View Full Version : ஹைக்கூ ?
பல கேள்விகளை விட்டுவிட்டு
பறந்துபோய் விட்டது
ஒற்றையாய் வந்த மைனா
கீதம்
08-12-2012, 10:26 AM
பல எண்ணங்களைக் கிளறிவிட்டு வேடிக்கை பார்க்கிறது, ஒற்றையாய் வந்து போன மைனாக்கவிதை. அழகு. பாராட்டுகள்.
மிக்க நன்றி கீதம் அவர்களே
அலையெழுப்புகின்றன
ஆற்றுமணல் படுகையில் உலரும்
வண்ண வண்ண சேலைகள்
கும்பகோணத்துப்பிள்ளை
25-12-2012, 01:15 AM
பல கேள்விகளை விட்டுவிட்டு
பறந்துபோய் விட்டது
ஒற்றையாய் வந்த மைனா
அட!.. அட!..
உங்கள்
இதயத்திலுமொரு இறகை விட்டுச்சென்றிருக்கும்!
இதமாக வருடவென்று!
ஒரு மைனா மைனா குருவி! மனசார பாடுது!
மாயங்கள் காட்டுது! கோய்! கோய்!
baboo
26-12-2012, 04:20 AM
நல்ல முயற்சி. தங்களிடம் இன்னும் நிறைய ஹைக்கூ கவிதைகளை எதிர் பார்க்கிறோம்.
மஞ்சுபாஷிணி
26-12-2012, 07:13 AM
பல கேள்விகளை விட்டுவிட்டு
பறந்துபோய் விட்டது
ஒற்றையாய் வந்த மைனா
பதில் வரும் என்ற நம்பிக்கையுடன்.....
அருமையான வரிகள் ஜான்....
மஞ்சுபாஷிணி
26-12-2012, 07:14 AM
அலையெழுப்புகின்றன
ஆற்றுமணல் படுகையில் உலரும்
வண்ண வண்ண சேலைகள்
ரசனையான ஹைக்கூ... ரசித்தேன் ஜான். அன்பு வாழ்த்துகள்.
நல்ல முயற்சி. தங்களிடம் இன்னும் நிறைய ஹைக்கூ கவிதைகளை எதிர் பார்க்கிறோம்.
நன்றி பாபு ...தாங்களும் முயலுங்கள் அனைவரும் முயல்வோம்
ரசனையான ஹைக்கூ... ரசித்தேன் ஜான். அன்பு வாழ்த்துகள்.
நன்றி மஞ்சு ...
இன்னும் யாரும் படிக்காமல்
புதுசாகவே கிடக்கிறது
போனமாதப் பத்திரிகை
மஞ்சுபாஷிணி
27-01-2013, 09:37 AM
இன்னும் யாரும் படிக்காமல்
புதுசாகவே கிடக்கிறது
போனமாதப் பத்திரிகை
அருமையா இருக்குப்பா ஜான்.... ஆனா ஏனாம்?
தாலாட்டுகிறாள் அப்பத்தா
பிடிவாதமாய் விழித்திருக்கிறது
குழந்தை
சுகந்தப்ரீதன்
08-03-2013, 05:15 PM
ஒற்றை மைனாவும் வண்ண சேலைகளும் ஆழ்ந்த பார்வையின் ரசனைவீச்சு... ரசிக்க வைக்கிறது..!!:icon_b:
போனமாத பத்திரிக்கையும் பிடிவாத குழந்தையும் பிடிவாதமாய் பிடிபட மறுக்கிறது ஜான்..!!:)
ஆழ்ந்து வாசித்தமைக்கு நன்றி சுகந்தப்ரீதன்...உற்சாகம் மிகுகிறது!!
குழந்தையின் மனநிலை...பாடலை ரசிக்கும் தூங்கிவிட்டால் பாடலை இழக்கும் குழந்தை ...ஆனால் தூக்கம் பிடிவாதமாய் ஆட்கொள்ளும் ....
நன்றி
கும்பகோணத்துப்பிள்ளை
10-03-2013, 07:49 PM
ஆழ்ந்து வாசித்தமைக்கு நன்றி சுகந்தப்ரீதன்...உற்சாகம் மிகுகிறது!!
குழந்தையின் மனநிலை...பாடலை ரசிக்கும் தூங்கிவிட்டால் பாடலை இழக்கும் குழந்தை ...ஆனால் தூக்கம் பிடிவாதமாய் ஆட்கொள்ளும் ....
நன்றி
இன்னாடாயிது! மெய்யாலுமேவா!
சர்தாம்பா ஜானு சொன்னா சரிதாங்!
சட்டையை உரித்து விட்டு
பயத்தை நிரப்பி விட்டு
செல்கிறது பாம்பு
sarcharan
11-03-2013, 04:05 AM
ஒரு தடவை உரிந்த சட்டையை
மீண்டும் அணியான் இந்த
"ராயல்" ராயப்பன்
'சென்றது பாம்பு' என்றிருந்தால் better அல்லவா?
சட்டையை உரித்து விட்டு
பயத்தை நிரப்பி விட்டு
செல்கிறது பாம்பு
சட்டையை உரித்துச் சென்றது
பயத்தையோ புகழையோ நிரப்பிவிட்டு
மனித உயிர்
சட்டையை உரித்து விட்டு
பயத்தை நிரப்பி விட்டு
செல்கிறது பாம்பு
ஒரு தடவை உரிந்த சட்டையை
மீண்டும் அணியான் இந்த
"ராயல்" ராயப்பன்
மிக்க நன்றி sarcharan
சட்டையை உரித்துச் சென்றது
பயத்தையோ புகழையோ நிரப்பிவிட்டு
மனித உயிர்
ஆழ்ந்த துல்லியமான புரிதலுக்கு நன்றி ஐயா ..
சென்றது என்றிருந்தால் மேலும் ஒரு பொருள் கிடைக்கிறது!!
ஹைக்கூக்கள் நன்று.. சில வார்த்தைகளில் அதீத அர்த்தங்கள்..
பொழிந்து மறையும் வரை
ஏதேனுமோர் உருவத்தை
ஏற்றுக் கொள்கிறது கார்மேகம்
கும்பகோணத்துப்பிள்ளை
25-03-2013, 02:11 AM
பொழிந்து மறையும் வரை
ஏதேனுமோர் உருவத்தை
ஏற்றுக் கொள்கிறது கார்மேகம்
மொட்டை மாடியில் மல்லாக்க படுத்து யோசிப்போர் சங்கத்தில் நீங்களும் ஒரு மெம்பரா!
இதைதான் 'அனுபவிச்சு' எழுதறதுன்னு சொல்றாங்களோ!
நன்றி கும்பகோணத்துப் பிள்ளை