PDA

View Full Version : விழா அழைப்பிதழ்... விழா படங்களுடன்.. கலைவேந்தன்.



கலைவேந்தன்
18-12-2012, 03:12 PM
அன்பார்ந்த நண்பர்களே,

உங்கள் கலைவேந்தனின் கவிதைத் தொகுப்பு ‘’ ஒரு கவிஞனின் காகிதம் ‘’ புத்தக வெளியீட்டு விழாவுக்கு உங்கள் அனைவரையும் சிரம் தாழ்த்தி வரவேற்கிறேன்.

அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

இதோ அழைப்பிதழ் உங்களுக்காக...

http://sphotos-a.ak.fbcdn.net/hphotos-ak-ash4/386001_10200243023064029_1102008985_n.jpg

புத்தக அமைப்பின் படம் :

http://sphotos-h.ak.fbcdn.net/hphotos-ak-ash4/481038_10200243127746646_63890046_n.jpg


நன்றியுடன் என்றும் உங்கள்

கலைவேந்தன்

PUTHUVAI PRABA
18-12-2012, 04:43 PM
வெளியீட்டு விழா இனிதே நடைபெறவும் தங்கள் கவிதைத் தொகுப்பு வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்

கோபாலன்
18-12-2012, 05:29 PM
வர இயலாமைக்கு வருந்துகிறேன். விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்:)

ஆதி
18-12-2012, 05:52 PM
மிக மிக மிக மகிழ்ச்சியான விடயம் ஐயா, என்ன ஐயாவ ஆள காணலையே நு யோசிச்சுடே இருந்தென் இது தன் விஷ்யமா ?

உளப்பூர்வமான வாழ்த்துக்கள் ஐயா

கும்பகோணத்துப்பிள்ளை
18-12-2012, 07:12 PM
விழா இனிதே நிறைவேற எனது வேண்டுதல்கள்!

அமரன்
18-12-2012, 08:51 PM
அகம் மகிழ்கிறது கலை.

மன்றத்தில் எழுதும் ஒவ்வொருவர் படைப்பும் அச்சேற வேண்டும், நூலாக்கப்படல் வேண்டும் என்ற ஆசை எப்போதும் எனக்குண்டு. அதற்கு நாம் என்ன செய்யலாம் என்று செல்வா உள்ளிட்ட பலருடன் கதைத்ததும் உண்டு. என் ஆசை நிறைவேறியதில் மகிழ்ச்சி.

இன்னும் பல நூல்களில் நீங்கள் வாழ என் நெஞ்சார்ந்த வாழ்த்து.

M.Jagadeesan
18-12-2012, 11:39 PM
விழா இனிதே நடைபெற என் வாழ்த்துக்கள்! வளர்க கலைவேந்தன் அவர்களின் இலக்கியத்தொண்டு!

Mano.G.
19-12-2012, 12:34 AM
வாழ்த்துக்கள் ஐயா

மென்மேலும் வளர்ந்து புகழ் பெற வாழ்த்துக்கள்

ஜானகி
19-12-2012, 01:31 AM
விழா[வில்] சிறக்க வாழ்த்துக்கள் ! பெருமிதம் கொள்கிறோம், தங்களுடன் மன்றத்தில் உலா வர....

கலைவேந்தன்
19-12-2012, 03:18 AM
அகமகிழ்ந்து வாழ்த்திய நண்பர்கள் புதுவைப் பிரபா கோபாலன் ஆதி கும்பகோணத்துப் பிள்ளை அமரன் ஜகதீசன் ஐயா மனோ ஜி மற்றும் ஜானகி ஆகியோர் அனைவருக்கும் என் உளங்கனிந்த நன்றிகள். சென்னை மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள நண்பர்கள் கலந்துகொண்டால் அகமகிழ்வேன்.

மச்சான்
19-12-2012, 03:21 AM
கலைவேந்தன் அவர்களின் கவிதைத்தொகுப்பான "ஒரு கவிஞனின் காகிதம்" புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தேறிட மச்சான் வாழ்த்துகிறேன்.:aktion033:

மதி
19-12-2012, 04:23 AM
மிக மிக சந்தோசமான விஷயம் கலைவேந்தரே. வாழ்த்துக்கள். ஞாயிறன்று சென்னையில் இருந்தால் வர பார்க்கிறேன்..

