PDA

View Full Version : புதிரோ புதிர் எண்-571-05-06-2015



Pages : 1 2 3 4 5 6 7 8 9 [10] 11 12 13 14 15 16 17 18 19

மதி
07-03-2006, 05:46 AM
மகன் இன்னொரு பசுவை சேர்த்துக்கொண்டால் மொத்தம் 18 ஆகிவிடும். அப்போது முறையே 9 , 6 , 2 என்று மூவருக்கும் பிரித்துக்கொடுத்தால் மீதி ஒரு பசு இருக்கும்.சரியா செல்வன்....?
அன்புடன்
மணியா...:)
எனக்கும் இதே எண்ணிக்கை தான் வந்தது..

1/2+1/3+1/9 = (9+6+2)/18 = 17/18

சரியா செல்வன்..?

gragavan
07-03-2006, 05:50 AM
சரி விடையை சொல்கிறேன் .. சரி பார்த்துக் கொள்ளவும்..

யாமணி யின் விதிப்படி...

மந்திரத்தை உரக்கச் சொல்ல வேண்டும்...

அதே சமயத்தில் யாருக்காவது கெடுதல் மட்டுமே செய்ய முடியும்..

மந்திரத்தை உரக்கச் சொல்வதால் பிரதீப்பை தொடரும் ராகவன் மந்திரத்தை அறிந்து கொண்டான்.. மந்திரம் தனக்கும் வேலை செய்யும் என அறிந்து கொண்ட அவன்...

பிரதீப் ஊமையாகி விட வேண்டும் என நினைத்து மந்திரத்தைச் சொன்னான். பிரதீப் ஊமையாகி விட்டதால் அவனால் இனி மந்திரப் பிரயோகம் செய்ய முடியாது.. எனவே பிரதீப் அடங்கி விட்டான்..

ராகவன் எளிமையாக பிரதீப் மந்திரத்தை மறந்து விட வேண்டும் என நினைத்திருக்கலாம்.. ஆனால் அது பிரதீப்பிற்கு நன்மை பயக்கும் ஒன்று.. எனவே அது பலிக்காது.. எனவே ஊமை ஆக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது.ஆக்கீட்டேனா...........பெறகு எப்படி பிரதீப்பு அன்னைக்கு ஃபோன்ல பேசுனாரு....ஏய்யா எனக்கே வஞ்சம் வெக்க நினைச்சிருக்கீகளே!

தாமரை
07-03-2006, 05:55 AM
மகன் இன்னொரு பசுவை சேர்த்துக்கொண்டால் மொத்தம் 18 ஆகிவிடும். அப்போது முறையே 9 , 6 , 2 என்று மூவருக்கும் பிரித்துக்கொடுத்தால் மீதி ஒரு பசு இருக்கும்.சரியா செல்வன்....?
அன்புடன்
மணியா...:)


சூப்பர் தலை!!!:D :D :D

gragavan
07-03-2006, 06:59 AM
இதுலயிருந்து என்ன தெரியுது.........எல்லாரும் தெனாலிராமன் படம் பாத்திருக்கீங்கன்னு தெரியுது...........இல்லை படிச்சிருக்கீங்கன்னு தெரியுது. வாழ்க. வளர்க.

தாமரை
07-03-2006, 07:51 AM
ஆக்கீட்டேனா...........பெறகு எப்படி பிரதீப்பு அன்னைக்கு ஃபோன்ல பேசுனாரு....ஏய்யா எனக்கே வஞ்சம் வெக்க நினைச்சிருக்கீகளே!
அன்னைக்கு பேசுனாரு.. இன்னைக்கு பேசினாரா? னாரா? ன்னாரா??

மதி
07-03-2006, 07:58 AM
நல்லா இருக்கறவர ஊமையாக்கிடுவீங்க போலருக்கு..

sarcharan
07-03-2006, 08:17 AM
அவனே இப்போதான் அம்ம்மாஆஆஆஅ, அப்ப்ப்பாஆஆஆ, எழுத்து, சொல், ஒலி, சப்தமுன்னு சரஸ்வதி சபதம் சிவாஜி கணக்கா சொல்லி பழகிகிட்டு இருக்கான் ....

அன்னைக்கு பேசுனாரு.. இன்னைக்கு பேசினாரா? னாரா? ன்னாரா??

gragavan
07-03-2006, 09:35 AM
அன்னைக்கு பேசுனாரு.. இன்னைக்கு பேசினாரா? னாரா? ன்னாரா??இல்லையே இல்லையே இல்லையே.....அப்ப உண்மையா. :)

தாமரை
07-03-2006, 09:40 AM
இல்லையே இல்லையே இல்லையே.....அப்ப உண்மையா. :)
அது மந்திரம் போட்ட உங்களுக்குத்தானே தெரியும்...:D :D :D

gragavan
07-03-2006, 09:41 AM
அவனே இப்போதான் அம்ம்மாஆஆஆஅ, அப்ப்ப்பாஆஆஆ, எழுத்து, சொல், ஒலி, சப்தமுன்னு சரஸ்வதி சபதம் சிவாஜி கணக்கா சொல்லி பழகிகிட்டு இருக்கான் ....சிவாஜி போலத்தான...இருக்கும் இருக்கும். பிரதீப்புக்கு சிவாஜின்னா ரொம்பப் பிரியம். ரொம்பவே. சிவாஜி மாதிரி நடக்காரு. பேசுறாரு....அதே மாதிரி நடிச்சா!!!!!!!!!!!!!!!!!

gragavan
07-03-2006, 09:41 AM
அது மந்திரம் போட்ட உங்களுக்குத்தானே தெரியும்...:D :D :Dதெரிஞ்சிருச்சே.......மனசு குளுந்துருச்சே!!!!!!!!!!!!

pradeepkt
07-03-2006, 10:19 AM
சிவாஜி போலத்தான...இருக்கும் இருக்கும். பிரதீப்புக்கு சிவாஜின்னா ரொம்பப் பிரியம். ரொம்பவே. சிவாஜி மாதிரி நடக்காரு. பேசுறாரு....அதே மாதிரி நடிச்சா!!!!!!!!!!!!!!!!!
போதுமா...
இருந்த கோவம் எல்லாத்தையும் தீத்துக்கிட்டீங்களாய்யா...
என்ன கோவம் இருந்தாலும் என்னை நீங்க இப்படிப் பேசியிருக்கக் கூடாது... அடடே.....

மதி
07-03-2006, 10:39 AM
என்னப்பா இன்னும் சின்ன புள்ளத்தனமா அடிச்சிகிட்டு...
ஹ்ம்ம்..

sarcharan
08-03-2006, 01:21 PM
அத கூட சிவாஜி தோரணையிலயே கேக்குறான் பாருங்க...

போதுமா...
இருந்த கோவம் எல்லாத்தையும் தீத்துக்கிட்டீங்களாய்யா...
என்ன கோவம் இருந்தாலும் என்னை நீங்க இப்படிப் பேசியிருக்கக் கூடாது... அடடே.....

pgk53
08-03-2006, 03:41 PM
புதிர் எண் 211----இன்னும் சரியான விடை யாருமே சொல்லவில்லையே-----என்ன ஆனது?????????????????

இளந்தமிழ்ச்செல்வன்
08-03-2006, 04:33 PM
புதிர் எண் 211----இன்னும் சரியான விடை யாருமே சொல்லவில்லையே-----என்ன ஆனது?????????????????

என்ன தொழில் செய்கிறீர்கள் என்று கேட்டிருப்பார். அல்லது உங்களின் பொருட்கள் ஏதேனும் தொலைந்ததா? என்று கேட்டிருப்பார்.

பரஞ்சோதி
08-03-2006, 05:27 PM
நீதிபதி அனைவரையும் கேட்ட கேள்வி "உன் குடுமியை அருணாசலம் தான் வெட்டினானா?"

மற்றவர்கள் தெரியவில்லை என்று சொல்லியிருப்பாங்க, நம்ம ஆளு அவசரக்குடுக்கை (இராகவன் மாதிரி) "இல்லை" என்று சொல்லியிருப்பான்.

pgk53
10-03-2006, 01:31 AM
என்ன தொழில் செய்கிறீர்கள் என்று கேட்டிருப்பார். அல்லது உங்களின் பொருட்கள் ஏதேனும் தொலைந்ததா? என்று கேட்டிருப்பார்.

இளந்தமிழ்ச் செல்வன் சரியான விடையைக் கூறிவிட்டார்.
நீதிபதி அனைவரையும் கூர்ந்து கவனித்தார் என்று கூறியிருந்தேனல்லவா? அவர் அனைவரின் வெட்டப்பட்ட குடுமிகளையும்தான் கூர்ந்து கவனித்தார்.

எல்லோருக்குமே ஒரே அளவில் சரியாக வெட்டப்ப்பட்டிருந்தது. இப்படி வெட்டுவதென்றால் ஒன்று வெட்டியவன் முடிவெட்டும் தொழிலைச் செய்பவனாக இருக்கவேண்டும் , அல்லது தையல்காரனாக இருக்கவேண்டும் என்று அனுமானித்தார். அதனால் அனைவரிடமும் நீ என்ன தொழில் செய்கிறாய் என்ற ஒரே கேள்வியை மட்டும் கேட்டார்.
திருடியவன் தன்னையும் அறியாது தான் முடி வெட்டுபவன் என்று கூறிவிட்டதால் அவன்தான் திருடன் என்று நீதிபதி முடிவு செய்தார்.

வாழ்த்துக்கள் இளந்தமிழ்ச் செல்வன்.

அடுத்த புதிர் விரைவில் .

தாமரை
10-03-2006, 04:31 AM
எல்லோருக்குமே ஒரே அளவில் சரியாக வெட்டப்ப்பட்டிருந்தது. இப்படி வெட்டுவதென்றால் ஒன்று வெட்டியவன் முடிவெட்டும் தொழிலைச் செய்பவனாக இருக்கவேண்டும் , அல்லது தையல்காரனாக இருக்கவேண்டும் என்று அனுமானித்தார். அதனால் அனைவரிடமும் நீ என்ன தொழில் செய்கிறாய் என்ற ஒரே கேள்வியை மட்டும் கேட்டார்.
திருடியவன் தன்னையும் அறியாது தான் முடி வெட்டுபவன் என்று கூறிவிட்டதால் அவன்தான் திருடன் என்று நீதிபதி முடிவு செய்தார்.

வாழ்த்துக்கள் இளந்தமிழ்ச் செல்வன்.

அடுத்த புதிர் விரைவில் .

ஆஹா.. நம்ம சலூனை மாத்தணும்பா...

வெட்டத் தெரிந்தவர்கள்..
1. முடி திருத்துபவர்..
2. தையல்காரர்,
3. துணிக்கடை தொழிலாளி
4. கசாப்புக் கடை வைத்திருப்பவர்
5. மந்திரிகள், மற்றும் நடிக நடிகையர்(அட திறப்பு விழாவில ரிப்பன் வெட்டறவங்கப்பா)
6, மருத்துவர்கள்
7. அடியாட்கள்
8. பெண்கள் (காய்கறி வெட்டறாங்க இல்லையா)

எனக்கு ஒரே ஒரு சந்தேகம்.. முடி வெட்டுபவர் குடுமி வைத்து இருப்பாரா.. இல்லை கத்தரித்து இருப்பாரா?
:D :D :D :D

பரஞ்சோதி
10-03-2006, 08:02 AM
அட பத்து பேரில் ஒரு சொட்டை கூட இல்லையா?

தாமரை செல்வன் அசத்திபுட்டீங்க.

தாமரை
10-03-2006, 08:03 AM
அட பத்து பேரில் ஒரு சொட்டை கூட இல்லையா?

தாமரை செல்வன் அசத்திபுட்டீங்க.
பொறாமையா இருக்கா பெஞ்சு????:D :D :D

பென்ஸ்
10-03-2006, 08:27 AM
என்னைடைய கல்லூரி போட்டோ காமிக்கிறேன்....
நான் அப்பவாவது முடி வைத்திருந்தேன்...
சில பேர் எப்பவுமே வைத்ததில்லையே...
நீங்க இனிமேல் வளத்து பாருங்க ....
உங்க மனைவியும் காய்கறி வெட்டுவாங்கதானே????

தாமரை
10-03-2006, 08:31 AM
என்னைடைய கல்லூரி போட்டோ காமிக்கிறேன்....
நான் அப்பவாவது முடி வைத்திருந்தேன்...
சில பேர் எப்பவுமே வைத்ததில்லையே...
நீங்க இனிமேல் வளத்து பாருங்க ....
உங்க மனைவியும் காய்கறி வெட்டுவாங்கதானே????
அதுதான் வித்தியாசமே..

உங்களால முடி வச்சுக்கத்தான் முடியும்
என்னால வளர்க்க முடியும்:rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:

pradeepkt
10-03-2006, 08:31 AM
என்ன காமிச்சாலும் போட்டோதானே அப்போ விக்கு வச்சிருந்தீங்கன்னு செல்வன் சொல்லுவார்...
ஏன் பென்ஸூ நமக்கு இந்த விஷப் பரீட்சை எல்லாம்?
ஆமா, எதுக்குக் காய்கறி வெட்டுறதைப் பத்திக் கேக்குறீங்க?

pradeepkt
10-03-2006, 08:32 AM
அதுதான் வித்தியாசமே..

உங்களால முடி வச்சுக்கத்தான் முடியும்
என்னால வளர்க்க முடியும்:rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:
ஆமா, என்னமோ நீங்க கஷ்டப்பட்டு பாத்திகட்டி தண்ணீர் விட்டு உரம் போட்டு வளர்த்த மாதிரி...
பென்ஸூ, உங்களுக்கு இந்த மாதிரி கேட்டாலே வழக்கமா புஜம் துடிக்குமே... :rolleyes:

தாமரை
10-03-2006, 09:01 AM
ஆமா, என்னமோ நீங்க கஷ்டப்பட்டு பாத்திகட்டி தண்ணீர் விட்டு உரம் போட்டு வளர்த்த மாதிரி...
பென்ஸூ, உங்களுக்கு இந்த மாதிரி கேட்டாலே வழக்கமா புஜம் துடிக்குமே... :rolleyes:
அவரே பாவம் மௌன விரதம் கறாரு .. அப்புறம் பேசறாரு.. இப்படி குழம்பிக்கிடக்கார்.. நீங்க வேற அவர உசுப்பேத்தி இருக்கிற மானத்தையும் கப்பலேத்தறீரே

pgk53
10-03-2006, 03:39 PM
புதிர் எண் 212


நண்பர்களே இந்த புதிர் மிகவும் சிறிய புதிர்தான். இருப்பினும் கொஞ்சம் சிந்தனையைத் தூண்டும் என்று நம்புகிறேன்.


கண்ணன் சென்னை எக்மோர் ரயில் நிலையத்துக்குச் சென்றான்.
மதுரையில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் நிலையத்துக்குள் வந்து கொண்டிருப்பதாக அறிவிப்பைக் கேட்டதும் எழுந்துகொண்டான்.
வைகை எக்ஸ்பிரஸ் நிலைக்கு வந்து நின்றது.
பயணிகள் அனைவரும் மளமளவென்று இறங்கினார்கள்.
கண்ணன் பயணிகள் வெளியெ வரும் வழியில் நின்றிருந்தான்.
ம்ம்ம்ம்ம்----இதோ---கன்ணன் இருக்கிறாரே---என்ற குரல் கேட்டதும் கண்ணன் குரல் வந்த திசையில் திரும்பினான்.

அங்கே----- பொன்னம்பலமும் ,மைதிலியும் வந்துகொண்டிருந்தார்கள்.
இப்போது நண்பர்களே உங்களுக்கு ஒரு கேள்வி?????


கண்னனும் மைதிலியும் இதுவரை பார்த்துக்கொண்டதே இல்லை.
ஆனால் மைதிலியுடைய மகனுக்கு கண்ணன்தான் தகப்பன்.!!!
இது எப்படி சாத்தியம் என்று கூறுங்களேன்.





குறிப்பு
டெஸ்ட் டியுப் குழந்தை என்ற கற்பனை செய்துவிடவேண்டாம்.

aren
10-03-2006, 04:06 PM
இருவரும் குருடர்கள்.

பரஞ்சோதி
10-03-2006, 05:44 PM
ஆரென் அண்ணா கலக்கிபுட்டீங்க.

pgk53
11-03-2006, 01:47 PM
இருவரும் குருடர்கள்.

முத்தான இரு வார்த்தைகளில் சரியான விடையைக் கூறிய ஆரென் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

இது மிகவும் சுலபமான புதிர் என்று ஆரம்பத்திலேயே கூறியிருந்தேன்.
சரி அடுத்து வரும் புதிருக்கு பதிலைச் சரியாகக் கூறுங்களேன்.

விரைவில் அடுத்த புதிர்

pradeepkt
11-03-2006, 07:37 PM
சபாஷ் ஆரென் அண்ணா...
சும்மா கலக்கிப் போட்டீங்க...
இதுதால் லேட்டரல் திங்கிங்கா?

aren
12-03-2006, 12:17 AM
இது மிகவும் சுலபமான புதிர் என்று ஆரம்பத்திலேயே கூறியிருந்தேன்.
சரி அடுத்து வரும் புதிருக்கு பதிலைச் சரியாகக் கூறுங்களேன்.

விரைவில் அடுத்த புதிர்

சுலபமான புதிர்னாலே நான் பதில் சொல்லிவிட்டேன் என்று சொல்கிறீர்கள். பரவாயில்லை.

aren
12-03-2006, 12:18 AM
சபாஷ் ஆரென் அண்ணா...
சும்மா கலக்கிப் போட்டீங்க...
இதுதால் லேட்டரல் திங்கிங்கா?

என்னவோ நீங்க சொல்றீங்க. ஆனா பிகேஜி இது எளிதான புதிர் அதான் நான் பதில் சொல்லிட்டேன்னு சொல்கிறார்.

pgk53
12-03-2006, 02:05 PM
அய்யோ----அப்படி அல்ல ஆரென் அவர்களே----அது சுலபமான புதிர் என்று மட்டும்தான் கூறினேன்.

தாங்கள் கடினமான புதிர்களுக்கெல்லாம் சரியான விடை கூறியிருக்கிறீர்கள்......தங்களைக் குறைத்து அதைச் சொல்லவில்லை.
பொருத்துக் கொள்ளவேண்டுகிறேன்.

சரி வாருங்கள் அடுத்த புதிருக்குப் போவோம்.

pgk53
12-03-2006, 02:06 PM
புதிர் எண் 213

ஒரு ஊரிலே ஒரு கணவனும் மனைவியும் மிகவும் ஒற்றுமையாகக் குடும்பம் நடத்திவந்தார்கள்.
யார் கண் பட்டதோ தெரியவில்லை!.அவர்களுக்குள் சிறு சிறு சண்டைகள் தோன்றத் தொடங்கின.ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லாததினால் , அதுவே பெரிய சண்டையாக மாறத் தொடங்கியது.
எப்படி இருந்தவர்கள் எப்படி மாறிவிட்டார்கள்??? என்று ஊரார் பேசத் தொடங்கினார்கள்
.ஒருநாள் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஏற்பட்ட கோபத்தை அடக்க இயலாத கணவன் மனைவியைப் பார்த்து இனிமேல் நீயாக வந்துதான் என்னிடம் பேசவேண்டும். அப்படிப் பேசாவிட்டால் என் வாழ்நாள் முழுவதும் உன்னுடன் பேசமாட்டேன்.இது உறுதி! என்று சொன்னான்.
அதற்கு அவளும், நானாக வந்து உங்களிடம் பேசும் அளவுக்கு நான் மதிப்பு தாழ்ந்துபோகவில்லை.இனி நீங்களாக வந்து என்னிடம் பேசினால்தான் நான் உங்களுடன் பேசுவேன். இல்லாமல் நானாக வந்து பேசமாட்டேன். என்று கூறினாள்.

அன்றிலிருந்து இருவரும் ஒருவரோடு ஒருவர் பேசாமலேயே வாழ்க்கையை நடத்திவந்தார்கள்.
இப்படியே சில ஆண்டுகள் கழிந்தன.
யாராவது ஒருவர் பிடிவாதத்தை விட்டுக்கொடுத்து முன்வந்து பேசினால் போதும். இருவரும் பழையபடி மகிழ்வுடன் வாழலாமே என்று இருவருமே நினைத்தார்கள். ஆனால் இருவரில் யாரும் தங்கள் பிடிவாதத்தை விட்டுக்கொடுத்து முதலில் பேசத் தயாராக இல்லை.
இருவரையும் ஒற்ருமைப் படுத்த நினைத்தார் ஒரு பெரியவர்.இருவரிடமும் நடந்த விஷயத்தைப் பற்றிப் பேசினார். இருவருமே விட்டுக்கொடுத்து கீழிறங்கிவரத் தயாராக இல்லை என்பதை உணர்ந்தார்.

