முரளி
21-12-2012, 08:52 AM
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcRSZxOS_Sh6ddjhQ3PD4sNXIvYSZeLTjwHy1gBQggz-SAglE7Dn
நேரம் காலை 7.30 மணி.
முகேஷ் தனது மோட்டார் பைக்கை துடைத்துக் கொண்டிருந்தான். அவனுக்கு வயது ஒரு 30 இருக்கும். ஒரு கணிணி சம்பந்தபட்ட அலுவலகத்தில் மென்பொருள் எழுதும் வேலை. கேளம்பாக்கம், சென்னை. நடுத்தர வர்க்க மக்கள் கடனில் கட்டிய வீடுகள். ஒன்று அமரரான அவனது அப்பாவுடையது. அந்த வீட்டு மாடியை வாடகைக்கு விட்டிருந்தார்கள். கீழே முகேஷும் அவனது அம்மாவும் குடியிருந்தார்கள்.
மாடி வீட்டு அனு, அழகான 7 வயது பள்ளி சிறுமி. ரொம்ப ஸ்மார்ட். அணில் போல துறு துறு. பள்ளிசீருடையில், தூக்க முடியாமல் , புத்தக பையுடன் மாடியிலிருந்து இறங்கினாள்.
“ஹாய் அனு, ஸ்கூல் கிளம்பியாச்சா!” முகேஷின் கேள்விக்கு அனுவின் “ஆமா!” என்ற அரைகுறை முனகல்.
வாசலில், அனுவைப்போலவே 7-8 சிறுவர் சிறுமியர், பள்ளி பேருந்துக்காக காத்துக்கொண்டு, பேசிக் கொண்டிருந்தனர்.. இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருந்தனர்.
வழக்கம் போல் ஸ்கூல் பஸ் 7.30 மணிக்கு வந்தது. வந்த பஸ், வழக்கம் போல் ஒரு 30 அடி தள்ளி நின்றது. பசங்கள், வழக்கம் போல் ‘ஓ’வென்று சத்தம் போட்டுக்கொண்டு ஓடி, ‘நான் முந்தி நீ முந்தி’ என்று முண்டியடித்துக் கொண்டு பேருந்தில் ஏறினர். வழக்கம் போல் அனு கொஞ்சம் பின்னால்.
இது தினம் நடப்பது வழக்கம் தான். இதை பார்த்துக்கொண்டே இருந்த முகேஷ், ஒரு நாள், அனுவிற்கு உதவி செய்ய நினைத்தான்.
அனுவின் அருகில் சென்று கேட்டான்: “ஆமாம்! அனு ! நீ பஸ் பிடிக்க ஏன் ஒரு நாளைப் போல ஓடற? ஏன் உனக்கு சீட் கிடைக்காதா?”
“ஏன் கேக்கறீங்க அண்ணா ? எல்லோருக்கும் சீட் இருக்கே!” - அனு
“பின்னே ஏன் நீ முன்டியடிச்சிகிட்டு ஓடற?” - முகேஷின் அடுத்த கேள்வி.
“முதல்லே வண்டியிலே ஏறணும்! அதுக்கு தான்.”- அனு
“ஏன் முதல்லே வண்டியிலே ஏறணும்?” - விடுவானா முகேஷ்.
“இது வரைக்கும் நான் பஸ்லே முதல்லே ஏறினதே இல்லே. எல்லாரும் எனக்கு முன்னாடியே எறிடறாங்க..” சொல்லும்போதே அனுவின் கண்கள் குளமானது.
“சரி! சரி , கண்ணை தொடச்சுக்கோ. நீ ஏன் முதல்லே ஏறணும்? என்ன கிடைக்கும் ? சாக்லேட் கிடைக்குமா ? வேறே எதாவது பரிசு கொடுப்பாங்களா என்ன ?”
அனு கொஞ்சம் யோசித்தாள். “அதெல்லாம் ஒண்ணும் இல்லியே!”.
“அப்போ நீ ஏன் அனு ஓடணும்?” முகேஷ் கேட்டான்.
அனு மீண்டும் யோசித்தாள். “தெரியல்லையே!”
புரிந்ததோ இல்லையோ, குழந்தை அனு ஓடி விட்டாள். பேருந்திலும் ஏறிக்கொண்டு விட்டாள்.
