PDA

View Full Version : செந்தமிழும் கடன் வாங்கும் .....!!!!!



manivannan samikkannu
14-12-2012, 08:13 AM
கருவாக உருவான நாள் முதல் ...........
என்னை நினைத்து கனவுகண்டால் .....!!!!
கண்ணயர்ந்து உறங்க மறந்தால் .....
பிடிக்காத உணவை அவள் உண்டால் .....
பெற்றுஎடுக்கும் பிள்ளைக்காக .....!!!!
நித்தம் ஒரு வளர்ச்சி நான் வளர்ந்திட ......
தினம் தினம் அதன் அழகை அவள் ரசிதிட ..!!!!
கருப்பையில் கண்மூடி நான் உறங்க
அவள் தூக்கம் அவள் தொலைத்தால் ...!!!!
பெற்றெடுக்கும் நாள் தான் வந்திடவே ....
தரைமீது தண்ணீருக்கு துடிக்கும் மீனாக அவள் துடித்தால் ....
அவள் உயிரை அவள் மறந்து என் உயிர் ஈன்றால் ..!!!
பிள்ளையாக நான் வந்தேன் என் தாயின் ........
பெயர் சொல்ல அம்மா என்று ....!!!
கருப்பையில் அவள் உண்ட உணவை ........
எனக்கு உணவளித்தால் ....
உதிரத்தை உருமாத்தி உயிர் ஊட்டினால் ......
அவள் உள்ளதை போல .....!!!!
மழலை மொழி அவள் பயின்றாள் ....
அவள் மொழி நான் பயின்றேன் ....!!!!
கை ஊன்றி நான் தவழ ......
கை தட்டி அவள் ரசித்தால் .....!!!
கால் தவறி நான் விழ ......கண்
கலங்கினாள் அடிபட்டவள் போல ....!!!
என் தாயின் பெருமை சொல்ல .......
என் ஆயுள் போதாது .......
செந்தமிழும் கடன் வாங்கும் .....
அவள் புகழை கவி பாட .......!!!!!!

ஆதி
21-12-2012, 08:27 AM
அம்மாவின் புகழும் கவிதைகள் எத்தனை எத்தனை வாசித்தாலும், படைத்தாலும் சலிக்காததவை, அலாதியானை

அன்னையை பாட அன்னை தமிழிடமும் சொல்லில்லை என்று சொன்னது மிக அழகு

சில நாட்களுக்கு முன் நண்பர் ஒருவர் அம்மாவுக்கு எழுதிய கவிதையை வாசிக்க நேர்ந்தது, அந்த கவிதையை அவர் இப்படி முடித்திருப்பார்

அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் அதில் உன் கால்களுக்கு செருப்பாக இருக்க வேண்டும்

அம்மாவுக்கு என்ன செய்தால் தகும் என்று எத்தனையோ முறை யோசித்திருக்கிறேன், எதுவும் ஈடு செய்ய முடியாது, அவளின் கால்களுக்கு செருப்பாக இருப்பது கூட, என்றாலும் அவளுக்கு அதிகப்பட்சமாய் நம்மால் செய்ய முடிந்த்து என்றால் அவளின் கால்களில் செருப்பாய் இருத்தல்தான்

அம்மா பற்றிய கவிதைக்கு வாழ்த்துக்கள் மணிவண்ணன், தொடருந்து எழுதுங்கள்

manivannan samikkannu
10-04-2013, 10:49 AM
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.