PDA

View Full Version : புதிரோ புதிர் எண்-571-05-06-2015



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 [12] 13 14 15 16 17 18 19

மதி
06-03-2007, 02:11 AM
வாழ்த்துக்கள் மன்மதன்..!

aren
06-03-2007, 04:41 AM
ஐரோப்பாவில் நடந்ததாக சொல்கிறது புதிர். ஆனால் அங்கே ஆங்கிலம் பேசுவதில்லை.

பிரிட்டன் அல்லது இங்கிலாந்து என்று சொல்லியிருக்கவேண்டும்.

மன்மதன்
06-03-2007, 06:10 AM
நன்றி pgk. அடுத்த புதிரை கொடுங்க..
பிரிட்டன் ஐரோப்பாவில்தானே இருக்கிறது..??

சேரன்கயல்
06-03-2007, 10:34 AM
வாழ்த்துக்கள் மவனே...
உனக்குள்ள ஒரு ஃபயர் இருக்கிறது நிறைய பேருக்கு தெரியலைங்குறேன்...

rithik
07-03-2007, 02:43 PM
ஒரு மாடிவீடு.முதல் மாடியில் உள்ள ஹாலில் மூன்று பல்புகள் பொருத்தப்பட்டுள்ளன.
அதற்குறிய சுவிட்சுகள் கீழேயே மாடிப்படி ஏறும் இடத்தில் உள்ளன.
நீங்கள் முதன்முறையாக அந்த வீட்டுக்குச் செல்கிறீர்கள்.
உங்கள் திறமையை பரிசோதிப்பதற்காக உங்கள் நண்பர், ஒரு பென்சிலை உங்கள் கையில் கொடுத்து, மேலே மாடியில் உள்ள மூன்று பல்புகளில், எந்த பல்புக்கு எந்த சுவிட்ச் என்று கீழே அடையாளம் செய்யும்படி கூறுகிறார்.கூடவே ஒரு நிபந்தனையையும் விதிக்கிறார்.
அதாவது, ஒரே ஒருமுறை மட்டுமே எந்த பல்ப் எரிகிறது என்பதைப் பார்க்க மாடிக்குப் போகலாம்.

நீங்கள் எந்த பல்புக்கு எந்த சுவிட்ச் என்பதை எப்படிக் கண்டு பிடிப்பீர்கள்????



switch one
Half an hour on panni vachutu off pannee vedavum.(half an hour arinthathal that bulb feel varm,so we can find the first switch bulb)
switch two
On

Then maadiku poi tu.

we know the second switch bulp is on

then touch each bulb, which one feels varm that is the first switch bulb.
the last one is the third switch bulb
thanks
RITHIK

pgk53
09-03-2007, 04:13 PM
நண்பர் ரித்திக் அவர்களே வணக்கம்.
நீங்கள் கூறியுள்ள புதிர் மிகவும் பழையது.
அதற்கு விடையும் மன்ற நண்பர்கள் கூறிவிட்டார்களே.!!!!!!!!!!

pgk53
09-03-2007, 04:14 PM
புதிர் எண்- 244


ராமு ராணுவத்துக்கு எதிராக கடுமையான குற்றம் ஒன்றைச் செய்தமைக்காக ராணுவப் போலீஸால் கைது செய்யப்பட்டு, ராணுவ நீதிமன்றத்தின் முன்னே நிறுத்தப்பட்டான்.

அவனது வழக்கை ஆராய்ந்த ராணுவ கோர்ட் நீதிபதி அவனை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும்படி தீர்ப்புக் கூறினார்.

ஆனால் அதே சமயம் ஒரு விசித்திரமும் அந்தத் தீர்ப்பிலே இருந்தது. அதாவது, ஆறு குண்டுகள் நிறப்பப்படும் கைத்துப்பாக்கியின் காலியான சேம்பரில் , ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு குண்டுகளை நிறப்பும்படி கூறினார்.

குண்டுகளை நிறப்பியபின்பு, சேம்பரை ஒரு தடவை சுழற்ற வேண்டும். பிறகு ராமுவைக் குறி வைத்துச் சுட வேண்டும்.

ராமுவுக்கு அதிர்ஷ்டம் இருந்து, அந்த சேம்பரில் குண்டு இல்லாமல் இருந்ததால், மறுபடியும் சேம்பரை சுழற்றிச் சுடுவதோ, அல்லது தொடர்ந்தாற்போல் சுடுவதோ ராமுவின் விருப்பப்படி நடக்கட்டும் என்றார்.

இரண்டாவது முறையும் அவனைச் சுடும்போது அவன் தப்பித்துவிட்டால், அவனை விடுதலை செய்யலாம் என்று தீர்ப்பில் வகை செய்திருந்தார்.

ராமுவை நிறுத்தினார்கள்.

அவன் கண்முன்னாலேயே துப்பாக்கியின் சேம்பரைத் திறந்தார்கள்.
காலியாக இருந்தது.

அதில் ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு குண்டுகளை நிறப்பினார்கள்.
பிறகு அவனைக் குறிபார்த்துச் சுட்டார்கள்.

ராமு பதை பதைக்கும் மனதுடன் நின்றிருந்தான்.

அவனது அதிர்ஷ்டம் முதல் முறை சுடும்போது துப்பாக்கியில் அந்த சேம்பர் காலியாக இருந்தது. அதனால் அந்தமுறை ராமு உயிர் பிழைத்தது.

இப்போது ராமுவின் முறை.

துப்பாக்கியின் சேம்பரை ஒருமுறை சுழற்றிவிட்டுச் சுடுவதா?....அல்லது அப்படியே சுடுவதா?... என்று அவனைக் கேட்டார்கள்.

ராமு தீவிரமாகச் சிந்தித்தான்.

சிதனைக்குப் பிறகு ராமு என்ன வகையில் சுடவேண்டும் என்று கூறியிருப்பான்.??

மன்ற நண்பர்களே ராமு என்ன கூறியிருப்பான் என்று நீங்களே கூறுங்கள்.

tamil81
09-03-2007, 05:53 PM
ஒருமுறை மட்டும் சுத்திவிட்டு சுட சொல்லி இருக்கலாம்
அப்படி சுடும்போது மீண்டும் அந்த காலியான சேம்பரே வரலாம்
இது சரிதான நண்பரே

பென்ஸ்
09-03-2007, 06:02 PM
பிஜீகே...

இவர் சொல்லுற மாதிரியும் இருக்கலாம்....

ஆனால் ஒருமுறை சுற்றுவது என்பது சரியா அந்த சேம்பர்தான் வருமா என்ன???? புரியலையே.... !!!

pradeepkt
12-03-2007, 10:41 AM
மன்மதா எப்படிப்பா திடீருன்னு இப்படிப் பொங்கி எழுந்துட்ட...
அடுத்த புதிருக்கு என்ன விடை...
ஒரு வேளை சேம்பரை எதிர்ப்பக்கம் சுற்ற முடியுமா?

aren
12-03-2007, 11:00 AM
அப்படியே சுடுங்கள் என்றே சொல்லியிருப்பான். காரணம், அவர்கள் முதல் இரண்டு சேம்பர்களில் குண்டுகளை நிரப்பி ஒரு சேம்பர் சுற்று சுற்றினார்கள். அது மூன்றாவது சேம்பருக்கு சென்றது. அவர்கள் சுட்டவுடன் அதில் குண்டு இல்லை, அது நான்காவது சேம்பருக்கு சென்றது. அதிலும் குண்டு இல்லை. ஆகையால் அவர் அப்படியே சுடுங்கள் என்று சொல்லியிருப்பான்.

pgk53
16-03-2007, 02:02 AM
ஒருமுறை மட்டும் சுத்திவிட்டு சுட சொல்லி இருக்கலாம்
அப்படி சுடும்போது மீண்டும் அந்த காலியான சேம்பரே வரலாம்
இது சரிதான நண்பரே

நண்பரே உங்களுடைய விடைதான் சரியானது.
வாழ்த்துக்கள்.

மீண்டும் இருமுறை சுழற்றிவிடும்போது குண்டு வரும் வாய்ப்பு 6ல் இரண்டு பாகம்.தப்பிக்க 4 வாய்ப்புகள் உள்ளன.
அப்படியே சுடும்போது 3ல் ஒரு பாகம்.தப்பிக்க இரண்டு வாய்ப்புகளே இருக்கும்

pgk53
16-03-2007, 02:03 AM
புதிர் எண்- 245


ராமு அவனது பள்ளியிலேயே சிறந்த விளையாட்டு வீரன். அதுவும் உயரத் தாவுதல் ,மற்றும் நீளத் தாவுதலில் எப்போதுமே முதல் பரிசினைப் பெறுவான்.

பள்ளியிலே ஆண்டு இறுதி விளையாட்டுப் போட்டி நடந்துகொண்டிருந்தது,

ராமு எல்லோரையும்விட அதிக உயரம் தாவி,அதிக தூரம் தாண்டிக் குதித்து, முதல் பரிசுகளுக்குத் தகுதியானவானாகத் தேர்வு செய்யப்பட்டான்.

பரிசுகளைக் கொடுப்பதற்கு அந்த மாவட்ட ஆளுனர் {கலெக்டர்} வந்திருந்தார்.

ராமு அனைத்து விளையாட்டுகளிலும் தகுதி பெற்றிருப்பதைக் கவனித்தார்.
அதுவும் உயரத்தாவுதலிலும் , நீளத் தாவுதலிலும் அவனது சாகஸம் அவரைக் கவர்ந்தது.

ராமுவுக்கு பரிசுகளை வழங்கும்போது, மாணவர்களே நீங்கள் விளையாட்டில் ஆர்வம் செலுத்துவது எனக்கு மகிழ்வைத் தருகிறது. ராமுவை நான் மிகவும் பாராட்டுகிறேன். நான் இப்போது ராமுவுக்கு ஒரு சிறிய சோதனை வைக்கப் போகிறேன். அதில் அவன் வெற்றியடைந்தால் என் சார்பாக ஒரு சிறந்த பரிசு தரப்போகிறேன்.என்றார்.


அனைவரும் ஆர்வமுடன் ஆளுனரைக் கவனித்தார்கள்.
ராமுவும் என்ன சோதனை என்று தெரிந்துகொள்ள பரபரப்புடன் இருந்தான்.

மாணவர்களே, நான் இப்போது இரண்டு ஒரு ரூபாய் நாணயங்களை இரண்டு அடி இடைவெளியில் தரையில் வைக்கப் போகிறேன். ராமு அந்த நாணயங்கள் இரண்டையும் ஒரே சமயத்தில் நின்ற இடத்தில் இருந்தே தாவிக் குதிக்கவேண்டும். என்று கூறியபடியே இரண்டு ஒரு ரூபாய் நாணயங்களை கையில் எடுத்தபடியே ராமுவைப் பார்த்து உனக்கு சம்மதமா??? இந்த சோதனையில் வெற்றியடைந்துவிடுவாயா???? என்று கேட்டார்.

சிறிது நேரம் சிந்தனை செய்த ராமு தன்னால் நாணயங்களை ஒரே சமயத்தில் தாவிக்குதிக்க இயலாது என்றும், சோதனையில் கலந்துகொள்ள முடியாது என்றும் கூறினார்.

ராமு அவ்வாறு கூறியதைக் கேட்ட ஆளுனர், மகிழ்ச்சியடைந்து அவனது அறிவுக் கூர்மையையும் பாராட்டிப் பேசி அவர் கொடுப்பதாகக் கூறிய பரிசை , ராமு சோதனையில் கலந்துகொள்ளா விட்டாலும் கொடுத்தார்.


நண்பர்களே இரண்டு அடி தூரத்திலேயே வைக்கப்பட்ட நாணயங்களை ஏன் தன்னால் தாவ முடியாது என்று ராமு மறுத்தான்.?????????????

mukilan
16-03-2007, 07:11 AM
ரவி, ராமு என்பதில் மட்டும் சிறு குழப்பம். எனினும் ராமு என்றே கணக்கில் கொண்டு பதில் அளிக்க முயற்சிக்கிறேன். ராமுவின் இரு பக்கங்களிலும் ஒரு அடி தூரத்தில் நாணயங்களை வைத்தால் ராமுவால் இரண்டு நாணயங்களையும் ஒரே நேரத்தில் தாண்ட முடியாது. சரியா என்று பிஜிகே அண்ணா வந்ததும் தெரிந்து விடுமே!

gragavan
16-03-2007, 08:04 AM
இரண்டு அடி இடைவெளி என்பது இரண்டு நாணயங்களுக்குமா? நாணயத்திற்கும் ராமுவிற்குமா?

ஆனால் பொதுவாகவே இந்த மாதிரி நீளம் மற்றும் உயரம் தாண்டுகிறவர்கள் ஓடி வந்துதான் தாண்டுவார்கள். அப்படியில்லாமல் நின்ற இடத்தில் இருந்தே குதிக்க வேண்டும் என்றால் அதுவும் இரண்டு அடி என்றால் மிகக் கடினம் என்று தோன்றுகிறது.

pgk53
16-03-2007, 02:58 PM
ராமு.........ரவி என்ற பெயர்க்குழப்பத்தை திருத்திவிட்டேன் நண்பரே.
தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி.

மன்மதன்
16-03-2007, 04:49 PM
முகிலன், ராகவன் விடையளித்துள்ளார்கள். நீங்க பாட்டுக்கு பெயரை மட்டும் மாத்திட்டு ஒண்ணுமே சொல்லாம போயிட்டீங்களே pgk அண்ணா..

pgk53
17-03-2007, 03:43 PM
மன்மதன் அவர்களே............
விடை சொல்ல அனைவருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டுமல்லவா?
அதனால்தான் ஒன்றுமே கூறாமல் போனேன்.

ஓவியா
17-03-2007, 03:49 PM
முந்திக்கொண்டு வந்து பதில் போட்ட முகிஸ், ராவன் பதில்கள் சிந்திக்க வைக்கின்றன...வழி மொழிகிறேன்.



இந்த பதிவில் எனக்கு பரிசு இல்ல இல்ல இல்ல....

மன்மதன்
17-03-2007, 05:59 PM
முந்திக்கொண்டு வந்து பதில் போட்ட முகிஸ், ராவன் பதில்கள் சிந்திக்க வைக்கின்றன...வழி மொழிகிறேன்.



இந்த பதிவில் எனக்கு பரிசு இல்ல இல்ல இல்ல....
இது என்ன கவிதை போட்டின்னு நினைச்சிங்களா :lachen001: :lachen001:

pradeepkt
19-03-2007, 04:48 AM
எனக்கும் முகில்ஸூ சொன்னதுதான் சரியாத் தோணுது...
ஆனா அவரு முதல்ல வச்சுட்டு நிக்கச் சொல்லுவாரா அல்லது நிக்கச் சொல்லிட்டு வைப்பாரான்னு தெரியலையே...

pgk53
25-03-2007, 03:11 PM
ரவி, ராமு என்பதில் மட்டும் சிறு குழப்பம். எனினும் ராமு என்றே கணக்கில் கொண்டு பதில் அளிக்க முயற்சிக்கிறேன். ராமுவின் இரு பக்கங்களிலும் ஒரு அடி தூரத்தில் நாணயங்களை வைத்தால் ராமுவால் இரண்டு நாணயங்களையும் ஒரே நேரத்தில் தாண்ட முடியாது. சரியா என்று பிஜிகே அண்ணா வந்ததும் தெரிந்து விடுமே!

நண்பர்களே, எடுத்த எடுப்பிலேயே முகிலன் மிகச் சரியான விடையைக் கூறிவிட்டார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

மேலும் மிகுந்த வேலைப் பளுவின் காரணமாக மன்றத்தில் வந்து அடுத்த புதிரைப் பதிய நேரமின்றி போய்விட்டது.

இதோ வந்துகொண்டே இருக்கிறது அடுத்த புதிர்..

pgk53
25-03-2007, 03:11 PM
புதிர் எண்- 246


அந்த சாலையில் இரண்டு நபர்கள் வந்துகொண்டிருந்தார்கள்.

அவர்களில் ஒருவர் சரியான குண்டு.பருமனான உடலைத் தூக்கமாட்டாமல் வந்துகொண்டிருந்தார்.

மற்றவர் ஒல்லிக் குச்சி உடல்காரர். மிகவும் வேகமாக நடந்துகொண்டிருந்தார்.

பருமனானவர் கோட்டு சூட் அனிந்திருந்தார்.
ஒல்லியானவர் வேஷ்டி சட்டை அனிந்திருந்தார்.

பருமனானவர், டை அனிந்திருந்தார்.
ஒல்லியானவர் கழுத்தில் துண்டு போட்டிருந்தார்.

பருமனானவர் தலையில் தொப்பி போட்டிருந்தார்.
ஒல்லியானவர் முண்டாசு கட்டியிருந்தார்.

பருமனாவரின் ஒரு கையில் ஒரு சிறிய கைப்பெட்டி இருந்தது.
ஒல்லியானவரின் ஒரு கையில் வாழைப்பழச் சீப்பு ஒன்று இருந்தது.

பருமனானவரின் மற்ற கையில் ஒரு குடை விரித்த நிலையில் தலைக்கு மேலே பிடிக்கப்பட்டிருந்தது.

ஒல்லியானவரின் மற்ற கையிலும் அதே போல குடை தலைக்கு மேலே விரித்துப் பிடிக்கப்ப்ட்டிருந்தது.

பருமனானவரின் குடையில் பெரிய பெரிய ஓட்டைகள் இருந்தது.

ஒல்லியானவரின் குடையிலோ சிறிய சிறிய ஓட்டைகள் இருந்தன.

இப்போது கூறுங்கள் நண்பர்களே????????????

இந்த இரண்டுபேரில் யார் அதிகம் நனைந்திருப்பார்கள்.?????????????

மனோஜ்
25-03-2007, 03:20 PM
பருமனானவர்

ஓவியா
25-03-2007, 03:29 PM
ஆடைகளின் அடிப்படையில் யோசித்தால் (பருமனானவரோ கோட்டு சூட், தலையில் தொப்பி, கைப்பெட்டி) ம்ம்ம்ம்ம்

ஒல்லியானவறே அதிகம் நினைந்திருக்கலாம்.

மன்மதன்
25-03-2007, 03:45 PM
இருவரும் நனைந்திருக்க மாட்டார்கள்.. ஏன்னா


அப்பத்தான் மழையே பெய்யலையே !! :D

விகடன்
25-03-2007, 05:40 PM
தாமதித்து வந்ததினால் புதிரிற்கு பதிலும் அறிந்தேன்.

முதலே வந்திருந்தால் எனது வண்டவாலங்கள் நாறியிருந்திருக்கலாம். நல்ல வேளை பிழைத்துக்கொண்டேன்.

ஓவியா
25-03-2007, 05:46 PM
இருவரும் நனைந்திருக்க மாட்டார்கள்.. ஏன்னா

அப்பத்தான் மழையே பெய்யலையே !! :D

அச்சோ இந்த முறையும் நான் :icon_03: ......

பரஞ்சோதி
26-03-2007, 07:35 AM
ஆஹா!

ஓவியா சகோதரிக்கு எப்படி இப்படி எல்லாம் உடனுக்குடன் விடை காண முடியுதுன்னு ஆச்சரியப்படுகிறேன்.

பரஞ்சோதி
26-03-2007, 07:39 AM
பிஜிகே அண்ணா!

புதிர்களில் முன்பு போல் அதிக சுவாரஸ்யம் இல்லையே? மண்டை காய்தல் இல்லையே?

ஏன் சொல்றேன்னா! புதிர் பக்கம் என்றாலே எஸ்கேப் ஆகும் மன்மதன் எல்லாம் சரியான விடை சொல்லிடுறாங்க :)

ஓவியா சகோதரி! சிம்பிள் லாகிக்கிள் விடை கண்டு பிடிக்கிறார் :)

சரி, சரி, எனக்கு மடல் அனுப்புங்களேன், பேசணும்.

மதி
26-03-2007, 08:51 AM
இருவரும் நனைந்திருக்க மாட்டார்கள்.. ஏன்னா


அப்பத்தான் மழையே பெய்யலையே !! :D
கலக்கிட்டீங்க மன்மதன்..

பாவம் ஓவியாக்கா..தான் ரொம்ப யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க..!?:icon_hmm:

ஓவியா
26-03-2007, 10:01 AM
பிஜிகே அண்ணா!

புதிர்களில் முன்பு போல் அதிக சுவாரஸ்யம் இல்லையே? மண்டை காய்தல் இல்லையே?

ஏன் சொல்றேன்னா! புதிர் பக்கம் என்றாலே எஸ்கேப் ஆகும் மன்மதன் எல்லாம் சரியான விடை சொல்லிடுறாங்க :)

ஓவியா சகோதரி! சிம்பிள் லாகிக்கிள் விடை கண்டு பிடிக்கிறார் :)

சரி, சரி, எனக்கு மடல் அனுப்புங்களேன், பேசணும்.

பரம்ஸ் அண்ணா, நீங்கள் அனைவரும் பிகேஜி அண்ணாவிடம் டிகிரி வாங்கீட்டீங்களாமே. அதன்

அன்மைய கேள்விகள் அனைத்தும் சற்று சுலபமாக என்னைப்போல் எல்.க்.ஜி. பசங்களுக்கு. அதுலையும் ஃபெய்லுதான்....ஹி ஹி ஹி.
பின்னே உங்க தங்கசியாச்சே :musik010:

அண்ணா யாரை மடல் அனுப்ப சொல்கின்றீர்கள்??? பிகேஜி அண்ணாவையா அல்லது எல்கேஜி ஓவியாவையா???



கலக்கிட்டீங்க மன்மதன்..

