்பு .. அறை முழுவதும் ஏசி செய்யப்படிருந்தது. . அன்று சனிக்கிழமை.. இன்று இரவும் , நாளை இரவும் தங்கி விட்டால், வரும் திங்கள் கிழமையிலிருந்து காலேஜ் கேம்பசில் தங்கிக்கொள்ளலாம்..

பசி வயிற்றைக் கிள்ள... தூக்க மயக்குமும்... ஜெட்லாக்கும் .. பயண களைப்பும் ஒரே நேரத்தில் அவனுக்குத் தோன்ற..

குளியல் அறைக்குச் சென்று... ஒரு நல்ல குளியல் போட்டப் பிறகு தான்... கொஞ்சம் களைப்பு குறைந்தது. .அடுத்தது பசி.. அருகில் ஏதாவது ரெஸ்டாரென்ட் இருக்கிறதா என்று ரிசெப்னிஸ்டம் கேட்க.. பக்கத்தில் ஒரு பிட்சா கடை இருப்பதை அவள் சொல்ல..

சாப்பிட்டு விட்டு... ரூமில் படுத்தது மட்டும் தான் தெரியும்.. மறுநாள்.. சண்டே அதிகம் தூங்கிவிட்டான்.. காலை எழுந்தவுடன் நேரத்தைப் பார்க்க மணி பகல் பதினொன்று காட்டியது..

இன்னும் பயணத்தின் களைப்பு போகவில்லை... எழுந்தவன்... சிறிது நேரம், டிவியைப் பார்க்க..

எல்லா சானல்களிலும் ... யாரோ ஒருத்தர் யாருடனோ பேசிக்கொண்டே இருந்தனர் ... விளம்பரமும் மகா மட்டம்.. மார்பை திறந்தபடி பெண்கள் ... உதட்தோடு முத்தம் கொடுத்தபடி .. சீரியல்களும்.. நம்மூர் சானங்களுக்கு ஒன்றும் குறைந்ததில்லை... கார்களின் விளம்பரமும்...எப்படி பணக்காராவது என்பதைப் பற்றி ஐடியா சொல்ல ஒவ்வொருவரும் இருபது டாலர் அனுப்புமாறு ஒருவர் கேட்டுக்கொண்டு இருந்தார்.. . வின்பிரே ஓபராய்.. டாக் ஷோ.. ஓரளவு பரவாயில்லை.. நம்மூரில் தான் ஜாதகம், ராசிபலன் என்றால் அங்கே... தரோட். என்ற பெயரில்... ஜோசியம் சொல்ல... .

குளித்து .. பக்கத்தில் உள்ள சீனா ரெஸ்டாரென்ட் சென்று . பிரைடு ரைஸ் வாங்கிச் சாப்பிட்டான்.. அப்படியே ஒரு டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோருக்குச் சென்று.. பால், பிரட், முட்டை மற்றும் தனக்கு எளிதில் சமைக்க முடிந்த பொருள்களை . இரவு தானே எதாவது சமைத்துக் கொள்ளலாம் என்று எண்ணத்தில் வாங்கிக்கொண்டான்.

அன்று இரவு.. நல்ல தூக்கத்துடன் கடந்தது.. கனவில் கீர்த்தனா வந்து போனாள்..

ஹார்வர்ட் யுனிவேர்சிட்டி.. பெயர் பலகை மின்னியது.. உள்ளே நுழைந்தான் ..ஒரே சீராக வளர்க்கப்பட்ட மரங்கள்.. மரத்தின் அடியில் உட்கார பெஞ்சுகள்.. பறவைகளின் இசைக் கச்சேரிகள், ஜோடி ஜோடியாகவும்... கும்பலாகவும் மாணவர்களும் மாணவிகளும் ஆங்காங்கே அமர்ந்து கொண்டும் .. நின்று கொண்டும் பேசிக்கொண்டு .உரசிக்கொண்டும்.. ஒருவருக்கொருவர் முத்தமிட்டு கொண்டும்..

எங்கு பார்த்தாலும் வெள்ளைப் பெண்கள்.. .. எல்லாப் பெண்களும் ஒரே மாதிரியாய் தெரிந்தார்கள்.. பாதி திறந்த மார்புடன்.. ஏனோ வித்தியாசம் தெரியவில்லை..

அவனுக்கு நினைத்துப் பார்க்கவே பிரம்மிப்பாக இருந்தது... நம் நாட்டு ராகுல் பஜாஜ், ரத்தன் டாடா, .நியூயார்க் மேயர் மைக்கல் ப்ளூம்பெர்க், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகள் ஜார்ஜ் புஷ், ஜான் கென்னெடி.. இவர்களுடன் தற்போதைய அமைச்சர் ப. சிதம்பரம் படித்த கல்லூரியில் தானும் படிக்கப்போவதை நினைத்து பெருமை அடைந்தான்.

தன் தந்தைக்கு மானசீகமாக நன்றி தெரிவித்தான்.. அப்படியே தனக்கு தூண்டுகோலாக இருந்த தன் முன்னாள் காதலி ஜெனிக்கும் நன்றி சொல்லத் தவறவில்லை..

மெயின் ஹாலில் காலடி வைத்து நடந்தபடியே... கால்லூரியைத் தோற்றுவித்தவரின் தலை வெண்கல சிலை வடிவில் இருக்க... அங்கு படித்த முன்னாள் மாணவர்களில் புகழ் பெற்றவர்களின் படங்கள் வரிசையாக இருந்தது, அவற்ற்றை ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்ட நடந்து கொண்டிருந்தான்..

