lenram80
05-12-2012, 02:06 PM
மருதமும் நெய்தலும் கலந்து இருக்கின்ற டெல்டா பகுதியைச் சார்ந்த தஞ்சை மாவட்ட படிக்காத பெண்ணொருத்தி...
ஒரு வாரத்துக்கு முன்னாடி அவன பாக்குறா. பாத்ததுலேருந்து அவ அவளா இல்லை. அவங்கிட்டே போயி எதுவும் சொல்ல முடியல. அவள் படும் பாட்டை ஒரு பாட்டாக எழுதினால்....
தஞ்சாவூரு சம்பா நாத்தாருக்கேன்
உன் வயலில் என்னை நடவு செய்ய காத்திருக்கேன்
சந்தக் கடை கூட்டத்துல தொலஞ்சுருக்கேன்!
ஓங் ஒருத்தங்கிட்ட நானா வந்து தொலச்சுருக்கேன்!
புயல் காத்தடுச்சும் கூட வளஞ்சதில்லே!
பூங்காத்தான உனக்கு அசையிறேன் தன்னாலே!
சிரிக்கிற பல்லால உரிக்கிற சொலயோட! (சுலை)
வெறிக்கிற விழியால பறிக்கிற கொலயோட! (குலை)
விராலு மீனு ஓடயிலே ஒறஞ்சிருக்கும் ஓர் குருவி
உழுவ மீனு உன்ன கண்டு கரஞ்சுருச்சே!
அப்பங் ஆத்தா போதுமுன்னு நெறஞ்சுருந்த ஓர் பிறவி
கருவா பய உன்ன கண்டு குறஞ்சுருச்சே!
உச்சி வெயிலு நெழலு போல
உள் இறங்கி வந்த நீக
சாய்ங்கால நெழலு போல
உடம்பெல்லாம் நீளூரியே!
நந்த வன தேகத்துல
பூபூக்குற எதயத்துல
ரம்பம் வச்சு அறுக்குறியே!
நம்ப வச்சு உருக்குறியே!
சூறாவளி சுத்துகிற
சுறா விழி ரெண்டு வச்சு
சத்தமில்லா யுத்தத்தை
நெஞ்சுகுள்ள நடத்துறியே!
அண போட்டு அடைச்சாலும்
கடல் நோக்கி ஓடிவரும்
காட்டாத்து நதி போல
கதறுதடா எங் மனசு!
காதால நீ கேக்க
இதய சத்தம் ஏத்தி வச்சேன்!
கண்ணால நீ பாக்க
கவிதையா என்ன மாத்தி வச்சேன்!
ஒரு வாரத்துக்கு முன்னாடி அவன பாக்குறா. பாத்ததுலேருந்து அவ அவளா இல்லை. அவங்கிட்டே போயி எதுவும் சொல்ல முடியல. அவள் படும் பாட்டை ஒரு பாட்டாக எழுதினால்....
தஞ்சாவூரு சம்பா நாத்தாருக்கேன்
உன் வயலில் என்னை நடவு செய்ய காத்திருக்கேன்
சந்தக் கடை கூட்டத்துல தொலஞ்சுருக்கேன்!
ஓங் ஒருத்தங்கிட்ட நானா வந்து தொலச்சுருக்கேன்!
புயல் காத்தடுச்சும் கூட வளஞ்சதில்லே!
பூங்காத்தான உனக்கு அசையிறேன் தன்னாலே!
சிரிக்கிற பல்லால உரிக்கிற சொலயோட! (சுலை)
வெறிக்கிற விழியால பறிக்கிற கொலயோட! (குலை)
விராலு மீனு ஓடயிலே ஒறஞ்சிருக்கும் ஓர் குருவி
உழுவ மீனு உன்ன கண்டு கரஞ்சுருச்சே!
அப்பங் ஆத்தா போதுமுன்னு நெறஞ்சுருந்த ஓர் பிறவி
கருவா பய உன்ன கண்டு குறஞ்சுருச்சே!
உச்சி வெயிலு நெழலு போல
உள் இறங்கி வந்த நீக
சாய்ங்கால நெழலு போல
உடம்பெல்லாம் நீளூரியே!
நந்த வன தேகத்துல
பூபூக்குற எதயத்துல
ரம்பம் வச்சு அறுக்குறியே!
நம்ப வச்சு உருக்குறியே!
சூறாவளி சுத்துகிற
சுறா விழி ரெண்டு வச்சு
சத்தமில்லா யுத்தத்தை
நெஞ்சுகுள்ள நடத்துறியே!
அண போட்டு அடைச்சாலும்
கடல் நோக்கி ஓடிவரும்
காட்டாத்து நதி போல
கதறுதடா எங் மனசு!
காதால நீ கேக்க
இதய சத்தம் ஏத்தி வச்சேன்!
கண்ணால நீ பாக்க
கவிதையா என்ன மாத்தி வச்சேன்!