பாவம் ஓவியாக்கா..தான் ரொம்ப யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க..!?:icon_hmm:

ஆமாம் மதி, :icon_hmm:

மதி
26-03-2007, 10:27 AM
ஆமாம் மதி, :icon_hmm:
தேர்வு நேரம் அப்படி தான் பிரமை இருக்கும்...:icon_hmm:

ஓவியா
26-03-2007, 10:30 AM
தேர்வு நேரம் அப்படி தான் பிரமை இருக்கும்...:icon_hmm:

அதே அதே சபாபதி

தேர்வுதான்,,:icon_hmm:

எப்பா எண் ஏட்டில் வருமோ??? :icon_08:

பரஞ்சோதி
27-03-2007, 09:49 AM
பரம்ஸ் அண்ணா, நீங்கள் அனைவரும் பிகேஜி அண்ணாவிடம் டிகிரி வாங்கீட்டீங்களாமே. அதன்

அன்மைய கேள்விகள் அனைத்தும் சற்று சுலபமாக என்னைப்போல் எல்.க்.ஜி. பசங்களுக்கு. அதுலையும் ஃபெய்லுதான்....ஹி ஹி ஹி.
பின்னே உங்க தங்கசியாச்சே :musik010:

அண்ணா யாரை மடல் அனுப்ப சொல்கின்றீர்கள்??? பிகேஜி அண்ணாவையா அல்லது எல்கேஜி ஓவியாவையா???

ஆமாம் மதி, :icon_hmm:

என் தங்கச்சி என்று சொல்லிட்டு அது என்ன அப்படி ஒரு கொண்டாட்டம், எனக்கு புரியுது.

பிஜிகே அண்ணாவை தான் மடல் அனுப்ப சொன்னேன், அண்ணாவுக்கு தனிமடல் அனுப்ப முடியலை.

pgk53
29-03-2007, 02:44 PM
இருவரும் நனைந்திருக்க மாட்டார்கள்.. ஏன்னா


அப்பத்தான் மழையே பெய்யலையே !! :D

கலக்கிட்டிங்க மன்மதன்.
பாராட்டுக்கள்.

அடுத்த புதிர் பரஞ்சோதி அவர்கள் கூறியதுபோல் கொஞ்சம் சிக்கலானதாகக் கொடுக்க முயற்சிக்கின்றேன்.

நாளை அடுத்த புதிரைப் பதிவு செய்கிறேன்.

மன்மதன்
29-03-2007, 06:36 PM
கலக்கிட்டிங்க மன்மதன்.
பாராட்டுக்கள்.
அடுத்த புதிர் பரஞ்சோதி அவர்கள் கூறியதுபோல் கொஞ்சம் சிக்கலானதாகக் கொடுக்க முயற்சிக்கின்றேன்.
நாளை அடுத்த புதிரைப் பதிவு செய்கிறேன்.

சரி..சரி. அடுத்த புதிருக்கு பரம்ஸ் விடை சொன்னா அது கள்ளாட்டமாக அறிவிக்கப்படும்..:D :D

pgk53
06-04-2007, 02:23 AM
புதிர் எண்- 247



துப்பறியும் மேதை வீர்சிங்கிற்கு அவர்களது தலைமையகத்தில் இருந்து ஒரு அவசர அழைப்பு வந்தது.
அப்போது நல்ல குளிர் காலம் ஆகையால் கொஞ்சம் சுதி போட்டுக்கொள்வதற்காக ஏற்பாடு செய்துகொண்டிருந்த வீர்சிங், கடமை அழைத்ததும் உடனே புறப்பட்டுச் சென்றார்.

அவனது தலைமை அதிகாரி , வீர்சிங்கிடம், ஒரு அவசரமான காரியத்துக்காக உன்னை அழைத்துள்ளேன்..குற்றவாளிகளின் தடயங்களைச் சேகரித்து வைத்துள்ள நமது அதி முக்கிய பாதுகாப்பு அறையில் இருந்து, ஒரு பிலிம் நெகடிவ் கானாமல் போய்விட்டது. அந்த நெகடிவை இன்று காலையில்தான் நான் அந்த அறையில் பாதுகாப்பாக இருக்கட்டும் என்று வைத்தேன்.

இப்போது இரண்டுமணிநேரம்தான் கழிந்துள்ளது. சிறிது நேரம் முன்பாக நான் அந்த நெகடிவை அங்கிருந்து எடுத்து எனது தனிப்பட்ட லாக்கரில் வைத்துவிடலாம் என்று அந்த அறைக்குப் போனேன்.,நெகடிவ் நான் வைத்த இடத்தில் இல்லை.நான் அந்த அறைக்குப் போய்வந்த பின்னர் எனது செக்கரெட்டரி மட்டும்தான் ஏதோ வேலையாக அந்த அறைக்குள் சென்று வந்தார்.அவர் அந்த அறைக்குச் சென்று வந்தபின்பு எங்குமே வெளியே போகவில்லை.

என் அலுவலகத்தில் இருக்கும் அவரது ஒதுக்கிடத்தில் அமர்ந்து அமர்ந்து பணி செய்துகொண்டிருந்தார்.நெகடிவ் இல்லை என்றதும் செக்கரெட்டரியை, காவலர்களை அழைத்து முழுமையாகப் பரிசோதித்துவிட்டேன். அவரிடம் நெகடிவ் இல்லை. விசாரித்ததில் தனக்கு அந்த நெகடிவ் குறித்து ஒன்றுமே தெரியாது என்கிறார்.அலுவலக அறையிலும் முழுமையாகத் தேடியாகிவிட்டது.

நெகடிவ் இருந்த அறையிலும் சுத்தமாகத் தேடிப்பார்த்தாகிவிட்டது. எங்குமே கிடைக்கவில்லை.இப்போது நீங்கள்தான் அந்த நெகடிவைக் கண்டுபிடிக்கவேண்டும். என்று கேட்டுக்கொண்டார்.

வீர்சிங் முதலில் செக்கரட்டரியின் அறைக்குள் நுழைந்தார்.
அங்கே ஒரு கணீணி இருந்தது. ஒரு பிரிண்டர் இருந்தது.
அவரது மேசை நாற்காலி தவிர வேறு எதுவுமே அந்த அறையில் இல்லை. அறையில் ஒரு மின்விசிறி முழு வேகத்தில் சுற்றிக்கொண்டிருந்தது.

இந்த அறையில்தான் நன்கு பரிசோதனை நடத்திவிட்டார்களே என்ற எண்ணமுடன் அங்கிருந்து வெளியே வந்து உயர் அதிகாரியின் அறையில் தனது பரிசோதனையைத் தொடங்கினார்

.முழுமையான பரிசோதனைக்குப் பிறகு, பாதுகாப்பு அறைக்குள் நுழைந்தார்.அங்கும் இரண்டு மணிநேரம் தேடிக் களைத்துவிட்டு, குளிரில் நடுங்கிக்கொண்டு இருந்த கைகளை ஒன்றுடன் ஒன்று சேர்த்து தேய்த்து கொஞ்சம் சூடேற்றியபடி வெளியே வந்து அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து ஒரு தேனீருக்கு ஆர்டர் செய்துவிட்டு சிந்தனையில் ஆழ்ந்தார்.

திடீரென்று துள்ளி எழுந்தார் வீர்சிங். கண்டு பிடித்துவிட்டேன் என்று உற்சாகமாகச் சொன்ன வீர்சிங் அதிகாரியை அழைத்தார்.

வீர்சிங் கூறிய இடத்தில் இருந்த நெகடிவை எடுத்த அதிகாரி, செக்கரட்டரியை கைது செய்யும்படி கூறிவிட்டு, வீர்சிங்கைப் பாராட்டினார்.

நண்பர்களே வீர்சிங் எங்கே நெகடிவ் இருந்தது என்பதை எப்படிக் கண்டுபிடித்தார் என்று கூறுங்களேன்..

aren
06-04-2007, 02:32 AM
இந்த குளிரான வேலையில் ஏன் செக்ரட்டரி மின் விசிறியை வேகமாக போடிருந்தார். அப்படியானால் அந்த நெகட்டிவ் அந்த மின் விசிறியின் மேலேதான் இருக்கவேண்டும் என்று நினைத்திருப்பார்.

என்ன பிகேஜி அவர்களே, நான் சொல்வது சரிதானே?

உங்களுகென்றே வேறு ஏதாவது ஒரு பதிலை வைத்திருப்பீர்களே? எல்லாம் நம்ம தூரதிர்ஷ்டம்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஓவியன்
06-04-2007, 08:04 AM
இந்த குளிரான வேலையில் ஏன் செக்ரட்டரி மின் விசிறியை வேகமாக போடிருந்தார். அப்படியானால் அந்த நெகட்டிவ் அந்த மின் விசிறியின் மேலேதான் இருக்கவேண்டும் என்று நினைத்திருப்பார்.

என்ன பிகேஜி அவர்களே, நான் சொல்வது சரிதானே?

உங்களுகென்றே வேறு ஏதாவது ஒரு பதிலை வைத்திருப்பீர்களே? எல்லாம் நம்ம தூரதிர்ஷ்டம்.



நானும் நீங்கள் சொல்வதனைத் தான் சரியென்று நினைக்கின்றேன்.

குளிரான வேளையில் மின்விசிறியைப் போடுவானேன்???

அன்புரசிகன்
06-04-2007, 08:13 AM
இந்த குளிரான வேலையில் ஏன் செக்ரட்டரி மின் விசிறியை வேகமாக போடிருந்தார். அப்படியானால் அந்த நெகட்டிவ் அந்த மின் விசிறியின் மேலேதான் இருக்கவேண்டும் என்று நினைத்திருப்பார்.


வேறுபதிலுக்கு இடமில்லை என நினைக்கிறேன்.

பென்ஸ்
06-04-2007, 05:03 PM
அட போங்கப்பா....
ஒன்னுமே புரியலை....
ஆரென் உங்க பதில்தான் என்னை குழப்பிடுச்சு...

அன்புரசிகன்
06-04-2007, 06:32 PM
அட போங்கப்பா....
ஒன்னுமே புரியலை....
ஆரென் உங்க பதில்தான் என்னை குழப்பிடுச்சு...
ஜில்லுன்னு தண்ணியடிச்சிட்டுங்க ஓ... மன்னிக்க.. தண்ணி குடிச்சிச்சிச்சிடுங்க ....:p :p

பரஞ்சோதி
07-04-2007, 06:25 AM
ஆரென் அண்ணா சொன்னது தான் சரி.

மின்விசிறியின் இறக்கையின் மேல் அவர் ஒட்டி வைத்திருக்கலாம்.

குளிர் காலத்தில் மின்விசிறி ஓட வேண்டிய அவசியம் இல்லை தானே.

புதிரில் விடை காண அண்ணா அதிகப்படியான விபரங்கள் கொடுத்து விட்டாங்கன்னு நினைக்கிறேன் :)

பரஞ்சோதி
07-04-2007, 06:27 AM
அட போங்கப்பா....
ஒன்னுமே புரியலை....
ஆரென் உங்க பதில்தான் என்னை குழப்பிடுச்சு...

என்ன பென்ஸ், இன்ஸ்பெக்டரே தெளிவாக இருக்காரு? நீங்க ஏன்?

பெங்களூரில் கடும் வெயில் என்று தானே சொன்னாங்க :)

pgk53
25-04-2007, 02:44 PM
அன்பு நண்பர்களே ஒரு சிறிய விடுமுறை முடிந்து பணியிடம் திரும்பிவிட்டேன்.
இப்போது புதிரைப் பார்ப்போம்


இந்த குளிரான வேலையில் ஏன் செக்ரட்டரி மின் விசிறியை வேகமாக போடிருந்தார். அப்படியானால் அந்த நெகட்டிவ் அந்த மின் விசிறியின் மேலேதான் இருக்கவேண்டும் என்று நினைத்திருப்பார்.

என்ன பிகேஜி அவர்களே, நான் சொல்வது சரிதானே?

உங்களுகென்றே வேறு ஏதாவது ஒரு பதிலை வைத்திருப்பீர்களே? எல்லாம் நம்ம தூரதிர்ஷ்டம்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஆரென் அண்ணா சொன்னது தான் சரி.

மின்விசிறியின் இறக்கையின் மேல் அவர் ஒட்டி வைத்திருக்கலாம்.

குளிர் காலத்தில் மின்விசிறி ஓட வேண்டிய அவசியம் இல்லை தானே.

புதிரில் விடை காண அண்ணா அதிகப்படியான விபரங்கள் கொடுத்து விட்டாங்கன்னு நினைக்கிறேன் :)---இது பரஞ்சோதி....


ஆரென் அவர்கள் மிகச் சரியான விடையைக் கூறிவிட்டு கொஞ்சம் சந்தேகத்துடன் சலித்துக்கொண்டார்.

பரஞ்சோதி அவர்களோ நான் மிக அதிகமான விபரங்களைக் கொடுத்துவிட்டதாகக் கூறியிருக்கின்றார்.

இப்படி எளிமையாகக் கொடுப்பதினால் அனைவரும் மகிழ்வடைவார்கள் அல்லவா?அதனால்தான் எளிமையான புதிரைக் கொடுத்தேன்.
வாருங்கள் அடுத்தும் ஒரு மிக மிக எளிமையான புதிர் உள்ளது. அது என்னவென்று பார்க்கலாம்..

pgk53
25-04-2007, 02:46 PM
புதிர் எண்- 248


ஒரு மனநல மருத்துவமனையைப் பார்வையிட நீங்கள் போயிருக்கின்றீர்கள்.

அங்கே மருத்துவரிடம் பேசிக்கொண்டே, அங்கே இருந்த மருத்துவ வசதிகளையும் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளையும் பார்வை இட்டபடி சென்றுகொண்டிருக்கின்றீர்கள்.
அப்போது மருத்துவரைப் பார்த்து, நீங்கள் இங்கே மருத்துவத்துக்காக வரும் ஆட்களை எந்த அடிப்படையை வைத்து சோதனை செய்கிறீர்கள் என்று கேட்கிறீர்கள்.

அதற்கு அந்த மருத்துவர், அது மிகவும் சுலபமான ஒரு சோதனைதான். என்று கூறியபடியே உங்களை ஒரு அறைக்குள் அழைத்துச் செல்கிறார்.

அது ஒரு குளியலறை.
அங்கே ஒரு பாத் டப் இருந்தது.
அந்த பாத் டப்பில் தண்ணீரைத் திறந்துவிட்டு முழுவதுமாக நிறைத்தார்.

பிறகு உங்களைப் பார்த்து, இதோ இதுதான் அந்த சோதனை.
இந்த பாத் டப்பில் தண்ணீர் நிறைத்துள்ளது.
வருபவரிடம் மூன்று கேள்விகளைக் கேட்பேன்.

இந்த பாத் டப்பில் உள்ள தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றவேண்டும்.
உங்கள் முன்னால் மூன்று பொருட்கள் உள்ளன.
ஒன்று , ஒரு சிறிய மேசைக் கரண்டி.
அடுத்தது ஒரு தேனீர் கப்.
மூன்றாவதாக உள்ளது ஒரு நடுத்தரமான வாளி.
இதில் எதை உபயோகித்து விரைவில் தண்ணீரை வெளியேற்றுவீர்கள் என்று கேட்பேன்.
அவர் கூறும் பதிலை வைத்து அவரது மனநலனை தீர்மானிப்பேன் என்றார் மருத்துவர்.

ஓஹோஅப்படியா???...நல்ல கேள்விகள்தான் என்கிறீர்கள் நீங்கள்.

உங்களை தீர்க்கமாக ஒருமுறை பார்க்கிறார் மருத்துவர்.

அதெல்லாம் இருக்கட்டும் .
நீங்கள் இதற்கு என்ன பதில் கூறுவீர்கள் என்று உங்களைப் பார்த்துக் கேட்கிறார்.


நீங்கள்தான் சரியான பதிலைக் கூறுங்களேன்.

சுட்டிபையன்
25-04-2007, 02:54 PM
பெரிய விடயமே இல்லை பாத் ரப் அடியில மூடி இருக்கும் அத கழட்டிட வேண்டியதுதானே என்று சொல்லுவன்

பென்ஸ்
25-04-2007, 03:43 PM
அன்பு நண்பர்களே ஒரு சிறிய விடுமுறை முடிந்து பணியிடம் திரும்பிவிட்டேன்.
இப்போது புதிரைப் பார்ப்போம்
.
நலமா பிஜிகே...
விடுமுறை நலமாக கழிந்ததா...
ஆரென் சொன்ன பதில் சரியாக தோன்றவே... நானும் விட்டுட்டேன்...

aren
25-04-2007, 03:47 PM
பெரிய விடயமே இல்லை பாத் ரப் அடியில மூடி இருக்கும் அத கழட்டிட வேண்டியதுதானே என்று சொல்லுவன்

கலக்கிட்டீங்க. நீங்கள் சொல்வதுதான் சரி.

aren
25-04-2007, 03:48 PM
நலமா பிஜிகே...
விடுமுறை நலமாக கழிந்ததா...
ஆரென் சொன்ன பதில் சரியாக தோன்றவே... நானும் விட்டுட்டேன்...

அவரோட பதிலை பார்த்தீர்களா? கேள்வி எளிதாக இருந்ததால் நான் பதில் சொல்லிவிட்டேன் என்று சொல்கிறார். என்ன செய்வது.

அன்புரசிகன்
25-04-2007, 03:50 PM
சன்ஜெய் சொல்வது சரிதான்.

பென்ஸ்
25-04-2007, 03:51 PM
பெரிய விடயமே இல்லை பாத் ரப் அடியில மூடி இருக்கும் அத கழட்டிட வேண்டியதுதானே என்று சொல்லுவன்
அதன் அடியில் மூடி இல்லையெனில் மூன்றையும் பயன்படுத்துவேன் என்பேன்...:062802sleep_prv: :062802sleep_prv: :062802sleep_prv:

எனக்கு அட்மிஷன் உண்டா பிஜிகே

பென்ஸ்
25-04-2007, 03:53 PM
அவரோட பதிலை பார்த்தீர்களா? கேள்வி எளிதாக இருந்ததால் நான் பதில் சொல்லிவிட்டேன் என்று சொல்கிறார். என்ன செய்வது.
இது பரம்ஸின் இயல்பான பொறாமையால் வந்தது...
தன்னால் பதில் சொல்லமுடியாத வருத்தம் விடுங்க....

aren
25-04-2007, 03:53 PM
அதன் அடியில் மூடி இல்லையெனில் மூன்றையும் பயன்படுத்துவேன் என்பேன்...:062802sleep_prv: :062802sleep_prv: :062802sleep_prv:

எனக்கு அட்மிஷன் உண்டா பிஜிகே

உங்களுக்கு ஏசியுடன் கூடிய ரூம் உடனே கிடைத்துவிடும். கவலைவேண்டாம் என்று பிஜிகே சொல்லப்போகிறார்.

சுட்டிபையன்
25-04-2007, 03:54 PM
அதன் அடியில் மூடி இல்லையெனில் மூன்றையும் பயன்படுத்துவேன் என்பேன்...:062802sleep_prv: :062802sleep_prv: :062802sleep_prv:

எனக்கு அட்மிஷன் உண்டா பிஜிகே


எப்படியோ பதில் சொன்ன எல்லோருக்கும் இடமிருக்கு பென்ஸ் தாத்தா சண்டை போடம லைன்ல வந்து டோக்கன் எடுங்க:grin:

அக்னி
26-04-2007, 05:08 PM
நான் தமிழ் மன்றத்துக்குப் புதியவன். அதுவும் இந்த திரிக்கு இன்றுதான் வந்தேன். வந்தவுடனேயே சத்தியசோதனையா? இந்த புதிருக்கு ஏதாவது பதிலைக் கூறி நான் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை. ஏனென்றால், என்ன பதிலைக் கூறினாலும் அதிலிருந்து எனது மனநிலையை வைத்தியர் அறிந்து கொண்டுவிடும் சாத்தியம் அதிகம் இருப்பதால்..!
"ஹி ஹி ஹி....."

மேலும் 2 தொடக்கம் 141 வரையான பக்கங்களிலுள்ள எழுத்துக்கள் எனக்கு வேறு எழுத்துருவில் தெரிகின்றது. வாசிக்க முடியவிலலை. எவ்வாறு வாசிக்கலாம் என்று யாரேனும் கூறுவீர்களா..?

pgk53
02-05-2007, 02:53 PM
பெரிய விடயமே இல்லை பாத் ரப் அடியில மூடி இருக்கும் அத கழட்டிட வேண்டியதுதானே என்று சொல்லுவன்

சுட்டிப் பையன் அவர்களே, எச்சரிக்கையுடன் சரியான விடையைக் கூறிவிட்டீர்கள்.
வாழ்த்துக்கள்.

பொதுவாக யாருமே இருப்பதிலேயே பெரிய ஒன்றைத்தான் தேர்வு செய்வார்கள்.

ஆனால் நீங்கள் வேறுவிதமாகச் சிந்தித்துவிட்டீர்கள்.வாழ்க.

விரைவில் அடுத்த புதிர்.

pgk53
02-05-2007, 02:54 PM
நான் தமிழ் மன்றத்துக்குப் புதியவன். அதுவும் இந்த திரிக்கு இன்றுதான் வந்தேன். வந்தவுடனேயே சத்தியசோதனையா? இந்த புதிருக்கு ஏதாவது பதிலைக் கூறி நான் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை. ஏனென்றால், என்ன பதிலைக் கூறினாலும் அதிலிருந்து எனது மனநிலையை வைத்தியர் அறிந்து கொண்டுவிடும் சாத்தியம் அதிகம் இருப்பதால்..!
"ஹி ஹி ஹி....."

மேலும் 2 தொடக்கம் 141 வரையான பக்கங்களிலுள்ள எழுத்துக்கள் எனக்கு வேறு எழுத்துருவில் தெரிகின்றது. வாசிக்க முடியவிலலை. எவ்வாறு வாசிக்கலாம் என்று யாரேனும் கூறுவீர்களா..?

முரசு அஞ்சல் இறக்கிப் பாருங்களேன்.

சுட்டிபையன்
02-05-2007, 03:01 PM
சுட்டிப் பையன் அவர்களே, எச்சரிக்கையுடன் சரியான விடையைக் கூறிவிட்டீர்கள்.
வாழ்த்துக்கள்.

பொதுவாக யாருமே இருப்பதிலேயே பெரிய ஒன்றைத்தான் தேர்வு செய்வார்கள்.

ஆனால் நீங்கள் வேறுவிதமாகச் சிந்தித்துவிட்டீர்கள்.வாழ்க.

விரைவில் அடுத்த புதிர்.