கொஞ்சம் சிந்தனை செய்தார். அவர்களில் இருவரில் ஒருவர் தான் கூறியபடி உறுதிமொழியைப் பின்பற்றவில்லை என்பதை உணர்ந்தார்.
அதை அவர்களுக்கு உணர்த்தி நிரூபித்து இருவரையும் ஒற்றுமைப் படுத்தினார்.

அன்பு மன்ற நண்பர்களே-------------இப்போது நீங்கள் கூறுங்கள்.
அந்தப் பெரியவர் எப்படி அவர்கள் உறுதிமொழியின்படி நடக்கவில்லை என்பதை நிரூபித்தார்?????????

aren
12-03-2006, 02:16 PM
இனிமேல் நீயாக வந்துதான் என்னிடம் பேசவேண்டும். அப்படிப் பேசாவிட்டால் என் வாழ்நாள் முழுவதும் உன்னுடன் பேசமாட்டேன்.இது உறுதி! என்று சொன்னான்.

அதற்கு அவளும், நானாக வந்து உங்களிடம் பேசும் அளவுக்கு நான் மதிப்பு தாழ்ந்துபோகவில்லை.இனி நீங்களாக வந்து என்னிடம் பேசினால்தான் நான் உங்களுடன் பேசுவேன். இல்லாமல் நானாக வந்து பேசமாட்டேன். என்று கூறினாள்.

மனைவி கணவன் சபதம் எடுத்தவுடனேயே பேசிவிட்டதால், கணவன் இன்னும் பேசாமல் இருப்பது தவறு என்று பெரியவர் கண்டுபிடித்துவிட்டார். அதை தெளிவுபடுத்தி இருவரையும் பேசவைத்தார்.

என்ன நான் சொல்வது சரியா?

pgk53
12-03-2006, 02:25 PM
இனிமேல் நீயாக வந்துதான் என்னிடம் பேசவேண்டும். அப்படிப் பேசாவிட்டால் என் வாழ்நாள் முழுவதும் உன்னுடன் பேசமாட்டேன்.இது உறுதி! என்று சொன்னான்.

அதற்கு அவளும், நானாக வந்து உங்களிடம் பேசும் அளவுக்கு நான் மதிப்பு தாழ்ந்துபோகவில்லை.இனி நீங்களாக வந்து என்னிடம் பேசினால்தான் நான் உங்களுடன் பேசுவேன். இல்லாமல் நானாக வந்து பேசமாட்டேன். என்று கூறினாள்.

மனைவி கணவன் சபதம் எடுத்தவுடனேயே பேசிவிட்டதால், கணவன் இன்னும் பேசாமல் இருப்பது தவறு என்று பெரியவர் கண்டுபிடித்துவிட்டார். அதை தெளிவுபடுத்தி இருவரையும் பேசவைத்தார்.

என்ன நான் சொல்வது சரியா?

அற்புதம் ----ஆரென் அவர்களே----மிகச் சரியாகச் சொல்லிவிட்டீர்கள்.
வாழ்த்துக்கள் ஆரென் அவர்களே.

aren
12-03-2006, 02:32 PM
அற்புதம் ----ஆரென் அவர்களே----மிகச் சரியாகச் சொல்லிவிட்டீர்கள்.
வாழ்த்துக்கள் ஆரென் அவர்களே.

எப்போதாவது இந்த மாதிரி வாழ்த்துக்கள் வருவதுண்டு. அது இன்று நடந்திருக்கிறது.

நன்றி பிகேஜி அவர்களே.

pradeepkt
13-03-2006, 03:37 AM
ஆரென் அண்ணா,
எங்களுக்கெல்லாம் மிச்சம் வைக்காமல் எல்லா விடைகளையும் நீங்களே சொல்லி விடுவதென்று முடிவு கட்டி இருக்கிறீர்களா...
வாழ்த்துகள்!

mania
13-03-2006, 04:28 AM
பாராட்டுகள் ஆரென்....:D :D
அன்புடன்
மணியா...:D

தாமரை
13-03-2006, 04:35 AM
நாம வர்றதுக்குள்ள ரண்டு புதிர் போட்டு விடுவித்து பாராட்டி எல்லாம் முடிஞ்சிருச்சி.. ம்ம்ம்.. இன்னொரு கதை எழுதணும் போல இருக்கு.

மதி
13-03-2006, 05:58 AM
எழுதுங்க..எழுதுங்க...

mkmaran
13-03-2006, 06:50 AM
அரென் அண்ணா கலக்கிட்டீங்க கலக்கி!

அநியாயத்துக்கு அறிவாளியா இருப்பீங்க போல தெரியுதே!

(நானும் இப்படிதான்!
ஏதாவது எப்போதாவது அறிந்தோ அறியாமலோ புரிந்தோ புரியாமலோ புத்திசாலிதனமாக செய்து அதை நாலுபேர் பாராட்டநேரும்போது... அடடா அடுத்தவர்கள் தேவையில்லாமல் உணர்ச்சி வசப்பட நாம காரணமாக இருந்துவிட்டோமே என்று நிஜமாகவே வருத்தப்படுவது உண்டு! :D )!



எப்போதாவது இந்த மாதிரி வாழ்த்துக்கள் வருவதுண்டு. அது இன்று நடந்திருக்கிறது.

நன்றி பிகேஜி அவர்களே.

gragavan
13-03-2006, 07:11 AM
ஆகா இந்தப் புதிருக்குள்ள இப்பிடியொரு விடையா...ஆனா முடிவு நல்லாருக்கு. வாழ்த்துகள் ஆரென்.

இளந்தமிழ்ச்செல்வன்
13-03-2006, 08:05 AM
வாழ்த்துக்கள் ஆரென்

sarcharan
13-03-2006, 08:52 AM
அடேயப்பா நான் ஒரு 4 நாள் விடுமுறையில போனது தப்பா போச்சே..
விடைய கண்டுபிடிச்சிட்டீங்களே....

ஹ்ம்ம் என்ன கொடுமை சரவணன் !!!!:eek: :eek: :eek:

மதி
13-03-2006, 09:01 AM
"இது"-அ விட்டுட்டீங்களே..சரவணன்..??

பரஞ்சோதி
13-03-2006, 03:49 PM
எப்போதாவது இந்த மாதிரி வாழ்த்துக்கள் வருவதுண்டு. அது இன்று நடந்திருக்கிறது.

நன்றி பிகேஜி அவர்களே.

அட்டகாசம் அண்ணா, என்ன கல்யாணம் ஆகாத சின்ன பசங்களுக்கு இந்த புதிருக்கான விடை தெரியாது தான். :)

நாம தான் தினம் தினம் இந்த புதிரை போட்டு விடை காணுகிறோமே :D

தாமரை
13-03-2006, 03:57 PM
அட்டகாசம் அண்ணா, என்ன கல்யாணம் ஆகாத சின்ன பசங்களுக்கு இந்த புதிருக்கான விடை தெரியாது தான். :)

நாம தான் தினம் தினம் இந்த புதிரை போட்டு விடை காணுகிறோமே :D

ஆமாமா!:D :D

pradeepkt
14-03-2006, 04:54 AM
ஒடனே இனம் இனத்தோட சேந்துருவீங்களே...
அண்ணா,
நானும் சீக்கிரம் அண்ணியப் பாக்கத்தான் போறேன், அப்புறம் இருக்கு உங்களுக்கு வீட்டுல மண்டகப்படி!

தாமரை
14-03-2006, 05:00 AM
ஒடனே இனம் இனத்தோட சேந்துருவீங்களே...
அண்ணா,
நானும் சீக்கிரம் அண்ணியப் பாக்கத்தான் போறேன், அப்புறம் இருக்கு உங்களுக்கு வீட்டுல மண்டகப்படி!
ஆமாமா என்பது நிறைய உள்ளர்த்தம் உள்ள வார்த்தை..
பிரித்து மேய்தல் என்ற நுட்பத்தின் மூலம் சிறிது பார்ப்போமா?

ஆமாம் + ஆமாம் = டபுள் ஓ.கே
ஆமாம் + மாமா = ஓ.கே மாம்ஸ்
ஆ + மாமா = அய்யோ விட்டிருங்க...

இன்னும் வேணுமா???:D :D :D

pradeepkt
14-03-2006, 05:34 AM
இப்படியெல்லாம் இஷ்டத்துக்குப் பிரித்து மேயக் கூடாது.
நீங்க பிரித்து மேய்ந்ததை நான் கொஞ்சம் சேர்த்து மேய்கிறேன்...

ஆமாம் + ஆமாம் = ஆமாமாமா
ஆமாம் + மாமா = ஆமாம்மாமா
ஆ + மாமா = ஆமாமா

இஷ்டத்துக்கு என்னத்தையாவது பிரிச்சு மேயிறதே உங்களுக்கு வேலையாப் போச்சு :D

தாமரை
14-03-2006, 05:43 AM
இப்படியெல்லாம் இஷ்டத்துக்குப் பிரித்து மேயக் கூடாது.
நீங்க பிரித்து மேய்ந்ததை நான் கொஞ்சம் சேர்த்து மேய்கிறேன்...

ஆமாம் + ஆமாம் = ஆமாமாமா
ஆமாம் + மாமா = ஆமாம்மாமா
ஆ + மாமா = ஆமாமா


இஷ்டத்துக்கு என்னத்தையாவது பிரிச்சு மேயிறதே உங்களுக்கு வேலையாப் போச்சு :D

அர்த்தம் சொல்லலியே...!!!!

pradeepkt
14-03-2006, 05:44 AM
அதைத்தான் நீங்க சொல்லிட்டீங்களே, நீங்க பிரிச்சதை நான் சேர்த்தேன், அவ்வளவுதான்.

தாமரை
14-03-2006, 06:16 AM
இப்படியெல்லாம் இஷ்டத்துக்குப் பிரித்து மேயக் கூடாது.
நீங்க பிரித்து மேய்ந்ததை நான் கொஞ்சம் சேர்த்து மேய்கிறேன்...

ஆமாம் + ஆமாம் = ஆமாமாமா
ஆமாம் + மாமா = ஆமாம்மாமா
ஆ + மாமா = ஆமாமா

இஷ்டத்துக்கு என்னத்தையாவது பிரிச்சு மேயிறதே உங்களுக்கு வேலையாப் போச்சு :D
உண்மையாகவே ஆமாம் ஆமாம் என்பதற்கு ஆமாமாமா என்றுதான் சொல்லுவீர்களா?

pradeepkt
14-03-2006, 07:47 AM
உண்மையாகவே ஆமாம் ஆமாம் என்பதற்கு ஆமாமாமா என்றுதான் சொல்லுவீர்களா?
அய்யா... நான் ஆமாம் ஆமாம் என்றே சொல்ல மாட்டேன்..
ஆம் + ஆம் = ஆமாம் என்றோ அல்லது
ஆம் + ஆம் + ஆம் = ஆமாமாம் என்றோதான் சொல்லுவேன்.

பரஞ்சோதி
14-03-2006, 08:14 AM
அய்யோ அய் அய் யோ

அய்யோ அய் யோ

அய் யோ அய்யோ

தாங்க முடியலையப்பா

pradeepkt
14-03-2006, 08:17 AM
அண்ணா
உங்களுக்கே இப்படின்னா... நாங்க எல்லாம் என்ன செய்யிறது?

மதி
14-03-2006, 09:07 AM
அண்ணா
உங்களுக்கே இப்படின்னா... நாங்க எல்லாம் என்ன செய்யிறது?
பண்றதையும் பண்ணிப்புட்டு பேசறீயலாக்கும்....:angry: :angry: :angry: :angry:

தாமரை
14-03-2006, 09:38 AM
அய்யோ அய் அய் யோ

அய்யோ அய் யோ

அய் யோ அய்யோ

தாங்க முடியலையப்பா

என்னுடைய சொந்த ஊர் சேலம்...

என்னடா இது சம்பந்தமில்லாம நினைக்காதீர்கள்.. சம்பந்தப் படுத்தி காட்டுகிறேன்...

சேலம் எதற்கு பெயற் பெற்றது?

மாம்பழம்..

மாம்பழத்திற்கு ஹிந்தியில் என்ன பெயர்?

ஆம்

இப்ப சம்பந்தம் வந்திடுச்சா?

:D :D :D :D :D :D

pradeepkt
14-03-2006, 09:42 AM
இப்ப சம்பந்தம் வந்திடுச்சா?


ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆம் :eek: :eek: :eek:

தாமரை
14-03-2006, 10:13 AM
பண்றதையும் பண்ணிப்புட்டு பேசறீயலாக்கும்....:angry: :angry: :angry: :angry:
யாரைத் திட்டறீங்க..
என்னை மன்றத்திற்கு கொண்டுவந்த ப்ரம்ஸையா?
ஆமாமா என்று ஆரம்பித்த என்னையா
இல்லை
நீங்க "Quote" பண்ணின பிரதீப்பையா?
:confused: :confused: :confused:

மதி
14-03-2006, 11:24 AM
யாரைத் திட்டறீங்க..
என்னை மன்றத்திற்கு கொண்டுவந்த ப்ரம்ஸையா?
ஆமாமா என்று ஆரம்பித்த என்னையா
இல்லை
நீங்க "Quote" பண்ணின பிரதீப்பையா?
:confused: :confused: :confused:

தெரியலீயே....
ஆமாம்...நான் யார சொன்னேன்....
செல்வரே...
இதுவும் உங்க சித்து விளையாட்டில ஒன்றோ..????

போதுமா போன் போட்டு வேற சொன்னேன்ல..:confused: :confused: :confused: :eek: :eek: :eek: :eek:

Mathu
14-03-2006, 09:56 PM
ஆகா இங்க பண்றது போதாம போன் போட்டு வேற விலாவாரியா விளக்கமா.....!
பாவம்பா வேல கொடுத்த வள்ளல், அப்பப்ப டீ குடிக்கும் போது
அதையும் கொஞ்சம் கவனிங்க....

:D :D :D :D

sarcharan
15-03-2006, 08:01 AM
ஹ்ம்ம் இத படிச்சதுக்கப்புறம் மன்றத்துல பல பேரு மண்டையில நிலம் வாங்கிட்டாங்க

என்னுடைய சொந்த ஊர் சேலம்...

என்னடா இது சம்பந்தமில்லாம நினைக்காதீர்கள்.. சம்பந்தப் படுத்தி காட்டுகிறேன்...

சேலம் எதற்கு பெயற் பெற்றது?

மாம்பழம்..

மாம்பழத்திற்கு ஹிந்தியில் என்ன பெயர்?

ஆம்

இப்ப சம்பந்தம் வந்திடுச்சா?

:D :D :D :D :D :D

மதி
15-03-2006, 08:14 AM
ஆகா இங்க பண்றது போதாம போன் போட்டு வேற விலாவாரியா விளக்கமா.....!
பாவம்பா வேல கொடுத்த வள்ளல், அப்பப்ப டீ குடிக்கும் போது
அதையும் கொஞ்சம் கவனிங்க....

:D :D :D :D
உண்மைய சொன்னீங்க..
உண்மைய சொன்னா வேலை செய்யறத விட வேலை செய்யாம இருக்குதான்னு ஆராய்றது தான் எங்க வேலையே.....!!!!!!

தாமரை
16-03-2006, 05:38 AM
உண்மைய சொன்னீங்க..
உண்மைய சொன்னா வேலை செய்யறத விட வேலை செய்யாம இருக்குதான்னு ஆராய்றது தான் எங்க வேலையே.....!!!!!!
அய்யா இதுக்கு பதில் சொல்லுங்க,...

நான் ஒரு இடை நிலை நிர்வாகி...

வேலை எளிதென்றால் எனக்கு கீழே வேலை பார்ப்பவர் செய்து விடுவார்..
கொஞ்சம் கடினம் என்றால் பதவி உயர்வு சம்பள உயர்வு எதிர்பார்ப்பவர் செய்து விடுவார்..
சிக்கலான முடிவுகளை என்னுடைய நிர்வாகியின் பார்வைக்கு விட்டுவிடுவேன்,,,'

அப்புறம் நான் என்ன தான் செய்ய..

:rolleyes: :rolleyes: :rolleyes:

மதி
16-03-2006, 05:51 AM
அய்யா இதுக்கு பதில் சொல்லுங்க,...

நான் ஒரு இடை நிலை நிர்வாகி...

வேலை எளிதென்றால் எனக்கு கீழே வேலை பார்ப்பவர் செய்து விடுவார்..
கொஞ்சம் கடினம் என்றால் பதவி உயர்வு சம்பள உயர்வு எதிர்பார்ப்பவர் செய்து விடுவார்..
சிக்கலான முடிவுகளை என்னுடைய நிர்வாகியின் பார்வைக்கு விட்டுவிடுவேன்,,,'

அப்புறம் நான் என்ன தான் செய்ய..

:rolleyes: :rolleyes: :rolleyes:
இருக்கவே இருக்கு தமிழ்மன்றம்..
இளைப்பாற..

aren
16-03-2006, 10:42 AM
புதிர் அரசர் பிகேஜியை இன்னும் காணோமே?

தாமரை
16-03-2006, 10:55 AM
புதிர் அரசர் பிகேஜியை இன்னும் காணோமே?
அய்யா அய்யா! நாங்கள் சிறுபிள்ளைகள். குறும்புத்தனமாய் எதையாவது பேசி இருப்போம். அதையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாமல் வாருமைய்யா!!!

pgk53
16-03-2006, 02:29 PM
அன்பு நண்பர்களே-------அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.!!!
கொஞ்சம் வேலைப் பளு. அதனால் புதிரை தட்டச்சு செய்ய நேரம் கிடைக்கவில்லல.
இதோ புதிய புதிருடன் வந்துகொண்டே இருக்கின்றேன்.
தாமதத்துக்கு மன்னிக்கவும்.

பென்ஸ்
16-03-2006, 02:34 PM
PGK... பதிவு செய்து விட்டு என்னை தொலைபேசியிம்
வேண்டுமாணாலும் அழைத்து சொல்லிவிடுங்க....

இப்போ ஆரெனும் எனக்கு நேரம் தராமல் விடையை
சொல்லிவிடுகிறார்....

pgk53
16-03-2006, 05:20 PM
அன்பு நண்பர் பெஞ்சமின் அவர்களே-----தங்களை தொலைபேசியின் அழைத்தேன். நீங்கள் இல்லை என்று பதில் கொடுத்தார்கள். அவர்களிடம் விடையைக் கூறியுள்ளேன். தெரிந்துகொள்ளுங்கள்.

ஒரு சிறிய சந்தேகம். நான் அழைத்த தொலைபேசியில் பெஞ்சமின் இருக்கிறாரா என்றதும், இல்லை என்று கூறி அந்த எண் கோயம்புத்தூர் நகரில் உள்ள எண் என்றும் சொன்னார்கள்.

உங்கள் ஊர் எது என்று கேட்க மறந்துவிட்டேனே!!!!!!!!!

pgk53
16-03-2006, 05:21 PM
புதிர் எண் : 213

நாகர் கோவில் பகுதியில் சோதி காவல் துறை ஆய்வாளராகப் பணி புரிந்துகொண்டிருந்தார்.அப்போது அந்த சிறிய நகரத்தில் இருந்த ஒரு வங்கியில் கொள்ளை நடந்தது. கொள்ளையடித்ததுடன் வங்கியின் இரவுக் காவலாளியையும் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிவிட்டார்கள்.

கொள்ளையடித்தவர்கள் இரண்டுபேர்கள் என்று விசாரனையில் தெரியவந்தது.அவர்கள் பெயர் சோமன் ராமன் என்றும் தெரிந்தது. அதனால் காவல்துறை அந்தப் பகுதி முழுவதையும் கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்தி, அந்தப் பகுதியில் இருந்து அவர்கள் தப்பிச் செல்ல இயலாத அளவுக்கு காவலை கடுமையாக்கினார்கள்.
கொள்ளை நடந்து ஒரு வாரம் கழித்து சோதிக்கு ஒரு கடிதம் வந்தது. அனுப்பியவர் விலாசம் கடிதத்தில் எழுதப்படவில்லை.அந்தக் கடிதம் உள்ளூரில் இருந்தே முதல்நாள் போஸ்ட் செய்யப்பட்டிருந்தது.
கடிதத்தை பிரித்துப் படித்தார் சோதி. அதில்,

ஆய்வாளர் அவர்களே, நாங்கள்தான் வங்கியைக் கொள்ளை அடித்தவர்கள். என் பெயர் ராமன். எனது கூட்டாளி பெயர் சோமன்.இருவரும் கொள்ளையடித்துவிட்டு, ஓரிடத்தில் கடந்த ஒரு வாரம் மறைவாக இருந்தோம்.ஆனால் எங்கள் மனசாட்சி எங்களை வாட்டியது. ஒரு கொலையும் செய்துவிட்டோமே என்று மிகுந்த மனத் துன்பம் அடைந்தோம். அதனால் எங்களுக்கு உயிர் வாழப் பிடிக்கவில்லை. இந்தக் கடிதத்தை இப்போது பெய்துகொண்டிருக்கும் மழை நின்றதும் வெளியே வந்து போஸ்ட் செய்தபிறகு , ஊருக்கு கிழக்கே இருக்கும் களிமண் மேட்டுக்குச் சென்று, அங்கிருந்து கடலில் குதித்து தற்கொலை செய்துகொள்ளப் போகிறோம். கடற்கரையோரம் ஒதுங்கும் எங்கள் உடலை எடுத்து அடக்கம் செய்துவிடவும். என்று எழுதப்பட்டிருந்தது.