இராஜேஸ்வரன்
19-12-2012, 04:24 AM
இனிய வாழ்த்துக்கள் நண்பரே. உங்களின் இன்னும் பல படைப்புகள் அச்சேற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

கலைவேந்தன்
19-12-2012, 04:54 AM
நண்பர்கள் மச்சான், மதி மற்றும் இராஜேஸ்வரன் ஆகியவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

முரளி
19-12-2012, 05:03 AM
மிக மிக மிக மகிழ்ச்சி. வாழ்க பல்லாண்டு. உங்கள் படைப்புகள் நீண்டகாலம் வாழும்.. வாழட்டும்.

தங்கள் கவிதைத் தொகுப்பு வெற்றி பெற, வெளியீட்டு விழா இனிதே நடைபெற வாழ்த்துக்கள். வளர்க கலைவேந்தன் அவர்களின் இலக்கியத்தொண்டு!

தாமரை
19-12-2012, 01:55 PM
வந்து கலந்து கொள்ள ஆசைதான். பார்ப்போம் இறைவன் இச்சை எப்படியென்று..(இன்றைய சூழ்நிலையில் 3 சதவிகித வாய்ப்பு இருக்கு) :)

உங்கள் அனுபவங்களை மன்ற மக்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். இதே போல் ஒரு நாள் ஒரு அழைப்பிதழில் அனைத்தும் தமிழ் மன்ற உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்பது என் பேராசை...

வாழ்த்துகள் கலை வேந்தன்

குணமதி
19-12-2012, 02:06 PM
மனமார்ந்த வாழ்த்தைத் தெரிவிக்கின்றேன்.

உங்கள் படைப்பாக்க வெளிப்பாட்டு வெற்றி தொடரட்டும்!

சுகந்தப்ரீதன்
19-12-2012, 04:24 PM
மிகவும் மகிழ்வான செய்தி... விழா இனிதே நடைபெறட்டும்.. படைப்புகள் அனைத்தும் வெற்றிபெறட்டும்... கலையண்ணாவுக்கு எமது இனிய வாழ்த்துக்கள் ..!!:icon_b:

Keelai Naadaan
19-12-2012, 04:26 PM
மிகவும் மகிழ்ச்சி கலை வேந்தரே.

இலக்கிய பணியில் தாங்கள் சிறந்து விளங்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.

A Thainis
21-12-2012, 07:05 AM
நமது பாசமிகு கவிஞர் கலைவேந்தனின் அரிய கவிப்படைப்பான ஒரு கவிஞனின் காகிதம் சிறக்கட்டும், வாழ்த்துக்கள், கலை வளர்க, உங்கள் நிழலில் தமிழ் என்றும் வளரட்டும்.

மற்ற கவிஞர்களுக்கும் நமது மன்ற வாழ்த்துக்கள்.

கலைவேந்தன்
21-12-2012, 10:39 AM
வாழ்த்துகள் வழங்கிய நண்பர்கள் முரளி, தாமரை , குணமதி , சுகந்தப்ரீதன் , கீழை நாடான் மற்றும் தைனீஸ் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள். இன்றிரவு சென்னைக்குப் புறப்படுகிறேன். ஞாயிற்றுக்கிழமை சென்னையில் சந்திப்போம் நண்பர்களே..!!

இனியவள்
21-12-2012, 11:13 AM
இனிய நல்வாழ்த்துக்கள் கலைவேந்தன் அவர்களே..! உங்கள் கவித்தொகுப்பு அனைத்துத் தரப்பினரிடமும் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்..! தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்..!

பாரதி
21-12-2012, 11:15 AM
அழைப்பிற்கு மிக்க நன்றி. விழா இனிது நடைபெறவும் புத்தகவிற்பனை நல்லமுறையில் நடக்கவும் வாழ்த்துகிறேன்.

கலைவேந்தன்
23-12-2012, 04:48 PM
மிக்க நன்றி இனியவள் மற்றும் பாரதி..!

விழாப்படங்கள் சிலவற்றைத் தரவேற்றுகிறேன்.

கலைவேந்தன்
23-12-2012, 04:49 PM
http://sphotos-e.ak.fbcdn.net/hphotos-ak-ash3/576311_10200270331746729_235223738_n.jpg

கலைவேந்தன்
23-12-2012, 04:50 PM
http://sphotos-f.ak.fbcdn.net/hphotos-ak-snc6/282892_10200270337186865_486593998_n.jpg

கலைவேந்தன்
23-12-2012, 04:51 PM
http://sphotos-c.ak.fbcdn.net/hphotos-ak-ash3/540386_10200270337586875_1872372960_n.jpg

கலைவேந்தன்
23-12-2012, 04:52 PM
http://sphotos-f.ak.fbcdn.net/hphotos-ak-frc1/576301_10200270332546749_1590072293_n.jpg

Mano.G.
24-12-2012, 03:52 AM
நிகழ்வை நேரில் கண்டது போல நிழற்படங்கள், மீண்டும் வாழ்த்துக்கள்

மதி
24-12-2012, 04:22 AM
நிகழ்ச்சிக்கு வரமுடியவில்லை. சிறப்பாக நடைந்தேறியமைக்கு வாழ்த்துக்கள். புத்தகம் எங்கே கிடைக்கும் கலைவேந்தரே..?!