நன்றி pgk53

அடுத்த கேள்வியை போடுங்கள்:icon_good: :D

malan
03-05-2007, 09:55 AM
புதிருக்கான விடையைத் தேட பல பக்கங்களைப் புரட்ட வேண்டியிருக்கிறது!

விடையைப் பதித்தவுடன் அதன் லிங்க்கை புதிருடன் கொடுத்தால் நன்றாக இருக்கும்!!

pgk53
05-05-2007, 03:04 PM
புதிர் எண்- 249

உங்கள் எதிரிகள் உங்களை ஊருக்கு வெளியே அடர்ந்த காட்டுப் பகுதியில் இருக்கும் ஒரு மாளிகையில் உங்களை அடைத்து வைத்து விட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம்.

நீங்கள் அங்கிருந்து விரைவில் தப்பிக்காவிட்டால் சாப்பாடு தண்ணீர் இல்லாமல் பட்டினி கிடந்தே உயிரிழக்க நேரிடும். அதனால் அந்த மாளிகையில் இருந்து தப்பிக்க முடிவு செய்கிறீர்கள்.

சுற்றுமுற்றும் பார்த்து தப்பிக்க என்ன வாய்ப்புகள் உள்ளன என்று பார்க்கிறீர்கள்.
உங்களை அடைத்து வைத்துள்ள அந்த மாளிகையின் இருந்த அறைக்கு மூன்று கதவுகள் உள்ளன.

அதில் ஒரு கதவுக்கு வெளியே கொலை வெறி பிடித்த குண்டர்கள் காவல் காத்துக்கொண்டுள்ளார்கள். மேலும் அந்தக் கதவு வெளிப்புறம் தாழ்ப்பாள் இடப்பட்டு பூட்டப்பட்டிருக்கின்றது. அதனால் அந்தக் கதவை திறக்கும் யோசனையைக் கைவிட்டு மற்ற கதவுகளைப் பார்க்கிறீர்கள்.இரண்டு கதவுகளுமே உட்புறம்தான் தாழ்ப்பாள் இடப்பட்டுள்ளது.

அதில் ஒரு கதவின் மேல் எழுதப்பட்டிருந்த வாசகங்களைப் படிக்கிறீர்கள்.

இந்தக் கதவைத் திறந்தால், வெளியே உள்ள அறை பிரத்தியோகமாகத் தயாரிக்கப்பட்ட அறையாகும். சூரியனின் ஒளிக்கற்றைகளை குவி லென்ஸ் மூலம் ஒருமுகப்படுத்தி அந்த அறையில் பாயுமாறு செய்யப்பட்டுள்ளது.மனிதனோ அல்லது எதுவானாலும் ஒரு நொடியில் வெப்பம் தாங்காமல் பஸ்பம் ஆகிவிடுவார்கள்.கவனம்

என்று இருந்தது.
அதனால் நீங்கள் அந்தக் கதவைத் திறக்கும் முயற்சியைக் கைவிட்டு விட்டு அடுத்த கதவுக்குப் போகிறீர்கள்.

அந்தக் கதவின்மேல்

எச்சரிக்கை!!!!!அடுத்த அறையில் கொலைவெறி பிடித்த காட்டுக் கரடி ஒன்று இருக்கின்றது. ஒரு சிறிய ஒலி கேட்டாலும் பாய்ந்து பிடித்துக்கொள்ளும்..அதனிடம் அகப்பட்ட மனிதன் யாருமே இதுவரை
பிழைத்ததில்லை. எச்சரிக்கை


இந்த எச்சரிக்கையைப் படித்ததும் நீங்கள் பெரும் குழப்பமும் பயமும் அடைகிறீர்கள்.

சோர்ந்துபோய் அப்படியே விதி விட்ட வழி என்று முடங்கிவிடுகிறீர்கள்.

கொஞ்சம் தீவிரமாக யோசித்தால் நீங்கள் தப்பித்துச் செல்ல வழி இருக்கின்றது.

அந்த வழி என்ன என்று முயற்சி செய்யுங்களேன்.

ஆதவா
05-05-2007, 06:43 PM
நமக்கு அந்த அளவெல்லாம் மூளை இல்லங்க பிஜிகே!!

சக்தி
05-05-2007, 06:59 PM
இரவில் சூரிய கதவை திறந்து ஓடிவிட வேண்டியது தானே

அக்னி
05-05-2007, 07:05 PM
ரோஜா பதிலை சொல்லிவிட்டார். ஏற்றுக் கொள்ளக்கூடிய பதில்தான். நானும்தான் யோசித்தேன். மாட்டவில்லை. ம்ம்..ம்ம்..ம்.. அதற்கெல்லாம் இருக்கவேண்டும்...

அக்னி
05-05-2007, 07:07 PM
முரசு அஞ்சல் இறக்கிப் பாருங்களேன்.

நன்றி. முயற்சி பண்ணுகின்றேன்...

ஆதவா
05-05-2007, 07:18 PM
அடர்ந்த காட்டுக்குள் சூரிய வெளிச்சம் வராதே???!!!!

ரோசாவின் பதில் சரியென்று நினைக்கிறேன்...

அக்னி
05-05-2007, 07:24 PM
அடர்ந்த காட்டுக்குள் சூரிய வெளிச்சம் வராதே???!!!!

ரோசாவின் பதில் சரியென்று நினைக்கிறேன்...

அதுவும் இரவில் கொஞ்சமும் இருக்காது தானே ஆதவா... அதனால் சரியான பதிலாகத்தான் இருக்க வேண்டும். எங்கே புதிர் போட்டவர்..?

aren
06-05-2007, 01:18 AM
சூரிய அஸ்தமனம் ஆகியபின் கதவைத் திறந்து வெளியே செல்லலாம். அல்லது வானம் மந்தமாக இருக்கும்பொழுது வெளியே சென்றுவிடலாம்.

ஓவியன்
06-05-2007, 04:13 AM
சூரிய ஒளிக் கதைவைத் திறந்து விட்டு(உள்ளே செல்லாமல்) கையில் ஒரு கல்லை வைத்துக் கொண்டு கரடிக் கதவைத் திறந்து சட்டென்று கதவின் பின்னால் ஒளிந்து கொண்டு கையில் உள்ள கல்லை சூரிய அறையினுள் எறிய வேண்டும் அப்போது கரடி சத்தம் வந்த திசையில் ஓடி சூரிய அறைக்குள் போய் கருகிச் செத்துவிடும்.

அப்பறமென்ன, கரடி அறை வழியாக ஜாலியாக வெளியேறலாம்:food-smiley-011: .

என்ன அதிரடியாக வழி கூறுகிறேனா? - என் மூளைக்கு இப்படித் தான் படுதுங்கோ.

சுட்டிபையன்
06-05-2007, 04:28 AM
சூரிய ஒளிக் கதைவைத் திறந்து விட்டு(உள்ளே செல்லாமல்) கையில் ஒரு கல்லை வைத்துக் கொண்டு கரடிக் கதவைத் திறந்து சட்டென்று கதவின் பின்னால் ஒளிந்து கொண்டு கையில் உள்ள கல்லை சூரிய அறையினுள் எறிய வேண்டும் அப்போது கரடி சத்தம் வந்த திசையில் ஓடி சூரிய அறைக்குள் போய் கருகிச் செத்துவிடும்.

அப்பறமென்ன, கரடி அறை வழியாக ஜாலியாக வெளியேறலாம்:food-smiley-011: .

என்ன அதிரடியாக வழி கூறுகிறேனா? - என் மூளைக்கு இப்படித் தான் படுதுங்கோ.

ஆஹா உங்களைப்போல மூளை யாருக்கு வரும் கரடிகிட்ட கடி வாங்கி சாகப்போறீங்க அது மட்டும் நிச்சையம்

ஓவியன்
06-05-2007, 10:39 AM
நமக்கு அந்த அளவெல்லாம் மூளை இல்லங்க பிஜிகே!!

ஆதவா!

இதையெல்லாம் இப்படி சட்டென்று போட்டு உடைக்க கூடாது
தெரியாட்டாலும் தெரிந்த மாதிரி பாவ்லா காட்டணும்... - நம்ம மயூரைப் போல.:D

அன்புரசிகன்
06-05-2007, 10:45 AM
ஓவியருக்கு கரடி மூளை.

pradeepkt
07-05-2007, 09:16 AM
ஆதவா!

இதையெல்லாம் இப்படி சட்டென்று போட்டு உடைக்க கூடாது
தெரியாட்டாலும் தெரிந்த மாதிரி பாவ்லா காட்டணும்... - நம்ம மயூரைப் போல.:D
அதுக்கு ஏனப்பா மயூரனை வம்புக்கு இழுக்கிறாய்...
அவன் இங்கே வந்தாலே வம்பு என்று சும்மா இருக்கிறான்...:weihnachten031:

ஓவியன்
07-05-2007, 12:04 PM
அதுக்கு ஏனப்பா மயூரனை வம்புக்கு இழுக்கிறாய்...
அவன் இங்கே வந்தாலே வம்பு என்று சும்மா இருக்கிறான்...:weihnachten031:

அட ஆமாம்.

சட்டென்று அவர் தான் அந்த இடத்தில் ஞாபகத்திற்கு வந்தார் - அதுதான்.:grin:

pgk53
10-05-2007, 01:41 AM
இரவில் சூரிய கதவை திறந்து ஓடிவிட வேண்டியது தானே

சபாஷ் ரோஜாவின் ராஜா......மிகச் சரியான விடையை எந்தவித தயக்கமும் இல்லாமல் கூறியமைக்கு வாழ்த்துக்கள்.

அப்படியே அடுத்து வரும் 250வது புதிருக்கும் விடையை சொல்லிவிடுங்கள்.

pgk53
10-05-2007, 01:45 AM
புதிர் எண்- 250


சோமு ஒரு கடுங்காவல் தண்டனைக் கைதி.
அவனை தனிமைச் சிறையில் அடைத்திருந்தார்கள்.

அப்படிப்பட்ட அறையை ஸெல் என்று சொல்லுவார்கள்.
அந்த அறையில் சன்னலே கிடையாது.

விளக்கு கிடையாது.
சூரியஒளி அந்த அறைக்குள் வர வாய்ப்பில்லாமல் கட்டப்பட்டிருந்தது..
மிக மிக மெல்லிய வெளிச்சம்தான் அந்த அறையில் இருந்தது.

அந்த சிறையில் இருந்து எப்படியாவது தப்பித்துச் செல்லவேண்டும் என்று தீர்மானித்தான்.
அவனது பக்கத்து ஸெல்லில் இருந்த அவனது நண்பனிடம் சில தகவல்களை கலந்து பேசி தப்பிக்க வழி செய்யலாம் என்று தீர்மானித்தான்.

ஆனால் பக்கத்து அறையில் அடைபட்டிருந்தவனுடன் அவன் தனித்துப் பேச வாய்ப்பே இல்லாமல் இருந்தது.


அவனது அறையில் இருந்த ஒரு தண்ணீர்க் குழயில் இருந்து ஒரே சீராக சொட்டுச் சொட்டாக நீர் வழிந்து கொண்டிருந்தது.

சரியாக ஆறு மணி பதினைந்து நிமிஷத்தில் இருந்து ஆறுமணி நாற்பத்து ஐந்து நிமிடங்களுள் அவனுக்கு இரவு உணவு சிறைக் கதவின் கீழே இருந்த இடைவெளி மூலமாகத் தரப்படும்.

ஒவ்வொரு மணி நேரமானதும் சிறைக்கு வெளியில், அருகில் இருந்த ஒரு சர்ச்சின் மணியோசையை அவனால் கேட்க முடிந்தது.

மாலை நேரம் ஆனதும் அவன் இருந்த அறையின் சுவரை தொட்டுப்பார்த்து பகல் நேர சூரியச் சூடு குறைவதை வைத்து மாலை நேரம் ஆகிவிட்டதை அவனால் உணர முடிந்தது.


இதில் ஒரு ஆறுதலான விஷயம் ஒன்று அவனுக்கு இருந்தது.

அதாவது அவனுக்கும்,. பக்கத்து ஸெல்லில் இருந்த அவனது நண்பனுக்கும் தந்தி பாஷை தெரியும்.
அதனால் அதைவைத்து அவனுடன் தகவல் பறிமாறிக்கொள்ள நினைத்தான்.

ஆனால் சுவரை தட்டித் தட்டி ஒலி எழுப்பினால் சிறைக் காவலர்களும் அந்த ஒலியைக் கேட்க முடியும்.அவர்கள் உஷாராகிவிடுவார்கள்.

அதனால் காவலர்களுக்கு ஒலி கேட்காதபடி அவன் சுவரைத் தட்ட வேண்டும்.

அப்படிச் செய்வதானால் காவலர்கள் பாரா மாற்றும்போது கிடைக்கும் பதினைந்து நிமிட இடைவேளையில்தான் அவன் சுவரைத் தட்ட முடியும்.

காவலர்கள் பாரா மாற்றுவது{டூட்டி} இரவு சரியாக ஒன்பதே காலுக்கு என்பதை அவன் அறிவான்.

ஆனால் இரவு ஒன்பதேகால் எப்போது என்பதை அவனால் சரியாக உணர முடியவில்லை

அவனால் காவலர்கள் பாரா மாற்றுவதை அவனால் பார்க்க இயலாது.


இந்த சூழ்நிலையை வைத்துக்கொண்டு சோமு எப்படி சரியாக ஒன்பதே காலுக்கு பக்கத்து அறையில் உள்ள நண்பனுடன் தந்தி பாசையில் தகவல் பறிமாறுவது என்று
நீங்கள்தான் அவனுக்கு சொல்லிக்கொடுங்களேன்.!!!!!!!!!!!!!!!!!!!?????????????

vijayan_t
10-05-2007, 02:05 AM
சர்ச் மணியோசையின் உதவிமூலம் ஒருமணிநேரத்துக்கு எத்தனைமுறை நீர் சொட்டுகின்றது என கணக்கிடமுடியும், அதன்மூலம் 15 நிமிடத்துக்கு எத்தனை முறை சொட்டுகின்றது என கணக்கிடலாம். எத்தனை முறை என்பதை 15-நிமிட-சொட்டு-தடவை என்று பெயர் கொள்வோம்.

இரவு உனவுக்கு பிறகு ஒலிக்கும் 3 வது மணியோசையின் போது நேரம் இரவு 9 மணி.

அதிலிருந்து 15-நிமிட-சொட்டு-தடவை க்கு பிறகு தந்தி-மொழியில் பேச ஆரம்பித்து 15-நிமிட-சொட்டு-தடவை க்கு நீட்டிக்கலாம்.

(இதில் நான் சுவர் சூடாகும் விஷயத்தையே உபயோகிக்கவில்லை, ஒருவேளை எனது விடை தவறாக இருக்குமோ, இல்லை புதிரை நான் சரியாக புரிந்து கொள்ளாவில்லையோ? விளக்குங்கள் pgk அவர்களே)

தாமரை
10-05-2007, 02:37 AM
சரியாக ஆறு மணி பதினைந்து நிமிஷத்தில் இருந்து ஆறுமணி நாற்பத்து ஐந்து நிமிடங்களுள் அவனுக்கு இரவு உணவு சிறைக் கதவின் கீழே இருந்த இடைவெளி மூலமாகத் தரப்படும்.

எனவே உணவு வந்த பிறகு அடிக்கும் மணி 7 மணி

மாலை நேரம் ஆனதும் அவன் இருந்த அறையின் சுவரை தொட்டுப்பார்த்து பகல் நேர சூரியச் சூடு குறைவதை வைத்து மாலை நேரம் ஆகிவிட்டதை அவனால் உணர முடிந்தது

மாலை ஏழுமணி

அடுத்த இரண்டுமணி நேரம் 9 மணி.. அப்புறம் சொட்டுக்களை எண்ணிக்கொண்டு இருக்க வேண்டியதுதான்..

ஒன்பதே கால் மணிக்கு காவலர்கள் வெளியே செல்லும் காலணி ஓசை கேட்கும்.. அப்ப பேசிக்க வேண்டியதுதான். ஹி ஹி ஹ்

pgk53
10-05-2007, 02:50 PM
அடேயப்பா....என்ன வேகம்.!!!!!!!!!!!!!!!!!
புதிரைப் போட்டுத் திரும்புவதற்குள் மின்னலாக பதில்கள்.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....

சுட்டிபையன்
10-05-2007, 02:59 PM
சரியாக ஆறு மணி பதினைந்து நிமிஷத்தில் இருந்து ஆறுமணி நாற்பத்து ஐந்து நிமிடங்களுள் அவனுக்கு இரவு உணவு சிறைக் கதவின் கீழே இருந்த இடைவெளி மூலமாகத் தரப்படும்.

எனவே உணவு வந்த பிறகு அடிக்கும் மணி 7 மணி

மாலை நேரம் ஆனதும் அவன் இருந்த அறையின் சுவரை தொட்டுப்பார்த்து பகல் நேர சூரியச் சூடு குறைவதை வைத்து மாலை நேரம் ஆகிவிட்டதை அவனால் உணர முடிந்தது

மாலை ஏழுமணி

அடுத்த இரண்டுமணி நேரம் 9 மணி.. அப்புறம் சொட்டுக்களை எண்ணிக்கொண்டு இருக்க வேண்டியதுதான்..

ஒன்பதே கால் மணிக்கு காவலர்கள் வெளியே செல்லும் காலணி ஓசை கேட்கும்.. அப்ப பேசிக்க வேண்டியதுதான். ஹி ஹி ஹ்

இதுதான் எனது பதிலும்

pgk53
11-05-2007, 05:13 PM
நண்பர் விஜயன் சரியான பாதையில் சென்று சரியான விடையைக் கூறியபோது ஏற்பட்ட சில சந்தேகங்களை நண்பர் செல்வன் மங்களம் பாடி முடித்துவைத்தார்.
இருவருக்குமே எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அடுத்த புதிர் நாளை.

pgk53
12-05-2007, 03:47 PM
புதிர் எண்-251

ஒரு பல அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் அடிக்கடி திருட்டுப் போய்க்கொண்டிருந்தது.

அதனால் அந்த குடியிருப்புவாசிகள் அனைவரும் ஒருங்கினைந்து ஆலோசித்தார்கள்.

எப்படியாவது திருடனைக் கண்டுபிடித்துவிடவேண்டும். அப்போதுதான் அனைவரும் நிம்மதியாக இருக்க இயலும் என்று முடிவு செய்தார்கள்.

அதனால் நமது துப்பறியும் வீர்சிங்கை வரவழைத்து விஷயத்தைக் கூறி, கட்டிடத்தில் காலியாக இருந்த ப்ளாட் ஒன்றில் அவரைத் தங்க வைத்தார்கள்.

வீர்சிங்கும் அங்கேயே தங்கிக்கொண்டு, பகலிலும் இரவிலும் யாராவது சந்தேகப்படும்விதமாக வருகிறார்களா????? என்று நோட்டம் விட்டுக்கொண்டு இருந்தார்.

கிட்டத்தட்ட 50 அபார்ட்மெண்டுகளுக்குமேல் அந்த குடியிருப்பில் இருந்ததினால், சட்டென்று எதையும் அவரால் முடிவு செய்ய இயலாமல் தடுமாறிக்கொண்டிருந்தார்.

நான்கு நாட்கள் அப்படியே ஓடிவிட்டது.

ஒருநாள் இரவு பத்து மணிக்குமேல் அவரது அறையின் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.

யாரோ அழைக்கிறார்கள் என்று நினைத்த வீர்சிங் உடனே வந்து கதவைத் திறந்தார்.

எதிரே அவருக்கு அறிமுகம் இல்லாத ஒருவர் நின்றுகொண்டிருந்தார்.

வீர்சிங்கின் கட்டுமஸ்தான உருவத்தைக் கண்டதும், மன்னிக்கவும் எனது அறை என்று நினைத்து, உங்கள் கதவைத் தட்டிவிட்டேன் என்றான்.

உடனே வீர்சிங் நின்றவரை மேலும் கீழும் கவனமாகப் பார்த்துவிட்டு,கொஞ்சமும் தாமதிக்காமல் அவனைத் தாவிப் பிடித்து, கட்டிப்போட்டு, மற்றவர்களுக்குக் குரல் கொடுத்து, போலீஸை அழைத்து அவந்தான் திருடன் என்று ஒப்படைத்தார்.

அவனும் தனது குற்றத்தை ஒத்துக்கொண்டான்.
போலீஸ் அவனை இழுத்துச் சென்றது.


நண்பர்களே.வீர்சிங் எந்த தடயத்தை வைத்து அவன்தான் திருடன் என்று முடிவு செய்தார்.

அல்லிராணி
12-05-2007, 03:56 PM
தன் அறைக்குள் நுழைய கதவைத் தட்டிய நாகரீகம் உள்ள அந்த மாமனிதர் மிகவும் நல்லவர்தானே!

ஓவியா
12-05-2007, 04:00 PM
விடையகூறிய அல்லிக்கு சபஷ்

இந்த திரியை ஒட்டியாக்கிய நிர்வாகிகளுக்கு நன்றி.

PGK53 அண்ணாக்கு வாழ்த்துக்கள்.

மதி
13-05-2007, 05:26 AM
சபாஷ் அல்லிராணி...!

pgk53
15-05-2007, 03:11 PM
தன் அறைக்குள் நுழைய கதவைத் தட்டிய நாகரீகம் உள்ள அந்த மாமனிதர் மிகவும் நல்லவர்தானே!

புதிருக்கு விடையையும் புதிராகவே கொடுத்த அல்லிராணிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

இப்போதெல்லாம் எந்தப் புதிரைப் போட்டாலும், திரும்பிப் பார்ப்பதற்குள்ளாகவே விடைகள் டான் டானென்று வந்து விழுகின்றன!!!!!!!!!!

சரி அல்லிராணி அவர்களே, அடுத்து நான் போடப்போகும் ஒரு சிறிய புதிருக்கும் இதேபோல் விடையை அளிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்...........சரி வாருங்கள் புதிருக்குப் போவோம்

pgk53
15-05-2007, 05:33 PM
புதிர் எண்- 252

ராமுவுக்கு திடீரென ஒருநாள் குதிரைச் சவாரி செய்து பார்க்கவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டதுஅதனால் ஒரு குதிரைக்காரனைத் தேடிப் பிடித்தான்.
தனது விருப்பத்தைக் கூறினான்.