கடிதத்தைப் படித்த சோதி உடனே காவலர்கள் அழைத்துக்கொண்டு ஜீப்பில் ஏறி களிமண் மேட்டுப் பகுதிக்குச் சென்றார்..

களிமண் மேடு என்பது அந்தச் சாலையில் இருந்து ஏற்றமாகச் செல்லும் மேட்டுப் பகுதி. மேட்டின் உச்சிக்குச் சென்றுவிட்டால் அங்கிருந்து மிகுந்த ஆழத்தில் கடல். சீற்றம் மிகுந்த அலைகள் ஆர்ப்பரிக்கும் கடல்.அந்த மேட்டில் இருந்து குதித்து உயிர் பிழைப்பது இயலாத செயல். மேலும் அந்தக் கடல் பகுதியில் சுறா மீன்கள் அதிகமாக இருந்ததினால் உடல் முழுவதாகக் கிடைக்கவும் வாய்ப்பு குறைவுதான்.

சாலையில் ஜீப்பை நிறுத்திவிட்டு மேட்டை நோக்கி நடந்தார்கள்

களிமண் என்பதாலும் முந்தின நாள் மழை பெய்ததினாலும் கால் வைக்கும் இடம் எல்லாம் ஆழப் பதிந்தது. அப்போது சோதி சாலையில் இருந்து இரண்டு ஜோடி பூட்ஸ் தடங்கள் களிமண் மேட்டுப் பகுதியை நோக்கிச் செல்வதைக் கண்டார்.அந்தச் சுவடுகளையே பின்பற்றி அவரும் காவலர்களும் மேலே சென்றார்கள்.

ஏற்கனவே இருந்த பூட்ஸ் தடங்கள் அழிந்துபோகாமல் கவனமாக ஒதுங்கி மேலே சென்றார்கள்.

பூட்ஸ் சுவடுகள் மேட்டின் உச்சிப் பகுதிவரை சென்று அங்கேயே முடிந்து போனது. சுவடுகள் முடிந்த இடத்தில் இருந்து கீழே பார்த்தார் சோதி.ஆர்ப்பரிக்கும் கடல்தான் தெரிந்தது. தீவிர சிந்தனை செய்த சோதி, கடிதத்தில் குறிப்பிட்டிருந்தபடி கொள்ளையர்கள் இருவரும் மேட்டின் உச்சிக்கு வந்து அங்கிருந்து கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற முடிவுக்கு வந்தார்,

பிறகு வேறு வழியாக கடற்கரைக்கு வந்து அக்கம் பக்கத்தில் சடலங்கள் கிடைக்கிறதா என்று காவர்களை விட்டு தேடச் சொன்னார். சடலங்கள் கிடைக்கவில்லை. அதனால் சுறா மீன்கள் உடல்களை தின்றிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்து, காவல் நிலையத்துக்குத் திரும்பினார்கள்.

காவல் நிலையம் வந்த சோதி அந்த வழக்கை மூடிவிடுவதற்கான ஏற்பாட்டைச் செய்ய ஆரம்பித்தார். அப்போது சோதியின் நண்பரான வீர்சிங் அங்கே வந்தார். வீர்சிங்கைப் பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். பல வழக்குகளில் அதி அற்புதமாகத் துப்பறிந்து பெரும் புகழ் பெற்றவர்.தனிப்பட்ட முறையில் துப்பு துலக்கும் அமைப்பை நடத்துகிறார்.

சோதியைப் பார்த்து நலம் விசாரித்தவர், வங்கிக் கொள்ளைவழக்கில் ஏற்பட்ட திடீர்த் திருப்பத்தை அறிந்தார். தீவிர சிந்தனைக்குப் வழக்கை மூடவேண்டாம் என்றும், தனக்கு இருக்கும் சந்தேகம் தெளிவான பிறகு அதைச் செய்யலாம் என்றும் சோதியிடம் கூறினார் வீர்சிங்,
பிறகு சோதியை அழைத்துக்கொண்டு களிமண் மேட்டுக்குச் சென்றார்.
சோதி காட்டிய பூட்ஸ் தடங்களை ஆய்வு செய்தார்.பூட்ஸ் தடங்கள் ஒன்று பெரிய அளவிலும் மற்றது குறைவான அளவிலும் இருப்பதைக் கண்டார்.

அதற்கு சோதி அவர்கள் இருவரது கால்தடங்கள்தான் அது என்பதை உறுதி செய்தார். ராமனுக்கு பத்தம் நம்பர் பூட்ஸ் கால் அளவும், சோமனுக்கு எட்டாம் நம்பர் அளவும் இருப்பதாக காவல்துறையின் குற்றவாளிகள் குறிப்பேட்டில் இருப்பதாகக் கூறினார்.. அதனால் பெரிய தடம் ராமனுடையது. சிறிய தடம் சோமனுடையது என்றார்.
மேலும் நுணுக்கமாக ஆராய்த வீர்சிங், இரு தடங்களில், சிறிய பூட்ஸ்தடம், முன்பக்கமாக அதிக ஆழம் கொண்டதாகவும், சிறிய பூட்ஸ்தடம் பின்பக்கம் அதிக ஆழம் கொண்டதாகவும் இருப்பதைக் கண்டார். சிறிது நேர சிந்தனைக்குப் பின் புண்ணகை செய்தபடி சோதியைப் பார்த்தார்.

சோதி---- இந்த வழக்கில் சம்பத்தப் பட்ட குற்றவாளிகள் இறந்துவிட்டதாக உடனே மக்களுக்கு அறிவிப்பு வெளியிடுங்கள்.ஆனால் ரகசிய்மாக தேடுதலை தீவிரப் படுத்துங்கள். ராமனும் சோமனும் பிடிபடுவார்கள். ஏனென்றால் அவர்கள் சாகவில்லை . இன்னும் உயிருடன்தான் இருக்கிறார்கள் என்றார் வீர்சிங்.
திகைத்த சோதி---வீர்சிங் சொன்னது போலவே செய்தார். அறிவிப்பு வெளியான மறுநாளே ராமனும் சோமனும், அந்த நகரை விட்டு வெளியேறும் ஒரு பேருந்தில் தப்பிச் செல்ல முயற்சித்தபோது பிடிபட்டார்கள்.


திறமையாகத் துப்பறிந்த வீர்சிங்கை அனைவரும் பாராட்டினார்கள்.

நண்பர்களே----இப்போது நீங்கள் துப்பறியலாமே!!!!!

எதை வைத்து ராமனும் சோமனும் உயிருடன் இருப்பதாக வீர்சிங் உறுதியாகச் சொன்னார்.???????????????

சுபன்
16-03-2006, 06:11 PM
காரணம் பூட்சில் பின்பக்கம் உயரம் கூடியதாக இருக்கும். அது நிலத்தில் பதியும் போது அவ்விடத்தில் ஆழம் முன் பக்கத்தை விட அதிகமாக இருக்கும். ஆகவே யாரோ களிமண் மேட்டின் எல்லைவரை சென்று விட்டு திரும்பி வந்து இருக்கிறார்கள். இது சரியா???:confused: :confused:

பென்ஸ்
17-03-2006, 05:18 AM
விடையை கேட்டு தெரிந்து கொண்டேன் PGK.... நன்றி...

முதலில் கேள்வியில் சிறு தவறு

இரு தடங்களில், சிறிய பூட்ஸ்தடம், முன்பக்கமாக அதிக ஆழம் கொண்டதாகவும், சிறிய பூட்ஸ்தடம் பின்பக்கம் அதிக ஆழம் கொண்டதாகவும் இருப்பதைக் கண்டார்

இதில் பெரிய பூட்ஸ்தடம் முன் பக்கம் ஆழம் அதிகமானதாக இருப்பதாக வேண்டுமோ???

பதில்:
மண் உச்சிவரை தனியே நடந்து சென்ற ராமனும் சோமனும், சோமன் ராமனை சுமந்து கொண்டு ராமனின் கால் தடத்தில் நடந்து வந்திருக்க வேண்டும்.. அப்போது, சுபன் கூறியது போல் பெரிய பூட்ச் முன் பக்கத்தில் ஆழம் அதிகம் வர வாய்ப்பிருக்கிறது...:)

PGK, என்னுடைய ஊரில் தான் கொள்ளையும் கொலையும் நடக்கனுமா... ????:rolleyes: :rolleyes: :D :D :D

தாமரை
17-03-2006, 06:36 AM
[B]அதற்கு சோதி அவர்கள் இருவரது கால்தடங்கள்தான் அது என்பதை உறுதி செய்தார். ராமனுக்கு பத்தம் நம்பர் பூட்ஸ் கால் அளவும், சோமனுக்கு எட்டாம் நம்பர் அளவும் இருப்பதாக காவல்துறையின் குற்றவாளிகள் குறிப்பேட்டில் இருப்பதாகக் கூறினார்.. அதனால் பெரிய தடம் ராமனுடையது. சிறிய தடம் சோமனுடையது என்றார்.
மேலும் நுணுக்கமாக ஆராய்த வீர்சிங், இரு தடங்களில், சிறிய பூட்ஸ்தடம், முன்பக்கமாக அதிக ஆழம் கொண்டதாகவும், சிறிய பூட்ஸ்தடம் பின்பக்கம் அதிக ஆழம் கொண்டதாகவும் இருப்பதைக் கண்டார். சிறிது நேர சிந்தனைக்குப் பின் புண்ணகை செய்தபடி சோதியைப் பார்த்தார்.



எதை வைத்து ராமனும் சோமனும் உயிருடன் இருப்பதாக வீர்சிங் உறுதியாகச் சொன்னார்.???????????????
நம்ம சோமன் இருக்காரே அவர் தன்னுடைய ஷூவை போட்டுகிட்டு மேல போயிட்டு (அதனால தான் முன்பக்கம் ஆழம்.. ஏறும் போது விரல்களில் தான் அதிக அழுத்தம், முன்னால் சாய்ந்து ஏறுவதால்)அங்க ராமனின் ஷூவை மாட்டிகிட்டு பின்பக்கமாகவே இறங்கி வந்திருக்கார்.. (அதனால் பின் பக்கம் ஆழம்.. பின்பக்கமாக இறங்கும் போது குதிகாலில் தான் அதிக அழுத்தம் இருக்கும்)..

அதனால மேல போனது ஒரு ஆள்தான் இது ஏமாத்து வேலை..

அய்யா பெஞ்சு.. உண்மையைச் சொல்லுங்க.. டிரெக்கிங் அப்பட்டின்னு பொய் சொல்லிவிட்டு எங்க போறீர்.. அதுவும் காணாம வேற போயிடறீர்..
ட்ரெக்கிங்கிற்கும் உங்களுக்கும் ஒரு மண்ணும் சம்மந்தமில்லை போல தெரியுது.பெங்களூர் மக்களே கோழி அமுக்கா அமுக்குங்க...சரவணன் கோழி பிடிக்க தெரியுமில்லையா?
நன்றி பி.கே.ஜி... அண்ணா! உண்மையை வெளிக்கொண்டு விட்டீர்கள்..

gragavan
17-03-2006, 07:16 AM
நம்ம சோமன் இருக்காரே அவர் தன்னுடைய ஷூவை போட்டுகிட்டு மேல போயிட்டு (அதனால தான் முன்பக்கம் ஆழம்.. ஏறும் போது விரல்களில் தான் அதிக அழுத்தம், முன்னால் சாய்ந்து ஏறுவதால்)அங்க ராமனின் ஷூவை மாட்டிகிட்டு பின்பக்கமாகவே இறங்கி வந்திருக்கார்.. (அதனால் பின் பக்கம் ஆழம்.. இறங்கும் போது குதிகாலில் தான் அதிக அழுத்தம் இருக்கும்)..

அதனால மேல போனது ஒரு ஆள்தான் இது ஏமாத்து வேலை..

அய்யா பெஞ்சு.. உண்மையைச் சொல்லுங்க.. டிரெக்கிங் அப்பட்டின்னு பொய் சொல்லிவிட்டு எங்க போறீர்.. அதுவும் காணாம வேற போயிடறீர்..
ட்ரெக்கிங்கிற்கும் உங்களுக்கும் ஒரு மண்ணும் சம்மந்தமில்லை போல தெரியுது.பெங்களூர் மக்களே கோழி அமுக்கா அமுக்குங்க...சரவணன் கோழி பிடிக்க தெரியுமில்லையா?
நன்றி பி.கே.ஜி... அண்ணா! உண்மையை வெளிக்கொண்டு விட்டீர்கள்..அதானய்யா.......டிரெக்கிங் போறப்போ காணாமப் போனதாக் கூடச் சொன்னாரே....பெஞ்சு உண்மையச் சொல்லீரும். எந்தக் கோயில்? எத்தனை பவுன்?

gragavan
17-03-2006, 07:19 AM
PGK, என்னுடைய ஊரில் தான் கொள்ளையும் கொலையும் நடக்கனுமா... ????:rolleyes: :rolleyes: :D :D :D

பெஞ்சு ஒரு சங்கப்பாட்டு சொல்றேன். கேட்டுக்கோங்க..

நாடாகொன்றோ - நாடோ
காடாகொன்றோ - காடோ
அவலாகொன்றோ - மேடோ
மிசையாகொன்றோ - பள்ளமோ
எவ்வழி நல்வழி ஆடவர் - எங்க நல்ல மனுசன் இருக்கானோ
அவ்வழி நல்லை வாழிய நிலனே - அந்த எடந்தான் உண்மையிலேயே நிலம்

:D :D :D :D

பென்ஸ்
17-03-2006, 07:28 AM
எங்க ஊரில்தான் நடக்கனுமா.. தூத்துகுடின்னு போடகூடாதான்னு கேக்கனும்ன்னு நினைத்தேன் (கதைக்கு சரியா இருக்கும் இல்லையா...).... சரி வேனாம்ன்னு விட்டு விட்டேன்...

பென்ஸ்
17-03-2006, 07:32 AM
அய்யா பெஞ்சு.. உண்மையைச் சொல்லுங்க.. டிரெக்கிங் அப்பட்டின்னு பொய் சொல்லிவிட்டு எங்க போறீர்.. அதுவும் காணாம வேற போயிடறீர்..
..
அட பாவி மனுஷா....
கேக்குறத இப்படி உலகம் முழுசா கேக்குறமாதிரியா சத்தம் போட்டு கேக்குறது....
அடக்கி வாசியும் ஓய்...

gragavan
17-03-2006, 07:34 AM
எங்க ஊரில்தான் நடக்கனுமா.. தூத்துகுடின்னு போடகூடாதான்னு கேக்கனும்ன்னு நினைத்தேன் (கதைக்கு சரியா இருக்கும் இல்லையா...).... சரி வேனாம்ன்னு விட்டு விட்டேன்...அதெப்படி தூத்துடீல நடக்கும். அதுக்குதான் களிமண் வேணுமே...நாகர்கோயில்ல நெறைய இருக்காமே :D :D :D

தாமரை
17-03-2006, 07:47 AM
அதெப்படி தூத்துடீல நடக்கும். அதுக்குதான் களிமண் வேணுமே...நாகர்கோயில்ல நெறைய இருக்காமே :D :D :D
அதா அதைத்தான் பெங்களூருக்கு அனுப்பிட்டாங்களாமே

gragavan
17-03-2006, 08:26 AM
அதா அதைத்தான் பெங்களூருக்கு அனுப்பிட்டாங்களாமேஆமாமா நானும் பெங்களூரில் பாத்தேன்

தாமரை
17-03-2006, 10:09 AM
ஆமாமா நானும் பெங்களூரில் பாத்தேன்
அதனாலதானே கோரமங்களா 80 அடி ரோடை செப்பனிடப் போவதாக சொன்னார்கள்...

sarcharan
17-03-2006, 11:09 AM
எதுக்காக...?:confused: :confused:

அதனாலதானே கோரமங்களா 80 அடி ரோடை செப்பனிடப் போவதாக சொன்னார்கள்...

பென்ஸ்
17-03-2006, 02:07 PM
அதெப்படி தூத்துடீல நடக்கும். அதுக்குதான் களிமண் வேணுமே...நாகர்கோயில்ல நெறைய இருக்காமே :D :D :D
ஆமா... நாகர்கோவிலில் களிமண்ணவது இருக்கு.. தூத்துகுடியில் ஒரு மண்ணும் இல்லையா அதனால நடக்க வாய்ப்பில்லை...:rolleyes: :rolleyes: :D :D

தாமரை
17-03-2006, 02:10 PM
ஆமா... நாகர்கோவிலில் களிமண்ணவது இருக்கு.. தூத்துகுடியில் ஒரு மண்ணும் இல்லையா அதனால நடக்க வாய்ப்பில்லை...:rolleyes: :rolleyes: :D :D
அங்க உப்பு இருக்கு..
கேட்க நட்பு இருக்கு..
எடுத்துச் சொல்ல துப்பு இருக்கு
இதிலென்ன தப்பு இருக்கு?

சுபன்
17-03-2006, 03:01 PM
அங்க உப்பு இருக்கு..
கேட்க நட்பு இருக்கு..
எடுத்துச் சொல்ல துப்பு இருக்கு
இதிலென்ன தப்பு இருக்கு?
நீங்க விஜய டி.ராஜேந்தரின் படங்களை அடிக்கடி பார்ப்பீர்களா??:D :D

sarcharan
20-03-2006, 12:38 PM
வேணாம் சுபன்,
வம்ப விலை குடுத்து வாங்காதீங்க.. சொல்லீட்டேன். ஏதாவது சொல்லுவதற்க்கு முன்னாடி பென்ஸ ஒரு வார்த்தை கேட்டுக்கோங்க... ;) ;) ;)

நீங்க விஜய டி.ராஜேந்தரின் படங்களை அடிக்கடி பார்ப்பீர்களா??:D :D

pgk53
21-03-2006, 01:59 PM
[quote=stselvan]நம்ம சோமன் இருக்காரே அவர் தன்னுடைய ஷூவை போட்டுகிட்டு மேல போயிட்டு (அதனால தான் முன்பக்கம் ஆழம்.. ஏறும் போது விரல்களில் தான் அதிக அழுத்தம், முன்னால் சாய்ந்து ஏறுவதால்)அங்க ராமனின் ஷூவை மாட்டிகிட்டு பின்பக்கமாகவே இறங்கி வந்திருக்கார்.. (அதனால் பின் பக்கம் ஆழம்.. பின்பக்கமாக இறங்கும் போது குதிகாலில் தான் அதிக அழுத்தம் இருக்கும்)..

அதனால மேல போனது ஒரு ஆள்தான் இது ஏமாத்து வேலை..
------------------------------------

நண்பர் செல்வன் அவர்களே தூள் கிளப்பிவிட்டீர்கள்.
மிகச் சரியான விடையை அளித்தமைக்கு தாமதமாக வந்து நன்றி கூறுகிறேன்.மறுபடியும் வேலைப்பளுதான் காரணம்.

விரைவில் அடுத்த புதிருடன் வந்து உங்களைச் சந்திக்கிறேன்.

பென்ஸ்
21-03-2006, 02:02 PM
ஆஆ... PGK, இந்த முறையும் தவறான பதிலை சொல்லிடேனா....
சரி... அடுத்த புதிரில் பாக்கலாம்...

தாமரை
21-03-2006, 02:51 PM
நம்ம சோமன் இருக்காரே அவர் தன்னுடைய ஷூவை போட்டுகிட்டு மேல போயிட்டு (அதனால தான் முன்பக்கம் ஆழம்.. ஏறும் போது விரல்களில் தான் அதிக அழுத்தம், முன்னால் சாய்ந்து ஏறுவதால்)அங்க ராமனின் ஷூவை மாட்டிகிட்டு பின்பக்கமாகவே இறங்கி வந்திருக்கார்.. (அதனால் பின் பக்கம் ஆழம்.. பின்பக்கமாக இறங்கும் போது குதிகாலில் தான் அதிக அழுத்தம் இருக்கும்)..

அதனால மேல போனது ஒரு ஆள்தான் இது ஏமாத்து வேலை..
------------------------------------

நண்பர் செல்வன் அவர்களே தூள் கிளப்பிவிட்டீர்கள்.
மிகச் சரியான விடையை அளித்தமைக்கு தாமதமாக வந்து நன்றி கூறுகிறேன்.மறுபடியும் வேலைப்பளுதான் காரணம்.

விரைவில் அடுத்த புதிருடன் வந்து உங்களைச் சந்திக்கிறேன்.