****
அடுத்த நாள் காலை.
வழக்கம்போல் வாசலில் முகேஷ் அவனது வண்டியை துடைத்துக் கொண்டிருந்தான். மாடியிலிருந்து கீழே இறங்குகையில், அனுவின் “ஹலோ அண்ணா” குரல். “ஹாய் அனு’ என்று முகேஷ் பதில் குரல் கொடுத்தான். அவன் அருகில் அனு வந்து நின்று கொண்டாள்.
வழக்கம் போல் பஸ் வந்தது. பசங்க அனைவரும் ஓடினர், அனுவைத்தவிர. இன்று அவள் ஓட வில்லை. நிதானமாக போய் பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டு முகேஷை பார்த்து கையாட்டினாள்.
முகேஷ்க்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அனுவிற்கு ஒரு பெரிய விஷயத்தை ரொம்ப சுலபமாக விளக்கிய திருப்தி. தன்னைத்தானே “நீ பெரிய புத்திசாலிடா முகேஷ்” மார்பில் தட்டிக்கொண்டான்..
மத்தவங்க விஷயத்திலே தேவையில்லாமல் தலையிடுவது முகேஷின் ஹாபி. மூக்கை நீட்டுபவர் பல ரகம். சிலருக்கு மற்றவர் விஷயங்களில் தலையிடுவது, என்பது ' தான் உயர்ந்தவன்' என்பதை காட்டிக் கொள்ளவே. தங்களது வாழ்க்கை தரத்தை ஒப்பிட்டு பார்த்துக்கொள்ள ஒரு சிலர், பொறாமை காரணமாக , விஷயம் என்ன என்று அறிந்து கொண்டு நேரடியாகவோ பின்னாலோ குறை கூற வேறு சிலர்.
'உங்களிடம் எனக்குஅக்கறை இருக்கிறது' என்பதை காட்டி கொள்ள மூக்கை நீட்டும் மூக்கர்கள் பலர் உண்டு. அனைவரது பிரச்னைகளுக்கும் இவர்களிடம் தீர்வு உண்டு, அவர்களது பிரச்னைகளை தவிர. முகேஷ் இந்த ரகம்.
அவன் பண்ணின வேண்டாத வேலையின் விபரீதம், அப்போது அவனுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை.
****
மூன்று நாள் கழித்து.
அனுவின் அம்மா, முகேஷின் அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தார்.
“என்ன ஆச்சுன்னே தெரியலை அக்கா! திடீர்னு அனுவின் போக்கே புரிபடலை. பசங்க கூட விளையாட மாட்டேங்கிறா. “சும்மா பந்து போட்டு பிடிச்சு விளையாடறாதாலே என்ன லாபம்? ஓடிப்போய் கம்பம் தொட்டு திரும்பி ஓடி வந்து விளையாடறதிலே என்ன பிரயோசனம்? நான் விளையாட போகலை! போகமாட்டேன்.” இதுமாதிரி ஏடாகூடமாக பேசறா. பள்ளி வகுப்பாசிரியை என்னை பள்ளியிலே வந்து பாக்க சொல்லியிருக்காங்க!” அனுவின் அம்மா குரலில் கவலை தெரிந்தது.
தற்செயலாக அங்கே வந்த முகேஷுக்கு ‘சொடேர்’ என்றது. ‘ஐயையோ ! அனுவின் மாற்றத்திற்கு தான் தான் காரணமோ? அனு போட்டு கொடுத்து விட்டால், அம்மாவுக்கு கொலவெறி வந்துடுமே!.’
****
இது நடந்து மூன்று நாட்கள் இருக்கும்.