அவனும் எவ்வளவு பணம் என்று பேசி முடித்தபின்பு சென்று ஒரு குதிரையைக் கொண்டு வந்தான்.

தெனாலிராமன் வளர்த்த குதிரையைப் பற்றி நாம் கதையில் படித்துள்ளோம். கிட்டத் தட்ட அதே போல ஒரு குதிரையைத்தான் அவன் ஓட்டி வந்தான்.

அந்தக் குதிரையின் முதுகின்மேல் சேனம் போடப்பட்டிருந்தது. ஆனால் கடிவாளமே இல்லை.

கடிவாளம் இல்லாமல் எப்படி ஏறுவது என்று ராமு தயங்கினான்.
அதற்கு அவன் ஐயா.நீங்கள் கொஞ்சம்கூட யோசிக்கவே வேண்டாம். இந்தக் குதிரை வேகமாக ஓடாது. மேலும் நானும் கூடவே வருவேன். அதனால் பயமில்லாமல் குதிரையின்மேல் ஏறுங்கள் என்றான்.

அதைக்கேட்ட ராமு கொஞ்சம் பயம் தெளிந்து குதிரையின்மேல் தாவி ஏறினான்.

குதிரையை அந்த மைதானத்தைத் சுற்றி மெதுவாக நடத்தினான் குதிரைக்காரன்.

மெதுவாக நடந்து மைதானத்தை ஒரு சுற்றுச் சுற்றிவந்தது குதிரை. ராமு கீழே சாய்ந்து விடாமல் இருப்பதற்காக சேனத்தை ஒரு கையால் பிடித்தபடி இருந்தான்.

அப்போது அங்கே விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவன், ஒரு பட்டாசுக்கட்டை கொளுத்திப்போட, அது நேராக குதிரைக்கு முன்னால் வந்து விழுந்தது.

பட்டாசு வெடிச் சப்தம் கேட்டதும், குதிரைக்கு ஏதோ ஆகிவிட்டது. திடீரென்று நாலுகால் பாய்ச்சலில் ஓட ஆரம்பித்தது.சண்டி மிரண்டால் காடு கொள்ளாது என்று தெரியாமலா சொன்னார்கள்.

மைதானத்தை விட்டு சாலையில் தாவியது குதிரை.

குதிரை கண்மண் தெரியாமல் ஓட மேலே இருந்த ராமு செய்வது அறியாமல் குதிரையின் காதுகளை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு அப்படியே முன்பக்கம் சாய்ந்துகொண்டான்.
கொஞ்சம் கை நழுவினாலும் நிலை தடுமாறி கீழே விழுந்து, குதிரையின் கால்களுக்கிடையில் சிக்கிச் சின்னாபின்னமாவது நிச்சயம் என்று அவனது மூளை அவனை எச்சரிக்கை மணியடித்தது.

முன்பக்கம் சாய்ந்தபடியே கொஞ்சம் தலையை நிமிர்த்திப் பார்த்தான்.தூரத்தில் ஒரு லாரி வேகமாக வந்துகொண்டிருப்பது தெரிந்தது.
இந்த வேகத்தில் போனால் நிச்சயமாக லாரி குதிரையோடு சேர்த்து அவனையும் அடித்துவிடும் என்று நினைத்தான். ஆனாலும் குதிரையை நிறுத்த வழியறியாது கலக்கம் அடைந்தான்.

அந்த நேரத்தில் குதிரையின் காதுகளைப் பற்றியிருந்த அவனது கைகளும் கொஞ்சம் கொஞ்சமாக நழுவத் தொடங்கியது.

அவனது முடிவு அவன் கண்களுக்குத் தெரிவதுபோல உணர்ந்த ராமு கண்களை மூடிக்கொண்டு வருவதை எதிர்கொள்ளத் தயாரானான்.அதே சமயம் கைகளின் பிடிமானம் முழுவதுமாக நழுவியது.

திடீரென்று குதிரை ஓடுவதை நிறுத்திவிட்டதை உணர்ந்தான்.

கண்களைத் திறந்து பார்த்தான்.

குதிரை ஓடாமல் நடுச் சாலையில் நிற்பதையும், தூரத்தில் தெரிந்த லாரி அவனைச் சமீபித்துக்கொண்டிருப்பதைக் கண்டான்.

உடனே குதிரையில் இருந்து கீழே குதித்ததோடு மட்டுமல்லாமல், குதிரையையும் சாலை ஓரம் இழுத்து அதையும் லாரியில் இருந்து காப்பாற்றினான்.

வெறி பிடித்ததுபோல் ஓடிய குதிரை ஏன் திடீரென்று ஓட்டத்தை நிறுத்தியது என்று அவனுக்கு விளங்கவே இல்லை.

நீங்கள்தான் ராமுவுக்கு, குதிரை தனது ஓட்டத்தை திடீரென்று ஏன் நிறுத்தியது என்று புரியும்படியாகக் கூறுங்களேன்.!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

சுபன்
15-05-2007, 06:00 PM
அது ரேஸ் குதிரையோ!

ஓவியா
15-05-2007, 06:11 PM
காதை பிடித்திருந்த கைகள் நழுவி குதிரையின் கண்களை மூடியதால், பார்வையை மறைத்தால், குதிரை 'சடன் பிரேக்' போட்டு நின்று விட்டது.

மனோஜ்
15-05-2007, 06:20 PM
காதை பிடித்திருந்த கைகள் நழுவி குதிரையின் கண்களை மூடியதால், பார்வையை மறைத்தால், குதிரை 'சடன் பிரேக்' போட்டு நின்று விட்டது.
ஓவி சரியாக சென்னீர்கள் என்று நினைக்கிறோன்:icon_hmm:

அன்புரசிகன்
15-05-2007, 06:29 PM
ராமு கீழே சாய்ந்து விடாமல் இருப்பதற்காக சேனத்தை ஒரு கையால் பிடித்தபடி இருந்தான்.
அப்போது அங்கே விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவன், ஒரு பட்டாசுக்கட்டை கொளுத்திப்போட, அது நேராக குதிரைக்கு முன்னால் வந்து விழுந்தது.

--------------
அந்த நேரத்தில் குதிரையின் காதுகளைப் பற்றியிருந்த அவனது கைகளும் கொஞ்சம் கொஞ்சமாக நழுவத் தொடங்கியது.
அதே சமயம் கைகளின் பிடிமானம் முழுவதுமாக நழுவியது.
திடீரென்று குதிரை ஓடுவதை நிறுத்திவிட்டதை உணர்ந்தான்.


காதை பிடித்தால் ஓடும். காதை விட்டால் நிற்கும். இது தான் பிரச்சனை. தவிர அது பட்டாசு வெடிச்சத்தத்திற்கு ஓடவில்லை. (தெனாலிராமனின் குதிரை போலாச்சே. இப்படியான விசும்புகள் - குசும்புகள்செய்யும்)
அதாவது பட்டாசு கொழுத்திய நேரமும் காதுபிடித்த நேரமும் ஓரே தடவையில் நடந்தேறியுள்ளது. பட்டாசு என்பது இங்கு கவனக்கலைப்பான்.

கண்மணி
15-05-2007, 06:34 PM
காதை பிடித்தால் ஓடும். காதை விட்டால் நிற்கும். இது தான் பிரச்சனை. தவிர அது பட்டாசு வெடிச்சத்தத்திற்கு ஓடவில்லை. (தெனாலிராமனின் குதிரை போலாச்சே. இப்படியான விசும்புகள் - குசும்புகள்செய்யும்)
அதாவது பட்டாசு கொழுத்திய நேரமும் காதுபிடித்த நேரமும் ஓரே தடவையில் நடந்தேறியுள்ளது. பட்டாசு என்பது இங்கு கவனக்கலைப்பான்.



பட்டாசு வெடிச் சப்தம் கேட்டதும், குதிரைக்கு ஏதோ ஆகிவிட்டது. திடீரென்று நாலுகால் பாய்ச்சலில் ஓட ஆரம்பித்தது.சண்டி மிரண்டால் காடு கொள்ளாது என்று தெரியாமலா சொன்னார்கள்.

மைதானத்தை விட்டு சாலையில் தாவியது குதிரை

நல்லா படிங்க அன்பு ரசிகன். ஓவியா அக்கா யாருடைய தங்கை? அவங்க தப்பா பதில் சொல்வாங்களா?

அன்புரசிகன்
15-05-2007, 06:41 PM
கண்மணி நான் கூறியது தவறாக இருக்கலாம். ஆனாலும்

அதாவது பட்டாசு கொழுத்திய நேரமும் காதுபிடித்த நேரமும் ஓரே தடவையில் நடந்தேறியுள்ளது.
அது தவறாகவும் இருக்கலாம். அணைந்து அணைந்து நூர்ந்த அம்புலன்ஸ் வண்டி சைரன் கதையும் இது போல தான். கவனக்கலைப்பான்களாக இருக்கலாமே...
தவிர குதிரையின் காதைப்பிடித்த கை கண்ணை முடியது... ஒரு வேளை இப்படி இருக்கலாம். அது வியாபாரத்திற்கு பயன்படுத்தப்பட்டது. ஆகவே இருட்டிவிட்டது என்று நினைத்து நின்றிருக்கலாம்.

கண்மணி
15-05-2007, 06:54 PM
குதிரையை காதைப் பிடித்து இழுத்து பின்னர் காதை விட்டால் நின்றுவிடும்

சுட்டிபையன்
16-05-2007, 01:43 PM
வெடிச்சத்ததிற்க்கு ஓட தொடங்கிய குதிரையின் காதை ராமு பிடிக்கும்போது குதிரையின் காது வலித்திருக்கும், வலியில் வேகமாக எதையும் அறியாமல் ஓடியிருக்கும், காதில் அவனது கைபிடி தளர்ந்ததும் அதற்க்கு வலி நிண்டிருக்கும், வலி நின்ற பின்னர் தனது ஓட்டத்தி நிறுத்தியிருக்கும்

pgk53
18-05-2007, 03:26 PM
காதை பிடித்திருந்த கைகள் நழுவி குதிரையின் கண்களை மூடியதால், பார்வையை மறைத்தால், குதிரை 'சடன் பிரேக்' போட்டு நின்று விட்டது.

ஓவியா அவர்களே......சரியான பதிலை நெத்தியடிபோல் கூறி விட்டீர்கள்...வாழ்த்துக்கள்.

pgk53
18-05-2007, 03:27 PM
அடுத்தாற்போல் ஒரு விஞ்ஞானப் புதிர் வந்துகொண்டே இருக்கிறது.

நன்றாகச் சிந்தித்து பதிலை கூறுங்களேன்.

pgk53
18-05-2007, 03:29 PM
புதிர் எண் 253

விண்வெளி ஆராய்ச்சி தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் அதாவது 1960 களில், அமெரிக்காவின் நாசாவில் இருந்து குட்டி குட்டி ராக்கெட்டுகளை அனுப்பி ஆராய்ச்சி செய்தார்கள்.
ஆனால் அனுப்பிய ராக்கெட்டுகளில் இனைக்கப்பட்டிருந்த ஆராய்ச்சிக் கூடங்கள் சரி வர வேலை செய்யாமல் பழுதடைந்து கொண்டே இருந்தது.

எவ்வளவோ முயற்சி செய்தும் பலன் இன்றி இருந்தது.

ஒரு ஆராய்ச்சியாளர் ஆராய்ச்சிக்கூடம் பழுதடைவதற்கான காரணத்தை ஒருநாள் கண்டுபிடித்தார்.

அதாவது விண்வெளியின் சூடான காற்றினால் உண்டாகும் வெப்பம்தான் எலெக்ட்ரானிக் பாகங்களை செயல் இழக்கச் செய்கிறது என்று நிரூபித்தார்.

அதனால் அடுத்து அனுப்பிய ராக்கெட்டின் இனைக்கப்பட்ட ஆராய்ச்சிக் கூடத்தில் வலிமையான காற்றாடி FAN பொருத்தி அனுப்பிவைத்தார்கள்.

பின்னும் எந்தப் பலனும் இல்லை.
நினைத்ததற்கு மாறாக இன்னும் வெப்பம் அதிகரித்ததுதான் மிச்சம்.
முன்புபோலவே பழுதடைந்துகொண்டுதான் இருந்தது.

காற்றாடி பொருத்தியும் ஏன் வெப்பம் குறையவில்லை என்று எவ்வளவு தீவிரமாகச் சிந்தனை செய்தும் அவர்களால் காரணம் கண்டுபிடிக்க இயலவில்லை.

இறுதியாக ஒருவர் காற்றாடி பொருத்தியும் ஏன் வெப்பம் குறையாமல் அதிகரிக்கிறது என்ற காரணத்தைக் கண்டுபிடித்தார்.

நண்பர்களே.உங்களால் அந்தக் காரணம் என்ன என்று கூற இயலுமா??????????
மிகவும் எளிமையான ஒரு காரணம்தான்.
சிந்தனை செய்து கூறுங்களேன்!!!!!!!!!!!!!!!!!!!!

சுட்டிபையன்
18-05-2007, 03:32 PM
வானத்தில் காற்று இல்லை

சக்தி
18-05-2007, 03:49 PM
வாயு மண்டலத்தை தாண்டிய பிறகு காற்றாடி வேலை செய்தால் என்ன செய்யாவிட்டால் தான் என்ன? அங்கு காற்றாடிக்கே வேலை இல்லை.

பென்ஸ்
18-05-2007, 05:10 PM
வாயு மண்டலத்தை தாண்டிய பிறகு காற்றாடி வேலை செய்தால் என்ன செய்யாவிட்டால் தான் என்ன? அங்கு காற்றாடிக்கே வேலை இல்லை.

சரியாக சொன்னீர்கள்..... பாராட்டுகள்...

சில உதிரி தகவல் இது சம்பந்தமாக

வெப்பம் முன்றுவிதமாக கடத்தபடுகிறது....

1, கன்டக்ஸன் (conduction) - ஒறே பொருளிடம் அனுக்களின் வளியாக கடத்த படுதல்...
உதாரணம், இரும்பின் ஒரு பகுதியில் சூடாக்கினால் அடுத்த பக்கத்திற்க்கு வெப்பம் க்டத்தபடும்.
2, கன்வெக்சேன் (Convection) - வெவ்வேறு பொருள்களில் இருந்து வெப்பம் மற்றோரு பொருளுக்கு தாண்டுவது...
உதாரணம் வெப்பகாற்றிலிருந்து ஒரு பாத்திரதிற்க்கு பரவுவது....
3, ரேடியேசன் (Radiation) - இது வெப்ப அலைகள் என்று சொல்லலாம்,
சூரியனில் இருந்து வெப்பம் பூமிக்கு இவ்வாறுதான் வருகிறது...

கன்வேக்சன் நடக்க எதாவது ஒரு மண்டலம் தேவை... அதாரணம் காற்று, நீர்...
விண்வெளியில் வெற்றிடம் இருப்பதால் வெப்பத்தை கன்வேக்சன் முறையில் கடத்த முடியாது... காற்று அதிகமாக அடித்தால் அதிக வெப்பம் வேளீயேறும்... மின்விசிறி முறையில் , இதை போர்ஸ்டு கன்வேக்சன் (Forced convection) என்று சொல்லுவர்)

தெர்மோ பிளாஸ்குகள் இந்த உத்தியை பயன் படுத்தி வெப்பத்தை வெகு நேரம் உள்ளடக்கி வைக்கின்றன... ஆனாலும் அது குளிருவது ரேடியேசனினால்.... வெற்றிடத்திலும் ரேடியேசன் முறையில் வெப்பம் கடந்து செல்லும்.

சக்தி
18-05-2007, 06:09 PM
பென்ஸ் அண்ணா
விளக்கம் அருமை, வாத்தியாரோ?

Mathu
19-05-2007, 08:21 AM
பென்ஸ் இன் விளக்கம் ஆகா....

ஓவியா
19-05-2007, 06:55 PM
ஓவியா அவர்களே......சரியான பதிலை நெத்தியடிபோல் கூறி விட்டீர்கள்...வாழ்த்துக்கள்.

பிஜிகே அண்ணாவிடம் பரிசு வங்க எத்தனை முறை முயன்று, தோல்வியை தழுவியுள்ளேன். எப்படியோ இன்று வெற்றிப்பெற்று விட்டேன். வெற்றி வாகை சூட துணைப்புரிந்த என் ஆசானுக்கு என நன்றி.


நன்றி பிஜிகே அண்ணா.

சக்தி
20-05-2007, 06:18 AM
வாழ்த்துக்கள் ஓவியா

அக்னி
24-05-2007, 01:37 AM
அன்பர்களே!! ஏதோ எனக்குத் தெரிந்த ஒரே ஒரு புதிரை இங்கே காட்டுகிறேன்.

3 கோடுகள் போட்டு ஒரு சதுரம் போட முடியுமா?

விடை சொல்லுங்கள்..

இதற்குப் பதில் என்ன?
அல்லது
எங்கேயுள்ளது?

pgk53
24-05-2007, 04:54 PM
வாயு மண்டலத்தை தாண்டிய பிறகு காற்றாடி வேலை செய்தால் என்ன செய்யாவிட்டால் தான் என்ன? அங்கு காற்றாடிக்கே வேலை இல்லை.


இளம்புயல்--- புயல் வேகத்திலேயே விடையைக் கூறிவிட்டார்.

நண்பர் பென்ஸ் அவர்களும் விரிவான விளக்கம் கொடுத்து அசத்திவிட்டார்.
அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

கடந்த ஒரு வாரமாக வேலைபளு மிக அதிகம். அதனால் புதிரைப் பற்றி ஆலோசிக்க இயலாமல் போனது.
மேலும் இன்னும் இரு தினங்களில் விடுமுறையில் செல்ல உள்ளேன்.

சரி வாருங்கள் அடுத்தாற்போல் ஒரு சிறிய புதிரைப் பார்ப்போம்.

pgk53
24-05-2007, 04:54 PM
புதிர் எண் 255

ஒரு மேசையின் மேல் ஆறு கண்ணாடி டம்ளர்கள் இருக்கின்றன.
அவற்றில் முதல் மூன்று டம்ளர்களில் ஆரஞ்சு பழ ரசம் நிறைக்கப்பட்டுள்ளது.
அடுத்த மூன்று டம்ளர்கள் காலியாக இருக்கின்றன.

இப்போது நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், மூன்று காலி மூன்று பழரசம் என்று இருக்கும் நிலையை ஒன்றில் பழரசம் அடுத்தது காலி என்று மாற்றிவைகவேண்டும்.
வைத்துவிடுகிறீர்களா???????????

இது என்ன பெரிய விஷயம்இப்போதே மாற்றி வைக்கிறேன் என்கிறீர்களா??????????


கொஞ்சம் பொறுங்கள்..

ஒரே ஒரு நிபந்தனை உள்ளது. அதை மட்டும் கேட்டுக்கொள்ளுங்கள்.

ஒரே ஒரு டம்ளரை மட்டுமே நீங்கள் தொடலாம்.அதுவும் ஒரு முறைதான் தொடலாம்.

சரி இப்போது தொடங்கலாமே!!!!!!!!

தாமரை
24-05-2007, 05:00 PM
இரண்டாம் டம்ளரில் இருப்பதை எடுத்து 5 வது டம்ளரில் ஊற்றிவிடுங்கள்..

எல்லாம் ஊற்றிக்கொடுத்த அனுபவம்தான்

அக்னி
24-05-2007, 05:00 PM
புதிர் எண் 255

ஒரு மேசையின் மேல் ஆறு கண்ணாடி டம்ளர்கள் இருக்கின்றன.
அவற்றில் முதல் மூன்று டம்ளர்களில் ஆரஞ்சு பழ ரசம் நிறைக்கப்பட்டுள்ளது.
அடுத்த மூன்று டம்ளர்கள் காலியாக இருக்கின்றன.

இப்போது நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், மூன்று காலி மூன்று பழரசம் என்று இருக்கும் நிலையை ஒன்றில் பழரசம் அடுத்தது காலி என்று மாற்றிவைகவேண்டும்.
வைத்துவிடுகிறீர்களா???????????

இது என்ன பெரிய விஷயம்இப்போதே மாற்றி வைக்கிறேன் என்கிறீர்களா??????????


கொஞ்சம் பொறுங்கள்..

ஒரே ஒரு நிபந்தனை உள்ளது. அதை மட்டும் கேட்டுக்கொள்ளுங்கள்.

ஒரே ஒரு டம்ளரை மட்டுமே நீங்கள் தொடலாம்.அதுவும் ஒரு முறைதான் தொடலாம்.

சரி இப்போது தொடங்கலாமே!!!!!!!!

பழரச வரிசையில் நடுவிலுள்ள டம்ளரைத் தூக்கி அதிலுள்ள பழரசத்தை, காலி டம்ளர் வரிசையில் நடுவிலுள்ள டம்ளரில் ஊற்றி விட்டு திரும்ப அதே இடத்தில் வைத்தால் சரி.

ஆதவா
24-05-2007, 05:02 PM
சரியான விடை (என்று நினைக்கிறேன்)... இருவருமே 10.30 க்கு சொல்லி அசத்திவிட்டீர்கள்... வாழ்த்துக்கள்..

அக்னி
24-05-2007, 05:04 PM
சரியான விடை (என்று நினைக்கிறேன்)... இருவருமே 10.30 க்கு சொல்லி அசத்திவிட்டீர்கள்... வாழ்த்துக்கள்..

இல்லை ஆதவா நான் 1 நிமிடம் பிந்திவிட்டேன். பார்க்க last edit...

ஐரோப்பிய நேரம் 19:00

அக்னி
26-05-2007, 03:03 AM
அன்பர்களே!! ஏதோ எனக்குத் தெரிந்த ஒரே ஒரு புதிரை இங்கே காட்டுகிறேன்.

3 கோடுகள் போட்டு ஒரு சதுரம் போட முடியுமா?

விடை சொல்லுங்கள்..