பளுவான வேலை என்பதால் சுளுவான புதிரை கொடுத்து விடாதீர்கள்..
அப்புறம் நான் அதை பார்ப்பத்ற்குள்ளே நண்பர்கள் அவிழ்த்து விட்டால்
சுவாரஸ்யம் போய்விடும். இரண்டு நாட்களாவது மண்டையை பிய்த்துக் கொள்ள வேண்டாமா?

sarcharan
22-03-2006, 04:47 AM
இது மிகச் சுலபமான புதிர் தான்.:)
எப்பொழுதுமே ஏதாவது ஒரு பொருளை ஒருவருக்கு கொடுக்கும்போது கொடுப்பவர் கை மேலேயும் வாங்குபவர் கை கீழேயும் இருக்கும்.

ஆனால் கொடுப்பவர் கை கீழேயும் வாங்குபவர் கை மேலேயும் எப்போது இருக்கும்?

தாமரை
22-03-2006, 04:52 AM
இது மிகச் சுலபமான புதிர் தான்.:)
எப்பொழுதுமே ஏதாவது ஒரு பொருளை ஒருவருக்கு கொடுக்கும்போது கொடுப்பவர் கை மேலேயும் வாங்குபவர் கை கீழேயும் இருக்கும்.

ஆனால் கொடுப்பவர் கை கீழேயும் வாங்குபவர் கை மேலேயும் எப்போது இருக்கும்?
அடி கொடுக்கும் போதுதான்.. (பென்ஸை கேளுங்க.. டக் குன்னு சொல்லுவார்)

pgk53
22-03-2006, 02:02 PM
இது மிகச் சுலபமான புதிர் தான்.:)
எப்பொழுதுமே ஏதாவது ஒரு பொருளை ஒருவருக்கு கொடுக்கும்போது கொடுப்பவர் கை மேலேயும் வாங்குபவர் கை கீழேயும் இருக்கும்.

ஆனால் கொடுப்பவர் கை கீழேயும் வாங்குபவர் கை மேலேயும் எப்போது இருக்கும்?

சர்ச்சரன் அவர்களே பொடி வைத்து இந்தப் புதிரைப் போட்டிருக்கின்றீர்கள்.

பார்க்கலாம் யார் பதில் கூறுகிறார்கள் என்று.!!!!!!!!!

தாமரை
22-03-2006, 02:18 PM
சர்ச்சரன் அவர்களே பொடி வைத்து இந்தப் புதிரைப் போட்டிருக்கின்றீர்கள்.

பார்க்கலாம் யார் பதில் கூறுகிறார்கள் என்று.!!!!!!!!!
ஒரு தாம்பாளத்தில் வைத்துக் கொடுத்தால் கொடுப்பவர் கைகள் கீழே இருக்கும் பெறுபவர் கைகள் மேலே இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் அங்கே இருக்கும் உறவு கொடுப்பது பெறுவது அல்ல... கொடுப்பது... எடுப்பது..

ஏனென்றால் கைதாழ்ந்தால் கொடுப்பதை எல்லாம் பெறுவர். ஆனால் கை உயர்ந்தால் தேவையானதை மற்றுமே எடுப்பர்...

:D :D :D

Mathu
22-03-2006, 03:59 PM
ஹிம்ம்... pgk அண்ணா தெரிந்தும் விடை சொல்லாமல் பார்த்து கொண்டிருக்கிறார்,
சரவணனும் விடை சொல்பவர்களின் திசையை திருப்பி இருக்கிறார் என்று நினைத்து சொல்கிறேன் பார்க்கலாம்.

வாங்குபவர் உயரமான இடத்திலும் கொடுப்பவர் அவருக்கு கீழேயும்
இருக்கும்போது வாங்குபவர் கை மேலேயும் கொடுப்பவர் கை கீழேயும்
இருக்க வாய்ப்பு இருக்கு.

Ex:- பரணின் மேல் ஒரு பொருளை வைக்க ஏணி மேலே ஏறி நிக்கிறோம்,
கீழே நின்று ஒருவர் அதை தூக்கி எங்களிடம் கொடுக்கிறார். இப்போ
வாங்குபவர் கை மேலே தானே இருக்கும்.

;) :D ;) :p ;)

aren
22-03-2006, 06:38 PM
இது மிகச் சுலபமான புதிர் தான்.:)
எப்பொழுதுமே ஏதாவது ஒரு பொருளை ஒருவருக்கு கொடுக்கும்போது கொடுப்பவர் கை மேலேயும் வாங்குபவர் கை கீழேயும் இருக்கும்.

ஆனால் கொடுப்பவர் கை கீழேயும் வாங்குபவர் கை மேலேயும் எப்போது இருக்கும்?

பொருள் எதற்காக மற்றும் எவருக்கு கொடுக்கப்படுகிறது என்பதைப் பொருத்து கொடுப்பவர் கை கீழேயும், எடுப்பவர் கை மேலேயும் இருக்கும்.

எந்த ஒரு பொருளையும் தட்டில் வைத்து கொடுக்கும்பொழுது குறிப்பாக தட்சனை எடுப்பவர் கை மேலோங்குகிறது.

இன்னொன்று லஞ்சம்.

இதனால், எடுப்பவர் கொடுப்பவரைவிட பலசாலியாக அல்லது பெரியவராக இருக்கும்பட்சத்தில் எடுப்பவர் கை மேலே இருக்கும் என்பது என்னுடைய கருத்து.

தீபன்
23-03-2006, 04:58 PM
கோவில்களிலோ அல்லது பூயை அறைகளிலோ கற்பூரமேத்தி கற்பூரத்தட்டை கொடுக்கும்போது கொடுப்பவர் கை கீழாகவும் வணங்கிவிட்டு விபூதி சந்தணம் எடுப்பவர் கை மேலாகவும்தான் இருக்கும். சரியா...

pgk53
26-03-2006, 12:41 AM
என்ன செல்வன் அவர்களே---விடைகளைப் பற்றி தங்கள் கருத்து எதுவுமே கூறவில்லையே----நான் முதலிலேயே
-------பொடிவைத்து----- என்று விடையை சூசகமாகக் கூறியிருந்தேன்.

இனி நீங்கள்தான் கூறவேண்டும்.

சரி நானும் ஒரு புதிரைப் போட்டு வைக்கிறேன்.
மக்கள் இரண்டுக்கும் சேர்த்தே விடை கூறட்டும்.

pgk53
26-03-2006, 12:44 AM
புதிர் எண் : 214

சோழநாட்டை முன்னொரு காலத்தில் சோழன் ரவிவர்மன் ஆண்டுவந்தான்.
அவனது மந்திரி சபையில் புத்திகூர்மையும், திறமையும் மிக்க அமைச்சர் யாரும் இருக்கவில்லை. அதனால் மிகவும் கவலையடைந்த அரசன், தனது நாட்டில் புத்திகூர்மை மிக்க ஒருவனைத் தேர்வு செய்து அவனை அமைச்சராக்க முடிவு செய்தான்.

அதனால் நாடெங்கும் பரவலாகத் தேடி, புத்தி கூர்மை மிக்க 50 பேரைத் தேர்வு செய்தான்.
அவர்கள் அனைவரிடமும் ஆளுக்கு ஒரு ஆட்டுக்குட்டியைக் கொடுத்தான்.
அந்த ஆட்டுக்குட்டியின் உடலின்மேல், ராஜமுத்திரையை பதித்தார்கள்.
ஒவ்வொருவருடைய ஆட்டுக்குட்டியின் அப்போதைய எடையையும் நிறுத்துக் குறித்துக்கொண்டார்கள்..

அத்துடன் அந்த ஆட்டை ஒரு மாத காலத்துக்குப் பராமரிக்க ஆகும் செலவையும் அவர்களுக்குக் கொடுத்தான்.

பிறகு அனைவரையும் பார்த்து, அன்பர்களே, நீங்கள் அனைவரும் இந்த ஆட்டுக்குட்டிகளை உங்கள் வீட்டுக்குக் கொண்டு போங்கள்.நல்ல புஷ்டியான ஆகாரம் கொடுப்பதற்கான பணமும் உங்களுக்குக் கொடுத்துள்ளேன்.அதனால் என்னை ஏமாற்ற எண்ணாமல் கொடுத்த பணத்துக்கு நல்ல உணவை இந்த ஆடுகளுக்கு நாள்தோரும் கொடுக்கவேண்டும்.

ஒரு மாதம் கழிந்ததும், ஆட்டுக்குட்டியை திரும்பவும் அரசபைக்குக் கொண்டு வரவேண்டும்.அப்போது ஆட்டுக்குட்டியின் எடை மறுபடியும் நிறுத்துப் பார்க்கப்படும். நான் கொடுத்து அனுப்பும்போது இருந்த எடையைவிட ஒரு குன்றிமணி எடைகூட அதிகமாக இருக்கக்கூடாது.இருப்பதைவிட எடை குறைவதைப்பற்றிக் கவலையில்லை.
யார் இதை சரியாகச் செய்கிறார்கள் பார்க்கலாம் என்றான் அரசன்.

இதைக்கேட்ட அனைவரும் திகைத்தார்கள்.
அரசன் சொல்லும் உணவை ஆட்டுக்குட்டிக்கு ஒரு மாத காலம் அளித்துவந்தால் நிச்சயம் அதன் எடை கணிசமாக அதிகமாகிவிடும்.ஆட்டின் எடை குறைய வாய்ப்பே இல்லை என்று பலவாறு நினைத்தபடியே, ஆட்டை ஓட்டிச் சென்றார்கள்.

அரசன் போட்ட நிபந்தனையின்படி உணவை அளித்து, பிறகு ஆட்டை பல இடங்களுக்கும் ஓடவிட்டு அதைத் துரத்தினார்கள் பலர். ஆட்டின் எடை குறைவதற்குப் பதிலாக அவர்களின் எடைதான் குறைந்தது.

சிலர் ஆட்டின் எடை குறைய சில மருந்துகளைக் கொடுத்தார்கள்.
மருந்துண்ட ஆடு மறுநாள் உணவே உண்ணாததினால் போட்டியில் இருந்து விலகிக்கொண்டார்கள்.

ஆனால் ஒருவர் மட்டும் ஒருமாத காலம் கழிந்ததும் ஆட்டைக்கொண்டு வந்தார்.
அதன் எடையை அரசன் நிறுத்துப் பார்க்கச் சொன்னான். கொடுக்கும்போது இருந்த எடையைவிட அப்போது எடை குறைவாக இருந்தது.

அதைக்கண்ட அரசன் ஆச்சர்யமடைந்தான்.
அவரிடம் எப்படி உணவுகளை அளித்தார். எதனால் எடை குறைந்துபோனது என்று ஆர்வமுடன் கேட்டான் அரசன்.

அதற்கு அவர், அரசே!!!! தாங்கள் குறிப்பிட்டபடி எந்தக் குறைவில்லாமல் உணவை அளித்தேன் என்றவர் மேற்கொண்டு தான் கையாண்ட வழியைக் கூறினார்.

அவரது பதிலைக் கேட்டு மகிழ்வடைந்த அரசன் அவரை, தனது அமைச்சராக நியமித்துச் சிறப்பித்தான்.

நண்பர்களே---------------இப்போது நீங்கள் கூறுங்கள். அவர் எந்த வழியைக் கையாண்டிருப்பார்??????????????????????????????????????????????

பரஞ்சோதி
26-03-2006, 03:42 PM
அவர் மலை உச்சிக்கு அழைத்து சென்று தினமும் உணவு கொடுப்பார், உணவு தின்று முடித்தப் பின்னர் கிழே அழைத்து வருவார், ஆக உண்ட உணவு,. உடலில் ஒட்டியிருக்காது, எடை கூடியிருக்காது.

பென்ஸ்
27-03-2006, 02:29 AM
நல்ல புஷ்டியான உணவு என்றால் அது சாப்பிடும் உணவாக இருக்க
வேண்டிய அவசியம் இல்லை, மேலும் ஆடு அதை சாப்பிட வேண்டும்
என்ற அவசியம் இல்லை, கொடுக்க வேண்டும் அவ்வளவுதான்.

ஆடு அனைத்துண்ணியாக இருக்கலாம், ஆனால் அது ஆட்டிரச்சி
சாப்பிடுமா???? ஒரு வேளை அவர் அதையே கொடுத்து இருக்கலாம்.
சில நேரங்களில் மட்டும் அது உயிர் வாழ புல் கொடுத்து இருக்கலாம்.

sarcharan
27-03-2006, 10:10 AM
பி.ஜி.கே அவர்கள் சரியாக பொடி வைத்து கூறியுள்ளார்....
அதோடு ஒரு புலன சேத்தா விடை தயாருங்கோ...;) ;)

என்ன செல்வன் அவர்களே---விடைகளைப் பற்றி தங்கள் கருத்து எதுவுமே கூறவில்லையே----நான் முதலிலேயே
-------பொடிவைத்து----- என்று விடையை சூசகமாகக் கூறியிருந்தேன்.

இனி நீங்கள்தான் கூறவேண்டும்.

சரி நானும் ஒரு புதிரைப் போட்டு வைக்கிறேன்.
மக்கள் இரண்டுக்கும் சேர்த்தே விடை கூறட்டும்.

பரஞ்சோதி
28-03-2006, 04:30 AM
அரசர் : ஆட்டை கொண்டு போனவங்களை எங்கேப்பா?

வேலையாள்: அரசே! தமிழ்செல்வனும், இராகவனும் ஆட்டை போட்டுத் தள்ளி பிரியாணி ஆக்கிட்டாங்க.

அரசர் : மத்தவங்களை எங்கேப்பா?

வேலையாள்: அவங்க அந்த விருந்தை சாப்பிட்டு, ஆஸ்பத்திரியில் படுத்திருக்காங்க....

gragavan
28-03-2006, 04:45 AM
பிரியாணியா...ஆகா...நல்லாத்தான் இருக்கும். ஆனா ஆட்டைத் திரும்பிக் கொடுக்கனுமாமே.......ம்ம்ம்ம்ம்ம்....இருங்க மண்டையைக் கொடையறேன்...ஏதாவது தேறுதான்னு பாப்போம்.

ம்ம்ம்....ஆட்டின் தலையில் ஒரு கம்பைக் கட்டி...அதில் புல்லுக்கட்டையோ உணவையோ தொங்க விட வேண்டும். ஆனால் அதைத் திங்க ஆடு நகரும் போது உணவும் நகரும். அதனால் ஆடு ரொம்பவும் நடக்க வேண்டும். இப்படி நடந்து நடந்து எடை குறைந்திருக்கும்.

mythili
28-03-2006, 05:14 AM
புஷ்டியான சாப்பாடு தான் கொடுத்து இருப்பார். ஆனால் ஆடு அதை சாப்பிட்டு இருக்காது.
அதான் இடை குறைந்தது.

(நானே தான் ரொம்ப நாளைக்கு அப்பறம்)
அன்புடன்,
மைத்து

pradeepkt
28-03-2006, 07:26 AM
புஷ்டியான சாப்பாடு தான் கொடுத்து இருப்பார். ஆனால் ஆடு அதை சாப்பிட்டு இருக்காது.
அதான் இடை குறைந்தது.

(நானே தான் ரொம்ப நாளைக்கு அப்பறம்)
அன்புடன்,
மைத்து
ஏன் ஆடு அதைச் சாப்பிடலை... ஏன்னா அதை மைத்து சாப்பிட்டாச்சு...
ஆமா நிஜமாவே நீங்கதானா...

பரஞ்சோதி
28-03-2006, 11:25 AM
புஷ்டியான சாப்பாடு தான் கொடுத்து இருப்பார். ஆனால் ஆடு அதை சாப்பிட்டு இருக்காது.
அதான் இடை குறைந்தது.

(நானே தான் ரொம்ப நாளைக்கு அப்பறம்)
அன்புடன்,
மைத்து

என்ன சகோதரி நலம் தானா?

என்ன ரொம்ப எளச்சி போய் வந்திருக்கீங்க, புஷ்டியான சாப்பாடு அம்மா கொடுப்பதில்லையா?

தாமரை
29-03-2006, 04:16 AM
ஆட்டுகுட்டிக்கு எதிரிலே ஒரு புலியை சுத்த வுட்டு பயமுறுத்தி இருப்பார்..
பயத்தில ஆட்டுகுட்டி சதை போடவே இல்லை.



நம்ம பென்ஸூ இளைத்த ரகசியம்.. அதேதான்...

பி.ஜி.கே எனக்கொரு சந்தேகம்.. அப்போ குண்டா இருக்கிற ஆண்கள் மனைவிக்கு பயந்தவங்களா இல்லையா??? :confused: :confused: :confused:

இளந்தமிழ்ச்செல்வன்
29-03-2006, 08:22 AM
புஷ்டியான சாப்பாடு தான் கொடுத்து இருப்பார். ஆனால் ஆடு அதை சாப்பிட்டு இருக்காது.
அதான் இடை குறைந்தது.

(நானே தான் ரொம்ப நாளைக்கு அப்பறம்)
அன்புடன்,
மைத்து

உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி மைதிலி. என்ன பிரதிப் சொன்னது சரிதானா?

sarcharan
29-03-2006, 09:10 AM
ஆட்டுகுட்டிக்கு எதிலே ஒரு புலியை சுத்த வுட்டு பயமுறுத்தி இருப்பார்..
பயத்தில ஆட்டுகுட்டி சதை போடவே இல்லை.

நம்ம பென்ஸூ இளைத்த ரகசியம்.. அதேதான்...
அப்போ பென்ஸூ இளைத்தது ட்ரெக்கிங் போனதுனால இல்லயா...?
;) ;)

sarcharan
29-03-2006, 09:29 AM
ஒருவேளை தெனாலிராமன் மாதிரி சூடா ஏதாவது கொடுத்துட்டு ஆடு எதையுமே சாப்பிடமாட்டேன்குது என்றாரோ.....?:confused: :confused:

தாமரை
29-03-2006, 09:36 AM
அப்போ பென்ஸூ இளைத்தது ட்ரெக்கிங் போனதுனால இல்லயா...?
;) ;)
ட்ரெக்கிங்கா? அப்டீன்னா? --- பென்ஸூ

mythili
29-03-2006, 10:00 AM
ஏன் ஆடு அதைச் சாப்பிடலை... ஏன்னா அதை மைத்து சாப்பிட்டாச்சு...
ஆமா நிஜமாவே நீங்கதானா...

ஆமா ஆமா நானேதான் :)

அன்புடன்,
மைத்து

mythili
29-03-2006, 10:02 AM
என்ன சகோதரி நலம் தானா?

என்ன ரொம்ப எளச்சி போய் வந்திருக்கீங்க, புஷ்டியான சாப்பாடு அம்மா கொடுப்பதில்லையா?

நலம் அண்ணா :)
அண்ணி மற்றும் சக்தி மருமகள் எப்படி இருக்காங்க?
ரொம்ப விசாரிச்சதா சொல்லுங்க :)

நிஜமாகவே இளைத்து விட்டேன் :p :p :p
அன்புடன்,
மைத்து

mythili
29-03-2006, 10:05 AM
உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி மைதிலி. என்ன பிரதிப் சொன்னது சரிதானா?

எனக்கும் தான் :)

என்ன நீங்களும் வந்த உடனே என்னை வாரறீங்களா:eek: :eek:

அன்புடன்,
மைத்து

தாமரை
29-03-2006, 10:13 AM
அரசர் : ஆட்டை கொண்டு போனவங்களை எங்கேப்பா?

வேலையாள்: அரசே! தமிழ்செல்வனும், இராகவனும் ஆட்டை போட்டுத் தள்ளி பிரியாணி ஆக்கிட்டாங்க.

அரசர் : மத்தவங்களை எங்கேப்பா?

வேலையாள்: அவங்க அந்த விருந்தை சாப்பிட்டு, ஆஸ்பத்திரியில் படுத்திருக்காங்க....
இது யாருங்க அண்ணே!!:D :D

தாமரை
29-03-2006, 11:11 AM
பி.ஜி.கே அவர்கள் சரியாக பொடி வைத்து கூறியுள்ளார்....
அதோடு ஒரு புலன சேத்தா விடை தயாருங்கோ...;) ;)
மூக்குப் பொடியா?

மூக்கு கேட்டதா? நீங்க திணிக்கறங்க.. பாவம் அது சொரணை கெட்டு போயிருது...

sarcharan
29-03-2006, 12:58 PM
மூக்கு பொடியேதான்
சரியான விடை செல்வரே....

மூக்குப் பொடியா?

மூக்கு கேட்டதா? நீங்க திணிக்கறங்க.. பாவம் அது சொரணை கெட்டு போயிருது...

pgk53
30-03-2006, 12:39 AM
ஆட்டுகுட்டிக்கு எதிரிலே ஒரு புலியை சுத்த வுட்டு பயமுறுத்தி இருப்பார்..
பயத்தில ஆட்டுகுட்டி சதை போடவே இல்லை.



நம்ம பென்ஸூ இளைத்த ரகசியம்.. அதேதான்...