அன்று ஞாயிற்றுக்கிழமை. அம்மா சொல்படி, முகேஷ், வீட்டில் ஒட்டடை அடித்துக் கொண்டிருந்தான். மெல்லியதாக ‘க்ருக் க்ருக்’ என்று ஒரு சத்தம். ஒரு கூட்டுப்புழு வண்ணத்துப்பூச்சியாக உருமாற கூட்டை உடைத்துக் கொண்டிருந்தது. தலை வெளியேவந்து விட்டது. ஆனால், அதன் . இறக்கை இன்னும் வெளியே வரவில்லை. முட்டி மோதிக் கொண்டிருந்தது. “ஐயோ பாவம்!”. பூச்சியின் அவஸ்தை, பார்த்துக் கொண்டிருந்த பரோபகாரி முகேஷின் மனம் பதைபதைத்தது. அவனுக்கு உதவி செய்ய ஆசை. உடனே, ஒரு மெல்லிய குச்சியை எடுத்து அந்த கூட்டை , ரொம்ப மெதுவாக குத்தி உடைத்தான். வண்ணத்துப்பூச்சி, கூட்டை விட்டு, வெளியே வந்து விட்டது. அதை பார்த்து முகேஷ் ‘ஆஹா! பூச்சியை காப்பாற்றி விட்டோமே! என எண்ணினான். பூரித்தான். . அவன் மனம் ஆனந்தத்தால் இறக்கை கட்டி பறந்தது.
பூச்சி மெல்ல தத்தி தத்தி நடந்தது. ..நடந்தது.... நடந்தது....ஆனால் பறக்கவேயில்லை.
முகேஷ் இப்போது அந்த பூச்சியையே ஆதங்கத்தோடு பார்த்துக்கொண்டேயிருந்தான்.
‘ஐயையோ! பூச்சிக்கு என்ன ஆயிற்று?’ அந்த வண்ணத்து பூச்சியின் இறக்கை இரண்டும் ஒட்டிக்கொண்டு, அது பறக்க முடியாமல் கீழே விழுந்து விட்டது. இப்போது முகேஷுக்கு புரிந்தது. கூட்டை அவசரப்பட்டு உடைத்ததனால், பூச்சிக்கு இந்த நிலை.
பூச்சியை அதன் போக்கில் விட்டிருந்தால், பூச்சி , தானே, அடித்து பிடித்து கூட்டை விட்டு வெளியே வந்து பறந்திருக்கும். பறக்கமுடியாமல் இப்போது பூச்சி இறந்து விடுமோ? தான் பூச்சி விஷயத்தில் அனாவசியமாக தலையிட்டிருக்க கூடாதோ?
****
மறுநாள் காலை நேரம் 7.30 மணி.
முகேஷ் தனது மோட்டார் பைக்கை துடைத்துக் கொண்டிருந்தான். பள்ளிக்கு போக தயாராக, அனுவும், கூட அவள் அம்மாவும் கீழே இறங்கிக் கொண்டிருந்தனர். . அனுவின்அம்மா அவளை அர்ச்சனை பண்ணிக் கொண்டே வர, அனு முகேஷ் பக்கம் கை காட்டி, கண்ணை கசக்கிக் கொண்டு ஏதோ சொல்லி கொண்டே வந்தாள். அனுவின் அம்மா, முகேஷை பார்த்த பார்வையில் நெருப்பு. முகேஷ் தலையை தாழ்த்திக் கொண்டான்.
வழக்கம் போல், பள்ளி பஸ் வந்தது. தள்ளி நின்றது. வழக்கம் போல், பசங்கள் ‘ஓ’வென்று சத்தம் போட்டுக்கொண்டு ‘நான் முந்தி நீ முந்தி’ என்று ஓடி, முண்டியடித்துக் கொண்டு பேருந்தில் ஏறினர். அனுவின் அம்மா அனுவை ஓடிபோய் ஏற ஊக்குவித்தார். அவளும் ஓடிப்போய் முண்டியடித்து வண்டியில் ஏறினாள். அனு சிரிக்க, அம்மா கை காட்டி அனுப்பி வைத்தார்.
அப்பா! தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது. அனுவின் அம்மா அனுவின் பிரச்சினையை ஏதோ கண்டித்து பேசி, சரி செய்து விட்டார். . வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட இதெல்லாம் ஒரு முன்னோட்டம் போலிருக்கு. . ..
முடிவு செய்து விட்டான் முகேஷ், இனி தன் ஹாபியை மாற்றுவதென்று. இன்றிலிருந்து, முந்திரி கொட்டையாக, மற்றவர் காரியங்களில், தன் மூக்கை நுழைப்பதில்லை. தேவையில்லாமல் தலையிடுவதில்லை.
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcTJPee3fIVBfMn2aG5QuFMmsuAXGmcD5q-MC_ZF44JopgKpKuiiHQ
**** முற்றும் ( நன்றி கூகிள் : வலையில் படித்த ஒரு துணுக்கில் பின்னிய வலை)
நேரம் காலை 7.30 மணி.