இதற்குப் பதில் என்ன?
அல்லது
எங்கேயுள்ளது?

இதைக் கவனிக்க யாருமே இல்லையா?

ஆதவா
26-05-2007, 03:06 AM
அதானே அதை ஏன் சொல்ல மாட்டேங்கிறார்கள்..??? யாராவது கண்டுபிடியுங்கள் மக்களே!

அக்னி
26-05-2007, 01:36 PM
அதானே அதை ஏன் சொல்ல மாட்டேங்கிறார்கள்..??? யாராவது கண்டுபிடியுங்கள் மக்களே!
இது சரியில்லை... சொல்லிடுங்கோ... நானும் எத்தன பேப்பற கசக்கி கசக்கி எறியுறது...?

சக்தி
26-05-2007, 03:13 PM
மூன்று கோடுகளைப் பயன்படுத்தி 4 என்று உருவாக்குங்கள்
4 is a square

pgk53
27-05-2007, 02:15 AM
இரண்டாம் டம்ளரில் இருப்பதை எடுத்து 5 வது டம்ளரில் ஊற்றிவிடுங்கள்..

எல்லாம் ஊற்றிக்கொடுத்த அனுபவம்தான்
செல்வன் அவர்களே நீங்கள் கூறியது மட்டும்தான் மிகச் சரியான விடை வாழ்த்துக்கள்.

வாருங்கள் அடுத்த புதிருக்குப் போவோம்.

pgk53
27-05-2007, 02:18 AM
நான் இன்று விடுமுறையில் தாயகம் புறப்பட உள்ளேன்.
முடிந்தால் இடையில் மன்றத்துக்கு வருவேன்.
வாய்ப்பில்லையானால் அடுத்த மாதம் 27ம் தேதிதான் வர இயலும்.
அனைவருக்கும் வணக்கங்கள் பல.

pgk53
27-05-2007, 02:18 AM
புதிர் எண் 256

ஒரு நாட்டிலே ஒரு பெரிய விஞ்ஞானி இருந்தார்.
அவருக்கு அவருடன் பணி புரிந்த மற்றொரு விஞ்ஞானி மேல் பொறாமை மிகுந்தது.

தன்னைவிட அந்த விஞ்ஞானிக்கு பேரும் புகழும் கூடிக்கொண்டு போவதைப் பார்த்து அவரது மனம் புழுங்கியது.

அதனால் அந்த விஞ்ஞானியைக் கொன்றுவிட முடிவு செய்தார்.
ஆனால் நேரிடையாக அவரைக்கொல்ல அவருக்கு மனமில்லை.

அந்த தீய உள்ளத்திலும் ஏதோ ஒரு மூலையில் கொஞ்சம் மனிதாபிமானம் ஒட்டிக்கொண்டிருந்தது.

ஒருநாள் யாருக்கும் தெரியாமல் அந்த விஞ்ஞானியைக் கடத்திவந்து தனது ரகசிய இடத்தில் அடைத்து வைத்தார்.

அவரை கொஞ்சமும் அசையவிடாமல் பலமாகக் கட்டிப்போட்டார்.

பிறகு தனது அறிவாற்றலைப் பயன்படுத்திக் கண்டுபிடித்து வைத்திருந்த மருந்துகளில் நான்கினை எடுத்து அந்த விஞ்ஞானிக்கு ஊசியில் மூலமாகச் செலுத்தினார்.

மருந்து தனது பணியைத் தொடங்கியது.

அதே சமயம் கட்டிப்போடப்பட்டிருந்தவரைப் பார்த்து, இதோ பார். நான் உன்னைக் கொல்ல விரும்புகிறேன். ஆனால் அதே சமயம் உனக்கு தப்பிப்பதற்கு ஒரு வழியையும் கொடுக்கிறேன்.

இப்போது நான் செலுத்திய மருந்துகளினால்,

உனது கண்பார்வை போய்விடும்.
தொடு உணர்வை நீ முற்றிலும் இழந்துவிடுவாய்.
வாசனையை முகரும் சக்தி போய்விடும்.
பேசுவதற்கு இயலாது.

என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அந்த விஞ்ஞானிக்கு கேட்கும் உணர்வைத் தவிர அனைத்தும் போய்விட்டது.
இன்னும் கேட்டுக்கொள். நான் இந்த அறையின் மத்தியில் ஒரு பொருளை அதாவது விஞ்ஞான மொழியில் ஒரு OBJECTஐ வைக்கப்போகிறேன்.பிறகு உனது கட்டுகளை அவிழ்த்துவிடுவேன்.உன்னை இந்த அறையில் வைத்துப் பூட்டிவிட்டு போய்விடுவேன்.
ஒரு மணி நேரம் கழித்து மறுபடியும் வருவேன்.
நான் வந்ததும் கேட்கும் கேள்விக்கு நீ பதில் கூறவேண்டும். வெறும் பதில் அல்ல. நான் அறையில் வைத்தது என்ன என்று விஞ்ஞான ரீதியாகப் பதில் கூறவேண்டும்.

சரியான பதிலைக் கூறினால் உன்னை விடுதலை செய்துவிடுகிறேன்.
இல்லையானால் கொன்றுவிடுவேன். என்று கூறியபடி அறையின் மத்தியில் ஒரு பொருளை வைத்தார்.

கட்டிப்போடப்பட்டிருந்த விஞ்ஞானி அமைதியாக இருந்தார். வேறு என்ன செய்வது,????

கேட்பதைத் தவிர அவரால் வேறு எதையுமே செய்யமுடியாதே!!!!!!!

விஞ்ஞானி வெளியே போகும் முன்பாக மறுபடியும் ஒரு மருந்தைச் செலுத்தினார். அதனால் கட்டிப்போடப்பட்டிருந்த விஞ்ஞானியின் கேட்கும் சக்தியும் போய்விட்டது.

ஐம்புலன்களையும் இழந்து மரக்கட்டையாய் விஞ்ஞானி அந்த அறையில் இருந்தார்.

கூறியபடியே ஒரு மணி நேரம் கழிந்தது.
விஞ்ஞானி திரும்பிவந்தார்.

ஒரு மருந்தை செலுத்தினார்.
அதனால் அந்த விஞ்ஞானியின் பேசும் சக்தி மட்டும் திரும்பி வந்தது.

ம்ம்ம்ம்-------யோசித்துவிட்டாயா????????நான் அறையில் வைத்தது என்ன
என்று கேட்டார்.

கொஞ்சமும் தயங்காமல் அந்த அறையில் வைக்கப்பட்ட பொருளை விஞ்ஞானமொழியில் மிகச் சரியாகக் கூறினார் அந்த விஞ்ஞானி.

அவரது பதிலைக் கேட்டுத் திகைத்தவர் , அவரது அறிவாற்றலை மெச்சி அவருக்கு அனைத்து மாற்று மருந்துகளையும் செலுத்தி, ஐம்புலன்களையும் செயலுக்குக் கொண்டு வந்து, அவரிடம் மன்னிப்புக் கேட்டு விடுதலை செய்துவிட்டார்.

நண்பர்களே ஐம்புலன்களையும் இழந்த நிலையிலும் அந்த விஞ்ஞானி எப்படி சரியான விடையைக் கூறினார்???????????????????????????????

aren
28-05-2007, 03:54 AM
அந்த அறையில் இருந்தது காற்று.
ஒரு பாட்டிலில் தண்ணீராகவும் இருக்கலாம்.

நியா
06-06-2007, 01:40 AM
[B]
ஒரு மருந்தை செலுத்தினார்.
அதனால் அந்த விஞ்ஞானியின் பேசும் சக்தி மட்டும் திரும்பி வந்தது.

ம்ம்ம்ம்-------யோசித்துவிட்டாயா????????நான் அறையில் வைத்தது என்ன
என்று கேட்டார்.

கொஞ்சமும் தயங்காமல் அந்த அறையில் வைக்கப்பட்ட பொருளை விஞ்ஞானமொழியில் மிகச் சரியாகக் கூறினார் அந்த விஞ்ஞானி.

அவரது பதிலைக் கேட்டுத் திகைத்தவர் , அவரது அறிவாற்றலை மெச்சி அவருக்கு அனைத்து மாற்று மருந்துகளையும் செலுத்தி, ஐம்புலன்களையும் செயலுக்குக் கொண்டு வந்து, அவரிடம் மன்னிப்புக் கேட்டு விடுதலை செய்துவிட்டார்.

நண்பர்களே ஐம்புலன்களையும் இழந்த நிலையிலும் அந்த விஞ்ஞானி எப்படி சரியான விடையைக் கூறினார்???????????????????????????????


பேசும் சக்தி மட்டும் தானே கிடைத்தது, அவரால் எப்படி இவர்சொல்லியதை கேட்க முடிந்தது....

இருந்தாலும் ஐம்புலனும் அற்ற இவர்தான் அந்த OBJECT என்று நினைக்கிறேன்....

அக்னி
06-06-2007, 08:48 AM
பேசும் சக்தி மட்டும் தானே கிடைத்தது, அவரால் எப்படி இவர்சொல்லியதை கேட்க முடிந்தது....

இருந்தாலும் ஐம்புலனும் அற்ற இவர்தான் அந்த OBJECT என்று நினைக்கிறேன்....
கூர்மையான கவனிப்புத்திறன்...
பாராட்டுக்கள் நியா...

pgk விடுமுறையிலிருந்து வந்தால்தான் வெளிச்சம்...

pgk53
27-06-2007, 03:26 PM
என் இனிய மன்ற நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
விடுமுறை முடிந்து பணியிடம் திரும்பிவிட்டேன்.

aren
27-06-2007, 03:45 PM
என் இனிய மன்ற நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
விடுமுறை முடிந்து பணியிடம் திரும்பிவிட்டேன்.

வாருங்கள் பிகேஜி. விடுமுறை சிறப்பாக அமைந்ததா?

அடுத்த புதிரை உடனே இங்கே கொடுத்துவிடுங்கள்.

pgk53
28-06-2007, 02:03 AM
அன்பு நண்பர்களே..........புதிருக்கான எளிய விடையை நானே கூறிவிடுகிறேன்.

மருத்துவ மொழியில் ஒரு பொருளை...அது எதுவாக இருப்பினும் OBJECT என்றுதான் கூறுவார்கள்.

அப்படிக்கூறப்பட்ட பொருளின் அடிப்படை விஞ்ஞான விளக்கம் MASS

அதனால் அந்த விஞ்ஞானியின் அனைத்து புலன்களும் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் ஒரு பொருளின் விஞ்ஞான விளக்கம் கூற அவருக்கு எந்த தடையும் ஏற்படவில்லை.

அதனால் மாஸ் என்று கூறி விடுதலையானார்.

pgk53
28-06-2007, 02:05 AM
இனிய நண்பர்களே இரண்டு தினங்களில் அடுத்த புதிருடன் உங்களைச் சந்திக்கின்றேன்

mania
28-06-2007, 04:55 AM
இனிய நண்பர்களே இரண்டு தினங்களில் அடுத்த புதிருடன் உங்களைச் சந்திக்கின்றேன்

இவ்வ*ள*வு ர*த்தினசுருக்க*மா ஒரு புதிடை கொடுத்தா எப்ப*டி...????ஏதாவ*து க்ளூ கொடுங்க*...???;) ;)
வாங்க* பிஜிகே, ந*ல*ன்தானே...?
அன்புட*ன்
ம*ணியா...

ஓவியா
28-06-2007, 05:15 PM
தலனா தலதான், சூப்பர் கடி.

aren
28-06-2007, 09:32 PM
இவ்வ*ள*வு ர*த்தினசுருக்க*மா ஒரு புதிடை கொடுத்தா எப்ப*டி...????ஏதாவ*து க்ளூ கொடுங்க*...???;) ;)
வாங்க* பிஜிகே, ந*ல*ன்தானே...?
அன்புட*ன்
ம*ணியா...

அதானே. இப்படி ஒரு க்ளூவும் கொடுக்காமல் போனால் எப்படி. தல, நீங்கள் கேட்டது சரிதான்.

pgk53
29-06-2007, 04:41 AM
அன்பு நண்பர்களே.....விடுமுறை நல்லபடியாகக் கழிந்தது.
வெயிலும் சூடும்தான் பாடாய்ப் படுத்திவிட்டது. மற்றபடி எல்லாம் நலமே.
நன்றிகளுடன் கோபாலகிருஷ்ணன்.
இது புதிர் அல்ல.
வாருங்கள் புதிருக்குப் போவோம்.

pgk53
29-06-2007, 04:49 AM
புதிர் எண் − 257.

நீங்கள் பக்கத்தில் உள்ள ஒரு ஊருக்குப் போகிறீர்கள்.

அங்கே போய் ஒரு ஹோட்டலில் தங்கி சிரம பரிகாரங்கள் செய்தபிறகு வேலையை ஆரம்பிப்பதற்கு முன்னதாக, தலைமுடி வெட்டிக்கொண்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றீர்கள்.

அதனால் ஹோட்டலுக்குப் பக்கத்திலேயே இருந்த ஒரு சலூனுக்குப் போகிறீர்கள்.

சலூனின் இரண்டு பேர் இருக்கின்றார்கள்.இருவருமே அங்கே பணிபுரியும் நாவிதர்கள்தான்.அந்த இருவருமே வாருங்கள் என்னிடம் முடி வெட்டிக்கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுக்கின்றார்கள்.

ஒருவரின் தலையைப் பார்க்கிறீர்கள்.

அலங்கோலமாக முடி வெட்டப்பட்டு அசிங்கமாக இருக்கிறது.

அடுத்த ஆளின் முடி அழகாக வெட்டப்பட்டு கச்சிதமாக இருக்கின்றது.


இப்போது நீங்கள் உங்களுக்கு முடி வெட்டிக்கொள்ள அந்த இருவரில் யாரைத் தேர்வு செய்வீர்கள்.????????????????

aren
29-06-2007, 05:06 AM
முடி அலங்கோலமாக இருக்கும் நாவிதரிடம்தான் முடி வெட்டிக்கொள்வேன். காரணம் அவருக்கு முடி வெட்டிவிட்டவர் அழகாக முடிவைத்துக்கொண்டிருக்கும் நாவிதர். ஆனால் அழகாக முடிவைத்துக்கொண்டிருக்கும் நாவிதர் அசிங்கமாக முடி வைத்திருக்கும் நாவிதருக்கு முடி வெட்டியவர். ஆகையால் அசிங்கமாக முடி வைத்திருக்கும் நாவிதர் அழகாக முடி வெட்டக்கூடியவர்.

நன்றி வணக்கம்
ஆரென்

சூரியன்
29-06-2007, 05:23 AM
புதிர் எண் − 257.

நீங்கள் பக்கத்தில் உள்ள ஒரு ஊருக்குப் போகிறீர்கள்.

அங்கே போய் ஒரு ஹோட்டலில் தங்கி சிரம பரிகாரங்கள் செய்தபிறகு வேலையை ஆரம்பிப்பதற்கு முன்னதாக, தலைமுடி வெட்டிக்கொண்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றீர்கள்.

அதனால் ஹோட்டலுக்குப் பக்கத்திலேயே இருந்த ஒரு சலூனுக்குப் போகிறீர்கள்.

சலூனின் இரண்டு பேர் இருக்கின்றார்கள்.இருவருமே அங்கே பணிபுரியும் நாவிதர்கள்தான்.அந்த இருவருமே வாருங்கள் என்னிடம் முடி வெட்டிக்கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுக்கின்றார்கள்.

ஒருவரின் தலையைப் பார்க்கிறீர்கள்.

அலங்கோலமாக முடி வெட்டப்பட்டு அசிங்கமாக இருக்கிறது.அடுத்த ஆளின் முடி அழகாக வெட்டப்பட்டு கச்சிதமாக இருக்கின்றது.


இப்போது நீங்கள் உங்களுக்கு முடி வெட்டிக்கொள்ள அந்த இருவரில் யாரைத் தேர்வு செய்வீர்கள்.????????????????


இவ*ரிட*ம் தான் வெட்டிக்கொள்வேன்

pgk53
29-06-2007, 08:21 AM
முடி அலங்கோலமாக இருக்கும் நாவிதரிடம்தான் முடி வெட்டிக்கொள்வேன். காரணம் அவருக்கு முடி வெட்டிவிட்டவர் அழகாக முடிவைத்துக்கொண்டிருக்கும் நாவிதர். ஆனால் அழகாக முடிவைத்துக்கொண்டிருக்கும் நாவிதர் அசிங்கமாக முடி வைத்திருக்கும் நாவிதருக்கு முடி வெட்டியவர். ஆகையால் அசிங்கமாக முடி வைத்திருக்கும் நாவிதர் அழகாக முடி வெட்டக்கூடியவர்.

நன்றி வணக்கம்
ஆரென்



ஆரென் அவர்களே இப்படிச் சொல்வதற்கு விசுவிடம் சிறப்புப் பயிற்சி எடுத்துக்கொண்டீர்களா?

aren
02-07-2007, 03:42 PM
ஆரென் அவர்களே இப்படிச் சொல்வதற்கு விசுவிடம் சிறப்புப் பயிற்சி எடுத்துக்கொண்டீர்களா?

நான் சொன்னபதில் சரியா தவறா என்று நீங்கள் இன்னும் சொல்லவில்லையே.

pgk53
02-07-2007, 04:56 PM
நான் சொன்னபதில் சரியா தவறா என்று நீங்கள் இன்னும் சொல்லவில்லையே.


தலைவா.................நீங்கள் கூறியது மிகச் சரியான பதில்தான்.
வாழ்த்துக்கள்.
வாருங்கள் அடுத்த புதிரைப் பார்ப்போம்.

pgk53
02-07-2007, 04:57 PM
புதிர் எண்−158

கோடைக்காலம் என்பதினால் ஒரு குளத்தில் முழுவதுமாக நீர் வற்றிப் போய்விட்டது. அந்தக் குளத்தில் இருந்த தவளைகள் இரண்டு, குளத்தை விட்டு வெளியேறி எங்காவது நீர் நிறைந்த இடம் இருக்குமாக என்று தேடிக் கிளம்பிவிட்டன.

ஒரு நாள் முழுவதுமாக அலைந்து கஷ்டப்பட்ட பிறகு ஒரு கிணற்றுக்கு
அருகே வந்தன.
அந்தக் குளத்தில் நீர் நிறம்பி இருந்தது.
அதைக் கண்டதும் இரு தவளைகளுக்கும் மகிழ்ச்சி பொங்கியது.
இரு தவளைகளில் மூத்த தவளை, மற்ற தவளையைப் பார்த்து, ஆஹாநமது அதிர்ஷ்டம். நீர் நிறைந்த கினறு கிடைத்துவிட்டது. இனி நாம் இந்தக் கிணற்றையே தற்காலிகமாகச் சொந்த இடம் ஆக்கிக்கொள்ளலாம். நீ என்ன சொல்கிறாய் என்று கேட்டது.

மற்ற தவளை வயதில் குறைந்ததாக இருந்தாலும், கொஞ்சம் ஆலோசனை செய்தபிறகு, நீ சொல்வதெல்லாம் சரிதான் என்று கூறிவிட்டு மேலும் பெசியது.

அதன் பேச்சைக் கேட்டதும், முதல் தவளை தனது முடிவை மாற்றிக்கொண்டு, இது நமக்கு சரிப்படாது என்று கூறியபடி வேறு இடம் தேடிப் புறப்பட்டது.

நண்பர்களே, இரண்டாவது தவளை அப்படி என்னதான் கூறியது.?

அக்னி
02-07-2007, 05:07 PM
கிணற்றுத்தவளை என்று சொல்லுவார்கள் என்று கூறியிருக்கும்...

pgk53
03-07-2007, 01:46 AM
கிணற்றுத்தவளை என்று சொல்லுவார்கள் என்று கூறியிருக்கும்...


பாதிக்கிணறு தாண்டிவிட்டீர்கள் நண்பரே.

தாமரை
03-07-2007, 03:46 PM
புதிர் எண்−158

கோடைக்காலம் என்பதினால் ஒரு குளத்தில் முழுவதுமாக நீர் வற்றிப் போய்விட்டது. அந்தக் குளத்தில் இருந்த தவளைகள் இரண்டு, குளத்தை விட்டு வெளியேறி எங்காவது நீர் நிறைந்த இடம் இருக்குமாக என்று தேடிக் கிளம்பிவிட்டன.

ஒரு நாள் முழுவதுமாக அலைந்து கஷ்டப்பட்ட பிறகு ஒரு கிணற்றுக்கு
அருகே வந்தன.
அந்தக் குளத்தில் நீர் நிறம்பி இருந்தது.அதைக் கண்டதும் இரு தவளைகளுக்கும் மகிழ்ச்சி பொங்கியது.
இரு தவளைகளில் மூத்த தவளை, மற்ற தவளையைப் பார்த்து, ஆஹாநமது அதிர்ஷ்டம். நீர் நிறைந்த கினறு கிடைத்துவிட்டது. இனி நாம் இந்தக் கிணற்றையே தற்காலிகமாகச் சொந்த இடம் ஆக்கிக்கொள்ளலாம். நீ என்ன சொல்கிறாய் என்று கேட்டது.

மற்ற தவளை வயதில் குறைந்ததாக இருந்தாலும், கொஞ்சம் ஆலோசனை செய்தபிறகு, நீ சொல்வதெல்லாம் சரிதான் என்று கூறிவிட்டு மேலும் பெசியது.

அதன் பேச்சைக் கேட்டதும், முதல் தவளை தனது முடிவை மாற்றிக்கொண்டு, இது நமக்கு சரிப்படாது என்று கூறியபடி வேறு இடம் தேடிப் புறப்பட்டது.

நண்பர்களே, இரண்டாவது தவளை அப்படி என்னதான் கூறியது.?

குள*த்தில் நீர் வ*ற்றினால் அடுத்த* குள*த்தைத் தேடிப் போக*லாம். கிண*ற்றில் வ*ற்றினால் போக* முடியுமா? கிண*ற்று த*வ*ளையாய் அல்ல*வா சாக* வேண்டிய*தாயிருக்கும்?