பி.ஜி.கே எனக்கொரு சந்தேகம்.. அப்போ குண்டா இருக்கிற ஆண்கள் மனைவிக்கு பயந்தவங்களா இல்லையா??? :confused: :confused: :confused:

அன்பு நண்பர் செல்வன் அவர்களே-----மிகச் சரியான விடைதான் நீங்கள் கூறியுள்ளது. அதில் இன்னும் ஒரு விளக்கம் நான் கூறுகிறேன்.
அந்த புத்திசாலி அரசனின் நிபந்தனையில் இருந்து கொஞ்சமும் மாறறமல், நல்ல உணவை ஆட்டுக்கு தினமும் அளித்தார். அதில் எந்தக் குறையும் வைக்கவில்லை. ஆனால் ஆட்டுக் குட்டியைக் கட்டிபோட்டிருந்த இடம்தான் அவரது புத்திசாலித்தனம்.

ஒரு புலியைக் கொண்டுவந்து கூண்டில் அடைத்து, அந்தக் கூண்டின் முன்னால் ஆட்டைக் கட்டிப் போட்டார். புலியைப் பார்த்து மிரண்ட ஆடு, எவ்வளவுதான் நல்ல ஆகாரம் உண்டாலும் அந்த ஆகாரம் அதன் உடலில் ஒட்டவில்லை.
சரியான விடை கூறிய செல்வனுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

விரைவில் அடுத்த புதிர்.

gragavan
30-03-2006, 03:41 AM
வாழ்த்துகள் தாமரை.........அப்படியே எனக்கு முன்னாடி எத வெச்சுக்கிட்டு சாப்பிடனும்னும் சொல்லீட்டீங்கன்னா வசதியாப் போகும்........

தாமரை
31-03-2006, 04:31 AM
வாழ்த்துகள் தாமரை.........அப்படியே எனக்கு முன்னாடி எத வெச்சுக்கிட்டு சாப்பிடனும்னும் சொல்லீட்டீங்கன்னா வசதியாப் போகும்........
நீங்க குண்டாகனுமா? இளைக்கணுமா?:confused: :confused: :confused:

பென்ஸ்
31-03-2006, 04:41 AM
ராகவன்... நீங்க செல்வனை முன்னால் வைத்து கொன்டு இரண்டு நாள் சாப்பிட்டாலே போதும் ... மதி மாதிரி ஆயிடுவிங்க...

pgk53
31-03-2006, 02:25 PM
புதிர் எண் : 215

முன்னொரு காலத்தில் ஒரு ஊரில் அடுத்தடுத்த வீடுகளில் இரண்டுபேர் வாழ்ந்துவந்தார்கள். இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள்.

திடீரென்று அவர்களில் ஒருவர் கடும் நோய்வாய்ப்பட்டார்.மருத்துவரும் அவரைக் காப்பாற்ற இயலாது என்று கையை விரித்துவிட்டார்.

விரைவில் தான் இறந்துவிடப்போவதை உணர்ந்த அவர் தனது நண்பரை அழைத்தார். அவரிடம், நண்பரே, என் ஒரே மகன் சிறு பிள்ளையாக இருக்கின்றான்.அவனை நினைத்தால்தான் எனக்குக் கவலையாக இருக்கிறது. என்றார்.
நான் எதற்கு இருக்கின்றேன். நீ கவலையே அடையவேண்டாம். நான் அவனை நல்லபடியாகப் பார்த்துக்கொள்கிறேன் என்றார் நண்பர்.

அவரது பேச்சினால் உள்ளம் தேறியவர், தான் அதுவரை சேமித்து வைத்திருந்த ஆயிரம் பொற்காசுகளை நண்பரிடம் கொடுத்தார். நண்பரே, என் மகன் பெரியவன் ஆனதும், இந்தம் ஆயிரம் பொற்காசுகளில் இருந்து உமக்கு விருப்பமானதை அவனுக்குக் கொடுங்கள். என்று கூறிவிட்டு அமரர் ஆனார்.

ஆண்டுகள் ஓடின.சிறுவனும் வளர்ந்து இளைஞன் ஆனான்.வாலிப வயதை எட்டியபிறகு அவன் ஏதாவது வியாபாரம் செய்து முன்னேறலாம் என்ற எண்ணத்துடன், தனது தந்தையின் நண்பரிடம் சென்று, தன் தந்தை அவரிடம் கொடுத்து வைத்திருந்த ஆயிரம் பொற்காசுகளைத் தருமாறு வேண்டினான்.
தந்தையின் நண்பருக்கோ அப்போது பேராசை பூதம் பிடித்திருந்ததினால், ஒன்றும் பதில் கூறாமல் உள்ளே சென்று பத்து பொற்காசுகளை மட்டும் கொண்டுவந்து அவனிடம் கொடுத்தார்.

அதனால் திடுக்கிட்ட மகன், அய்யா!!!! என் தந்தை தங்களிடம் ஆயிரம் பொற்காசுகளையல்லவா கொடுத்து வைத்திருந்தார். இப்போது தாங்கள் பத்து பொற்காசுமட்டும் தருகிறீர்களே? என்று கேட்டான்.
அதற்கு அவர், இதோ பார் தம்பி----உன் தந்தை என்னிடம் பொற்காசுகளைக் கொடுக்கும்போது, என்ன கூறினார் தெரியுமா?. என் மகன் வளர்ந்து பெரியவன் ஆனதும், இந்த ஆயிரம் பொற்காசுகளில் இருந்து உமக்கு விருப்பமானதைக் கொடு என்றுதான் கூறினார். இப்போது நான் பத்து பொற்காசுகளைக் கொடுக்கவே விரும்புகிறேன். அதனால் பிரச்சினை செய்யாமல் இதை வாங்கிக்கொண்டு இடத்தைக் காலி செய் என்றார்.
வேறு வழியில்லாத வாலிபன் நீதிமன்றம் சென்று வழக்குத் தொடுத்தான்.
வழக்கு விசாரனைக்கு வந்தது.
நடந்த விஷயங்கள் அனைத்தையும் கேட்டறிந்த நீதிபதி, வாலிபனேஉன் தந்தையின் நண்பர் , அவனது தந்தை மரணத் தருவாயில் கூறியபடிதான் நடந்துகொள்கிறார். ஆனால் அதிலே ஒரு சிறிய குழப்பம் உள்ளது என்றவர், நண்பரை அழைத்து மீண்டும் ஒரே ஒரு கேள்வியைக் கேட்டார்.
பிறகு தீர்ப்பை வழங்கினார்.

தீர்ப்பில், தந்தையின் நண்பர் 990 பொற்காசுகளை வழங்கிவிட்டு, 10 பொற்காசுகளை மட்டும் தான் வைத்துக்கொள்ளலாம் என்றிருந்தது.
நீதிமன்றத்தில் இருந்த அனைவரும், நீதிபதியுடைய தீர்ப்பை முதலில் புரிந்துகொள்ள இயலாவிட்டாலும், பிறகு புரிந்துகொண்டு, நீதிபதியுடைய மதி நுட்பத்தைப் பாராட்டினார்கள்.

பேராசைப்பட்ட நண்பர், தன் தவறை உணர்ந்து வெட்கி, வாலிபனுக்கு முழுப் பணத்தையுமே கொடுத்துவ்ட்டார்.

நண்பர்களே இப்போது உங்களுக்கான கேள்வி??????
நீதிபதி எந்த ஆதாரத்தை வைத்துக்கொண்டு 990 பொற்காசுகளை வாலிபனுக்கு வழங்கவேண்டும் என்று தீர்ப்பளித்திருப்பார்??????
கூறுங்களேன்!!!!!!!

மதி
31-03-2006, 03:53 PM
ராகவன்... நீங்க செல்வனை முன்னால் வைத்து கொன்டு இரண்டு நாள் சாப்பிட்டாலே போதும் ... மதி மாதிரி ஆயிடுவிங்க...
ஏனுங்க..இதுல என்னைய இழுக்கறீங்க..???:angry: :angry:

மதி
31-03-2006, 03:57 PM
ஆயிரம் பொற்காசுகளை நண்பரிடம் கொடுத்தார். நண்பரே, என் மகன் பெரியவன் ஆனதும், இந்தம் ஆயிரம் பொற்காசுகளில் இருந்து உமக்கு விருப்பமானதை அவனுக்குக் கொடுங்கள். என்று கூறிவிட்டு அமரர் ஆனார்
நண்பர் விரும்பியதோ 990 பொற்காசுகள்..
மீத்மிருந்த 10 பொற்காசுகளைத் தான் தன் நண்பர் மகனுக்கு கொடுக்க விழைந்தார்..
அதனால்..
நீதிபதியின் தீர்ப்பு சரியே..!!

aren
01-04-2006, 07:19 AM
நண்பரே, என் மகன் பெரியவன் ஆனதும், இந்தம் ஆயிரம் பொற்காசுகளில் இருந்து உமக்கு விருப்பமானதை அவனுக்குக் கொடுங்கள்.

நண்பர் விரும்பியதை தன் மகனுக்குக் கொடுக்குமாறு கூறியிருந்தார். நண்பர் விரும்பயது 990 காசுகள், ஆகையால் அதைக் கொடுக்குமாறு நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

sarcharan
01-04-2006, 08:10 AM
நான் சொல்ல நினைச்சேன் , நீங்க சொல்லீட்டீங்க.... பேஷ் பேஷ்...:D :D

pradeepkt
02-04-2006, 01:46 PM
நீ சொல்ல நினைச்சுக்கிட்டே இரு...
ஆரென் அண்ணா,மதி
வாழ்த்துகள்

மதி
03-04-2006, 04:41 AM
நீ சொல்ல நினைச்சுக்கிட்டே இரு...
ஆரென் அண்ணா,மதி
வாழ்த்துகள்
அதுல மதின்னு ஒரு வார்த்தை இருந்ததால தான்..ஹி ஹி..
வாழ்த்துக்கு நன்றி பிரதீப்..

தாமரை
03-04-2006, 10:17 AM
சாளுக்கிய மன்னன் இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசிக்கு ஒரு மெய்காப்பளன் தேவைப் பட்டான்.. அதற்கென பல தேர்வுகள் நடத்தப்பட்டு சரவணன், ராகவன், மதியழகன் ஆகிய மூன்றுபேர் தேர்வு செய்யப்பட்டார்கள்...

மன்னர் புலிகேசி மூவரில் யாரை தேர்ந்தெடுப்பது என்று தவிக்க மதியூக மந்திரி பரஞ்சோதி கை கொடுத்தார்..

மந்திரி மூவரையும் தனித்தனியே அழைத்து இது ரகசியம்.. இதை யாருக்கும் சொல்லக்கூடாது என வெவ்வேறு ரகசியங்களைச் சொன்னார்..

ஒரு வாரம் கழிந்தது... மந்திரி மீண்டும் மூவரையும் தனித்தனியே அழைத்து சோதித்து மதியழகனை தேர்வு செய்தார்...

நண்பர்களே... மந்திரி மதியழகனை தேர்ந்தெடுக்க உபயோகித்த யுக்தி எது?
எப்படி? ஏன்?

pradeepkt
03-04-2006, 10:26 AM
மந்திரி மூவரையும் தனித்தனியே அழித்து இது ரகசியம்.. இதை யாருக்கும் சொல்லக்கூடாது என வெவ்வேறு ரகசியங்களைச் சொன்னார்..
அழித்ததுக்குப் பிறகு அப்புறம் என்ன ரகசியம்????
ஆனாலும் எனக்கு பதில் தெரியலை...

தாமரை
03-04-2006, 10:28 AM
அழித்ததுக்குப் பிறகு அப்புறம் என்ன ரகசியம்????
ஆனாலும் எனக்கு பதில் தெரியலை...
எழுத்துப் பிழை... கவனக் குறைவினால்.. திருத்தி விட்டேன்

பென்ஸ்
03-04-2006, 10:39 AM
இதை யாருக்கும் சொல்லக்கூடாது
இப்படி சொல்லிவிட்டு என்ன சொன்னாலும் அது கண்டிப்பா அது அடுத்த நாள் எல்லோருக்கும் தெரிந்து இருக்கனுமே.... ????
அப்படிதானே நான் புரளி கிளப்புவேன்??? செல்வன் கேள்வி சரிதானா????

தாமரை
03-04-2006, 10:49 AM
இப்படி சொல்லிவிட்டு என்ன சொன்னாலும் அது கண்டிப்பா அது அடுத்த நாள் எல்லோருக்கும் தெரிந்து இருக்கனுமே.... ????
அப்படிதானே நான் புரளி கிளப்புவேன்??? செல்வன் கேள்வி சரிதானா????
கேள்வி சரிதான்.. பதில் தான்.....!!!:rolleyes: :rolleyes: :rolleyes:

pgk53
03-04-2006, 05:53 PM
எனக்கு அந்த ரகசியம் தெரியும். ஆனால் நான் யாருக்குமே சொல்லமாட்டேனே.........விடை சரிதானா....செல்வன்.

mania
04-04-2006, 04:19 AM
எனக்கு அந்த ரகசியம் தெரியும். ஆனால் நான் யாருக்குமே சொல்லமாட்டேனே.........விடை சரிதானா....செல்வன்.

சூப்பர் பிஜிகே....:D :D
அன்புடன்
மணியா...:D

gragavan
04-04-2006, 07:02 AM
பிரமாதமய்யா இந்தப் புதிரு...இதெல்லாம் சரியில்ல சொல்லீட்டேன்....ஆனால் தலையவே கூட்டீட்டு வந்திருச்சே...ஆகையால நல்ல புதிர்தான்.

தாமரை
05-04-2006, 04:49 AM
சாளுக்கிய மன்னன் இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசிக்கு ஒரு மெய்காப்பளன் தேவைப் பட்டான்.. அதற்கென பல தேர்வுகள் நடத்தப்பட்டு சரவணன், ராகவன், மதியழகன் ஆகிய மூன்றுபேர் தேர்வு செய்யப்பட்டார்கள்...

மன்னர் புலிகேசி மூவரில் யாரை தேர்ந்தெடுப்பது என்று தவிக்க மதியூக மந்திரி பரஞ்சோதி கை கொடுத்தார்..

மந்திரி மூவரையும் தனித்தனியே அழைத்து இது ரகசியம்.. இதை யாருக்கும் சொல்லக்கூடாது என வெவ்வேறு ரகசியங்களைச் சொன்னார்..

ஒரு வாரம் கழிந்தது... மந்திரி மீண்டும் மூவரையும் தனித்தனியே அழைத்து சோதித்து மதியழகனை தேர்வு செய்தார்...

நண்பர்களே... மந்திரி மதியழகனை தேர்ந்தெடுக்க உபயோகித்த யுக்தி எது?
எப்படி? ஏன்?
சரி சரி... எல்லோரும் விடைக்கு பக்கத்திலேயே இருக்கீங்க...
மந்திரி ஒருவாரம் கழித்து சரவணனை அழைத்து நான் என்ன ரகசியம் சொன்னேன் என்க் கேட்டார்..

சரவணன் நினைவிலிருந்த முக்கிய சாரம்சத்தை சொன்னார்..
ராகவனை அழைத்து கேட்க அவர் ஒரு வார்த்தை விடாமல் பூ வைத்து பொட்டு வைத்து அழகாக சொன்னார். மதியழகனை கேட்க ரகசியமா என்ன ரகசியம் எனத் திருப்பிக் கேட்டார்..

ஆகவே ரகசியத்தைக் காப்பாற்றும் முக்கிய அம்சமாய் ரகசியங்களை முக்கியத்துவம் கொடுத்து நினைவிலே கொள்ளாத மதியை தேர்ந்தெடுத்தார்.

சரி சரி.. அடுத்த புதிர் கொஞ்ச காலம் பொறுத்து

மதி
05-04-2006, 05:13 AM
சரி சரி... எல்லோரும் விடைக்கு பக்கத்திலேயே இருக்கீங்க...
மந்திரி ஒருவாரம் கழித்து சரவணனை அழைத்து நான் என்ன ரகசியம் சொன்னேன் என்க் கேட்டார்..

சரவணன் நினைவிலிருந்த முக்கிய சாரம்சத்தை சொன்னார்..
ராகவனை அழைத்து கேட்க அவர் ஒரு வார்த்தை விடாமல் பூ வைத்து பொட்டு வைத்து அழகாக சொன்னார். மதியழகனை கேட்க ரகசியமா என்ன ரகசியம் எனத் திருப்பிக் கேட்டார்..

ஆகவே ரகசியத்தைக் காப்பாற்றும் முக்கிய அம்சமாய் ரகசியங்களை முக்கியத்துவம் கொடுத்து நினைவிலே கொள்ளாத மதியை தேர்ந்தெடுத்தார்.

சரி சரி.. அடுத்த புதிர் கொஞ்ச காலம் பொறுத்து

ஆக மொத்தம் கவுத்துட்டீய..:angry: :angry: :angry:

தாமரை
05-04-2006, 05:19 AM
ஆக மொத்தம் கவுத்துட்டீய..:angry: :angry: :angry:
கவலைப் படாதீங்க மதி..

ரகசியங்களை மனசில வச்சுக்கறதை விட ரகஸ்யா வை வச்சுக்குங்க:D :D :D

மதி
05-04-2006, 05:21 AM
கவலைப் படாதீங்க மதி..

ரகசியங்களை மனசில வச்சுக்கறதை விட ரகஸ்யா வை வச்சுக்குங்க:D :D :D
பெரியவுக பேசற பேச்சா இது...
ஹ்ம்ம்..:angry: :angry: :angry: :angry:
நான் நல்ல பிள்ளை..

தாமரை
05-04-2006, 05:23 AM
பெரியவுக பேசற பேச்சா இது...
ஹ்ம்ம்..:angry: :angry: :angry: :angry:
நான் நல்ல பிள்ளை..
ஃபீனிக்ஸ் ல இருந்து வருகிற உளவுத்துறை ரிபோர்ட் சரியில்லையே!!!:rolleyes: :rolleyes: :rolleyes:

மதி
05-04-2006, 05:31 AM
ஃபீனிக்ஸ் ல இருந்து வருகிற உளவுத்துறை ரிபோர்ட் சரியில்லையே!!!:rolleyes: :rolleyes: :rolleyes:
உங்க உளவுத்துறை..ரிப்போர்ட் தப்பு..
இன்னி வரைக்கும் நான் ரொம்ப நல்ல பிள்ளை..

gragavan
05-04-2006, 05:37 AM
உங்க உளவுத்துறை..ரிப்போர்ட் தப்பு..
இன்னி வரைக்கும் நான் ரொம்ப நல்ல பிள்ளை..அப்ப நாளையில இருந்து கெட்ட பிள்ளையா? :D :D :D

மதி
05-04-2006, 05:48 AM
அப்ப நாளையில இருந்து கெட்ட பிள்ளையா? :D :D :D
இன்று வரைக்கும் என்னால் உறுதியா சொல்ல முடியும்..நாளையை கணிக்க நான் ஜோதிடன் இல்லை..

தாமரை
05-04-2006, 06:57 AM
இன்று வரைக்கும் என்னால் உறுதியா சொல்ல முடியும்..நாளையை கணிக்க நான் ஜோதிடன் இல்லை..
அதாவது நாளைக்கு ஒரு வாய்ப்பு இருக்கறதா சொல்றார்..:rolleyes: :rolleyes: :rolleyes:

gragavan
05-04-2006, 07:48 AM
அதாவது நாளைக்கு ஒரு வாய்ப்பு இருக்கறதா சொல்றார்..:rolleyes: :rolleyes: :rolleyes:அதே அதே சபாபதே

மதி
05-04-2006, 01:48 PM
அதாவது நாளைக்கு ஒரு வாய்ப்பு இருக்கறதா சொல்றார்..:rolleyes: :rolleyes: :rolleyes:
இருக்கலாம்..
யாருக்குத் தெரியும்...

pgk53
06-04-2006, 01:35 AM
அன்பு நண்பர்களே மிகுந்த வேலைப்பளுவின் காரணமாக நான் அடுத்த புதிரைப் பதிய இயலவில்லை.
விரைவில் அடுத்த புதிருடன் வருகிறேன்.

gragavan
06-04-2006, 05:46 AM
வாங்கண்ணா வாங்க....காத்திருக்கிறோம்.

pradeepkt
06-04-2006, 05:51 AM
எதுக்கு,
பதில் சொல்லவா, இல்லை யாரு பதில் சொல்றாங்கன்னு பாக்கவா? :D
நான் காத்திருக்கேன், ரெண்டாவதுக்குத்தான்... :D

pgk53
09-04-2006, 01:49 AM
புதிர் எண்-216

ஒரு ஊரிலே தமிழ்ப் புலமைமிக்க ஒருவர் இருந்தார். தனக்கு தமிழ்ப் புலமை மிகவும் அதிகம். தன்னைவிட புலமை மிக்கவர் யாருமே இல்லை என்ற கர்வம் அவருக்கு மேலோங்கி இருந்தது,

ஒருநாள் ஒரு பொதுமேடையில் சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருந்தார். சொற்பொழிவில் இருதியில் அங்கே கூடியிருந்தவர்களைப் பார்த்து,: நான் மிகவும் அற்புதமான சொற்பொழிவு செய்துள்ளேன். இதைவிட அருமையாக யாரும் பேசமுடியுமா?" என்று கேள்வியை எழுப்பினார்.

