கோபாலன்
16-12-2012, 12:59 PM
ஆழ்ந்த தூக்கத்தில் அலையலையாய் நினைவுகள்
எங்கெங்கோ பயணித்து
மரணத்தை தாண்டமுடியாமல்
தடுத்து நிறுத்தப்பட்டன
உடலைவிட்டு உயிர் போனபின்னே
உறங்கா நினைவுகள் உறைந்துவிடுமோ
அல்லது உயிர்போகும் திசையில்
உடன்சேர்ந்து பயணிக்குமோ?
குழந்தையாய் பிறந்து குதூகலித்து
பெற்றோரின் அரவணைப்பில் பெரிதாகி
தம்பி தங்கையின் அன்பினில் திளைத்து
தாத்தா பாட்டியின் கதைகளில் களித்து
ஆசிரியர்களின் அறிவினால் உலகம்தெரிந்து
நண்பர்களின் சேர்க்கையில் உளம்மகிழ்ந்து
உறவுகளின் விசாரிப்புகளில் மனம்நிறைந்து
அரிதாய் கிடைக்கும் பாராட்டுகளில் முகம்மலர்ந்து
சிறிதும்பெரிதுமாய் சில தவறுகள் புரிந்து
சிலநேரங்கள் சிறு உதவிகள் செய்து
உலகமெலாம் தெரியவேண்டி உழைக்கும்
நான் வெறும் நினைவுதனா?
நீங்காத நினைவுகள் நெடுநேரம் பயணித்து
நித்தியமானவனை சரணடையுமோ
எனக்குமுன் பயணித்த நினைவுகள்
இங்கேதான் இறங்கியிருக்குமோ
கடவுள் என்செயல்களை ஆராய்வாராயின்
முன்கூட்டியே தெரிவித்திருந்தால் நன்றாயிருக்குமே
எல்லாவற்றையும் நினைவூட்டி அனுப்பியிருந்தால்
எல்லாரும் நல்லவராய் இருந்திருப்பரே
சிந்தித்து சிந்தித்து களைப்படைந்தேன்
சீக்கிரம் எழுந்திருடா வேலை இருக்கிறது
அசரீரியாய் குரல் கேட்க
எழுந்து பார்த்தேன் அம்மா
ஆம் எனக்கு வேலை இருக்கிறது
எனக்கான வேளை வரவில்லை!
எங்கெங்கோ பயணித்து
மரணத்தை தாண்டமுடியாமல்
தடுத்து நிறுத்தப்பட்டன
உடலைவிட்டு உயிர் போனபின்னே
உறங்கா நினைவுகள் உறைந்துவிடுமோ
அல்லது உயிர்போகும் திசையில்
உடன்சேர்ந்து பயணிக்குமோ?
குழந்தையாய் பிறந்து குதூகலித்து
பெற்றோரின் அரவணைப்பில் பெரிதாகி
தம்பி தங்கையின் அன்பினில் திளைத்து
தாத்தா பாட்டியின் கதைகளில் களித்து
ஆசிரியர்களின் அறிவினால் உலகம்தெரிந்து
நண்பர்களின் சேர்க்கையில் உளம்மகிழ்ந்து
உறவுகளின் விசாரிப்புகளில் மனம்நிறைந்து
அரிதாய் கிடைக்கும் பாராட்டுகளில் முகம்மலர்ந்து
சிறிதும்பெரிதுமாய் சில தவறுகள் புரிந்து
சிலநேரங்கள் சிறு உதவிகள் செய்து
உலகமெலாம் தெரியவேண்டி உழைக்கும்
நான் வெறும் நினைவுதனா?
நீங்காத நினைவுகள் நெடுநேரம் பயணித்து
நித்தியமானவனை சரணடையுமோ
எனக்குமுன் பயணித்த நினைவுகள்
இங்கேதான் இறங்கியிருக்குமோ
கடவுள் என்செயல்களை ஆராய்வாராயின்
முன்கூட்டியே தெரிவித்திருந்தால் நன்றாயிருக்குமே
எல்லாவற்றையும் நினைவூட்டி அனுப்பியிருந்தால்
எல்லாரும் நல்லவராய் இருந்திருப்பரே
சிந்தித்து சிந்தித்து களைப்படைந்தேன்
சீக்கிரம் எழுந்திருடா வேலை இருக்கிறது
அசரீரியாய் குரல் கேட்க
எழுந்து பார்த்தேன் அம்மா
ஆம் எனக்கு வேலை இருக்கிறது
எனக்கான வேளை வரவில்லை!