rambal
08-04-2003, 04:02 PM
அதன் மீது ஒரு மோகம்..
அவ்வழி போம்போதும்
வரும் போதும்
எட்டிப் பார்த்துவிட்டு..
தூரத்தில் பார்க்கும்
பொழுதே
ஒரு படபடப்பு..
மீண்டும் எதுவும்
இருக்கக் கூடாதென்று..
அது ஒரு
சுமைதாங்கி..
மற்றவர் பாரத்தை
வருந்திச் சுமப்பதால்...
அதன் மீது
எப்பொழுதும்
ஒரு துர் நாற்றம்..
குளித்து பல நாட்கள்
ஆகி விட்டதால்...
யார் என்ன கொடுத்தாலும்
எதிர்கேள்வி கேட்காமல்
வாங்கிக் கொள்ளும்..
சில சமயங்களில்
அதனிடமிருப்பதையும்
சிலர் பிடுங்கிக் கொள்வார்கள்..
அப்பொழுதும் அது பேசாமலே
இருக்கும் சாதுவாய்..
அதற்கு கூட கீதை
தெரியுமோ என்னவோ..
அதனால் தான்
கடமையை மட்டும் செய்கிறது..
பலனை எதிர்பாராமல்..
பல பேருக்கு
உணவும் தரும்..
அதற்காக
அட்சயப்பாத்திரமும் இல்லை..
ஆனால்,
அந்த மாதிரி என்று வைத்துக் கொள்ளலாம்..
எல்லோரின் வண்டவாளங்களும்
அதற்குத் தெரியும்..
இருந்தும் எப்பொழுதும்
போல் அமைதியாக..
சில சமயங்களில்
குழந்தையைக் கூட பெற்றெடுக்கும்
என்னைப் போல..
அதனால்தானோ
என்னவோ அந்தக் குப்பைத் தொட்டி
மீது ஒரு இனம் புரியா மோகம்..
அவ்வழி போம்போதும்
வரும் போதும்
எட்டிப் பார்த்துவிட்டு..
தூரத்தில் பார்க்கும்
பொழுதே
ஒரு படபடப்பு..
மீண்டும் எதுவும்
இருக்கக் கூடாதென்று..
அது ஒரு
சுமைதாங்கி..
மற்றவர் பாரத்தை
வருந்திச் சுமப்பதால்...
அதன் மீது
எப்பொழுதும்
ஒரு துர் நாற்றம்..
குளித்து பல நாட்கள்
ஆகி விட்டதால்...
யார் என்ன கொடுத்தாலும்
எதிர்கேள்வி கேட்காமல்
வாங்கிக் கொள்ளும்..
சில சமயங்களில்
அதனிடமிருப்பதையும்
சிலர் பிடுங்கிக் கொள்வார்கள்..
அப்பொழுதும் அது பேசாமலே
இருக்கும் சாதுவாய்..
அதற்கு கூட கீதை
தெரியுமோ என்னவோ..
அதனால் தான்
கடமையை மட்டும் செய்கிறது..
பலனை எதிர்பாராமல்..
பல பேருக்கு
உணவும் தரும்..
அதற்காக
அட்சயப்பாத்திரமும் இல்லை..
ஆனால்,
அந்த மாதிரி என்று வைத்துக் கொள்ளலாம்..
எல்லோரின் வண்டவாளங்களும்
அதற்குத் தெரியும்..
இருந்தும் எப்பொழுதும்
போல் அமைதியாக..
சில சமயங்களில்
குழந்தையைக் கூட பெற்றெடுக்கும்
என்னைப் போல..
அதனால்தானோ
என்னவோ அந்தக் குப்பைத் தொட்டி
மீது ஒரு இனம் புரியா மோகம்..