A Thainis
21-12-2012, 06:58 AM
திசம்பர் இருபத்தியந்து இன்று
உலகிற்கே நற்செய்தி கிடைத்திருக்கு
பிரபஞ்சமொன்று பிறந்திருக்கு - அது
மனித குழந்தையாக மலர்ந்திருக்கு
இரவொன்றை பகலாக்க வானத்து
சூரியன் வையகம் வந்திருக்கு
கடும் குளிர் காலத்தில்
வயலெல்லாம் வசந்தங்கள் பூத்திருக்கு
ஏழை என்னில்லம் தேடி
விண்ணவன் மகிழுந்துண்ண வந்திருக்கு
அன்பென்றே வாழ்ந்திடுக
அருள்மொழியால் வாழ்த்திருக்கு
உள்ளமெல்லாம் ஒளிவெள்ளமாகிட
அமைதியை பரிசாக தந்திருக்கு
இனிவரும் காலம் இன்பமென்றே
புதிய நம்பிக்கை ஏற்றிருக்கு
கிறிஸ்து அருளும், அன்பும், அமைதியும், மகிழ்ச்சியும், மன்னிப்பும், சகோதரத்துவமும் நமது உள்ளத்தையும், இல்லத்தையும், இகத்தையும் நிறைவாக நிறைக்கட்டும்.
மன்ற உறவினர் அனைவருக்கும் என் நெஞ்சம் நெகிழ்ந்த கிறிஸ்து பிறப்பு பெருவிழா நல்வாழ்த்துக்கள்.
உலகிற்கே நற்செய்தி கிடைத்திருக்கு
பிரபஞ்சமொன்று பிறந்திருக்கு - அது
மனித குழந்தையாக மலர்ந்திருக்கு
இரவொன்றை பகலாக்க வானத்து
சூரியன் வையகம் வந்திருக்கு
கடும் குளிர் காலத்தில்
வயலெல்லாம் வசந்தங்கள் பூத்திருக்கு
ஏழை என்னில்லம் தேடி
விண்ணவன் மகிழுந்துண்ண வந்திருக்கு
அன்பென்றே வாழ்ந்திடுக
அருள்மொழியால் வாழ்த்திருக்கு
உள்ளமெல்லாம் ஒளிவெள்ளமாகிட
அமைதியை பரிசாக தந்திருக்கு
இனிவரும் காலம் இன்பமென்றே
புதிய நம்பிக்கை ஏற்றிருக்கு
கிறிஸ்து அருளும், அன்பும், அமைதியும், மகிழ்ச்சியும், மன்னிப்பும், சகோதரத்துவமும் நமது உள்ளத்தையும், இல்லத்தையும், இகத்தையும் நிறைவாக நிறைக்கட்டும்.
மன்ற உறவினர் அனைவருக்கும் என் நெஞ்சம் நெகிழ்ந்த கிறிஸ்து பிறப்பு பெருவிழா நல்வாழ்த்துக்கள்.