கூட்டத்தில் இருந்தவர்கள் யாரும் பதில் பேசவில்லை. ஆனால் அவரது இறுமாப்பு மிக்க பேச்சைக் கண்டு மனம் வருந்தினார்கள்.
அப்போது ஒருவர் எழுந்தார்." தாங்கள் அருமையாகப் பேசினீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.ஆனால் நான் தாங்கள் பேசிய சொற்களை ஏற்கனவே ஒரு புத்தகத்தில் படித்துள்ளேன்." என்றார்.

பேச்சாளருக்குக் கடும்கோபம் உண்டானது.

"இதோ பாருங்கள். நான் பேசியது எந்த புத்தகத்திலும் இருக்க வாய்ப்பே இல்லை.அந்த புத்தகத்தைக் கொண்டு வந்து இங்கே காட்ட இயலுமா? அப்படிக் காட்டினால் உடனே உங்களுக்கு5000 ரூபாய் கொடுக்கிறேன். காட்ட இயலவில்லை என்றால் நீங்கள் எனக்கு 5000 ரூபாய் கொடுக்கவேண்டும். சம்மதமா?" என்று சவால் விட்டார்.

ஒரு புத்தகத்தில் படித்ததாகக் கூறியவர், சம்மதம் என்று கூறி , "அரைமணி நேரம் பொருங்கள். நான் சென்று புத்தகத்தைக் கொண்டு வருகிறேன்" என்று கூறிவிட்டுப் போனார்.

கூறியபடியே அரை மணி நேரத்திற்குள் அவர் அந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்தார்.


அதைத் திறந்து பார்த்த பேச்சாளர் தனது தோல்வியை ஒத்துக்கொண்டு, பந்தயப் பணத்தைக் கொடுத்துவிட்டு, சப்தமின்றிச் சென்றுவிட்டார்.

நண்பர்களே-----------எந்தப் புத்தகத்தை அவர் கொண்டுவந்தார்????

aren
09-04-2006, 02:45 AM
ஆத்திச்சுவடி புத்தகம்

aren
09-04-2006, 02:46 AM
அகராதி. அதில்தான் அனைத்து வார்த்தைகளும் (சொற்களும்) இருக்கும்.

தாமரை
09-04-2006, 10:09 AM
அகராதி. அதில்தான் அனைத்து வார்த்தைகளும் (சொற்களும்) இருக்கும்.
:D :D :D :D :D

pradeepkt
10-04-2006, 05:06 AM
இதுதான் லேட்டரல் திங்கிங் போல.
எனக்குத் தப்பித் தவறி ஒரே ஒரு புதிருக்கு விடை தெரிஞ்சுது, அதையும் ஆரென் அண்ணா சொல்லிட்டாரு...

gragavan
10-04-2006, 05:48 AM
அகராதி பிடிச்சவனை அகராதியைக் கொண்டே அடிச்சாச்சா....சூப்பரப்பு...

pgk53
13-04-2006, 01:41 AM
அன்பு நண்பர்களே....வணக்கம்.
நண்பர் ஆரென் அவர்கள் சரியான விடையைக் கூறிவிட்டார்.
அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

நாளை அடுத்த புதிருடன் உங்களைச் சந்திக்கிறேன்.

pgk53
15-04-2006, 05:19 PM
புதிர் எண்-217

மேற்கு மலைத் தொடர்ச்சியின் அடிவாரத்தில் அமைந்துள்ள ராஜ பாளையம் என்ற நகரில் {அட அதாங்க---நம்ம மூலிகைப் பெட்ரோல் ராமர்பிள்ளையின் ஊர்}சுமதி என்று ஒரு அழகும் அறிவும் ஒருங்கே அமமந்த பெண் ஒருத்தி இருந்தாள். பணக்காரரான அவளுடைய தந்தை சுமதிக்கு விரைவில் திருமணம் செய்துவிட முனைந்தார்.

அவர் பணக்காரராக இருந்தாலும் தனது ஒரே மகளான சுமதிக்கு அறிவுள்ள ஒருவனே கணவனாக வரவேண்டும் என்று விரும்பினார்.
அவன் பணம் காசில்லாதவனாக இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல், மாப்பிள்ளையாகுபவன் அறிவுள்ளவனாக இருக்கவேண்டும் என்றே விரும்பினார்.


அதனால் பெண் பார்க்க வரும் மாப்பிள்ளையிடம் ஒரு ரூபாயைக் கொடுத்து, இந்த ஒரு ரூபாயில், எண்ணை, பிண்ணாக்கு, விறகு இவை அனைத்தையும் வாங்கிக்கொண்டு வரவேண்டும். அத்துடன் பாக்கி சில்லறைப் பணத்தையும் கொண்டு வரவேண்டும் என்ற நிபந்தனையை விதித்தார்.
இதைக் கேட்ட மாப்பிள்ளை வீட்டார், இதென்ன புதுக் கூத்து????ஒரு ரூபாயில் இத்தனையும் வாங்குவதே இயலாத காரியம். அத்துடன் மீதிச் சில்லறையும் கொண்டு வரவேண்டும் என்றால் சர்வ நிச்சயமாக இயலாத காரியம் என்று ஒத்துக்கொள்ளாமல் திரும்பினார்கள். ஏகப்பட்ட மாப்பிள்ளைகள் வந்தும் யாராலும் அந்தச் செயலைச் செய்ய இயலாமல் போய்விட்டார்கள்.

அப்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் மதியழகன் என்ற வாலிபன் ஒருவன் இருந்தான். அவனுக்கு தாய் தந்தை இல்லை...ஏழை. இருந்தாலும் அவனது பேருக்கேற்றாற்போல் மிகுந்த மதிநுட்பம் மிக்கவன்.

ராஜபாளையத்தில் ஒருவர் இதுபோல நிபந்தனை விதிக்கிறார் என்று கேள்விப்பட்டு, இது பற்றி ஆலோசனை செய்து அதற்கு ஒரு வழி கண்டு பிடித்தான்.

மறுநாளே ராஜபாளையம் புறப்பட்டுச் சென்றான்.
தான் சுமதியைப் பெண் கேட்டு வந்ததாகக் கூறினான்.
அவனை ஏற இறங்கப் பார்த்த சுமதியின் தந்தை, மற்ற அனைவரிடமும் கூறிய அதே நிபந்தனையை அவனிடமும் கூறினார்.

புண்சிரிப்புடன் அவர் கொடுத்த ஒரு ரூபாயை வாங்கிக்கொண்டு சென்றான்.
சில மணி நேரம் கழித்து திரும்பி வந்தான்.
வந்தவன் சில்லறைக் காசை அவர் கையில் கொடுத்து, உங்கள் நிபந்தனைப்படி எல்லாம் சரியாக இருக்கிறதா???????என்று கேட்டான்.

சுமதியின் தந்தை மிக்க மனம் மகிழ்ந்தார்.
மதியழகனின் மதி நுட்பத்தைப் பாராட்டினார்.
சுமதிக்கு ஏற்ற அறிவுள்ள மணவாளன் மதியழகனே என்று பாராட்டி, அவர்களுக்குத் திருமணமும் செய்து வைத்தார்.

நண்பர்களே,------மற்ற அனைவராலும் இயலாத காரியம் என்ற அந்தக் காரியத்தை மதியழகன் எப்படிச் சுலபமாகச் செய்து முடித்தான்.????

aren
16-04-2006, 03:39 AM
மதியழகன் கடைக்குச் சென்று ஒரு கொப்பரைத் தேங்காயை 80 பைசாவிற்கு வாங்கி வந்து கொடுத்து, இதை உறித்து கொப்பரையை தனியாக எடுத்து மீதமுள்ளதை விறகிற்கு வைத்துக்கொள்ளச் சொன்னான். கொப்பரையை செக்கில் இட்டு எண்ணெயையும் பிண்ணாக்கையும் எடுத்துக்கொள்ளச் சொன்னான். மீதியுள்ள 20 பைசா சில்லறையையும் திரும்ப கொடுத்தான்.

இளந்தமிழ்ச்செல்வன்
16-04-2006, 02:55 PM
ஆரென் எப்படிங்க அடுத்தடுத்து அசத்துறீங்க?

pgk53
16-04-2006, 04:58 PM
இல்லையே-------------திரு ஆரென் அவர்கள் சரியான விடையைச் சொல்லவில்லையே-----------------

மதியழகன் கடைக்குச் சென்று ஒரு கொப்பரைத் தேங்காயை 80 பைசாவிற்கு வாங்கி வந்து கொடுத்து, இதை உறித்து கொப்பரையை தனியாக எடுத்து மீதமுள்ளதை விறகிற்கு வைத்துக்கொள்ளச் சொன்னான். கொப்பரையை செக்கில் இட்டு எண்ணெயையும் பிண்ணாக்கையும் எடுத்துக்கொள்ளச் சொன்னான். மீதியுள்ள 20 பைசா சில்லறையையும் திரும்ப கொடுத்தான்.

இந்தக் காலத்தில் 80 பைசாவுக்கு எங்கே கொப்பறைத் தேங்காய் கிடைக்கிறது????????????????????

aren
17-04-2006, 01:28 AM
தேங்காய் இல்லையென்றால் எள் அல்லது வேர்க்கடலை ஒரு பொட்டலத்தில் வாங்கிவந்து அவரிடம் கொடுத்துவிட்டு மீதி சில்லறையைக் கொடுத்திருக்கலாம்.

தாமரை
17-04-2006, 05:00 AM
தேங்காய் இல்லையென்றால் எள் அல்லது வேர்க்கடலை ஒரு பொட்டலத்தில் வாங்கிவந்து அவரிடம் கொடுத்துவிட்டு மீதி சில்லறையைக் கொடுத்திருக்கலாம்.
ஒரு எள்-செடியை வாங்கி வந்து கொடுத்திருப்பார்..(நல்லெண்ணெய் புண்ணாக்கு.. விறகு,..)
வேம்பு கூட வேப்பெண்ணெய், வேப்பம்புண்ணாக்கு, விறகு தரும்...

பரஞ்சோதி
17-04-2006, 10:55 AM
பிஜிகே அண்ணா,

உங்க இமெயிலை சரி பார்க்கவும். பதிலும் கொடுக்கவும்

அன்புடன்
பரஞ்சோதி

pgk53
18-04-2006, 04:52 PM
Quote:
Originally Posted by aren
தேங்காய் இல்லையென்றால் எள் அல்லது வேர்க்கடலை ஒரு பொட்டலத்தில் வாங்கிவந்து அவரிடம் கொடுத்துவிட்டு மீதி சில்லறையைக் கொடுத்திருக்கலாம்.

ஒரு எள்-செடியை வாங்கி வந்து கொடுத்திருப்பார்..(நல்லெண்ணெய் புண்ணாக்கு.. விறகு,..)
வேம்பு கூட வேப்பெண்ணெய், வேப்பம்புண்ணாக்கு, விறகு தரும்...
-------------------------------------------------------

ஆரென் அவர்கள் அடித்தளம் போட்டதில் அழகாக ஏணிவைத்து சரியான விடையைக் கூறிவிட்டார். செல்வன்.
இருவருக்குமே எனது வாழ்த்துக்கள்.

நான் சுலபமான புதிராகப் போட்டுக்கொண்டிருக்கின்றேன் என்று நினைக்கிறேன்.

அதனால் அடுத்து வருவது கொஞ்சம் கடினமான புதிர்.

aren
19-04-2006, 01:23 AM
பிகேஜி அவர்களே,

நீங்கள் என்ன சொன்னாலும் நான் சொன்ன கொப்பரைத் தேங்காய் பதில் சரிதான். 80 பைசாவிற்கு நான் உங்களுக்கு கொப்பரைத் தேங்காய் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்களேன். ஆனால் 80 பைசாவிற்கு ஒன்று அல்லது இரண்டு கொப்பரைகள் மட்டுமே கிடைக்கும் (ஒரு ரூபாயில் விமானப்பயணம் போல). எள் செடி மட்டும் உங்களுக்கு ஒரு ரூபாய்க்குள் எங்கே கிடைக்கும். எள் வேண்டுமானால் கிடைக்கலாம்.

நான் சொன்ன முதல் விடை சரியென்று நான் நினைக்கிறேன் ஏனெனில் மதியழகன் எத்தனை பைசாவிற்கு கொப்பரைத்தேங்காய் வாங்கினான் என்பது முக்கியமல்ல.

அடுத்த புதிருக்கு காத்திருக்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

தாமரை
19-04-2006, 01:49 PM
நான் உன்னைச் சுற்ற
நீ இன்னொருவனைச் சுற்ற
உன்னுடன் சேர்ந்து
பலபேர் சுற்ற
அந்த இன்னொருவனுடன்
பலபேர்
கூடிச் சுற்ற
தலை சுத்துதடா சாமி...

நான் யார்? நீ யார்? யார் யார்?

பென்ஸ்
19-04-2006, 02:13 PM
நான் - நிலவு
நீ - பூமி
சரியா செல்வன்.....

இருந்தாலும் இது நம்ம சரவணன் கதை மாதிரி இருக்கே????

gragavan
19-04-2006, 02:19 PM
சரி சரி சண்டை போடாதீங்க...ரெண்டு பேர் சொன்ன விடையும் சரி.

pgk53
20-04-2006, 01:55 AM
புதிர் எண் - 218

ராமுவின் வீட்டில் அவனது பிறந்தநாள் விழா கொண்டாடுவதற்காக உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்திருந்தார்கள்.

வரும் விருந்தினர்களுக்கு கோழி பிரியாணி சமைப்பதற்காக சூப்பர் மார்க்கெட்டில் இருந்து கோழிகள் வாங்கிவந்தார் ராமுவின் அப்பா.

{உறித்து சுத்தம் செய்யப்பட்டு, குளிர்பதனத்தில் வைக்கப்பட்டிருந்த கோழிகள்}

அவர் ஏற்கனவே மிகுந்த தாமதமாக கடையில் இருந்து திரும்பியிருந்தார். அவர் கொண்டு வந்த பையைப் பிரித்துப் பார்த்த ராமுவின் அம்மா" சரியாப் போச்சு. ஐஸில் வைத்த கோழிகளை வாங்கிவந்துவிட்டீர்களா?இப்போதே மிகுந்த தாமதம் ஆகிவிட்டது. எந்த நேரமும் விருந்தினர்கள் வந்துவிடுவார்கள்.இனி எப்போது இந்த கோழி ஐஸில் இருந்து உருகி சரியான நிலைக்கு வருவது???. நான் எப்போது சமைத்து முடிப்பது???? " என்று அலுத்துக்கொண்டாள்.

இதைக் கேட்ட ராமுவின் இளைய சகோதரன் சோமு " அம்மா.... அலுத்துக்கொள்ளாதீர்கள்...நான் விரைவில் கோழிகளைச் சரியான நிலைக்கு கொண்டுவந்துவிடுகிறேன். நமது ஓவனில் உச்ச வெப்பத்தில் நான்கு நிமிடம் வைத்தால் போதும். " என்றான்.

அதைக் கேட்ட ராமுவின் தங்கை சீதா " ஓவனா????அதெல்லாம் வேண்டாம். குளியல் அறையில் ஹீட்டரில் கொதிக்கக் கொதிக்க நீர் இருக்கிறது. கொதிக்கும் நீரில் மூன்று நிமிடம் வைத்தால் போதுமே!!!!என்னிடம் கொடுங்கள். நான் கொண்டுபோகிறேன்" என்றாள்.

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ராமு " அம்மா.....அதெல்லாம் வேண்டாம்...என்னிடம் கொடுங்கள்...நான் இரண்டே நிமிடத்தில் சரியான நிலைக்குக் கொண்டுவருகிறேன்." என்றான்.

சொன்னதோடு மட்டுமல்லாமல் செய்தும் காட்டினான்.!!!

நண்பர்களே....ராமு எந்த வழியில் இதைச் சாதித்தான்???????

aren
20-04-2006, 02:44 AM
ஒரு பாத்திரத்தில் குளியல் அறையில் இருந்த ஹீட்டரிலிருந்து கொதித்த நீரை ஊற்றி அதில் இந்த கோழியைப்போட்டான், பின்னர் அதை ஓவனில் வைத்தான். இரண்டே நிமிடத்தில் சரியான நிலைக்கு வந்துவிட்டது.

ஓவனில் நான்கு நிமிடத்திலும் வெந்நீரில் மூன்று நிமிடத்திலும் சரியான நிலைமைக்கு வரும். ஆனால் இந்த இரண்டையும் ஒருங்கே கலந்தால் இரண்டு நிமிடத்தில் சாதிக்கமுடியும் என்பதை ராமு செய்து காட்டினான்.

aren
20-04-2006, 02:44 AM
ஒரு பாத்திரத்தில் குளியல் அறையில் இருந்த ஹீட்டரிலிருந்து கொதித்த நீரை ஊற்றி அதில் இந்த கோழியைப்போட்டான், பின்னர் அதை ஓவனில் வைத்தான். இரண்டே நிமிடத்தில் சரியான நிலைக்கு வந்துவிட்டது.

ஓவனில் நான்கு நிமிடத்திலும் வெந்நீரில் மூன்று நிமிடத்திலும் சரியான நிலைமைக்கு வரும். ஆனால் இந்த இரண்டையும் ஒருங்கே கலந்தால் இரண்டு நிமிடத்தில் சாதிக்கமுடியும் என்பதை ராமு செய்து காட்டினான்.

தாமரை
20-04-2006, 01:25 PM
ஒரு பாத்திரத்தில் குளியல் அறையில் இருந்த ஹீட்டரிலிருந்து கொதித்த நீரை ஊற்றி அதில் இந்த கோழியைப்போட்டான், பின்னர் அதை ஓவனில் வைத்தான். இரண்டே நிமிடத்தில் சரியான நிலைக்கு வந்துவிட்டது.

ஓவனில் நான்கு நிமிடத்திலும் வெந்நீரில் மூன்று நிமிடத்திலும் சரியான நிலைமைக்கு வரும். ஆனால் இந்த இரண்டையும் ஒருங்கே கலந்தால் இரண்டு நிமிடத்தில் சாதிக்கமுடியும் என்பதை ராமு செய்து காட்டினான்.
நீரின் கொதிநிலை 100 டிகிரி,, அதற்குமேல் வெப்பம் உயர சாத்தியமில்லை. எனவே ஆரென் பதில் தவறாக இருக்கும் என கருதுகிறேன்..


அதற்கு பதில் அதே கோழியை நான்கு அல்லது ஐந்து துண்டுகளாக வெட்டி வைத்தால் சீக்கிரம் அறை வெப்ப நிலைக்கு கொண்டு வந்து விடலாம்...

பரஞ்சோதி
20-04-2006, 05:07 PM
ஆரென் அண்ணாவும், தாமரை செல்வனும் வீட்டில் அடிக்கடி கோழி வெட்டி கொடுப்பாங்க போலிருக்குதே. :)

gragavan
21-04-2006, 05:30 AM
நீரின் கொதிநிலை 100 டிகிரி,, அதற்குமேல் வெப்பம் உயர சாத்தியமில்லை. எனவே ஆரென் பதில் தவறாக இருக்கும் என கருதுகிறேன்..


அதற்கு பதில் அதே கோழியை நான்கு அல்லது ஐந்து துண்டுகளாக வெட்டி வைத்தால் சீக்கிரம் அறை வெப்ப நிலைக்கு கொண்டு வந்து விடலாம்...கொதிநிலை நூறுதான். ஆனால் அதற்கு மேலும் உயரும் பொழுது நீர்மம் ஆவியாகும். அந்த ஆவிதான் முன்பு ரயில் வண்டியையே தள்ளியது. ஆகையால் முந்தைய விடைகள் சரி என்றே தோன்றுகிறது.

தாமரை
21-04-2006, 12:20 PM
கொதிநிலை நூறுதான். ஆனால் அதற்கு மேலும் உயரும் பொழுது நீர்மம் ஆவியாகும். அந்த ஆவிதான் முன்பு ரயில் வண்டியையே தள்ளியது. ஆகையால் முந்தைய விடைகள் சரி என்றே தோன்றுகிறது.

சரியென்றால் பிஜிகே இப்ப அடுத்த புதிர் போட்டிருப்பாரு இல்லையா...

aren
21-04-2006, 01:05 PM
சரியென்றால் பிஜிகே இப்ப அடுத்த புதிர் போட்டிருப்பாரு இல்லையா...

போடுவாரு. கொஞ்சம் பிஸியாக இருக்கிறார் போலிருக்கிறது.

pgk53
22-04-2006, 01:32 AM
போடுவாரு. கொஞ்சம் பிஸியாக இருக்கிறார் போலிருக்கிறது.

கொஞ்சம் பிஸி அல்ல....ஏகப்பட்ட பிஸி-----
அதுவும் கடந்த 20 நாட்களாகவே-----உறங்குவதற்கே நேரம் கிடைக்காத அளவுக்கு வேலைப்பளு...