முகேஷ் தனது மோட்டார் பைக்கை துடைத்துக் கொண்டிருந்தான். அவனுக்கு வயது ஒரு 30 இருக்கும். ஒரு கணிணி சம்பந்தபட்ட அலுவலகத்தில் மென்பொருள் எழுதும் வேலை. கேளம்பாக்கம், சென்னை. நடுத்தர வர்க்க மக்கள் கடனில் கட்டிய வீடுகள். ஒன்று அமரரான அவனது அப்பாவுடையது. அந்த வீட்டு மாடியை வாடகைக்கு விட்டிருந்தார்கள். கீழே முகேஷும் அவனது அம்மாவும் குடியிருந்தார்கள்.
மாடி வீட்டு அனு, அழகான 7 வயது பள்ளி சிறுமி. ரொம்ப ஸ்மார்ட். அணில் போல துறு துறு. பள்ளிசீருடையில், தூக்க முடியாமல் , புத்தக பையுடன் மாடியிலிருந்து இறங்கினாள்.
“ஹாய் அனு, ஸ்கூல் கிளம்பியாச்சா!” முகேஷின் கேள்விக்கு அனுவின் “ஆமா!” என்ற அரைகுறை முனகல்.
வாசலில், அனுவைப்போலவே 7-8 சிறுவர் சிறுமியர், பள்ளி பேருந்துக்காக காத்துக்கொண்டு, பேசிக் கொண்டிருந்தனர்.. இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருந்தனர்.
வழக்கம் போல் ஸ்கூல் பஸ் 7.30 மணிக்கு வந்தது. வந்த பஸ், வழக்கம் போல் ஒரு 30 அடி தள்ளி நின்றது. பசங்கள், வழக்கம் போல் ‘ஓ’வென்று சத்தம் போட்டுக்கொண்டு ஓடி, ‘நான் முந்தி நீ முந்தி’ என்று முண்டியடித்துக் கொண்டு பேருந்தில் ஏறினர். வழக்கம் போல் அனு கொஞ்சம் பின்னால்.
இது தினம் நடப்பது வழக்கம் தான். இதை பார்த்துக்கொண்டே இருந்த முகேஷ், ஒரு நாள், அனுவிற்கு உதவி செய்ய நினைத்தான்.
அனுவின் அருகில் சென்று கேட்டான்: “ஆமாம்! அனு ! நீ பஸ் பிடிக்க ஏன் ஒரு நாளைப் போல ஓடற? ஏன் உனக்கு சீட் கிடைக்காதா?”
“ஏன் கேக்கறீங்க அண்ணா ? எல்லோருக்கும் சீட் இருக்கே!” - அனு
“பின்னே ஏன் நீ முன்டியடிச்சிகிட்டு ஓடற?” - முகேஷின் அடுத்த கேள்வி.
“முதல்லே வண்டியிலே ஏறணும்! அதுக்கு தான்.”- அனு
“ஏன் முதல்லே வண்டியிலே ஏறணும்?” - விடுவானா முகேஷ்.
“இது வரைக்கும் நான் பஸ்லே முதல்லே ஏறினதே இல்லே. எல்லாரும் எனக்கு முன்னாடியே எறிடறாங்க..” சொல்லும்போதே அனுவின் கண்கள் குளமானது.
“சரி! சரி , கண்ணை தொடச்சுக்கோ. நீ ஏன் முதல்லே ஏறணும்? என்ன கிடைக்கும் ? சாக்லேட் கிடைக்குமா ? வேறே எதாவது பரிசு கொடுப்பாங்களா என்ன ?”
அனு கொஞ்சம் யோசித்தாள். “அதெல்லாம் ஒண்ணும் இல்லியே!”.
“அப்போ நீ ஏன் அனு ஓடணும்?” முகேஷ் கேட்டான்.
அனு மீண்டும் யோசித்தாள். “தெரியல்லையே!”
புரிந்ததோ இல்லையோ, குழந்தை அனு ஓடி விட்டாள். பேருந்திலும் ஏறிக்கொண்டு விட்டாள்.
****
அடுத்த நாள் காலை.