பென்ஸ்
05-07-2007, 05:49 AM
குளத்தில் நீர் வற்றினால் அடுத்த குளத்தைத் தேடிப் போகலாம். கிணற்றில் வற்றினால் போக முடியுமா? கிணற்று தவளையாய் அல்லவா சாக வேண்டியதாயிருக்கும்?

சபாஷ் தாமரை...

நிஜவாழ்க்கையிலும் இப்படிதானே....

pgk53
06-07-2007, 03:24 PM
வாழ்த்துக்கள் தாமரை.
நீங்கள் முழுக்கிணற்றையும் இலகுவாகத் தான்டிவிட்டீர்கள்.


நண்பர்களே அடுத்த புதிர் நாளைக்கு.

ஓவியன்
06-07-2007, 03:28 PM
சரியாக பதிலுரைத்த அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்!

புதிய புதிரை நாளை எதிர்பார்த்து............

aren
06-07-2007, 05:23 PM
வேறுமக்கள் பார்ப்பதற்குமுன் எனக்கு அனுப்பிவிடுங்கள். ஒரு தடவையாவது முதலில் சரியாக பதில் சொல்லமுடியுமா என்று பார்க்கிறேன்.

pgk53
07-07-2007, 02:38 PM
புதிர் எண்−159

நல்ல மழை பெய்தபிறகு ஒருவன் நடக்கத் தொடங்கினான்.

மழையினால் பாதை ஒரே சேறாக இருந்தது.
சேற்றில் கால்கள் அழுத்திக்கொண்டு சிரமப்பட்டு நடந்தான்.

கொஞ்ச தூரம் அப்படியே நடந்தபிறகு திரும்பிப்பார்த்தான்.

பாதை சேறாக இருந்தாலும் காலடித்தடங்கள் எதுவுமே இல்லாமல் இருந்தது.
அவன் கலகலவெனச் சிரித்தபடி மேற்கொண்டு நடக்கத் தொடங்கினான்.

நண்பர்களே.இப்போது நீங்கள் கூறுங்கள்.

இது எப்படி சாத்தியமானது????????

pgk53
08-07-2007, 03:51 PM
என்ன நண்பர்களே???????????
யாருமே இந்தப் பக்கம் வரவில்லையா????????

தாமரை
08-07-2007, 05:46 PM
காலடித்தடங்கள் எப்படி இருக்கும்..
காலை இழுத்து இழுத்து நடந்தால் தெரிவது
இருகோடுகள்..

ஓவியன்
08-07-2007, 07:08 PM
காலடித்தடங்கள் எப்படி இருக்கும்..
காலை இழுத்து இழுத்து நடந்தால் தெரிவது
இருகோடுகள்..

நான் விடையை சொல்லு எண்ணிய படி பதிப்புக்களைப் பார்த்த போது அதே விடையை செல்வன் அண்ணா ஏற்கனவே கூறிவிட்டார்! :party009:

நான் சொன்னால் என்ன அண்ணா சொன்னால் என்ன எல்லாம் ஒன்றுதானே! :icon_good:

pgk53
09-07-2007, 01:54 AM
காலடித்தடங்கள் எப்படி இருக்கும்..
காலை இழுத்து இழுத்து நடந்தால் தெரிவது
இருகோடுகள்..


சகோதரி−−கால்களை இழுத்து நடந்தான் என்று நான் கூறவில்லையே!!!!

சேற்றில் வழுக்கிய கால்களை அழுத்தமாக ஊன்றி நடந்தான் என்றுதானே கூறியுள்ளேன்...

ஓவியன்
09-07-2007, 03:32 AM
சகோதரி−−கால்களை இழுத்து நடந்தான் என்று நான் கூறவில்லையே!!!!

சேற்றில் வழுக்கிய கால்களை அழுத்தமாக ஊன்றி நடந்தான் என்றுதானே கூறியுள்ளேன்...

ஹீ!

தாமரைச் செல்வன் அண்ணாவைச் சகோதரி என்று நினைத்து விட்டீர்களா? :sport-smiley-019:

ஓவியன்
09-07-2007, 04:01 AM
புதிர் எண்−159

நல்ல மழை பெய்தபிறகு ஒருவன் நடக்கத் தொடங்கினான்.

மழையினால் பாதை ஒரே சேறாக இருந்தது.
சேற்றில் கால்கள் அழுத்திக்கொண்டு சிரமப்பட்டு நடந்தான்.

கொஞ்ச தூரம் அப்படியே நடந்தபிறகு திரும்பிப்பார்த்தான்.

பாதை சேறாக இருந்தாலும் காலடித்தடங்கள் எதுவுமே இல்லாமல் இருந்தது.
அவன் கலகலவெனச் சிரித்தபடி மேற்கொண்டு நடக்கத் தொடங்கினான்.

நண்பர்களே.இப்போது நீங்கள் கூறுங்கள்.

இது எப்படி சாத்தியமானது????????

நடந்ததாகக் கூறி இருக்கிறீர்களே தவிர முன் புறமாகவோ பின்புறமாகவோ நடந்ததாகக் கூறவில்லையே?

எனவே அவன் பின் புறமாக சேற்றில் நடந்து விட்டுத் திரும்பிப் பார்த்திருக்கிறான்!

அப்போது காலடித்தடம் படாத நடக்கப் போகும் பாதை தானே தெரியும்!

அது தான் சிரித்து விட்டு மீண்டும்நடக்கத் தொடங்கினான்!.:sport009:

aren
09-07-2007, 05:36 AM
நடந்ததாகக் கூறி இருக்கிறீர்களே தவிர முன் புறமாகவோ பின்புறமாகவோ நடந்ததாகக் கூறவில்லையே?

எனவே அவன் பின் புறமாக சேற்றில் நடந்து விட்டுத் திரும்பிப் பார்த்திருக்கிறான்!

அப்போது காலடித்தடம் படாத நடக்கப் போகும் பாதை தானே தெரியும்!

அது தான் சிரித்து விட்டு மீண்டும்நடக்கத் தொடங்கினான்!.:sport009:

அசத்திப்புட்டீங்க ஓவியன். வாவ்!! பாராட்டுக்கள்.

ஓவியன்
09-07-2007, 06:21 AM
அசத்திப்புட்டீங்க ஓவியன். வாவ்!! பாராட்டுக்கள்.

மிக்க நன்றி அண்ணா!

ஆனால் விடை சரியோ தெரியலையே!.....

aren
09-07-2007, 06:39 AM
மிக்க நன்றி அண்ணா!

ஆனால் விடை சரியோ தெரியலையே!.....


நிச்சயம் சரியாகத்தான் இருக்கும். இல்லையென்றால் பிகேஜி அவர்களை விடை சரியென்று சொல்ல சொல்லிவிடலாம்.

இல்லைன்னா, ஆட்டோ அனுப்பிவிடலாம்.

அமரன்
09-07-2007, 08:15 AM
ஓவியன் சொல்வது சரியா தவறா தெரியாது. ஆரென் ஆட்டோ அனுப்புவோம் என மிரட்ட ஆரம்பித்து விட்டாரே! பயத்துடனெனக்கு தோன்றும் பதிலைச் சொல்கின்றேன் சொல்கின்றேன்


சேற்றில் கால்களை அழுத்திக்கொண்டு புதைத்து நடந்திருப்பார். மழைபெய்வதால் சேறு ஒரு திரவத் தன்மையுடன் இருந்திருக்கும். அந்தக் காலடித்தடங்கள் அழிந்திருக்கும்.

mania
09-07-2007, 09:05 AM
அமரன் சொல்வதும் சரி என்றே தோன்றுகிறது. ஆனால் எப்படியும் ஆரென் அனுப்பும் ஆட்டோ அந்த சகதியில் போகாது. !!!!!
அன்புடன்
மணியா...:)

அமரன்
09-07-2007, 09:08 AM
அமரன் சொல்வதும் சரி என்றே தோன்றுகிறது. ஆனால் எப்படியும் ஆரென் அனுப்பும் ஆட்டோ அந்த சகதியில் போகாது. !!!!!
அன்புடன்
மணியா...:)

தப்பித்து விட்டேன்......ஆரென் அண்ணா இப்ப என்ன பண்ணுவீங்க..ஆட்டோ சகதியில் புதைந்திடுமில்ல....

ஓவியன்
09-07-2007, 09:30 AM
தப்பித்து விட்டேன்......ஆரென் அண்ணா இப்ப என்ன பண்ணுவீங்க..ஆட்டோ சகதியில் புதைந்திடுமில்ல....

நாங்க ஆட்டோவிற்கு ஹெலிக் கொப்டரின் இறக்கை மேலதிகமாகப் பொருத்துவமிலே!

(ஆட்டோ தொடர்பாக ஆரேன் அண்ணா மற்றும் ஓவியனுக்கு உதவ ஓவியா அக்காவும் தயார் நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது!)

இப்ப என்ன பண்ணுவீங்க?, இப்ப என்ன பண்ணுவீங்க???:icon_tongue:

அமரன்
09-07-2007, 09:36 AM
நாங்க ஆட்டோவிற்கு ஹெலிக் கொப்டரின் இறக்கை மேலதிகமாகப் பொருத்துவமிலே!

(ஆட்டோ தொடர்பாக ஆரேன் அண்ணா மற்றும் ஓவியனுக்கு உதவ ஓவியா அக்காவும் தயார் நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது!)

இப்ப என்ன பண்ணுவீங்க?, இப்ப என்ன பண்ணுவீங்க???:icon_tongue:

(ஆட்)டொக். (மழை காரணமாக லைன் கட்டாகி விட்டது.)

mania
09-07-2007, 09:52 AM
நாங்க ஆட்டோவிற்கு ஹெலிக் கொப்டரின் இறக்கை மேலதிகமாகப் பொருத்துவமிலே!

(ஆட்டோ தொடர்பாக ஆரேன் அண்ணா மற்றும் ஓவியனுக்கு உதவ ஓவியா அக்காவும் தயார் நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது!)

இப்ப என்ன பண்ணுவீங்க?, இப்ப என்ன பண்ணுவீங்க???:icon_tongue:


உன் ஓவியா அக்காவை ஹெலியில் ஏத்தினால் அதுவும் ஆட்டோ மாதிரி தரையில்தான்(சகதியில்) போகனும்....????!!! அவ்வளவு வெய்ட்டான பார்ட்டி....!!!!!:confused: :icon_wink1: :icon_wink1:
சந்தேகத்துடன்
மணியா...

மனோஜ்
09-07-2007, 09:52 AM
சேற்றில் கால்களை அழுத்திக்கொண்டு புதைத்து நடந்திருப்பார். மழைபெய்வதால் சேறு ஒரு திரவத் தன்மையுடன் இருந்திருக்கும். அந்தக் காலடித்தடங்கள் அழிந்திருக்கும்.

அமரன் கூறியது சரி மழையில் சகதி மீன்டும் இனைந்திருக்கும்
தடத்தை அழித்திருக்கும்

ஓவியன்
09-07-2007, 09:58 AM
உன் ஓவியா அக்காவை ஹெலியில் ஏத்தினால் அதுவும் ஆட்டோ மாதிரி தரையில்தான்(சகதியில்) போகனும்....????!!! அவ்வளவு வெய்ட்டான பார்ட்டி....!!!!!:confused: :icon_wink1: :icon_wink1:
சந்தேகத்துடன்
மணியா...

கோபமான பதில் அரட்டைப் பகுதியில் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7640&page=151)........:icon_wink1:

ஓவியன்
09-07-2007, 10:08 AM
நடந்ததாகக் கூறி இருக்கிறீர்களே தவிர முன் புறமாகவோ பின்புறமாகவோ நடந்ததாகக் கூறவில்லையே?

எனவே அவன் பின் புறமாக சேற்றில் நடந்து விட்டுத் திரும்பிப் பார்த்திருக்கிறான்!

அப்போது காலடித்தடம் படாத நடக்கப் போகும் பாதை தானே தெரியும்!

அது தான் சிரித்து விட்டு மீண்டும்நடக்கத் தொடங்கினான்!.:sport009:


அமரன் கூறியது சரி மழையில் சகதி மீன்டும் இனைந்திருக்கும்
தடத்தை அழித்திருக்கும்

நான் கஸ்ரப்பட்டு ஒரு பதில் சொல்லி அதை அரேன் அண்ணாவும் சரி என்ற பிறகு நீங்க ஏங்க இப்படி வம்பு பண்ணுறீங்க?

pgk53
09-07-2007, 03:21 PM
மிகவும் அருமையான கச்சிதமான விடையைக் கொடுத்த ஓவியருக்கு எனது வாழ்த்துக்கள்

pgk53
09-07-2007, 03:22 PM
தாமரை என்று பார்த்ததும் சகோதரியாகத்தானிருக்கும் என்று தவறாகக் கருதிவிட்டேன்.
பொறுத்துக் கொள்ளுங்கள் தாமரைச் செல்வன் அவர்களே

pgk53
09-07-2007, 03:23 PM
நண்பர்களே-----
நாம் அடுத்து பார்க்கப் போவது ஒரு சமையல் புதிர்
நாளை வாருங்கள் - சமைத்துப் பார்க்கலாம்.

அக்னி
09-07-2007, 03:34 PM
நம்ம அறிவுக்கெட்டுறமாதிரியும் ஒரு புதிர போடுறது பி.ஜி.கே.

pgk53
09-07-2007, 03:52 PM
அதற்காகத்தானே அடுத்து சமையல் புதிர் வருகின்றது.
மகிழ்ச்சிதானே நண்பரே!!!!!!!!!!!!!!!!!!மன்னிக்கவும்

அக்னி
09-07-2007, 03:59 PM
அதற்காகத்தானே அடுத்து சமையல் புதிர் வருகின்றது.
மகிழ்ச்சிதானே நண்பரே!!!!!!!!!!!!!!!!!!மன்னிக்கவும்

அப்போ நீங்களும் அரட்டைப் பகுதியிலும், கவிச்சமர் விமர்சனத்திலும் அக்னியை சமைப்பதை பார்த்தீர்களோ...???
:angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry:
அக்னியில் சமைப்பார்கள்...
இங்கு,
அக்னியையே சமைக்கின்றார்கள்...

என்ன கொடுமை சார் இது?
மன்னிக்கவும் என்பது தேவையில்லை... நண்பரே...

pgk53
09-07-2007, 04:59 PM
அப்போ நீங்களும் அரட்டைப் பகுதியிலும், கவிச்சமர் விமர்சனத்திலும் அக்னியை சமைப்பதை பார்த்தீர்களோ...???
:angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry:
அக்னியில் சமைப்பார்கள்...
இங்கு,
அக்னியையே சமைக்கின்றார்கள்...

என்ன கொடுமை சார் இது?
மன்னிக்கவும் என்பது தேவையில்லை... நண்பரே...



ஆஹா ...என்ன ஒரு அற்புதமான ஹைக்கூ.

அக்னி
09-07-2007, 05:02 PM
ஆஹா ...என்ன ஒரு அற்புதமான ஹைக்கூ.

நீங்க கூட உயர்க்கூ...கூ... அடிக்கின்றீர்களே...:traurig001:

ஓவியன்
09-07-2007, 05:23 PM
மிகவும் அருமையான கச்சிதமான விடையைக் கொடுத்த ஓவியருக்கு எனது வாழ்த்துக்கள்

ஆகா!

மிக்க நன்றிகள் பிஜிகே!

எனது விடை சரியென்று முதலில் ஊக்கப்படுத்திய ஆரென் அண்ணாவுக்கும் நன்றிகள்!.


:sport-smiley-018: :sport-smiley-018: :sport-smiley-018: :sport-smiley-018: :sport-smiley-018: :sport-smiley-018: :sport-smiley-018: :sport-smiley-018: :sport-smiley-018: :sport-smiley-018: :sport-smiley-018: :sport-smiley-018: :sport-smiley-018: :sport-smiley-018: :sport-smiley-018:

ஓவியன்
09-07-2007, 05:37 PM
நம்ம அறிவுக்கெட்டுறமாதிரியும் ஒரு புதிர போடுறது பி.ஜி.கே...
உங்க* அறிவோட* உய*ர*த்திற்கு ஏணி சொல்லி வைத்துதான் செய்ய*ணூமாம். :sport-smiley-018:

அதற்காகத்தானே அடுத்து சமையல் புதிர் வருகின்றது.
மகிழ்ச்சிதானே நண்பரே!!!!!!!!!!!!!!!!!!மன்னிக்கவும்...
ஹீ!,ஹீ!
என்ன மாதிரி அக்னியைப் பிடிச்சிட்டீங்க*............:icon_shout:

அப்போ நீங்களும் அரட்டைப் பகுதியிலும், கவிச்சமர் விமர்சனத்திலும் அக்னியை சமைப்பதை பார்த்தீர்களோ...???
:angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry:
அக்னியில் சமைப்பார்கள்...
இங்கு,
அக்னியையே சமைக்கின்றார்கள்...

என்ன கொடுமை சார் இது?...

:grin: :grin: :grin: :grin: :grin: :grin: :grin: :grin: :grin: :grin: :grin: :grin: :grin: :grin: :grin: :grin:

அன்புரசிகன்
09-07-2007, 05:37 PM
அதற்காகத்தானே அடுத்து சமையல் புதிர் வருகின்றது.
மகிழ்ச்சிதானே நண்பரே!!!!!!!!!!!!!!!!!!மன்னிக்கவும்

ஏங்க பி.ஜி.கே... ஏன் இப்படி அக்னியைப்போட்டு சமைக்கிறீங்க...?

ஏங்க அக்னி? உங்ககிட்ட ஓட்டை சிரட்டை இருக்கா? :sport-smiley-017:

aren
09-07-2007, 06:38 PM
ஆகா!

மிக்க நன்றிகள் பிஜிகே!

எனது விடை சரியென்று முதலில் ஊக்கப்படுத்திய ஆரென் அண்ணாவுக்கும் நன்றிகள்!.


:sport-smiley-018: :sport-smiley-018: :sport-smiley-018: :sport-smiley-018: :sport-smiley-018: :sport-smiley-018: :sport-smiley-018: :sport-smiley-018: :sport-smiley-018: :sport-smiley-018: :sport-smiley-018: :sport-smiley-018: :sport-smiley-018: :sport-smiley-018: :sport-smiley-018:

காரணம் தெரியுமில்ல. ஆட்டோ, ஆட்டோ, ஆட்டோ

ஓவியன்
09-07-2007, 06:40 PM
காரணம் தெரியுமில்ல. ஆட்டோ, ஆட்டோ, ஆட்டோ

ஹீ!

ஆட்டோ உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டாங்க போல!:sport-smiley-018:

aren
09-07-2007, 06:44 PM
ஹீ!

ஆட்டோ உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டாங்க போல!:sport-smiley-018:


இந்த புதுமொழியும் நல்லாத்தான் இருக்கு. எதுக்கும் தல அவர்களுக்கு இதை அனுப்புங்கள்.

pgk53
10-07-2007, 06:41 PM
புதிர் எண்- 160

நல்ல வஞ்சிரை மீன் கிடைத்தது ராமுவுக்கு. நடுத்துண்டம் ஆனதால் சுற்றளவில் பெரியதாக இருந்தது

தன் நண்பர்கள் இருவரை சாப்பிட அழைத்திருந்தான் .
அதனால் மீனை கையகலத்துக்கு பெரியதாக மூன்று துண்டுகளாக நறுக்கி வைத்தான்.

மசாலாவில் தோய்த்து எடுத்தான்.
பிறகு மீனைப் பொறிப்பதற்கு உரிய பொறிக்கும் சட்டுவத்தை எடுத்தான்.{FRY PAN}

அந்த சட்டுவம் மூன்று துண்டுகளை ஒரே சமயத்தில் பொறித்தெடுக்க இயலாதபடி அளவில் சிறியதாக இருந்தது.
இரண்டு துண்டுகளைத்தான் ஒரே சமயத்தில் பொறித்தெடுக்க இயலும்.

சரி ----பரவாயில்லை---முதலில் இரண்டு துண்டுகளையும் பிறகு ஒரு துண்டையும் போட்டுப் பொறிக்கலாம் என்று சமையல் வாயுவைத் திறத்தான்.

வாயுவில் அழுத்தம் குறைவாக இருக்கவே , காரணம் என்னவென்று பார்த்தான்.
வாயு குறைவாக இருந்தது.

அதிகபட்சமாக மூன்று நிமிடங்கள்தான் வாயுவை உபயோகப்படுத்த முடியும் என்றும் அறிந்தான். வேறு புதிய சிலிண்டர் வாங்க வெகுதொலைவு செல்லவேண்டும் என்பதினால் அந்த யோசனையைக் கைவிட்டான்

ஆனால் ஒரு மீனின் ஒரு பக்கம் பொறித்தெடுக்க ஒரு நிமிடம் வேண்டுமே.
இப்படி இருக்கும்போது எப்படி மூன்று மீன் துண்டுகளையும் பொறிப்பது என்று சிந்தனையில் ஆழ்ந்தான்.

அப்போது அவனது நண்பர்கள் சோமுவும், தாமுவும் வந்துவிட்டார்கள்.
கையகல அளவில் பெரிய வஞ்சிரம் மீனைப் பார்த்த தாமு, ஆஹா.என்று துள்ளினான்.
அருமையான மீன் அல்லவா என்று சப்புக்கொட்டினான்.

ராமு அவனிடம் உள்ள நிலைமையைக் கூறியதும், தாமு தீவிர ஆலோசனை செய்து, பிறகு தனக்கு வழி ஒன்றும் புலப்படவில்லை என்றான்.

ஆனால் சோமு சிரித்தபடியே, நண்பர்களே.பிரச்சினையே இல்லை. நான் சொல்லும் விதத்தில் பொறித்தெடுங்கள். மூன்று நிமிடங்களுக்குள், சமையல் வாயு தீருவதற்குள் நமது வேலை முடிந்துவிடும் என்றான்.

அவனது யோசனைப்படியே ராமு மீன்களை மூன்று நிமிடங்களில் பொறித்தெடுத்தான்.

இப்போது மன்ற நண்பர்களேநீங்கள் கூறுங்கள்.
சோமு கூறிய வழி என்ன?????????????????????????????

