PDA

View Full Version : பூத்திருந்த புற்கள்



A Thainis
14-12-2012, 08:56 PM
மார்கழி குளிர் வாட்டியது
விடிந்தும் துயில் எழ மறுப்பு
இன்னும் கொஞ்சம் போர்த்தியே
படுக்கையில் கால்களை நீட்டிட ஆசை
அப்போது அந்த அதிசியத்தை
ஜன்னல் வழி பார்த்தேன்
எங்கள் தோட்டத்து புற்களில்
பூக்கள் பூத்திருந்தன - ஆம்
வெண்பனிபூக்கள் அத்துணை அழகு
இமைகள் கொட்டாமல்
கண்கள் குளிர ரசித்தேன் - என்
சோர்வு முறிந்தது உற்சகமாக எழுந்தேன்.

jayanth
15-12-2012, 03:12 AM
வெண்பனிப்பூக்கள்....குளிர்ச்சி...!!!

மஞ்சுபாஷிணி
15-12-2012, 06:05 AM
பனிச்சொறியும் புற்களில் வெண் பனிப்பூக்கள் உவமை அழகு ரசித்தேன் தைனீஸ்.... மார்கழி குளிர் இழுத்துப்போர்த்தி தூங்கத்தான் சொல்லும்... ஆனால் கடமை தூங்கவிடாது...

அன்பு வாழ்த்துகள் அழகிய கவிதைக்கு.

ஜான்
19-12-2012, 04:03 AM
பனிக்காலத்தில் கிராமத்து வயல் வெளியோரம்,வேலியோரம் நடந்து செல்ல வேண்டும் !!!அதன் சுகமே தனிதான்

rema
20-12-2012, 05:26 AM
மார்கழி குளிர் வாட்டியது
விடிந்தும் துயில் எழ மறுப்பு
இன்னும் கொஞ்சம் போர்த்தியே
படுக்கையில் கால்களை நீட்டிட ஆசை
அப்போது அந்த அதிசியத்தை
ஜன்னல் வழி பார்த்தேன்
எங்கள் தோட்டத்து புற்களில்
பூக்கள் பூத்திருந்தன - ஆம்
வெண்பனிபூக்கள் அத்துணை அழகு
இமைகள் கொட்டாமல்
கண்கள் குளிர ரசித்தேன் - என்
சோர்வு முறிந்தது உற்சகமாக எழுந்தேன்.

அழகான ஹைக்கூ தைனிஸ் !! வாழ்த்துகள் !!

A Thainis
21-12-2012, 06:49 AM
என் கவிதைக்கு பின்னூட்டம் அளித்து பாராட்டிய ஜெயந்த், மஞ்சுபாஷிணி, ஜான் & ரெமா ஆகியோருக்கு என் நன்றிகள்.