View Full Version : மௌனமே பதிலாய்.....
மஞ்சுபாஷிணி
26-12-2012, 07:09 AM
http://www.muthamilmantram.com/gallery/albums/userpics/20944/normal_maunam.jpg
உண்மை அமைதியாய்
தன்னை ஒளித்துக்கொண்டு....
பொய்யோ எங்கும்
தலைவிரித்தாடிக்கொண்டு....
அடக்கம் அமைதியாய்
புன்னகை புரிந்துக்கொண்டு...
ஆர்ப்பாட்டம் எங்கும்
நாடகங்கள் அரங்கேறிக்கொண்டு.....
அன்பு அமைதியாய்
தன்னை போர்த்திக்கொண்டு....
ஆங்காரம் எங்கும்
வெறியாய் அலைந்துக்கொண்டு....
சிந்திய வார்த்தைகளை
பொறுமையாய் எடுத்துக்கொண்டு
மௌனத்தை பதிலாய்
தருவதும் உண்டு......
கும்பகோணத்துப்பிள்ளை
26-12-2012, 06:22 PM
http://www.muthamilmantram.com/gallery/albums/userpics/20944/normal_maunam.jpg
சிந்திய வார்த்தைகளை
பொறுமையாய் எடுத்துக்கொண்டு
மௌனத்தை பதிலாய்
தருவதும் உண்டு......
அன்புக்குமுண்டோ அடைக்கும் தாழ்!
ஆனால் அன்பு எப்போதும் வாயடைக்கும் தாழ்!
எத்தனையோமுறை
என் அம்புறாத்தோனியிலிருந்த
என் வார்த்தைகளை
என் காலடியில்
நானே தேடியிருக்கிறேன்!
- நல்லவெளிப்பாடு!
மஞ்சுபாஷிணி
28-12-2012, 05:15 PM
அன்புக்குமுண்டோ அடைக்கும் தாழ்!
ஆனால் அன்பு எப்போதும் வாயடைக்கும் தாழ்!
எத்தனையோமுறை
என் அம்புறாத்தோனியிலிருந்த
என் வார்த்தைகளை
என் காலடியில்
நானே தேடியிருக்கிறேன்!
- நல்லவெளிப்பாடு!
அருமையான பின்னூட்டக்கவிதை கும்பகோணத்துப்பிள்ளை. அன்பு நன்றிகள்...
கோபாலன்
28-12-2012, 07:40 PM
மௌனம் பேசியதே உங்கள் கவிதை வாயிலாக :)
மஞ்சுபாஷிணி
29-12-2012, 10:38 AM
மௌனம் பேசியதே உங்கள் கவிதை வாயிலாக :)
அன்பு நன்றிகள் கோபாலன்..
பாலகன்
29-12-2012, 02:46 PM
அன்பை உண்மையாக செலுத்துபவர்கள் எப்பவும் பதிலை மெளனமாக தான் தருவார்கள் மஞ்சுளா அக்கா! அகங்காரம் கொண்டவர்கள் தான் சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். அவர்களின் நீடிப்பும் நிலையற்றதே... மிக மிக அழகான கவிதை.. கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே... நீங்க சங்கு சுட்டாலும் வெண்மையை தான் தருவீர்கள். இப்படிக்கு உங்கள் அன்புத் தம்பி, தங்கக்கம்பி..ஹிஹி