அன்புரசிகன்
10-07-2007, 06:43 PM
அக்னி... சீக்கிரமா ஓடிவாங்க... :D :D :D

அக்னிக்காக இந்தப்பதிலை விட்டுவிடுகிறேன்... :sport-smiley-018: :sport-smiley-018: :sport-smiley-018:

அக்னி வாழ்த்துக்கள்... :grin:

இனியவள்
10-07-2007, 07:10 PM
:icon_wacko: :icon_wacko: :icon_wacko: :icon_wacko: எனக்கு புத்தி மட்டு ஹீ ஹீ முடியேலை கண்ணைக் கட்டுதே :icon_wacko: :icon_wacko:

gayathri.jagannathan
11-07-2007, 06:50 AM
இப்போது மூன்று துண்டுகள் உள்ளன.. அவற்றை அ,ஆ,இ என்று வைத்துக் கொள்வோம்... ஒவ்வொன்றுக்கும் இரு பக்கங்கள் உண்டல்லவா?

அவற்றைக் குறிக்க அ1,அ2 என்று வைத்துக் கொண்டால்,

முதல் ஒரு நிமிடத்தில் அ1,ஆ1 ஐ வறுக்கலாம்,

இரண்டாவது நிமிடத்தில் ஆ2,இ1 ஐ வறுக்கலாம், (இப்போது ஆ துண்டு இரண்டு பக்கங்களிலும் முழுமையாக வறுக்கப்பட்டு விட்டது...)

பிறகு மூன்றாவது நிமிடத்தில் அ2,இ2 ஐ வறுக்கலாம், (இப்போது ஏற்கனவே ஒவ்வொரு பக்கம் வறுபட்டுள்ள அ மற்றும் இ துண்டுகள், அடுத்த பக்கத்திலும் வறுக்கப்பட்டு விட்டன..)

நிமிடம் 1: அ1, ஆ1
நிமிடம் 2: ஆ2, இ1
நிமிடம் 3: இ2, அ2
விடை சரியா பிஜிகே அவர்களே?...

மதி
11-07-2007, 06:54 AM
கலக்கிட்டீங்க காயத்ரி...
இதையே தான் நானும் யோசிச்சேன்..
ஹி...ஹீ...

இதயம்
11-07-2007, 07:00 AM
இதத்தான்.. இதத்தான் நானும் யோசிச்சேன்னு சொன்னா நீங்க அவசியம் நம்பணும் மக்களே...! நம்பலேன்னா நான் எவ்வளவு புத்திசாலின்னு உங்களுக்கு புரிஞ்சு போச்சுன்னு அர்த்தம்..!!

gayathri.jagannathan
11-07-2007, 07:23 AM
இதத்தான்.. இதத்தான் நானும் யோசிச்சேன்னு சொன்னா நீங்க அவசியம் நம்பணும் மக்களே...! நம்பலேன்னா நான் எவ்வளவு புத்திசாலின்னு உங்களுக்கு புரிஞ்சு போச்சுன்னு அர்த்தம்..!!

இதை நீங்க சொல்லவே தேவையில்லை.. எங்களுக்கு ஆரம்பத்திலேயே தெரியும்.... :violent-smiley-010:

ஓவியன்
12-07-2007, 08:56 PM
கலக்கிட்டீங்க காயத்ரி...
இதையே தான் நானும் யோசிச்சேன்..
ஹி...ஹீ...

ஏன் பொய் சொல்லுறீங்க மதி? :violent-smiley-010:

நீங்களாவது யோசிக்கிறதாவது? :D

pgk53
13-07-2007, 02:34 AM
இப்போது மூன்று துண்டுகள் உள்ளன.. அவற்றை அ,ஆ,இ என்று வைத்துக் கொள்வோம்... ஒவ்வொன்றுக்கும் இரு பக்கங்கள் உண்டல்லவா?

அவற்றைக் குறிக்க அ1,அ2 என்று வைத்துக் கொண்டால்,

முதல் ஒரு நிமிடத்தில் அ1,ஆ1 ஐ வறுக்கலாம்,

இரண்டாவது நிமிடத்தில் ஆ2,இ1 ஐ வறுக்கலாம், (இப்போது ஆ துண்டு இரண்டு பக்கங்களிலும் முழுமையாக வறுக்கப்பட்டு விட்டது...)

பிறகு மூன்றாவது நிமிடத்தில் அ2,இ2 ஐ வறுக்கலாம், (இப்போது ஏற்கனவே ஒவ்வொரு பக்கம் வறுபட்டுள்ள அ மற்றும் இ துண்டுகள், அடுத்த பக்கத்திலும் வறுக்கப்பட்டு விட்டன..)

நிமிடம் 1: அ1, ஆ1
நிமிடம் 2: ஆ2, இ1
நிமிடம் 3: இ2, அ2
விடை சரியா பிஜிகே அவர்களே?...


மிகச் சரியான விடை காயத்ரி ஜகன்நாதன் அவர்களே.வாழ்த்துக்கள்.
வாருங்கள் அடுத்த புதிருக்குப் போவோம்.

pgk53
13-07-2007, 02:35 AM
புதிர் எண்- 161

வனிதாவின் பிறந்த நாள் பரிசாக அவளது தந்தை அவளுக்கு அருமையான லாக்கெட் ஒன்றைப் பரிசளித்தார்.
வனிதாவுக்கு அந்த லாக்கெட் மிகவும் பிடித்தருந்தது.
அந்த லாக்கெட்டினைத் திறந்து பார்த்தாள்

உள்ளே ஒரே ஒரு சிறிய படம் மட்டும் வைக்கும் வசதி இருந்தது.
அந்த லாக்கெட்டை வனிதா தனது நண்பிகளுக்குக் காட்ட விரும்பினாள்.

வெறும் லாக்கெட்டைக் காட்டுவதை விட தனது தோழிக்கு காட்டும்போது தோழியின் படத்தையும் லாக்கெட்டினுள் வைத்துக்காட்டினால் இன்னும் சிறப்பாக இருக்குமே என்று சிந்தித்தாள்.

சரி தனது தோழியான கீதாவின் படத்தை உள்ளே வைப்போம் என்று நினைத்தாள்.
ஆனால் கீதாவிடம் அதைக் காட்டும்போது வேறு தோழிகளும் வந்துவிட்டால் , அவர்கள் தங்களது படத்தை வைக்கவில்லையே என்று மனதில் வருத்தம் கொள்வார்களே என்ற் உணர்ந்தாள்.

அதனால் படம் வைப்பது என்றால், அனைவரது படத்தையுமே வைக்கவேண்டும்.
ஆனால் அத்தனை பேரின் படத்தையும் லாக்கெட்டினுள் வைக்க இயலாதே
என்று மருகினாள்.
ஒரே ஒரு படம்தானே உள்ளே வைக்க இயலும் என்று தீவிரமாகச் சிந்தித்தாள்.

அப்போது அவளது அப்பா அங்கே வந்தார்.
வனிதா தீவிரமாகச் சிந்திப்பதைக் கண்டார்.
ஏன்??? என்ன விஷயம்??? என்று கேட்டார்.
வனிதா தனது பிரச்சினையைக் கூறினாள்.


அவது அப்பா சிரித்தபடி இவ்வளவுதான விஷயம்.இதோ பார் நான்
சொல்வதுபோலச் செய்.எந்தப் பிரச்சினையுமே வராதுஎன்றார்.
வனிதாவும் தனது தந்தையின் ஆலோசனைப்படி செய்தாள்.
பிறகு தன் தோழிகளைக் கானச் சென்றாள்.

லாக்கெட்டைத் திறந்த ஒவ்வொரு தோழியும் தனது படம் லாக்கெட்டின் உள்ளே இருப்பது கண்டு அளவிலாத மகிழ்வடைந்தார்கள்.


நண்பர்களே வனிதாவுக்கு இது எப்படிச் சாத்தியம் ஆனது.
அவளது தந்தை கூறிய உபாயம் என்ன????????????????
.

aren
13-07-2007, 02:40 AM
சுத்தம். இது எப்படி என்று தெரியவில்லை

அனைத்து நண்பிகளும் சேர்ந்து இருக்கும் படத்தை வைத்தால்தான் உண்டு.

மலர்
13-07-2007, 04:03 AM
லாக்கெட்டின் உள்ளே முகம் பார்க்கும் கண்ணாடியை வைக்க சொல்லியிருப்பார்

mania
13-07-2007, 04:24 AM
சரியான பதில் மலர்...!!!!
அன்புடன்
மணியா;)

aren
13-07-2007, 04:34 AM
இதுவே சரியான பதிலாக இருக்கும் என்று நம்புகிறேன்.

பாராட்டுக்கள் மலர்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஓவியன்
14-07-2007, 10:51 AM
சுத்தம். இது எப்படி என்று தெரியவில்லை

அனைத்து நண்பிகளும் சேர்ந்து இருக்கும் படத்தை வைத்தால்தான் உண்டு.

ஹீ!

அனைவரின் படத்தை வைப்பதா?

இது கூட நன்றாக இருக்கே! :huh:

pgk53
15-07-2007, 01:32 AM
லாக்கெட்டின் உள்ளே முகம் பார்க்கும் கண்ணாடியை வைக்க சொல்லியிருப்பார்



சரியான விடையைக் கூறிய மலருக்கு எனது வாழ்த்துக்கள் பல.

சரி வாருங்கள் மலர் அடுத்த புதிருக்குப் போவோம்.

pgk53
15-07-2007, 01:32 AM
புதிர் எண்- 162

முன்னொரு காலத்தில் ஒரு அரசன் ஒருவன் இருந்தான்.

அவன் தனது நாட்டை நீதி தவறாமல் நல்லாட்சி புரிந்து வந்தான்.

அவனுக்கு மூன்று மகன்கள் இருந்தார்கள்.
தனக்குப் பிறகு இந்த மூவரில் யாரை அரசனாக முடி சூட்டுவது என்று சிந்தனையில் ஆழ்ந்தான்.

தனது அமைச்சரவையில் இருந்த புத்தி கூர்மை மிக்க அமைச்சரிடம் தனது கவலையைத் தெரிவித்து ஏதாவது ஒரு வழிகாட்டும்படி கேட்டுக்கொண்டான்.

அமைச்சரும் தீவிர ஆலோசனைக்குப் பிறகு அரசனிடன் ஒரு உபாயத்தைக் கூறினார்.
அரசனும் அதுவே சிறந்த வழி என்று ஒத்துக்கொண்டான்.

அமைச்சரிடமே அதற்கு ஏற்பாடு செய்யும்படி கூறினான்.

அவரும் ஒத்துக்கொண்டார்.
பிற்கு ஒருநாள் அரசன் தனது மூன்று மகன்களையும் அழைத்தான்.

நன்றாகக் கேட்டுக்கொள்ளுங்கள் எனது அன்புச் செல்வங்களே..இதோ இந்த மூன்று பைகளிலும் அருமையான பூக்களைத் தரக்கூடிய செடியின் விதைகள் இருக்கின்றன.
இதை ஆளுக்கொரு பையாக நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு ஆறு மாதங்கள் கால அவகாசம் தருகின்றேன்.
இந்த விதைகளைத் தூவி பூச்செடிகளை வளர்த்து வைக்கவேண்டும்.
யாருடைய பூச்செடி வளமான நல்ல பூக்களைத் தருகின்றதோ அவருக்கே அடுத்த அரசுரிமைப் பட்டம் வழங்கப்படும் என்று அறிவித்தான்.

அரசனின் மகன்கள் மூவரும் அப்படியே செய்கிறோம் தந்தையே என்று கூறிவிட்டு, ஆளுக்கொரு விதைப்பையை எடுத்துச் சென்றார்கள்.

ஆறு மாதம் கழிந்தது.

அரசன் அவர்கள் மூவரது மாளிகைக்கும் தனது அமைச்சர் மற்றும் மதிப்புக்குரிய பெரியவர்களை அழைத்துக்கொண்டு சென்று பார்த்தான்.
]
முதல் இரண்டு மகன்களின் வீட்டுத் தோட்டத்தில் அழகான வளமான பூச்செடிகள் வளர்ந்து பூக்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது.

அரசனும் சபாஷ் அருமையாக வளர்த்திருக்கின்றீர்கள் என்று பாராட்டிவிட்டு, கடைசி மகனின் மாளிகைக்குச் சென்றான்.
அங்கே கடைசி மகனது தோட்டத்தில் பூச்செடிகள் எதுவும் இல்லாமல் காலியாக இருந்தது.

மகனைப் பார்த்த அரசன் அவனிடம் எதுவுமே கேட்கவில்லை. தலையை மட்டும் அசைத்துவிட்டு புண்ணகை செய்தபடி போய்விட்டான்.

மறுநாள் அரசவை கூடியது.

தனக்குப் பிறகு தனது கடைசிமகன்தான் அரசனாகத் தகுதிபெற்றவன் என்று அறிவித்து அவனுக்கே முடி சூட்டினான்.

அதைக் கண்ட மற்றவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.
ஏன் அரசர் இப்படி முடிவு செய்தார் என்று புரியாமல் திகைப்படைந்தார்கள்.

ஆனால் இந்த உபாயத்தைக் கூறிய அமைச்சர் மட்டும் புண்ணகை செய்தபடி இருந்தார்.

மன்ற நண்பர்களே நீங்கள்தான் மற்றவர்களிடம் அரசன் ஏன் இப்படி தீர்மானம் செய்தான் என்று விளக்கவேண்டும்!!!!!!!!!

aren
15-07-2007, 03:55 AM
மூன்றாவது மகன் அந்த பூச்செடிகளை தன் வீட்டில் வைக்காமல் நாட்டின் பல பகுதிகளில் வைத்திருப்பான் என்று நினைக்கிறேன்.

mania
15-07-2007, 04:37 AM
ஆரம் எங்கே??????ஆரெனுக்கு போட....!!!!!!:aktion033:
அன்புடன்
மணியா:D

pgk53
15-07-2007, 02:21 PM
ஆரம் எங்கே??????ஆரெனுக்கு போட....!!!!!!:aktion033:
அன்புடன்
மணியா:D


ஆரெனுக்கு ஆரம் எங்கே என்று தேடும் மணியா அவர்களே−−−−−−−−−−−−−−−−−−−−−−−−ஆரென் அவர்களின் பதில் சரியானதென்று முடிவே செய்துவிட்டீர்களா???????


இல்லையே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

aren
15-07-2007, 02:25 PM
ஆரெனுக்கு ஆரம் எங்கே என்று தேடும் மணியா அவர்களே−−−−−−−−−−−−−−−−−−−−−−−−ஆரென் அவர்களின் பதில் சரியானதென்று முடிவே செய்துவிட்டீர்களா???????


இல்லையே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


இப்படியெல்லாம் சொன்னால் ஆட்டோதான். என் பதிலில் குறையா?

ஓவியன்
15-07-2007, 02:28 PM
என் பதிலில் குறையா?

சீ!

யார் சொன்னது?,

நீங்க முழுமையாகத் தானே சொல்லி இருக்கீங்க − குறையாக ஒண்ணும் விடலையே...........:icon_hmm:

aren
15-07-2007, 02:31 PM
சீ!

யார் சொன்னது?,

நீங்க முழுமையாகத் தானே சொல்லி இருக்கீங்க − குறையாக ஒண்ணும் விடலையே...........:icon_hmm:


அதானே. ஏன் இந்த பிகேஜி இப்படி சொல்கிறார். ஆட்டோவை ரெடி பண்ணுங்க.

mania
15-07-2007, 03:31 PM
ஆரெனுக்கு ஆரம் எங்கே என்று தேடும் மணியா அவர்களே−−−−−−−−−−−−−−−−−−−−−−−−ஆரென் அவர்களின் பதில் சரியானதென்று முடிவே செய்துவிட்டீர்களா???????


இல்லையே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


ஹி.....ஹி.....ஹி....கொஞ்சம் நாளிலே சென்னைக்கு வருவதாக தெரிவித்திருந்தார். அதான் கொஞ்சம்........ஹி....ஹி....ஹி....


(இருந்தாலும் பிஜிகே இப்படி எங்களை அந்த ஆரத்தை பிக்க வைச்சிருக்கவேண்டாம்...!!!!!)
அன்புடன்
மணியா....

ஓவியன்
15-07-2007, 07:00 PM
மூத்த இரு மகன்களும் ஊதாரிகள், அதனால் தான் தந்தை கொடுத்த பயன் தரு விதைகளை நட்டு வளர்த்துவிட்டனர். இவர்களிடம் நாட்டைக் கொடுத்தால் சிதறிச் சின்னாபின்னாமாக்கி விடுவார்கள்!.

ஆனால் இளையவன் தந்தை கொடுத்த நல்ல விதைகளை முளைக்கப் போடாமல் சேமித்து வந்திருக்கிறான். ஆதலால் இவனிடம் நாட்டினைக் கொடுத்தால் அவ்வாறே போற்றிப் பேணி சிதறிச் சின்னாபின்னமாகமல் பார்த்துக் கொள்ளுவான் என்று நம்பி அரசன் நாட்டினை இளையவனிடம் கொடுத்தான்:sport-smiley-018: .

pgk53
16-07-2007, 01:30 AM
மூத்த இரு மகன்களும் ஊதாரிகள், அதனால் தான் தந்தை கொடுத்த பயன் தரு விதைகளை நட்டு வளர்த்துவிட்டனர். இவர்களிடம் நாட்டைக் கொடுத்தால் சிதறிச் சின்னாபின்னாமாக்கி விடுவார்கள்!.

ஆனால் இளையவன் தந்தை கொடுத்த நல்ல விதைகளை முளைக்கப் போடாமல் சேமித்து வந்திருக்கிறான். ஆதலால் இவனிடம் நாட்டினைக் கொடுத்தால் அவ்வாறே போற்றிப் பேணி சிதறிச் சின்னாபின்னமாகமல் பார்த்துக் கொள்ளுவான் என்று நம்பி அரசன் நாட்டினை இளையவனிடம் கொடுத்தான்:sport-smiley-018: .



இந்த விடையும் சரியில்லையே ஓவியரே......ம்ம்ம்ம்ம்ம்ம்

aren
16-07-2007, 01:46 AM
ஐயோ இதுவும் தப்பா!! அப்படின்னா கேள்வியா தப்பாக இருக்குமோ!!!!!

ஓவியன்
16-07-2007, 03:09 AM
ஆமா ஆரென் அண்ணா!

ஆட்டோவை ஸ்டார்ட் பண்ணுங்க..................:icon_good:

அமரன்
16-07-2007, 07:46 AM
அரசர் கொடுத்தது நல்ல விதைகள் அல்ல. மூவரும் விதைத்திருப்பார்கள் முளைத்திருக்காது. முதலிருவரும் பதவிக்கு ஆசைப்பட்டு வேறு விதைகளை விதைத்து அரசரை ஏமாற்றி இருப்பார்கள். மூன்றாமவன் அப்படியே விட்டு விட்டான். அவனது நேர்மையைப் பாராட்டி அரசர் பட்டம் சூட்டியிருப்பார்.

ஓவியன்
16-07-2007, 07:56 AM
அரசர் கொடுத்தது நல்ல விதைகள் அல்ல. மூவரும் விதைத்திருப்பார்கள் முளைத்திருக்காது. முதலிருவரும் பதவிக்கு ஆசைப்பட்டு வேறு விதைகளை விதைத்து அரசரை ஏமாற்றி இருப்பார்கள். மூன்றாமவன் அப்படியே விட்டு விட்டான். அவனது நேர்மையைப் பாராட்டி அரசர் பட்டம் சூட்டியிருப்பார்.

அரசர் பொய் சொன்னார் எங்கிறீங்களா?

அப்பச்சரி!!:icon_wacko:

அமரன்
16-07-2007, 07:57 AM
அரசர் பொய் சொன்னார் எங்கிறீங்களா?

அப்பச்சரி!!:icon_wacko:

நாலுபேர் நல்லா இருக்கணும்னா...ஒரு பொய் சொல்லலாம் தப்பில்லை...

aren
16-07-2007, 08:13 AM
நாலுபேர் ந*ல்லா இருக்கணும்னா...ஒரு பொய் சொல்லலாம் தப்பில்லை...

யாருங்க அந்த நாலுபேர்.

அமரன்
16-07-2007, 08:15 AM
யாருங்க அந்த நாலுபேர்.

என் அம்மா,அப்பா,நான்,தம்பி...:p :p :p

aren
16-07-2007, 08:17 AM
என் அம்மா,அப்பா,நான்,தம்பி...:p :p :p

அதில் உங்களையும் சேர்த்துக்கொண்டீர்களா? பிழைக்கத் தெரிந்தவர்தான் நீங்கள்.

எல்லாம் நல்லா இருந்தா சரிதான்.

ஓவியன்
16-07-2007, 08:17 AM
என் அம்மா,அப்பா,நான்,தம்பி...:p :p :p

இப்படியே சொல்லிட்டு இருந்தீக......

நாலு பேராகவே இருக்க வேண்டியது தான்....

ஐந்தாவது ஆள் எட்டிக் கூடப் பார்க்காது

உங்க வருங்கால மனைவியைச் சொன்னேனுங்க....:natur008:

pgk53
17-07-2007, 02:38 PM
அரசர் கொடுத்தது நல்ல விதைகள் அல்ல. மூவரும் விதைத்திருப்பார்கள் முளைத்திருக்காது. முதலிருவரும் பதவிக்கு ஆசைப்பட்டு வேறு விதைகளை விதைத்து அரசரை ஏமாற்றி இருப்பார்கள். மூன்றாமவன் அப்படியே விட்டு விட்டான். அவனது நேர்மையைப் பாராட்டி அரசர் பட்டம் சூட்டியிருப்பார்.



பாராட்டுக்கள் அமரன் அவர்களே....சரியான விடையைக் கூறிவிட்டீர்கள்....வாழ்த்துக்கள்.

அடுத்த புதிர் நாளை...அதுவரை பொறுத்திருப்பீர்களா?????????

அமரன்
17-07-2007, 02:42 PM
சரியாகச் சொல்லிவிட்டேனா...பிஜேகே.....வாழ்த்துக்கு நன்றி...
அடுத்ததுக்கு காத்திருக்கின்றேன்.