வழக்கம்போல் வாசலில் முகேஷ் அவனது வண்டியை துடைத்துக் கொண்டிருந்தான். மாடியிலிருந்து கீழே இறங்குகையில், அனுவின் “ஹலோ அண்ணா” குரல். “ஹாய் அனு’ என்று முகேஷ் பதில் குரல் கொடுத்தான். அவன் அருகில் அனு வந்து நின்று கொண்டாள்.
வழக்கம் போல் பஸ் வந்தது. பசங்க அனைவரும் ஓடினர், அனுவைத்தவிர. இன்று அவள் ஓட வில்லை. நிதானமாக போய் பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டு முகேஷை பார்த்து கையாட்டினாள்.
முகேஷ்க்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அனுவிற்கு ஒரு பெரிய விஷயத்தை ரொம்ப சுலபமாக விளக்கிய திருப்தி. தன்னைத்தானே “நீ பெரிய புத்திசாலிடா முகேஷ்” மார்பில் தட்டிக்கொண்டான்..
மத்தவங்க விஷயத்திலே தேவையில்லாமல் தலையிடுவது முகேஷின் ஹாபி. மூக்கை நீட்டுபவர் பல ரகம். சிலருக்கு மற்றவர் விஷயங்களில் தலையிடுவது, என்பது ' தான் உயர்ந்தவன்' என்பதை காட்டிக் கொள்ளவே. தங்களது வாழ்க்கை தரத்தை ஒப்பிட்டு பார்த்துக்கொள்ள ஒரு சிலர், பொறாமை காரணமாக , விஷயம் என்ன என்று அறிந்து கொண்டு நேரடியாகவோ பின்னாலோ குறை கூற வேறு சிலர்.
'உங்களிடம் எனக்குஅக்கறை இருக்கிறது' என்பதை காட்டி கொள்ள மூக்கை நீட்டும் மூக்கர்கள் பலர் உண்டு. அனைவரது பிரச்னைகளுக்கும் இவர்களிடம் தீர்வு உண்டு, அவர்களது பிரச்னைகளை தவிர. முகேஷ் இந்த ரகம்.
அவன் பண்ணின வேண்டாத வேலையின் விபரீதம், அப்போது அவனுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை.
****
மூன்று நாள் கழித்து.
அனுவின் அம்மா, முகேஷின் அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தார்.
“என்ன ஆச்சுன்னே தெரியலை அக்கா! திடீர்னு அனுவின் போக்கே புரிபடலை. பசங்க கூட விளையாட மாட்டேங்கிறா. “சும்மா பந்து போட்டு பிடிச்சு விளையாடறாதாலே என்ன லாபம்? ஓடிப்போய் கம்பம் தொட்டு திரும்பி ஓடி வந்து விளையாடறதிலே என்ன பிரயோசனம்? நான் விளையாட போகலை! போகமாட்டேன்.” இதுமாதிரி ஏடாகூடமாக பேசறா. பள்ளி வகுப்பாசிரியை என்னை பள்ளியிலே வந்து பாக்க சொல்லியிருக்காங்க!” அனுவின் அம்மா குரலில் கவலை தெரிந்தது.
தற்செயலாக அங்கே வந்த முகேஷுக்கு ‘சொடேர்’ என்றது. ‘ஐயையோ ! அனுவின் மாற்றத்திற்கு தான் தான் காரணமோ? அனு போட்டு கொடுத்து விட்டால், அம்மாவுக்கு கொலவெறி வந்துடுமே!.’
****
இது நடந்து மூன்று நாட்கள் இருக்கும்.
அன்று ஞாயிற்றுக்கிழமை. அம்மா சொல்படி, முகேஷ், வீட்டில் ஒட்டடை அடித்துக் கொண்டிருந்தான். மெல்லியதாக ‘க்ருக் க்ருக்’ என்று ஒரு சத்தம். ஒரு கூட்டுப்புழு வண்ணத்துப்பூச்சியாக உருமாற கூட்டை உடைத்துக் கொண்டிருந்தது. தலை வெளியேவந்து விட்டது. ஆனால், அதன் . இறக்கை இன்னும் வெளியே வரவில்லை. முட்டி மோதிக் கொண்டிருந்தது. “ஐயோ பாவம்!”. பூச்சியின் அவஸ்தை, பார்த்துக் கொண்டிருந்த பரோபகாரி முகேஷின் மனம் பதைபதைத்தது. அவனுக்கு உதவி செய்ய ஆசை. உடனே, ஒரு மெல்லிய குச்சியை எடுத்து அந்த கூட்டை , ரொம்ப மெதுவாக குத்தி உடைத்தான். வண்ணத்துப்பூச்சி, கூட்டை விட்டு, வெளியே வந்து விட்டது. அதை பார்த்து முகேஷ் ‘ஆஹா! பூச்சியை காப்பாற்றி விட்டோமே! என எண்ணினான். பூரித்தான். . அவன் மனம் ஆனந்தத்தால் இறக்கை கட்டி பறந்தது.