எல்லா இடமும், கட்டிடமும் ஒரே மாதிர்யாய் இருந்ததால் புரபசர் ஹென்றி பால்சன் ,ஹமில்டன் ஹால்.. எங்கே இருக்கிறது என்பது அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அங்கே சென்று கொண்டிருந்தவர்களிடம் கேட்ட..

அவர்கள் தோளைக்குலுக்கி.. எனக்கு தெரியாது என்றனர்..

சுற்றி சுற்றி வந்தவன்.. கைக்காட்டியைப் பார்க்க . ஹமில்டன் ஹால்... மேற்கு நோக்கி செல்லச் சொல்ல.. சென்றான்..

ஹமில்டன் ஹாலில் நுழைந்து.. அது புரபசர் அறையாய் இருக்கும் என்று நினைக்க.. அங்கு முப்பது பேர் அமர்ந்திருக்க.. அது தான் தான் படிக்கப் போகும் கிளாஸ் ரூம் என்பதை உணர்ந்தான்..

வழுக்கை தலையுடன்.. கண்ணாடி அணிந்ததே தெரியாமல்.. நரைத்த தாடியுடன் . .புரபசர் ஹென்றி பால்சன் இருந்தார் .தன்னுடைய அட்மிஷன் கார்டை காண்பிக்க .உள்ளே வந்து அமரச்சொன்னார்..

சீனா, இத்தாலி, யோகோச்லோவியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் பல நாட்டு மாணவர்கள் அமர்ந்திருக்க..

'உன் பெயர் என்ன ' என்றான் ஒருத்தன்..


'கார்த்தி.பிரம் இந்தியா '

'ஒ காட்டி..' அவர்கள் வாயில் என் பெயர் நுழையவேயில்லை..

'ஏன் உனக்கு தலையில் தலைப்பாகை இல்லை...' அவன் பஞ்சாபி என்று நினைத்து கேட்க..

'நான் சவுத் இந்தியன்.'

'உங்கள் நாட்டில் பாம்புகள் அதிகமாமே...'

'அது முன்பு .'

'இந்தியர்கள்... பாத்ரூம் சென்று... தன் கையாலே கழ்விக்கொள்வார்களாமே ஏன் அங்கு பேப்பர் யூஸ் பண்ணுவதில்லையா...'

கார்த்திக்கு கோபம் கோபமாய் வந்தது.. முதல் நாள் என்பதால் அடக்கிக் கொண்டான்.

முதல் நாளிலே.. அந்த முப்பது பெரும் ஆறு ஆறாக பிரிக்கப் பட்டனர்.. ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டது.. இவனுடைய குழுவில்.. ஜார்ஜ் டிச்சொன், எட்வின் கனான்.. க்ரோவர் நோர்கஸ்ட் ..கெயில் மாடரிஸ் என்ற வெள்ளைககார பெண்ணும் ... பல பெயர்கள் அவனுக்கு புரியவேயில்லை.. .

அந்த அசைன்மென்ட் ...

ஒரு எலேக்ட்ரானிக் தயாரிக்கும் கம்பனியில் 500 பேர் வேலை செய்கிறார்கள்.. ஒரு பிரிவு மட்டும் நஷ்டத்தில் இருக்கிறது.. அந்தப் பிரிவில் மட்டும் 50 பேர இருக்கிறார்கள். அந்த பிரிவில் உற்பத்தி செய்த பொருள்கள் எல்லாம் குடோனில் அப்படியே விற்காமல் இருக்கிறது.. என்ன செய்தால் அந்த கம்பனியை நஷ்டத்தில் இருந்து ஈடுகட்டலாம்... எப்படி அந்த கம்பனியை லாபத்தில் கொண்டு வருவது.. தாங்கள் ஆலோசகராக இருந்தால் எப்படி அறிவுரை கூறுவீர்கள்...


இன்னும் ஒரு வாரத்திற்குள் ரிப்போர்ட் முடித்து .. கொடுத்து விட வேண்டும் என்று முடிவு தேதி அறிவிக்க... .

முதல் நாளிலே.. பாடமே நடத்தாமல்.. ஒன்றுமே தெரியாமல்...இப்படி ஒரு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டதை நினைத்து .. கார்த்தி அதிர்ந்தான்...

கட்டுரை எழுத .. அங்குள்ள லைப்ரரிக்கு சென்று சில புத்தகங்ளைப் புரட்டி படித்து கொண்டு இருக்க...

'ஹாய் .. ' சத்தம் கேட்க... தலையை உயர்த்தி பார்க்க..

தன் குழுவில் இருந்த .. கெயில் மாடரிஸ்... வெள்ளைக்காரி தான்.. குனிந்து அவனைப் பார்க்க..அவளிடமிருந்து வந்த சென்ட் வாசனை மூக்கைத் துளைத்தது.. சட்டை அணிந்து இருந்தாள்.. அவள் நின்ற விதமும் உடையும் அவனுக்கு ஒரு வித கிளச்சியைத் தூண்டியது. அவன் பார்வை மார்பின் மேல் பதிய .. ஒரு கணம் கீர்த்தனா மனதிற்குள் வந்து போக.. கண்களை வலுக்கட்டமாய் வேறு பக்கம் திருப்பினான்.. அருகில் வந்தவள்...

'உன் பெயர் என்ன ...'

'கார்த்தி.. இந்தியா '

'ஒ காட்டி..'

கெயில் மாடரிஸ் மூலம் தன் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை நிகழும் என்பதை அறியாதவனாய் அவளுடன் நண்பனானான்.


---- to be continue