மதி
17-07-2007, 03:05 PM
வாழ்த்துக்கள் அமர்..கலக்குறீங்க..

aren
17-07-2007, 03:12 PM
சரியாகச் சொல்லிவிட்டேனா...பிஜேகே.....வாழ்த்துக்கு நன்றி...
அடுத்ததுக்கு காத்திருக்கின்றேன்.

பாராட்டுக்கள் அமரன். அடுத்த புதிரிலும் கலக்குங்கள். அதற்கு என் வாழ்த்துக்கள்.

ஓவியன்
17-07-2007, 03:14 PM
பாராட்டுக்கள் அமரன் அவர்களே....சரியான விடையைக் கூறிவிட்டீர்கள்....வாழ்த்துக்கள்.

நான் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டேன் அரசன் பொய் சொன்னார் என்று அமர் கூறியது முறையாகாது................:mad:

அமரன்
17-07-2007, 03:14 PM
நன்றி....நன்றி......அடுத்ததிலுமா....பாப்போம்...பாப்போம்...

அமரன்
17-07-2007, 03:15 PM
நான் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டேன் அரசன் பொய் சொன்னார் என்று அமர் கூறியது "முறை"யாகாது................:mad:

ரொம்பத்தான் முறைக்கிறீர்.....:music-smiley-008: :music-smiley-008: :music-smiley-008:

aren
17-07-2007, 03:20 PM
நான் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டேன் அரசன் பொய் சொன்னார் என்று அமர் கூறியது முறையாகாது................:mad:

நடந்தது தெரியாமல் பிகேஜி அவர்களிடம் கோபம் வேண்டாம். அமரன் ஆட்டோ அனுப்பியது உங்களுக்குத் தெரியாது என்று நினைக்கிறேன்.

ஓவியன்
17-07-2007, 03:26 PM
நடந்தது தெரியாமல் பிகேஜி அவர்களிடம் கோபம் வேண்டாம். அமரன் ஆட்டோ அனுப்பியது உங்களுக்குத் தெரியாது என்று நினைக்கிறேன்.

அப்ப அமரே தொடர்ந்து வரப் போகும் கேள்விகளிலும் வெல்லப் போகிறாரா? :fragend005:

மலர்
17-07-2007, 03:28 PM
அப்ப அமரே தொடர்ந்து வரப் போகும் கேள்விகளிலும் வெல்லப் போகிறாரா? :fragend005:

அதெப்படி ஒவியன் நாம் சென்னை ஸ்டைலில் டாடா சுமோ அனுப்பலாம்

aren
17-07-2007, 03:31 PM
அப்ப அமரே தொடர்ந்து வரப் போகும் கேள்விகளிலும் வெல்லப் போகிறாரா? :fragend005:

நான் ஏற்கெனவே, அடுத்த கேள்வியையும் சரியாக பதில் சொல்ல வாழ்த்துக்கள் என்று சொல்லிவிட்டேனே, படிக்கவில்லையா!!!!

ஓவியன்
17-07-2007, 03:33 PM
அதெப்படி ஒவியன் நாம் சென்னை ஸ்டைலில் டாடா சுமோ அனுப்பலாம்
ஆமா மலர்!

அனுப்பிடலாம், அடுத்த முறை நான் அல்லது நீங்கள் தான் வெல்ல வேணும்!.

ஓகே! :thumbsup:

ஓவியன்
17-07-2007, 03:34 PM
நான் ஏற்கெனவே, அடுத்த கேள்வியையும் சரியாக பதில் சொல்ல வாழ்த்துக்கள் என்று சொல்லிவிட்டேனே, படிக்கவில்லையா!!!!

ஆமா!
நான் உங்களை மாதிரி கற்பூரம் இல்லீங்க..... :icon_rollout:

அமரன்
17-07-2007, 03:45 PM
புரிந்ததா என் வெற்றியின் இரகசியம்....
அண்ணன் உள்ளான் போட்டிக்கு அஞ்சான்..

மலர்
17-07-2007, 03:46 PM
பரவாயில்லை ஒவியன் ....
ஒருவேளை அப்படியே அமர் சரியான பதிலை சொல்லிவிட்டாலும், விடையை பிஜேகே கொண்டு மாற்ற சொல்லலாம் அதான் சுமோ போகுதில்ல..

pgk53
18-07-2007, 10:15 AM
ஆட்டோவோ சுமோவோ எதுவாக இருந்தாலும் நான் பணி புரியும் இந்தக் கடலுக்குள் வர இயலாது.

அதனால் எனக்கு பயமில்லை.

pgk53
18-07-2007, 10:16 AM
புதிர் எண்- 163

சோமு அந்த வானளாவிய கட்டிடத்தின் 25வது மாடியில் வேலை செய்துகொண்டிருந்தான்.
வேளைப் பளுவினால் மிகுந்த சோர்வாக உணர்ந்தான்.
நிற்கவும் முடியாமல் கால்கள் தள்ளாடின.

திடீரென்று ஒரு தீர்மானத்துக்கு வந்தவனாக, கண்ணாடி சன்னலைத் திறந்தான்.
சட்டென்று சன்னல் வழியாகப் பாய்ந்தான்.

ஆனால் அவனுக்கு எந்த சேதமும் இல்லாமல் உயிருடன் எழுந்தான்.


மன்ற நண்பர்களே அவ்வளவு உயர்ந்த கட்டிடத்தின் சன்னல் வழியாகப் பாய்ந்த சோமு எப்படித் தப்பித்தான்.
கூறுங்களேன்!!!!!!!!!!!!!!!!!!!!!

இந்தப் புதிருடன் ஒரு கொசுறு.
புதிர் எண்- 163 A

இருள்அடர்ந்த ஒரு வனத்துக்குள் ஒரு நாய் ஓடிக்கொண்டிருந்தது.
கொஞ்சம் களைப்படைந்து போனதினால் அதன் வேகம் குறைய ஆரம்பித்தது.
இருந்தாலும் விடாமல் ஓடிக்கொண்டிருந்தது.
இன்னும் எவ்வளவு தூரம் அந்த நாய் வனத்துக்குள் ஓட முடியும்?????

அக்னி
18-07-2007, 10:26 AM
புதிர் எண் 163
கட்டிடத்தின் வெளி ஜன்னலைத் திறந்து 25 ஆவது மாடியிலிருந்து பாய்ந்தால் தானே விபரீதம் ஏற்படும்...
அவர், கட்டிடத்தின் உள்ளேயே, பாய்ந்ததினால் காயமின்றி எழும்பினார்...


புதிர் எண் 163-A
வனம் முடியுமட்டும் வனத்துக்குள் ஓடியிருக்கும்.

mania
18-07-2007, 11:14 AM
அந்த வனத்தின் பாதி தூரம் தான் வனத்துக்குள் ஓடியிருக்கும். பிறகு வனத்தை விட்டு வெளியே தானே ஓடியிருக்கும்...!!!???
அன்புடன்
மணியா...

ஓவியன்
18-07-2007, 06:53 PM
புதிர் எண் 163 − ஆ அந்த நாய் நன்றாகக் களைக்கும் வரை எவ்வளவு தூரம் ஓட முடியுமோ அந்தளவு தூரம் ஓடியிருக்கும்.

aren
18-07-2007, 07:00 PM
ஆட்டோவோ சுமோவோ எதுவாக இருந்தாலும் நான் பணி புரியும் இந்தக் கடலுக்குள் வர இயலாது.

அதனால் எனக்கு பயமில்லை.

தாஸ் அயலண்டுதானே. அபுதாபி ஏவியேஷனிலிருந்து விமானத்தில் ஆட்டோவை ஏற்றி கொண்டுவந்தால் போயிற்று.

aren
18-07-2007, 07:04 PM
அது நாயின் இஷ்டம். எப்பொழுது நிறுத்தவேண்டும் என்று நினைக்கிறதோ அப்பொழுது நின்றுவிடும்.

அவன் 25வது மாடியில் நின்றிருந்த லிப்டின் ஜன்னலைத் திறந்தான் லிப்டிற்குள் குதித்தான், லிப்டும் அவனை கீழே இறக்கிவிட்டது.

ஓவியன்
18-07-2007, 08:15 PM
அவன் 25வது மாடியில் நின்றிருந்த லிப்டின் ஜன்னலைத் திறந்தான் லிப்டிற்குள் குதித்தான், லிப்டும் அவனை கீழே இறக்கிவிட்டது.

ஏன் லிப்ட் கீழே இறக்க வேண்டும் − மேலே போகாதோ?
26 ம் மாடிக்கு? :grin:

aren
18-07-2007, 11:20 PM
ஏன் லிப்ட் கீழே இறக்க வேண்டும் − மேலே போகாதோ?
26 ம் மாடிக்கு? :grin:

போகட்டுமே. நான் வேண்டாம் என்று சொல்லவில்லையே.

தாமரை
19-07-2007, 02:12 AM
வனத்தின் மையத்தை அடையும் வரை வனத்திற்குள்ளும் அதன் பின்னர் வனத்தை விட்டும் ஓடும்.

ஓவியன்
19-07-2007, 02:19 AM
வனத்தின் மையத்தை அடையும் வரை வனத்திற்குள்ளும் அதன் பின்னர் வனத்தை விட்டும் ஓடும்.

அது எப்படி வனத்தின் மையத்தைக் கண்டு பிடிக்கும்?

pgk53
21-07-2007, 01:23 PM
[QUOTE=அக்னி;241049]புதிர் எண் 163
கட்டிடத்தின் வெளி ஜன்னலைத் திறந்து 25 ஆவது மாடியிலிருந்து பாய்ந்தால் தானே விபரீதம் ஏற்படும்...
அவர், கட்டிடத்தின் உள்ளேயே, பாய்ந்ததினால் காயமின்றி எழும்பினார்...


அக்னி அவர்களே தங்களது விடைகளில் ஒன்று மட்டுமே சரியானது.
மற்றொன்று தவறானது.
சரியான விடைக்கு எனது வாழ்த்துக்கள்.

அனன் சன்னலுக்கு வெளிப்புறம் சாரம் அமைத்து சன்னல் கண்ணாடியைச் சுத்தம் செய்யும் பணியைச் செய்துகொண்டிருந்தான்.
களைப்படைந்தவன் சன்னலைத் திறந்து குதித்தான்.
இதில்கண்ணாடிக்கு வெளியே பணி செய்துகொண்டிருந்தான் என்ற விபரத்தை நான் கூறவில்லை. அதையும் கூறிவிட்டால் பிறகு அதில் புதிரே இல்லையல்லவா???

pgk53
21-07-2007, 01:26 PM
அந்த வனத்தின் பாதி தூரம் தான் வனத்துக்குள் ஓடியிருக்கும். பிறகு வனத்தை விட்டு வெளியே தானே ஓடியிருக்கும்...!!!???
அன்புடன்
மணியா...

சபாஷ் மணியா அவர்களே.....சரியான விடை.
எந்த ஒரு கானகம் என்றாலும் உள்ளே சென்றுகொண்ந்திருந்தால் எப்படியும் அதன் மையப் பகுதிக்குச் சென்றாகவேண்டும். அதன்பிறகும் செல்லும்போது கானகத்தின் முடிவை நோக்கிதான் சென்றாகவேண்டும்.

pgk53
21-07-2007, 01:31 PM
அன்பு நண்பர்களே.....நான் அடுத்த புதிருக்குப் போகுமுன்பு ஒரு விஷயம்.


நான் வரும் 25ம் தேதி ஒரு மாத விடுமுறையில் புறப்பட உள்ளேன்.
அதனால் இரண்டு அல்லது மூன்று புதிர்களைத் தயார் செய்து பதிவு செய்துவிட்டுப் போகலாம் என்று நினைத்துள்ளேன்.

விரைவில் அடுத்த புதிர்கள்.
வணக்கம்.

ஓவியன்
21-07-2007, 07:38 PM
அப்படியே ஆகட்டும் பி.கே.ஜி அவர்களே..........

உங்கள் விடு முரை இனிதே அமைய எனது வாழ்த்துக்கள்!

pgk53
23-07-2007, 02:00 AM
புதிர் எண்− 264

நண்பர்களே இந்த புதிரும் இதற்கு முன்பு பதிவு செய்த 24 மாடி புதிரைப் போன்ற புதிர்தான்.

எதற்கும் கொஞ்சம் கவனமாகப் படிக்கவும்.புதிருக்குப் போவோமா.

24 மாடிக் கட்டிடத்தின் உச்சியில் ஒரு பெண் கட்டிடத்தின் விளிம்பில் கட்டப்பட்டிருந்த தடுப்புச் சுவற்றின் மேல் ஏறி நின்றுகொண்டு, தனது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் குதித்து தற்கொலை செய்யப்போவதாக புலம்பிக்கொண்டிருந்தாள்.

கீழே மக்கள் கூட்டம் நிறைந்துவிட்டது. அனைவருமே அய்யோ குதித்து விடாதே என்று இரைந்துகொண்டிருந்தார்கள்.

யாரோ ஒருவர் போலீசுக்கும், தீயனைப்பு வீரர்களுக்கும் போன் செய்துவிட்டார்.

அவர்களும் வந்துவிட்டார்கள்.
அனைவரும் பதட்டமுடன் நின்றிருந்தார்கள்.

தீயனைப்பு வண்டியைக் கொண்டுவந்த வீரர்கள், வண்டியில் இருந்து பெரிய வலையை எடுத்துக்கொண்டு விரைந்து வந்துகொண்டிருந்தார்கள்.

இன்னும் 50 அடி தூரத்தில் உள்ள கட்டிடத்தின் அடிப்பகுதியை அடைந்து வலையை விரிப்பதற்காக விரைந்து ஓடினார்கள்.

ஆனால் அவர்கள் வலையை விரித்துப் பிடிக்கும் முன்பாகவே அந்தப் பெண் குதித்துவிட்டாள்.

வலையே விரிக்காத நிலையிலும் அவள் எந்த சேதாரமும் இன்றி உயிருடன் எழுந்தாள்..


நண்பர்களே இது எப்படி சாத்தியமானது?என்று நீங்கள்தான் கூறவேண்டும்.

pgk53
23-07-2007, 02:02 AM
புதிர் எண்− 265

வெகு காலம் முன்பு ஒரு தீரச்செயல்களைச் செய்யும் ஒரு குழு வட துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக பெரிய படகு ஒன்றில் ஐரோப்பிய நாட்டில் இருந்து புறப்பட்டார்கள்.

அந்த காலகட்டத்தில் மின்சாரம் கண்டுபிடிக்கப்படவில்லை.

அவர்களது திட்டப்படி அவர்கள் இலக்கை அடைய ஒரு மாத காலம் ஆகும்
இலக்கை அடைந்ததும் ஒரு விருந்து நடத்திக்கொள்ள அவர்கள் திட்டமிட்டார்கள்.

அதற்குத் தேவையான மாமிசத்தை கையோடு எடுத்துச் செல்ல முடிவு செய்தார்கள்.

மாமிசத்தை பெட்டியில் போட்டு எடுத்துச் சென்றால் ஒரு மாத காலத்தில் அது கெட்டுப்போகும்.

வடதுருவத்தை நோக்கிப் பயணிப்பதால், கடும் குளிராக இருக்கும் கடல் நீருக்குள் மாமிசத்தை கயிற்றால் கட்டி, படகில் இருந்து கடல் நீருக்குள் தொங்கவிட்டுச் செல்லலாமே என்ற ஒருவருடைய ஆலோசனையும் தள்ளுபடியாகியது.

ஏனென்றால் கடல் மீன்கள் மாமிசத்தை தின்று முடித்துவிடும்.

அடுத்தாற்போல் ஒருவர், உறைந்து கிடக்கும் பணிக்கட்டிகளை எடுத்து ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு அதில் மாமிசத்தை வைத்து எடுத்துச் செல்லலாமே என்று கூறினார்.

அதுவும் தள்ளுபடியாகியது.

ஏனென்றால் சில தினங்களில் சூரிய ஒளியினால் பனிக்கட்டி உருகிவிடும். படகில் உருகிய பனிக்கட்டிகளால் நீர் தேங்கும்
்.
பனிக்கட்டி உருகிவிட்டால் மாமிசம் கெட்டுப்போகும் என்று என்பதினால் அந்த யோசனையும் நடக்காமல் போனது.

அப்போது ஒருவர் தீவிரமாக ஆலோசனை செய்தபின்பு ஒருவழியைக் கூறினார்.
அனைவரும் கரகோஷம் செய்து அவரது சிந்தனையைப் பாராட்டி ஏற்றுக்கொண்டார்கள்.

அந்தக் குழு அவர்களது இலக்கை எட்டியதும், திட்டமிட்டபடி மாமிசத்தால் விருந்து நடத்தி களிப்படைந்தார்கள்.

நண்பர்களே அந்த ஒரு புத்திசாலி கூறிய வழி என்ன????????

நாம் என்ன அவர்களுக்கும் சளைத்தவர்களா என்ன !!!!!!!!!!!!!!!!!!கூறுங்கள்.

pgk53
23-07-2007, 02:04 AM
புதிர் எண்− 266

ராமுவைப் பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டதேபோய்ப் பார்த்துவிட்டு வரலாம் என்று சோமு புறப்பட்டுப்போனான்.

ராமுவின் வீட்டுக்குப் போனதும், ராமுவின் 10 வயது மகன் சோமுவை வரவேற்றான்.

கொஞ்ச நேரம் உட்காருங்கள் அங்கிள்அப்பா குளித்துக்கொண்டிருக்கின்றார். விரைவில் வந்துவிடுவார் என்றான்.

சோமுவும் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான்.

ராமுவின் மகன் அருகில் வந்தமர்ந்தான். அங்கிள், அப்பா வரும் வரை நான் போடும் இந்தப் புதிருக்கு விடை கூறுகிறீர்களா என்று கேட்டான்.

சோமு சிரித்தபடியே, ஆஹா அதற்கென்ன?...என்ன புதிர் போடப்போகிறாய் என்று கேட்டான்.

உடனே ராமுவில் மகன் எழுந்து சென்று ஒரு கண்ணாடி பாட்டிலை எடுத்துவந்தான்.

உருளை வடிவத்தில் பெரியதாக பீப்பாய் போல இருந்த அதன் உள்ளே தண்ணீர் இருந்தது.பாட்டிலின் மேல் மூடி இல்லை.

சரி , இப்போது அங்கிள், நான் சொல்கிறேன் இதன் உள்ளே இருக்கும் தண்ணீர் பாதிக்கும் குறைவாக இருக்கிறது.நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா? என்றான்.

சோமுவோ, இல்லை இல்லை.பாதிக்கும் மேலேதான் நீர் இருக்கின்றது.
குறைவாக இருக்கின்றது என்று நீ கூறுவது தவறு என்றான்.

சரி அப்படியானால், பாட்டிலில் இருக்கும் நீரை வெளியே எடுக்கக்கூடாது.

வேறு எந்த அளவுகோலையும் உள்ளே விடக்கூடாது.வெளியில் இருந்தும் அளவுகோல் கொண்டு அளக்கக் கூடாது.

ஆனால் நீங்கள் கூறியதை இப்போதே நிரூபிக்கவேண்டும் என்று பிடித்துக்கொண்டான்.

சோமு கொஞ்சம் தினறித்தான் போனான்.

அதற்குள் ராமுவும் குளித்து விட்டு வந்துவிட்டான்.

என்ன சோமு என் மகன் புதிரைப் போட்டு உன்னைப் பிடித்துக்கொண்டானா?? இவன் தொல்லை தாங்கமுடியவில்லையப்பா!!!!!!!!!!...உனக்காவது தெரிந்தால் கூறு என்றான் ராமு.

சோமு சிரித்தபடியே, இங்கே பாரப்பாநான் கூறியதுதான் சரியென்று, நீ கூறிய விதிமுறைகளை மீறாமல் நிரூபிக்கிறேன் என்று சொல்லியபடியே தண்ணீர் பாதிக்கும் மேலாக இருக்கின்றது என்று நிரூபித்தான்.


மன்ற நண்பர்களேசோமு எந்த வகையில் இதை நிரூபித்தான் என்று கூறுங்கள்.

அக்னி
23-07-2007, 09:44 PM
புதிர் எண்- 165
தேவையான மாமிசத்தை தரக்கூடிய விலங்குகளை உயிருடன் படகில் ஏற்றிச் செல்லலாம் என்று கூறியிருப்பார்.
தேவையான போது, கொன்று, மாமிசமாக்கி விருந்தாக்கியிருப்பார்கள்...

அக்னி
23-07-2007, 09:49 PM
புதிர் எண்- 166
பாட்டிலில் தற்போது நீர்மட்டம் நிற்கும் இடத்தைக் ஏதாவதொன்றால் குறித்துக் கொண்டு, அல்லது, விரல்களால் குறியிட்டுக் கொண்டு, பாட்டிலை தலைகீழாகக் கவிழ்க்க வேண்டும்.
குறியிட்ட இடத்தின் மேலாக, நீர்மட்டம் காணப்படுமானால், நீர் பாட்டிலில் பாதிக்கு மேலாக இருக்கின்றது என்றும், குறித்த இடத்தில் நின்றால், சரிபாதியாக இருக்கின்றது என்றும், குறித்த இடத்தின் கீழே நின்றால் பாதிக்கும் குறைவாக உள்ளது என்றும் கணித்துக் கொள்ளலாம்...

அக்னி
23-07-2007, 09:53 PM
புதிர் எண்- 164
தடுப்புச் சுவரிலிருந்து, நிலத்தை நோக்கிக் குதிக்காமல், 24 ஆவது மாடியின் தளத்தை நோக்கிக் குதித்ததால், காயம்படாமல் தப்பியிருந்திருப்பார்.

pgk53
04-08-2007, 04:53 AM
புதிர் எண்- 165
தேவையான மாமிசத்தை தரக்கூடிய விலங்குகளை உயிருடன் படகில் ஏற்றிச் செல்லலாம் என்று கூறியிருப்பார்.
தேவையான போது, கொன்று, மாமிசமாக்கி விருந்தாக்கியிருப்பார்கள்...

பலே....அக்னி அவ்ர்களே....சரியான விடை.பாராட்டுக்கள்