பூச்சி மெல்ல தத்தி தத்தி நடந்தது. ..நடந்தது.... நடந்தது....ஆனால் பறக்கவேயில்லை.
முகேஷ் இப்போது அந்த பூச்சியையே ஆதங்கத்தோடு பார்த்துக்கொண்டேயிருந்தான்.
‘ஐயையோ! பூச்சிக்கு என்ன ஆயிற்று?’ அந்த வண்ணத்து பூச்சியின் இறக்கை இரண்டும் ஒட்டிக்கொண்டு, அது பறக்க முடியாமல் கீழே விழுந்து விட்டது. இப்போது முகேஷுக்கு புரிந்தது. கூட்டை அவசரப்பட்டு உடைத்ததனால், பூச்சிக்கு இந்த நிலை.
பூச்சியை அதன் போக்கில் விட்டிருந்தால், பூச்சி , தானே, அடித்து பிடித்து கூட்டை விட்டு வெளியே வந்து பறந்திருக்கும். பறக்கமுடியாமல் இப்போது பூச்சி இறந்து விடுமோ? தான் பூச்சி விஷயத்தில் அனாவசியமாக தலையிட்டிருக்க கூடாதோ?
****
மறுநாள் காலை நேரம் 7.30 மணி.
முகேஷ் தனது மோட்டார் பைக்கை துடைத்துக் கொண்டிருந்தான். பள்ளிக்கு போக தயாராக, அனுவும், கூட அவள் அம்மாவும் கீழே இறங்கிக் கொண்டிருந்தனர். . அனுவின்அம்மா அவளை அர்ச்சனை பண்ணிக் கொண்டே வர, அனு முகேஷ் பக்கம் கை காட்டி, கண்ணை கசக்கிக் கொண்டு ஏதோ சொல்லி கொண்டே வந்தாள். அனுவின் அம்மா, முகேஷை பார்த்த பார்வையில் நெருப்பு. முகேஷ் தலையை தாழ்த்திக் கொண்டான்.
வழக்கம் போல், பள்ளி பஸ் வந்தது. தள்ளி நின்றது. வழக்கம் போல், பசங்கள் ‘ஓ’வென்று சத்தம் போட்டுக்கொண்டு ‘நான் முந்தி நீ முந்தி’ என்று ஓடி, முண்டியடித்துக் கொண்டு பேருந்தில் ஏறினர். அனுவின் அம்மா அனுவை ஓடிபோய் ஏற ஊக்குவித்தார். அவளும் ஓடிப்போய் முண்டியடித்து வண்டியில் ஏறினாள். அனு சிரிக்க, அம்மா கை காட்டி அனுப்பி வைத்தார்.
அப்பா! தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது. அனுவின் அம்மா அனுவின் பிரச்சினையை ஏதோ கண்டித்து பேசி, சரி செய்து விட்டார். . வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட இதெல்லாம் ஒரு முன்னோட்டம் போலிருக்கு. . ..
முடிவு செய்து விட்டான் முகேஷ், இனி தன் ஹாபியை மாற்றுவதென்று. இன்றிலிருந்து, முந்திரி கொட்டையாக, மற்றவர் காரியங்களில், தன் மூக்கை நுழைப்பதில்லை. தேவையில்லாமல் தலையிடுவதில்லை.
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcTJPee3fIVBfMn2aG5QuFMmsuAXGmcD5q-MC_ZF44JopgKpKuiiHQ
**** முற்றும் ( நன்றி கூகிள் : வலையில் படித்த ஒரு துணுக்கில் பின்னிய வலை)