PremM
17-12-2012, 04:18 AM
கண்ணீர் படர்ந்த காகிதக் கவிதைகள்,
விழி துடைக்கும் கைக் குட்டை ஆனதும்..
மிச்சம் இருந்த சோகம் அனைத்தும்,
நீல மையின் நீளம் கூட்டியதும்..
வார்த்தைகளை சிதைக்காத
உன் மெல்லிய குரலில்,
சிதைந்த எண்ணங்களின்
பிற்பாடு நிகழ்வுகள் அவை..
மஞ்சள் நிற விடியலை
முகமெங்கும் பூசிக் கொண்டு,
எனக்காய்க் காத்திருக்கையில்
மறந்துப் போனது சில உண்மைகள்..
மாலை நேரத் தென்றலோடு ஊஞ்சலாடும்,
உன் துப்பட்டா உரசியதில்,
மறந்துப் போனது சில உண்மைகள்..
அரை நொடியில் அவிழ்ந்து விடும் உறவுகள்,
பொய்களென்னும் நூழிலையில் தொடரும் பயணங்கள்..
அவை சுமக்கும் உறவுகளின்
கனம் ஏராளம்.
இரவு ஒரு இடைவெளி,
அது கனவுகளின் சமவெளி,
அதில் கால் பதித்த கணமெல்லாம்,
இதயம் கடக்கும் உன் முகம்..
அழுது முடித்த மேகத்தின்,
கைக்குட்டை நாம் என்றாய்..
மழை நின்றப் பின்பும்
தனியே அழும்
மரமாகிப் போனேன் இன்று..
புழுதிக் காற்றில் புன்னகைத்தால்,
கண்ணீர் தான் தோற்றிடுமா?
ஏனோ இதயம் சுமக்கும் கணத்தினை,
அவைகள் மட்டும் அறிவதெப்படி?
மீண்டும், தீண்டும் உந்தன் புன்னகை,
எனை மீண்டெடுக்கும் நம்பிக்கை..
விழி துடைக்கும் கைக் குட்டை ஆனதும்..
மிச்சம் இருந்த சோகம் அனைத்தும்,
நீல மையின் நீளம் கூட்டியதும்..
வார்த்தைகளை சிதைக்காத
உன் மெல்லிய குரலில்,
சிதைந்த எண்ணங்களின்
பிற்பாடு நிகழ்வுகள் அவை..
மஞ்சள் நிற விடியலை
முகமெங்கும் பூசிக் கொண்டு,
எனக்காய்க் காத்திருக்கையில்
மறந்துப் போனது சில உண்மைகள்..
மாலை நேரத் தென்றலோடு ஊஞ்சலாடும்,
உன் துப்பட்டா உரசியதில்,
மறந்துப் போனது சில உண்மைகள்..
அரை நொடியில் அவிழ்ந்து விடும் உறவுகள்,
பொய்களென்னும் நூழிலையில் தொடரும் பயணங்கள்..
அவை சுமக்கும் உறவுகளின்
கனம் ஏராளம்.
இரவு ஒரு இடைவெளி,
அது கனவுகளின் சமவெளி,
அதில் கால் பதித்த கணமெல்லாம்,
இதயம் கடக்கும் உன் முகம்..
அழுது முடித்த மேகத்தின்,
கைக்குட்டை நாம் என்றாய்..
மழை நின்றப் பின்பும்
தனியே அழும்
மரமாகிப் போனேன் இன்று..
புழுதிக் காற்றில் புன்னகைத்தால்,
கண்ணீர் தான் தோற்றிடுமா?
ஏனோ இதயம் சுமக்கும் கணத்தினை,
அவைகள் மட்டும் அறிவதெப்படி?
மீண்டும், தீண்டும் உந்தன் புன்னகை,
எனை மீண்டெடுக்கும் நம்பிக்கை..