யாருமே சரியான விடையைக் கூறாததினால்தான் சரியான விடை வருவதற்காகக் காத்துக்கொண்டுள்ளேன்.

:) :) :)

ஒரு சிறிய க்ளூ---------இதற்கான விடையை விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து சிந்திக்கவும்.

பென்ஸ்
23-04-2006, 01:44 PM
மைக்ரோ ஓவன் கன்வேக்ஸன் முறையில் நான்கு நிமிடம் எடுத்தது..
சுடு நீர் கன்டக்சன் முறையில் மூன்று நிமிடம் எடுத்தது...

நமது நண்பர் குக்கரில் கோழியையும் சுடு நீரையும் இரண்டு நிமிடத்திற்க்கு வைத்திருப்பார்....

விடை சரியா?????
விளக்க தேவையா... ????

aren
23-04-2006, 02:16 PM
மைக்ரோ ஓவன் கன்வேக்ஸன் முறையில் நான்கு நிமிடம் எடுத்தது..
சுடு நீர் கன்டக்சன் முறையில் மூன்று நிமிடம் எடுத்தது...

நமது நண்பர் குக்கரில் கோழியையும் சுடு நீரையும் இரண்டு நிமிடத்திற்க்கு வைத்திருப்பார்....

விடை சரியா?????
விளக்க தேவையா... ????

நான் சொன்னதையே நீங்களும் சொல்கிறீர்கள். பிகேஜி அவர்கள் விஞ்ஞானத்தை உபயோகித்து பதில் சொல்லுங்கள் என்று சொல்கிறார். கொஞ்சம் கவனிக்கவும்.

பென்ஸ்
24-04-2006, 06:04 AM
ஆரென்... குக்கரில் என்று நான் சொன்னதை கவனிக்கவும்...

gragavan
24-04-2006, 06:19 AM
கோழி இன்னமுமா வேகுது...சீக்கிரமப்பா சீக்கிரம்...பசிவேளைல........

aren
24-04-2006, 07:13 AM
கோழி இன்னமுமா வேகுது...சீக்கிரமப்பா சீக்கிரம்...பசிவேளைல........

நல்லகாலம் நான் சைவம். அதனால் எனக்கு பசி தெரியவில்லை.

பென்ஸ்
24-04-2006, 07:20 AM
அது சரி... சிக்கன் சைவமா ??? அசைவமா??? ஆரென் .....:D :D :D

pradeepkt
24-04-2006, 10:22 AM
அதைச் சிக்கன் கிட்டயில்ல கேக்கணும்?

aren
24-04-2006, 10:26 AM
அது சரி... சிக்கன் சைவமா ??? அசைவமா??? ஆரென் .....:D :D :D

இந்த காலத்து சிக்கனை நம்பமுடியாது. எதை வேண்டுமானாலும் சாப்பிடும்.

மதி
24-04-2006, 10:41 PM
ஆக மொத்தம் புதிர விட்டுட்டு எல்லாரும் சிக்கன் சைவமா அசைவமா ன்னு பட்டிமன்றம் நடத்துறீங்க. சீக்கிரம் சொல்லுங்க.
ஹி..ஹி..

விடை தெரியாமல்
மதி

gragavan
25-04-2006, 04:47 AM
வடை தெரியாமல்
மதி
வடை தெரியாமலா....ஓட்டலுக்குப் போனா தட்டுத்தட்டா தெரியுது......

aren
25-04-2006, 05:03 AM
விடை தெரியாமல்
மதி

வித விதமாக இருக்குதே. நம்ம ராகவன் அவர்கள் ஒரு கிளாஸ் வேண்டுமானால் எடுத்திடுவார் உங்களுக்கு. வேண்டுமா?

sarcharan
25-04-2006, 10:07 AM
நான் - நிலவு
நீ - பூமி
சரியா செல்வன்.....

இருந்தாலும் இது நம்ம சரவணன் கதை மாதிரி இருக்கே????


hmm nakkalu;)

konja naal naan illannadhum neenga ellam romba oota aarambichuteenga....

sari sari ini paappom

aren
25-04-2006, 10:09 AM
hmm nakkalu;)

konja naal naan illannadhum neenga ellam romba oota aarambichuteenga....

sari sari ini paappom

என்ன ஆச்சு உங்க தமிழுக்கு. ஊரில் இல்லையா?

மதி
25-04-2006, 05:32 PM
வடை தெரியாமலா....ஓட்டலுக்குப் போனா தட்டுத்தட்டா தெரியுது......
ராகவன்..
நான் தெளிவா தான் எழுதிருக்கேன்னு நினைக்கிறேன்..

அந்த எடிட்டிங் உங்க வேலையோ..??

குழம்பாமல் தெளிவாய்
மதி

gragavan
26-04-2006, 05:21 AM
ராகவன்..
நான் தெளிவா தான் எழுதிருக்கேன்னு நினைக்கிறேன்..

அந்த எடிட்டிங் உங்க வேலையோ..??

குழம்பாமல் தெளிவாய்
மதிஓ வடைக்குக் குழம்பா! நல்லாதான் இருக்கும்.....வெளிநாட்டுல உக்காந்தப்புறம் உள்நாட்டு வடையும் குழம்பும் ரொம்பப் படுத்துதுன்னு நெனைக்கிறேன்... :D :D :D :D

aren
26-04-2006, 09:19 AM
வடைகறி இன்னும் நன்றாக இருக்குமே. மதி உங்களுக்கு வேண்டுமா?

மதி
26-04-2006, 02:35 PM
ஓ வடைக்குக் குழம்பா! நல்லாதான் இருக்கும்.....வெளிநாட்டுல உக்காந்தப்புறம் உள்நாட்டு வடையும் குழம்பும் ரொம்பப் படுத்துதுன்னு நெனைக்கிறேன்... :D :D :D :D
நீங்க வேற இங்க வந்தப்புறம் நல்லாவே சமைக்க கத்துகிட்டேன். குறிப்பா சாம்பார். அதிகமில்ல ஜெண்டில்மேன், 30 நிமிஷம்,,சமையல் ரெடி.

மதி
26-04-2006, 02:36 PM
வடைகறி இன்னும் நன்றாக இருக்குமே. மதி உங்களுக்கு வேண்டுமா?
இன்னிக்கு வரைக்கும் நான் வடைகறி சாப்பிட்டதில்ல ஆரென்..

sarcharan
26-04-2006, 02:43 PM
என்ன ஆச்சு உங்க தமிழுக்கு. ஊரில் இல்லையா?
மன்னிக்கவும் எனது அலுவலகத்தில் இ-கலப்பையை இறக்குமதி செய்ய இயலவில்லை அது தான். ;)

pgk53
26-04-2006, 03:13 PM
மக்களின் பதிவுகளைப் பார்க்கப் பார்க்க நாவில் எச்சில் ஊறுகிறது.

அதெல்லாம் இருக்கட்டும்....புதிருக்கு விடை யாரும் சொல்லவில்லலயே??????????

நான் நாளை விடை கூறுவதாக எண்ணியுள்ளேன்.
சொல்லட்டுமா?????????

வரும் சனிக்கிழமை விடுமுறையில் புறப்பட உள்ளேன். அதற்குள் இந்த புதிரை முடித்துவிட்டு அடுத்த புதிரைப் போட்டுவிட்டுப் போகலாம் என்று நினைக்கிறேன்!!!!

sarcharan
26-04-2006, 03:18 PM
மக்களின் பதிவுகளைப் பார்க்கப் பார்க்க நாவில் எச்சில் ஊறுகிறது.

அதெல்லாம் இருக்கட்டும்....புதிருக்கு விடை யாரும் சொல்லவில்லலயே??????????

நான் நாளை விடை கூறுவதாக எண்ணியுள்ளேன்.
சொல்லட்டுமா?????????

வரும் சனிக்கிழமை விடுமுறையில் புறப்பட உள்ளேன். அதற்குள் இந்த புதிரை முடித்துவிட்டு அடுத்த புதிரைப் போட்டுவிட்டுப் போகலாம் என்று நினைக்கிறேன்!!!!

குக்கரில் அழுத்ததினால் அது சீக்கிரம் சமைக்கப்பட்டு இருக்கலாம்.
மேலும் குக்கரில் கண்டக்ஷன், கன்வெக்ஷன், ரேடியேஷன் மூன்றும் சேர்ந்து நிகழும். தவிர மூடப்பட்டுள்ளதால் சீக்கிரம் சூடாகும்.. என்று என் நண்பன் சொன்னான்...

பரஞ்சோதி
26-04-2006, 05:35 PM
அண்ணா, புதிருக்கான விடையை சொல்லிவிட்டு, படுபயங்கரமான விடை சொல்ல முடியாத புதிராக சொல்லுங்க.

இங்கே நான் வருவதற்குள் எல்லோரும் விடை சொல்லிடுறாங்க. :(

ராசராசன்
26-04-2006, 09:38 PM
இந்த காலத்து சிக்கனை நம்பமுடியாது. எதை வேண்டுமானாலும் சாப்பிடும்.

சரியான 'லொள்ளு'னா இதுதான்! :D :D

pgk53
28-04-2006, 01:44 AM
அன்பு நண்பர்களே-------ஐஸ் எதிலே சீக்கிரமாக உருகும் என்பதற்கான விடையை இந்தப் புதிரை விஞ்ஞான அடிப்படையில் பார்க்கவேண்டும் என்று ஏற்கனவே நான் கூறிப்பிட்டிருந்தேன் அல்லவா?

விஞ்ஞான வார்த்தைகளை என்னால் சரியாக தமிழில் மாற்ற இயலவில்லை. அதனால் விடையை தமிழில் கூறிவிட்டு, விளக்கத்தை ஆங்கிலத்திலேயே பதித்துள்ளேன்..

ஐஸாக உள்ள கோழி சீக்கிரம் உருகவேண்டுமானால் அதை ஒரு பாத்திரத்தில் வைத்து, வாஷ்பேசினில் தண்ணீரரத் திறந்துவிட்டு, பாத்திரத்தை ஓடும் தண்ணீரில் வைக்கவேண்டும்...இதுதான் விரைவான வழி.

விளக்கம் ஆங்கிலத்தில்.
What is the fastest way to melt a block of ice without first breaking it up into smaller pieces?
The fastest way to melt a solid block of ice is to put it in a bowl in the sink and run cool water into the bowl. It's all to do with convection and thermal transfer. The cool water, being closer to the temperature of the ice than hot water, will more quickly dispense heat into the block. Couple that with the convection caused by the fact that the water is constantly moving while being replenished and you have ideal conditions for the transfer of heat necessary to melt the block."

What about the oven and the boiling water?"

"They both suffer from a similar problem.The boiling water does have a certain amount of convection, but because the water is so hot, the transfer of heat actually works to cool it down more than to heat up the ice. The oven is even worse because of the complete absence of external convection. All the block is doing is keeping your oven cool, which actually makes it the slowest way to melt a block ice short of leaving it in the freezer.

தாமரை
28-04-2006, 09:35 AM
அன்பு நண்பர்களே-------ஐஸ் எதிலே சீக்கிரமாக உருகும் என்பதற்கான விடையை இந்தப் புதிரை விஞ்ஞான அடிப்படையில் பார்க்கவேண்டும் என்று ஏற்கனவே நான் கூறிப்பிட்டிருந்தேன் அல்லவா?

விஞ்ஞான வார்த்தைகளை என்னால் சரியாக தமிழில் மாற்ற இயலவில்லை. அதனால் விடையை தமிழில் கூறிவிட்டு, விளக்கத்தை ஆங்கிலத்திலேயே பதித்துள்ளேன்..

ஐஸாக உள்ள கோழி சீக்கிரம் உருகவேண்டுமானால் அதை ஒரு பாத்திரத்தில் வைத்து, வாஷ்பேசினில் தண்ணீரரத் திறந்துவிட்டு, பபத்திரத்தை ஓடும் தண்ணீரில் வைக்கவேண்டும்...இதுதான் விரைவான வழி.

விளக்கம் ஆங்கிலத்தில்.
What is the fastest way to melt a block of ice without first breaking it up into smaller pieces?
The fastest way to melt a solid block of ice is to put it in a bowl in the sink and run cool water into the bowl. It's all to do with convection and thermal transfer. The cool water, being closer to the temperature of the ice than hot water, will more quickly dispense heat into the block. Couple that with the convection caused by the fact that the water is constantly moving while being replenished and you have ideal conditions for the transfer of heat necessary to melt the block."

What about the oven and the boiling water?"

"They both suffer from a similar problem.The boiling water does have a certain amount of convection, but because the water is so hot, the transfer of heat actually works to cool it down more than to heat up the ice. The oven is even worse because of the complete absence of external convection. All the block is doing is keeping your oven cool, which actually makes it the slowest way to melt a block ice short of leaving it in the freezer.
என்னுடைய விடை கேள்வியில் இருக்கு பிஜிகே அவர்களே

What is the fastest way to melt a block of ice without first breaking it up into smaller pieces?

pgk53
29-04-2006, 01:18 AM
அன்பு நண்பர் செல்வன் அவர்களே-----
ஓவனா??
சுடுநீரா??? அல்லது இரண்டுமே தவறா என்பதுதான் எனது கேள்வி.
எப்படியோ விடைக்குப் பக்கமாக வந்ததற்கு எனது வாழ்த்துக்கள்.
சரி வாருங்கள் அடுத்த புதிருக்குப் போவோம்.

pgk53
29-04-2006, 01:20 AM
அன்பு நண்பர்களே நான் விடுமுறையில் புறப்படும் முன்பாக இந்த புதிரைக் கொடுக்கிறேன். சரியான பதில் கூற முயற்சி செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

பரஞ்சோதி வேறு பயங்கரமான புதிரைப் போடுங்கள் என்று அன்புக் கட்டளை விடுத்துள்ளார். இப் புதிர் கொஞ்சம் கடினமானது என்றே நான் நினைக்கிறேன். ஆனால் நம் தமிழ் மன்ற நண்பர்கள் இதை பஞ்சுபோல் ஊதிவிடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

நமது நகைச்சுவை நாயகன் வீர்சிங்கைப் பற்றி நீங்கள் அனைவருமே நன்கு அறிந்திருப்பீர்கள். அவன் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிகொண்டான்.அதுதான் புதிராக வருகின்றது.

சரி வாருங்கள் புதிருக்குப் போவோம்.

pgk53
29-04-2006, 01:23 AM
புதிர் எண் . 219

வீர்சிங் மும்பாய்க்குப் பக்கத்தில் உள்ள பூனேயில் ஒரு அலுவலக மேலாளராகப் பணி புரிந்துகொண்டிருந்தான்.அவனது கம்பெனிக்கு மிகப்பெரிய டெண்டர் ஒன்று கிடைக்கவிருந்தது. அந்த டெண்டரை எப்படியாவது எடுத்துவிடவேண்டும் என்று அவனது கம்பெனி மிகவும் முயற்சி செய்து இறுதியில் கிடைக்கும் தருவாயில் இருந்தது. அதற்காக அந்த டெண்டரை அவர்களுக்கே சிபாரிசு செய்யும் அதிகாரம் உள்ள ஒருவரைப் பிடித்தார்கள்.
அந்த அதிகாரம் படைத்த உயர் அலுவலர் கொஞ்சம் பணத்தாசை கொண்டவர். அதனால் டெண்டர் கிடைக்கவிருந்த தினத்தன்று, வீர்சிங் கையில் ஒரு சிறு பெட்டியில் {பிரீப் கேஸ்} ஒரு லட்சம் ரூபாய் பணத்தை வைத்து அந்தப் பணத்தை அன்று மதியம் 12 மணிக்குள், { அதாவது டெண்டர் திறக்கும் முன்பாக} அந்த உயர் அதிகாரியிடம் கொடுக்கும்படி ஏற்பாடு செய்து வீர்சிங்கை மும்பாய்க்கு அனுப்பினார்கள்.

{மும்பையில்தான் டெண்டர் திறக்கப்படுகின்றது}வீர்சிங்கும் பூனேயில் இருந்து மும்பாய் செல்லும் இரயிலில் பணத்துடன் ஏறி அமர்ந்தான். அது முதல் வகுப்புப் பெட்டி. அன்று அந்தப் பெட்டியில் வீர்சிங் மட்டுமே தனியாகப் பயணித்தான்.
பூனேயில் இருந்து மும்பாய்க்கு 3 மணி நேரம் பயண்ம் செய்ய வேண்டும். இரண்டு மணிநேரப் பயணம் அப்படியே கழிந்துவிட்டது. இன்னும் ஒரு மணிநேரம் பயணம் செய்தாகவேண்டும் அப்போது கல்யான் இரயில் நிலையத்தில் இரயில் நின்றது. அங்கே ஒரு அழகிய இளம்பெண், வீர்சிங் பயணித்த பெட்டியில் ஏறினாள்.

இரயில் புறப்பட்டது. ஐந்து நிமிடம் கழிந்ததும், அவள் மெதுவாக எழுந்து, அபாயச் சங்கிலிக்குப் பக்கத்தில் நின்றாள். சங்கிலியின் கைப்பிடியைப் பற்றிக்கொண்டாள்.பிறகு வீர்சிங்கைப் பார்த்து, உன் கையில் உள்ள ப்ரீப்கேஸை மரியாதையாக என்னிடம் கொடுத்துவிடு. இல்லையானால் அபாயச் சங்கியைப் பிடித்து இழுத்து இரயிலை நிறுத்துவேன். நீ என்னைக் கற்பழிக்க முயற்சி செய்ததாக கூச்சலிட்டு, உன்னை போலீஸில் மாட்டிவிடுவேன்.என்ன சொல்கிறாய்????? என்றாள்.

பார்த்தான் வீர்சிங். பணத்தைக் கொடுத்துவிட்டால், டெண்டரருக்கு உதவி செய்யும் ஆளுக்கு பணம் கொடுக்க இயலாமல் போகும். இனி மறுபடியும் பூனே சென்று பணம் எடுத்துவர நேரம் இல்லை இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் பணம் கொடுத்தாகவேண்டும்.அப்படி பணம் கொடுக்கவில்லை என்றால் டெண்டர் கிடைக்காது.

.. அவளிடம் பணம் கொடுக்காவிட்டால், அவள் நிச்சயமாக போலீஸிடம் மாட்டிவிடுவாள். அத்துடன் பொது மக்களின் இலவச மரியாதையை வேறு வீர்சிங் எதிர்கொள்ளவேண்டும்.பிறகு சரியான நேரத்துக்கு மும்பாய் சென்று காரியத்தைச் சாதிக்க இயலாது. அதனால் பணம் கையில் இருந்தும் டெண்டர் கிடைக்காது.

இந்த சூழ்நிலையில் தான் என்ன செய்வது என்று புரியாமல் வீர்சிங் குழப்பமடைந்து திகைத்துப் போய் நின்றான். அவனது செல் நம்பர் 123456789.

மன்ற நண்பர் யாராவது அவன் இந்த சிக்கலில் இருந்து எப்படி மீண்டு டெண்டரைக் கைப்பற்றுவது என்று அவனுக்கு வழி கூறுங்களேன்.

aren
29-04-2006, 03:10 AM
நீ உள்ளே வரும்பொழுது நீ அழகானவள் என்று நினைத்தேன், நீ மிகவும் புத்திசாலி. ஆகையால் என் சிறிய பெட்டியில் இருக்கும் பணத்தை உனக்கு கொடுத்து உன்னுடைய மதிப்பை குறைவாக எடைபோட என்னால் முடியாது. ஆகையால் இது என்னுடைய டெலிபோன் நம்பர். நீ எனக்கு போன் செய்துவிட்டு என்னுடைய அலுவகத்திற்கு வந்து அதிகமான பணத்தை வாங்கிக்கொண்டு செல் என்று சொல்லியிருப்பான்.

இன்னொரு வழி:

நான் உனக்கு இதைவிட அதிகமாக பணம் தருகிறேன். நீ இந்த பெட்டியை டெண்டர் அதிகாரியிடம் கொடுத்துவிட்டு அவரை எங்களுடைய கம்பெனிக்கு ஆர்டர் கொடுக்கச்சொல். இது என்னுடிடைய செல் நம்பர். காரியம் முடிந்தவுடன் உனக்கு பணம் கொடுக்கிறேன் என்று சொல்லியிருப்பான்.

aren
29-04-2006, 03:12 AM
அல்லது,

வீர்சிங் தன்னுடைய செல் போனை அந்த பெண்ணிடம் கொடுத்து, நீ இந்த அதிகாரிக்கு போன் செய்து எங்கள் கம்பெனிக்கு ஆர்டர் கொடுக்கவேண்டும், இல்லையேல் நான் உன் மனைவியிடம் சென்று நீ என்னை வைத்திருக்கிறாய் என்று சொல்லிவிடுவேன் என்று சொல்ல சொல்லியிருக்கலாம். அப்படி செய்தால் தன்னுடைய கைப்பெட்டியில் இருக்கும் பணத்தை உனக்கே கொடுத்துவிடுகிறேன் என்று சொல்லியிருக்கலாம்.