கலைவேந்தன்
24-12-2012, 05:03 AM
நன்றி மனோ ஜி மற்றும் மதி ஜி..!

வருகின்ற ஜனவரி 4 முதல் இருவாரங்களுக்கு சென்னையில் புத்தகக் கண்காட்சி தொடங்கி நடக்க இருக்கிறது. அங்கே மலர்க்கண்ணன் பதிப்பகத்தின் தனி ஸ்டாலும் உண்டு. அங்கே எனது இந்த புத்தகமும் கிடைக்கும்.

மலர்க்கண்ணன் பதிப்பகத்தாரின் எண்ணுக்கு ( மேலே அழைப்பிதழில் உள்ளது. ) அழைத்தாலும் எங்கே கிடைக்கும் என்பதைச் சொல்லுவார்கள். முழுமையாய்த் தெரிந்துகொண்டபின் நானே இங்கே கிடைக்குமிடம் முகவரியைக் குறிக்கின்றேன்.

நன்றி நண்பர்களே..

இவ்விழாவுக்கு வருகை தந்து கலந்துகொண்ட நண்பர்கள் இராஜேஸ்வரன் மோகன் துரை மற்றும் கீழைநாடான் ஆகியோருக்கு என் உளமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னும் முழுமையான படங்கள் கிடைக்கவில்லை. எனது காமிராவில் எடுத்தவைகளில் முக்கியமானவற்றை இங்கே பதிந்துள்ளேன். முழுமையாய்க் கிடைத்த பின் முடிந்தால் இங்கேயும் எனது முகநூல் குறிப்பிலும் பதிகிறேன்.

ஆதி
24-12-2012, 05:55 AM
நம் நண்பர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லையே என்று வருந்திக் கொண்டிருந்தேன்

நல்ல வேளையாக கீழைநாடனும், இராஜேஸ்வரனும் கலந்து கொண்டார்கள், மிக்க நன்றி நண்பர்களே

படங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிங்க ஐயா

baseer
24-12-2012, 06:12 AM
நண்பர் கலைவேந்தன் அவர்களின் 'கவிதை தொகுப்பு புத்தக' வெளியீட்டு விழா சிறப்புடன் நடைபெற்றது அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நண்பர்கள் ராஜேஸ்வரன், மோகன், துரை மற்றும் கீழைநாடான் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதும் சிறப்பே..!

நண்பருக்கு எனது பாராட்டுகள்..!

நேரில் வரவில்லையெனினும், புகைப்படங்கள் மூலம் பார்த்துக் கொண்டேன். சந்தோஷம் நண்பரே..!

த.ஜார்ஜ்
25-12-2012, 05:23 AM
மிக மகிழ்சியான விஷயம் . தொடர்ந்து பல படைக்க வாழ்த்துகள்.

venkat8
25-12-2012, 10:10 PM
நிகழ்ச்சியை நேரில் பார்த்ததுபோல் இருந்தது

கலைவேந்தன்
28-12-2012, 05:07 PM
வாழ்த்தியமைக்கும் கருத்து பதிந்தமைக்கும் நண்பர்கள் ஆதி, பஷீர், ஜார்ஜ் மற்றும் வெங்கட் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

இன்னும் இரு நாட்களில் இதே திரியில் இன்னுமொரு மகிழ்வான செய்தியைப் பகிர்ந்துகொள்கிறேன். அதற்கான ஆயத்தங்களில் இருப்பதால் கொஞ்சம் காலதாமதம். அதன் காரணமாய் மன்ற வருகையும் தடைப்படுகிறது. அனைவரும் என்னை மன்னித்து அருள வேண்டும்.

govindh
10-01-2013, 09:31 PM
வாழ்த்துக்கள் கவிஞரே....
வாழ்க வளமுடன்.

govindh
10-01-2013, 09:43 PM
காகிதம் மிளிர்ந்திட வாழ்த்துக்கள்...!
கலைப் பணி ஒளிர்ந்திட வாழ்த்துக்கள்...!

வாழ்க கலைவேந்தரே....!

கலைவேந்தன்
14-01-2013, 01:10 AM
உங்கள் வாழ்த்திற்கு என் மனமார்ந்த நன்றிகள் கோவிந்த்..!