மதி
29-04-2006, 03:24 AM
அடாடா...
ஒரு சஸ்பென்ஸ் கதை போல இருக்கே..

ரயில் முதல் வகுப்புப் பெட்டியில் தான் விஷயம் இருக்க வேண்டும்.

யாராவது மூளை உள்ளவங்க சீக்கிரம் விடைய சொல்லுங்கப்பா...!

aren
29-04-2006, 03:28 AM
யாராவது மூளை உள்ளவங்க சீக்கிரம் விடைய சொல்லுங்கப்பா...!

அப்போ எனக்கு மூளை இல்லை என்று சொல்லிவிட்டீர்கள். பரவாயில்லை, அது எனக்கே தெரிந்த விஷயம்தான்.

மதி
29-04-2006, 03:48 AM
அப்போ எனக்கு மூளை இல்லை என்று சொல்லிவிட்டீர்கள். பரவாயில்லை, அது எனக்கே தெரிந்த விஷயம்தான்.
அய்யோ..
நான் என்னைய சொன்னேன்..

நான் பதிப்பிப்பதற்கு முன் உங்கள் விடைகளை படிக்கவில்லை..அதான்.

தப்பாய் எடுத்துக்கொள்ளாதீர்.:eek: :eek: :eek:

பரஞ்சோதி
30-04-2006, 04:53 PM
அய்யோ..
நான் என்னைய சொன்னேன்..

நான் பதிப்பிப்பதற்கு முன் உங்கள் விடைகளை படிக்கவில்லை..அதான்.

தப்பாய் எடுத்துக்கொள்ளாதீர்.:eek: :eek: :eek:

ஆஹா, ஆரென் அண்ணா போட்டு வாங்குகிறாரா?

பாவம் ராஜேஷ், முழிக்கிற முழி சரியில்லை, விட்டுடுங்க அண்ணா. :D

மதி
01-05-2006, 04:21 PM
ஆஹா, ஆரென் அண்ணா போட்டு வாங்குகிறாரா?

பாவம் ராஜேஷ், முழிக்கிற முழி சரியில்லை, விட்டுடுங்க அண்ணா. :D
சத்தியமா..நான் பாவம்..

sarcharan
02-05-2006, 05:14 AM
சத்தியமா..நான் பாவம்..
ஹ்ம்ம் என்ன சொன்னீங்க.....:)

gragavan
02-05-2006, 06:56 AM
முதல் வகுப்பு...தொலைபேசி எண்....இதுலதான் இருக்கு சூச்சுமம்..........என்னான்னு தெரியலையே.........

neethi23
11-05-2006, 12:56 AM
Answer me pls

பென்ஸ்
12-05-2006, 02:09 PM
அட என்ன ஆச்சு ...
PGK புதிர் போட்டா எல்லோரும் வந்து நீயா நானா என்று பதில் சொல்லுவாங்க....
இப்போ பதில் குறைவா இருக்கு....

சரி... ஆரென் பதில் சரிதானா PGK????

gragavan
13-05-2006, 05:29 AM
எனக்கு ஒன்னும் தெரியல....விடையச் சொல்லுங்க....

சேரன்கயல்
19-05-2006, 04:07 AM
சீக்கிரம் கண்டுபுடிங்கப்பா...
முதல் வகுப்பு பெட்டி, கையில் ஒரு பெட்டி, அழகான பெண், செல் ஃபோன்....
(வீர்சிங் ரேஞ்சில் ஒரு ஐடியா பண்ணனும்)

pradeepkt
19-05-2006, 10:25 AM
லொள்ளிக்கிட்டே இருக்கீங்களே ராசா
நீங்கதான் விடையச் சொல்றது???

சேரன்கயல்
19-05-2006, 10:46 AM
அழகான பொண்ணு இருக்கிறதால....நமக்கும் வீர்சிங் போலவே எந்த யோசனையும் வரமாட்டேங்குது பிரதீப்பு...(நமக்குன்னு சொன்னது சரிதானே..!!!!!!!)

aren
20-05-2006, 03:05 AM
நான் இரண்டு விடைகளைச் சொன்னேன், ஆனால் அது இரண்டும் சரியாக இருக்காது என்று உங்கள் பதிவுகளைப் பார்க்கும்பொழுது தெரிகிறது. வீர்சிங்கை நன்றாக புர்ந்து வைத்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது.

sarcharan
01-06-2006, 02:24 PM
நான் இரண்டு விடைகளைச் சொன்னேன், ஆனால் அது இரண்டும் சரியாக இருக்காது என்று உங்கள் பதிவுகளைப் பார்க்கும்பொழுது தெரிகிறது. வீர்சிங்கை நன்றாக புர்ந்து வைத்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது.

விடை என்னாயிற்று????????:confused: :confused:

pgk53
01-06-2006, 06:06 PM
அன்பு நண்பர்களே------விடுமுறை கழிந்து மீண்டும் பணியிடத்துக்குத் திரும்பிவிட்டேன். புதிருக்குரிய விடையை யாருமே சரியாகக் கூறவில்லையே????????????????????????
இது ஒன்றும் அவ்வளவு கடினமான புதிரும் இல்லை. கொஞ்சம் ஆலோசித்தால் இலகுவாகக் கூறியிருக்கலாம்..
சேரன் கயல்தான் புதிருக்குரிய விடையை எந்த அடிப்படையை வைத்து அனுகலாம் என்று ஓரளவுக்கு சரியாகக் கணித்துக்கூறியிருக்கிறார்.

பரவாயில்லை நானே கூறிவிடுகின்றேன்.

pgk53
01-06-2006, 06:06 PM
அந்தப் பெண் அவ்வாறு கூறியதும் செய்வதறியாமல் நீண்ட நேரம் திகைத்த வீர்சிங், பிறகு ஒரு முடிவுக்கு வந்தான். அவளிடம் தனது ப்ரீப்கேஸை நீட்டினான். அவள் வாங்கிக்கொண்டு அமைதியாக அமர்ந்தாள்.
வீர்சிங் டாய்லெட்டுக்குச் சென்று, தனது ஸெல்போனை உயிர்ப்பித்து, தாதர் அவசரப் போலீஸுக்கு ஒரு கால் போட்டான். தொடர்பு கிடைத்ததும், தாதருக்கு இன்னும் பத்து நிமிடத்தில் வந்தடைய உள்ள இரயிலில் முதல் வகுப்புப் பெட்டியில் ஒரு பெண் தனது ப்ரீப்கேஸில் வெடிகுண்டு வைத்துக் கடத்திச் செல்லுவதாகவும், அது தாதர் இரயில் நிலையத்தில் வெடிக்கக் கூடும் என்றும் தனது குரலை மாற்றிக் கூறினான்.

இரயில் தாதர் நிலையத்தை அடைந்தது. முதல் வகுப்புப் பெட்டியில் பாய்ந்து ஏறிய போலீஸார், வீர்சிங் இருந்த பகுதிக்குள் முற்றுகை இட்டார்கள். அந்தப் பெண் ஒன்றும் புரியாமல் திகைத்து விழித்தாள்.போலீஸார் அவளது கைப்பெட்டியில் வெடிகுண்டு இருப்பதாக அவர்களுக்கு ஒரு தகவல் கிடைத்ததாகக் கூறி அவளை பெட்டியைத் திறக்கும்படி கேட்டார்கள்.
அவளோ வெடிகுண்டு என்றதும் தலைமுதல் கால்வரை நடுக்கினாள்.உடனே போலீஸாரைப் பார்த்து, அய்யோ இது எனது பெட்டி அல்ல. இதோ இவரது பெட்டிதான் என்று கூறியபடி பெட்டியை வீர்சிங் காலடியில் வைத்தாள்.
வீர்சிங்கும் புண்முறுவலுடன், ஆமாம் அது தனது பெட்டிதான் என்றான். இருப்பினும் போலீஸ் அந்தப் பெட்டியைத் திறக்கும்படி கூற, வீர்சிங் தன்னிடம் இருந்த சாவியினால் பெட்டியைத் திறதான். உள்ளே பணத்தைத் தவிர வேறேதும் இல்லாததினால் சமாதானம் அடைந்த போலீஸார், மேலும் சோதனையிட அடுத்த பகுதிக்கு நகர்ந்தார்கள்.
வீர்சிங் அந்தப் பெண்ணை ஏளனமாகப் பார்த்து, தனது மீசையை முறுக்கியபடி , பெட்டியை எடுத்துக்கொண்டு இரயிலை விட்டு இறங்கினான்.

அறிஞர்
01-06-2006, 07:07 PM
அருமை... பிஜிகே... வீர்சிங் டெண்டர் எடுத்து நிரந்தர வேலையில் அமர்ந்துவிட்டானா..
--
அடுத்த புதிர் கொடுங்கள்

தீபன்
05-06-2006, 04:13 PM
வெடிகுண்டு புரளியை கிளப்பியதற்காக வீர்சிஙிற்கு தண்டனை கிடைத்ததா இல்லையா...?
(அவரின் கை தொலைபேசி இலக்கத்தை வைத்து அவர்தான் அத் தகவலை பொலிசுக்கு சொன்னதென பொலிஸ் கண்டுபிடித்திருக்கும்தானே..)

தாமரை
06-06-2006, 04:31 AM
வெடிகுண்டு புரளியை கிளப்பியதற்காக வீர்சிஙிற்கு தண்டனை கிடைத்ததா இல்லையா...?
(அவரின் கை தொலைபேசி இலக்கத்தை வைத்து அவர்தான் அத் தகவலை பொலிசுக்கு சொன்னதென பொலிஸ் கண்டுபிடித்திருக்கும்தானே..)
அப்போ அந்த பணத்தை போலீஸுக்கு கொடுத்து தப்பிக்க வேண்டியது தான்!!! ஹி ஹி ஹி

pgk53
06-06-2006, 02:05 PM
போலீஸைச் சமாளிப்பதை வீர்சிங் அப்புறமாகப் பார்த்துக்கொண்டான்.
அவனுக்கு அவனது டெண்டர் வேலை நல்லபடியாக முடிந்ததே . அதே பெரிய காரியமல்லவா?


சரி அடுத்த புதிருக்குப் போவோமா?
விரைவில் புதிருடன் வருகிறேன்.

aren
06-06-2006, 02:13 PM
போலீஸைச் சமாளிப்பதை வீர்சிங் அப்புறமாகப் பார்த்துக்கொண்டான்.
அவனுக்கு அவனது டெண்டர் வேலை நல்லபடியாக முடிந்ததே . அதே பெரிய காரியமல்லவா?


சரி அடுத்த புதிருக்குப் போவோமா?
விரைவில் புதிருடன் வருகிறேன்.

விடை தெரிகிறமாதிரி இருக்கும் புதிராகக் கொடுங்கள்.

நம்ம வீர்சிங் மாதிரியெல்லாம் நம்மால் சிந்திக்க முடியாது. ஆகையால் எளிதான புதிராக கொடுக்கவும்.

தாமரை
07-06-2006, 08:24 AM
போலீஸைச் சமாளிப்பதை வீர்சிங் அப்புறமாகப் பார்த்துக்கொண்டான்.
அவனுக்கு அவனது டெண்டர் வேலை நல்லபடியாக முடிந்ததே . அதே பெரிய காரியமல்லவா?


சரி அடுத்த புதிருக்குப் போவோமா?
விரைவில் புதிருடன் வருகிறேன்.
பேசி விட்டு செல்ஃபோனை வெளியே வீசிவிட்டு கூடவே செல்ஃபோனைக் காணவில்லை என ராகவனைப் போல கம்ப்ளெய்ண்ட் செய்து விட வேண்டியதுதான்:D :D :D

gragavan
07-06-2006, 09:06 AM
பேசி விட்டு செல்ஃபோனை வெளியே வீசிவிட்டு கூடவே செல்ஃபோனைக் காணவில்லை என ராகவனைப் போல கம்ப்ளெய்ண்ட் செய்து விட வேண்டியதுதான்:D :D :Dஅதென்னங்க ராகவனைப் போல? இது என்னாங்குறேன்? ஏன்னு கேக்குறேன்?

தாமரை
07-06-2006, 12:23 PM
அதென்னங்க ராகவனைப் போல? இது என்னாங்குறேன்? ஏன்னு கேக்குறேன்?
தெரியல? தெரியல? இந்த போஸ்டையே நல்லா பாருங்க தெரியும்..இந்த போஸ்டையே நல்லா பாருங்க...

ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா

pgk53
09-06-2006, 02:03 PM
புதிர் எண் 220

நமது வீரதீர நாயகன் வீர்சிங் பூனேயில் இருந்து இரயிலில் பயணித்தபோது நடந்த சம்பவத்தை அனைவரும் அறிவீர்கள்.
அந்த சம்பவம் நடந்தபிறகு, வீர்சிங்கின் கம்பெனிக்கு புதிய வேலை கிடைத்து லட்சக்கணக்கான ரூபாய் லாபம் கிடைத்தது. அதனால் மனம் மகிழ்ந்த கம்பெனி வீர்சிங்கிற்கு ஒரு நல்ல தொகையைப் பரிசாக அளித்தது.

வீர்சிங் தனது நண்பர்கள் மூவருடன் கூட்டு சேர்ந்து அனைவரும் பணம் போட்டு ஒரு தொழில் ஆரம்பிக்க தீர்மானித்தான்.
வீர்சிங்கின் நண்பர்கள், மோர்சிங், பீர்சிங் மற்றும் கார்சிங் அனைவருடனும் ஆலோசித்து ஒரு ஹோட்டல் தொடங்க முடிவு செய்தான்.

பூனேயில் நல்ல இடமாகத் தேர்வு ச்ய்து, கட்டிடத்தை வாடகைக்குப் பிடித்தார்கள்.
அதன் உட்புறம் எல்லாமே வீர்சிங் தனது கம்பெனியில் எப்படி அழகு படுத்தியிருந்தார்களோ அப்படியே நிறைய பணம் செலவழித்து அழகு செய்தான்
.
நல்ல சமையல்காரர்களைத் தேர்வு செய்தான்.
உணவு மிகவும் தரமாக இருக்கும்படி உத்திரவு கொடுத்தான்.
அவர்களும் அதுபோலவே சிறந்த சுவையான உணவாகச் சமைத்துவவத்தார்கள்.

ஹோட்டலை திறந்தார்கள்.
முதல்நாள் யாருமே ஹோட்டலுக்கு உள்ளே வரவில்லை.
வந்தவர்கள் எல்லாம் வெளியே நின்று ஹோட்டலைப் பார்த்துவிட்டுத் திரும்பிச் சென்றார்கள்.
ஒரு வாரம் ஆனது
இரண்டு வாரங்கள் ஆனது. யாருமே வரவில்லை.
ஆனால் அக்கம் பக்கத்தில் உள்ள எல்லா ஹோட்டல்களிலும் சிறப்பாக வியாபாரம் நடந்துகொண்டுதான் இருந்தது.

சமைத்த உணவை தினமும் குப்பையில் கொட்டினார்கள்.
ஒரு மாதம் ஆகியும் யாருமே ஹோட்டலுக்கு வராததினால் வீர்சிங்கும் நண்பர்களும் ஆலோசனை செய்து ஹோட்டலை இழுத்து மூடினார்கள்.

அக்கம் பக்கம் இருந்த ஹோட்டல்களில் எல்லாம் நன்றாக வியாபாரம் நடந்தும், வீர்சிங்கின் ஹோட்டலுக்கு மட்டும் ஏன் யாருமே வரவில்லை.???????

நண்பர்களே பதில் கூறுங்கள்.!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

gragavan
09-06-2006, 03:14 PM
அட முருகா! எனக்குத் தெரியலையே!

பென்ஸ்
09-06-2006, 04:24 PM
"விசிட்டர்ஸ் நாட் அலவுட்" போர்ட் போட்டாங்களோ????

mukilan
09-06-2006, 06:06 PM
வீர் சிங் தனது உணவகத்தை தன் கம்பனி போல ஆடம்பரமாக அழகு செய்ததால் அது முதலில் ஒரு உணவகம் போலவே தோன்றவில்லை. அதனாலேயே யாரும் அந்த உணவகத்திற்கு வரவில்லை.

aren
10-06-2006, 03:34 AM
யாரும் உள்ளே உணவருந்தக்கூடாது என்று போர்டு வெளியே வைத்துவிட்டார்.

பரஞ்சோதி
10-06-2006, 06:10 AM
வீர்சிங் முன்னர் சலூனில் வேலை பார்த்தாரா, ஒரே கவர்ச்சி படங்கள் மாட்டியிருந்தாரா?

பாரதி
10-06-2006, 05:17 PM
ħ Ÿ šĢ " Ѩ ¢" Ţ Ĩ Ţ𼡧á...?!

ஓவியா
10-06-2006, 09:40 PM
பாரதி சாரின் விடையை, கன்வெர்டரில் மாற்றி பதிந்துள்ளேன்



நிறுவனத்தைப் போலவே உணவக வாசலில் "அந்நியர்கள் உள்ளே நுழைய அனுமதியில்லை" என்று விளம்பர பலகையை வைத்து விட்டாரோ...?!

pgk53
12-06-2006, 01:47 AM
அன்பு நண்பர்களே...............
நண்பர் பெஞ்சமின் அவர்கள் அனைவருக்கும் முதன்மையாக சரியான விடையைக் கூறிவிட்டார்.
அவரைத் தொடர்ந்து திரு - ஆரென் அவர்களும்....நண்பர் பாரதி அவர்களும் அதற்கு இணையாக சரியான விடையைக் கூறியுள்ளார்கள்.

அவர்கள் அனைவருக்குமே எனது வாழ்த்துக்கள்.

நாளை-------------- அடுத்த புதிருக்குப் போவோம்.
.
அடுத்து வரப்போகும் சில புதிர்களும் வீர்சிங்கை மையப் படுத்தியே அமைந்திருக்கும்.

pgk53
12-06-2006, 03:16 PM
புதிர் எண் 221

ஹோட்டல் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தினால் முதலில் மனம் தளர்ந்துபோயிருந்தாலும் வீர்சிங்கும் அவனது நண்பர்களும் பிறகு மனம் தெளிந்தார்கள்.

கடையை ஒரு விலைபேசி சாதனங்களை விற்று வந்த ஒரு கனிசமான பணத்தை வைத்து வேறு ஒரு வியாபாரம் தொடங்கலாம் என்று அவர்கள் முடிவு செய்தார்கள்.

ஆளாளுக்கு ஒரு யோசனையைக் கூறினாலும், வீர்சிங்கின் நண்பர்களில் ஒருவனான மோர்சிங்கின் ஆலோசனை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மோர்சிங் ஒரு மோட்டார் மெக்கானிக்.அதனால் அவனை முன்னிலைப்படுத்தி ஒரு மோட்டார் ரிப்பேர் காரேஜ் தொடங்கலாம் என்று தீர்மானித்து, பூனேயில் கேரேஜ் திறக்க ஒரு இடத்தைத் தேடினார்கள்.

மிகப் பெரிய இடம் அவசியம் இல்லை என்று சிறிய இடமாகத் தேடினார்கள்.
மிகுந்த சிரமத்துக்குப் பின் ஒரு இடம் கிடைத்தது.

கிடைத்த இடத்தை விடாமல் அட்வான்ஸ் கொடுத்து, கேரேஜுக்குத் தேவையான உபகரணங்களை வாங்கி ஒரு நல்ல நாளில் பூஜையும் செய்தார்கள்.


முதல் காருக்காகக் காத்திருந்தார்கள். வீதியெங்கும் நோட்டீஸ் அடித்து ஒட்டியிருந்தபோதும் ஒரு கார்கூட கேரேஜுக்குள் வரவில்லை.

காத்திருந்து காத்திருந்து பத்து நாட்கள் போனபின்பும் கார் ஒன்றுகூட கேரேஜுக்கு வராததினால் ,நம்மிக்கையை இழந்தார்கள் வீர்சிங்கும் அவனது நண்பர்களும்.
என்ன செய்வது என்று ஆலோசிக்கத் தொடங்கினார்கள்.

மன்ற நண்பர்களே----வீர்சிங்கின் கேரேஜுக்கு ஏன் ஒரு காரும் வரவில்லை.????????

இனியவன்
12-06-2006, 03:28 PM
மன்ற நண்பர்களே----வீர்சிங்கின் கேரேஜுக்கு ஏன் ஒரு காரும் வரவில்லை.????????
[/QUOTE]

அவர்கள் தேர்ந்தெடுத்த ஊரில் காரே இல்லை.

பென்ஸ்
12-06-2006, 03:54 PM
மேல்மாடியில் கடை வைத்திருந்தார்...

PGK.. இந்த வரிசை புதிர் நான் ஏற்க்கனவே வாசித்த மாதிரி இருக்கு...

றெனிநிமல்
12-06-2006, 03:59 PM
அடடா! தொடராகவே செல்கின்றதா புதிர்?
முன்னர் உள்ளதையும் வாசித்துவிட்டு வருகின்றேன்.